Friday, April 27, 2018

கிராம வாழ்க்கை

கிராம வாழ்க்கை வித்தியாசமான அனுபவங்களை அள்ளித் தந்தது. சித்திரை, வைகாசி மாதங்கள்ல தான்
கிராமத்து கோவில் திருவிழாக்கள்.

வெக்கைக்கும்,புழுக்கத்திற்குமான இரவு
பொழுது போக்குகள்,வில்லிசை,
நாடகம்,சினிமா,சாமிஊர்வலம்,
மேளதாளம் அந்த பெட்ரோமாக்ஸ் லைட் இப்படி வேடிக்கைகள் அந்த இரவின் 
பகலின் கடுமையை தணித்து மனதை
லேசாக்கிவிடும்.

இன்றைய வெயில் நம்மை ஐஸ்கிரீம்களையும்,செயற்கை மென்
பானங்களையும் தேட வைக்கிறது.நம்
பிள்ளைகள் அதற்கு அடிமைகளாயும் ஆகிப்போகிறார்கள்.

எத்தனையோ இயற்கை பானங்கள் 
கிராமத்தில் இளநீர்,பதநீர்,லெமன் 
ஜுஸ்,நீர் மோர், நீராகாரம் (புளிச்ச தண்ணி) இப்படி இன்னும் எத்தனையோ 
இருக்கிறது.

இருந்தாலும் " பானக்கரம்" என்றொரு
பானம் வீடுகளில் தயாரித்து குடிப்பது
என்பது வாடிக்கையான ஒன்று.எனினும்
இதற்கு மட்டும் ஒரு சிறப்பு. கோடை கால
திருவிழாக்களில் சாமியாடிகள், விருந்தினர், வேடிக்கை பார்க்க அனைவருக்கும் 
கொடுத்து மகிழ்வார்கள் கிராமத்தினர்.

இது தயாரிப்பு ரொம்ப சுலபம் தண்ணீரில் புளியை கரைத்து பனை
வெல்லம் அல்லது மண்டை வெல்லத்தை
தட்டி நுணுக்கி பொடி செய்து கலந்து
சிட்டிகை உப்பு சேர்த்து சுவைக்காக 
தேவைப்பட்டால் சுக்கு அல்லது துளசி
இலையை சிறிதாய் வெட்டி சேர்க்க
அதன் சுவையை சொல்லி மாளாது.

இதில் அவ்வளவு நன்மைகள் வெயிலின்
தாக்கத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து
குறைபாட்டை தடுப்பதுடன் உடல் 
சூட்டையும் தணிக்கிறது.எந்த ஒரு
பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

இதை பெரும்பாலான வீடுகளில் பெரிய
பித்தளை அல்லது தாமிர பானைகளில்
வாசலில் வைத்து அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்த காலம் இனிமையானது.

நகர வாழ்க்கை,கிராம வாழ்க்கை எங்கே
இருப்பினும் உங்கள் குழந்தைகளுக்கும்
தயாரித்து கொடுத்து நீங்களும் அருந்தி
கோடை வெயிலின் தாக்கத்தை சமாளித்து மகிழுங்கள்.வாழ்க மகிழ்வோடு.
நன்றி-Nachiarpatti Dhanasekaran Nks.

No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...