Thursday, August 29, 2019

குஜிலி பஜார்

குஜிலி பஜார்
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல எம்டன் வந்து தாக்கியது, பிரிட்டீஷ் படைகள் மீண்டும் தாக்கியதும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிட்டது என்றும் ஒரு பிரச்சாரம் தீவிரமாக செய்யப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் 'வல்லமை சிந்து' என்ற பாடல் ஒன்றும் அந்நாட்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த குஜிலி பஜாரில் விற்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் நடந்த சம்பவத்தை இப்படி விவரிக்கிறது...
No photo description available.''ஆண்டு துலாயிரத் தானபதி நான்கினில் 
ஆனதோர் செப்டம் பர்மாத மதில் 
வேண்டிய தேதி இருபத்தி ரெண்டினில் 
வீழ்ந்த தென்றார் குண்டு சென்னைதனில்

ஜர்மனி எம்ப்ட குரூசர் கப்பலது 
சென்னை கடர்க் கறை தென்கிழக்கில் 
அருணணி ரங்கி இருட்டு களானதும் 
அங்கே ஒளியுடன் நின்றதுவே.

நின்று எதிர்நோக்கி பட்டணம் தன்னில் 
நிமிஷ மிருபது நேர மட்டும் 
குண்டுகள் விட்டுமே கோட்டை லயிட்டவுஸ் 
குந்தம் செய்ய குண்டை விட்டனரே ...''

இந்த பாடலின் இறுதியில், எம்டன் குண்டு வீசியதில் துறைமுகத்தில் இருந்த எண்ணெய் டாங்குகள் எரிந்ததைப் பார்த்த ஜெர்மானியர்கள் சென்னையே எரிகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டதாகவும், பிரிட்டீஷாரின் பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திரும்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ராஜவிசுவாசிகளால் எழுதப்பட்ட இந்த பாடல் இதுபோன்ற தருணத்தில் நமது ராஜாவிற்கு (இங்கிலாந்து அரசர்) நாம் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
Image may contain: outdoor

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ