Saturday, September 30, 2017

டாக்டர் குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம் ஒரு சிறைப்படைப்பு



டாக்டர் குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம் ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப் பிரதியைக் கண்டவுடன் நான் அதிலென்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். முதல் பகுதியிலேயே என் ஆர்வத்தை நிறைவு செய்ததுடன் என்னை சிறிதும் களைப்படைய செய்யாமல் மாறாக நல்ல பயன் தந்து இறுதிவரை இட்டுச் சென்றது.
-உத்தமர் காந்தி

குமரப்பா முன்மொழிந்துச் சென்ற `வளங்குன்றா வளர்ச்சி` பொருளாதார மாதிரி நிலத்திற்கு அடியிலிருந்து எதையும் எடுக்க அனுமதிக்காது. இல்லையென்றால் அதற்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கும். காந்தியை, குமரப்பாவை கைகழுவிய இந்த நவீன பொருளாதாரம் `நாளை என்பதில் நம்பிக்கை கொள்ளாது... தம் அடுத்த சந்ததி மீதும் அக்கறை கொள்ளாது... 
எல்லாமும் தமக்குதான், இப்போதைய மகிழ்ச்சிக்காக... 
ஆடம்பரத்துக்காகதான் எல்லாம் என்று சுவீகரித்துக் கொண்டது. `இப்போது அந்த வளர்ச்சி மாதிரி அதன் நிறை செறிவு நிலையை (Saturation) அடைந்துவிட்டது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

விவசாயம்⁉️

இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் ...