Friday, October 24, 2014

ஈழ இனப்படுகொலை குறித்த ஆவணங்களை ஐ.நா.வுக்கு அனுப்புங்கள்!

ஈழ இனப்படுகொலை குறித்த ஆவணங்களை ஐ.நா.வுக்கு அனுப்புங்கள்!
----------------------------------------------------------------------------------


ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் துவங்கி உள்ளது. இதுதொடர்பான மனுக்களை, ஆவணங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் அனுப்பலாம். வருகின்ற 30.10.2014 தேதிக்குள் இந்த மனுக்களை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதனோடு ஆதாரங்களாக நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் இருந்தாலும் அனுப்பலாம்.

OHCHR INVESTIGATION ON SRI LANKA
UNOG - OHCHR
8-14 Rue de la Paix
CH-1211 Geneva 10
Switzerland.

தமிழில் புகார்களை அனுப்புபவர்கள் பிரிட்டனில் உள்ள கீழ்க்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

சர்வதேச இன அழிப்பு தடுப்பு மற்றும் வழக்கு மையம்
224, Basement Office
Preston Road,
Wembley HA9 8NF UK.

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, ஈழ பிரச்சினையில் நாம் விரும்பிய தீர்வு கிடைக்கவில்லையென்றாலும், தற்போது கிடைத்துள்ள, ஐ.நா. மனித உரிமை ஆணையம் நடத்தும் இந்த விசாரணையை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment

துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

1)*துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*: "நண்பா ...