Thursday, December 20, 2018

இந்து மகா கடலில் தென்னிந்தியாவிற்கு பெரியதொரு ஆபத்து ஏற்படவுள்ளது.

இப்பவாச்சும் பேசுங்கய்யா !!!...
--------------------
இந்து மகா கடலில் தென்னிந்தியாவிற்கு பெரியதொரு ஆபத்து ஏற்படவுள்ளது.
———————————————-

இந்திய பெருங்கடலின் பெரும் பகுதியை சிங்கள அரசு கைப்பற்றத் துடிப்பதை இந்தியா பாரமுகமாகயுள்ளது. இது குறித்தான ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த பிரச்சனைகளால் குறிப்பாக தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தான் முதலில் தனது பாதுகாப்பை இழக்கும். நான் இதை குறித்தெல்லாம் பல முறை பேசிவிட்டேன். ஆனால் நமது கவனமெல்லாம் சர்க்கார் சினிமா, மீடூ, என வீண் விவாதங்களுக்கு மட்டுமே செல்கிறது. 

நேற்றைய எனது பதிவு
-----------------------------
ஐநாவில் சிங்கள அரசு, இந்து மகா சமுத்திரத்தின் பெரும்பகுதியை தன் நிலத்திற்கு சொந்தமென உரிமைகோரி மனு அளித்துள்ளது. 

இந்திய பெருங்கடலில் இலங்கையின் ஆதிக்கம் தற்போது 200 மைல்கள் உள்ளதை 350 மைல்களாக அதிகரிக்க வேண்டி ஐ.நா.மன்றத்தில் முறையிட்டுள்ளது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்தியாவோ வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகிறது. 

ஏற்கனவே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்க டீகோகார்சியாவில், பிரான்ஸ் மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதிக்கம், ஹம்பன்தோட்டா துறைமுகப் பிரச்சனை, திரிகோணமலை துறைமுகப் பிரச்சனை, சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, மேலை நாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டங்களும் இந்து மகா சமுத்திரத்தில் இருப்பதாக செய்தி வருகிறது. 

இப்படியான சிக்கலில் ஆபத்து ஏற்பட்டால் நேரடியாக கேரளம் மற்றும் குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம் நாகைவரை உள்ள கடற்கரைப்
 பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும். 
இது தமிழகத்தின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்சினை.

 இலங்கையின் இந்த கோரிக்கை விசாரிக்கப்பட்டு, இறுதித்தீர்ப்புக்காக அடுத்த ஐ.நா அமர்விற்கு தள்ளிப்போடப்பட்டிருகிறது. இந்திய அரசு அழுத்தம் கொடுத்தால் ஐ.நாவில் தீர்ப்பு வராமல் ஒத்திவைக்க முடியும். 

சிங்கள தேசம் கைப்பற்றத் துடிப்பது குமரிக்கண்டத்தின் இந்திய பெருங்கடலின் பெரும் நீர் பரப்பை தான். ஆனால் இந்தியா இதை பாரமுகமாகயுள்ளது வேதனையை தருகிறது.

என்ன செய்ய?

விதியே விதியே தமிழ்சாதியே.

ஐநா மன்றத்தில் இலங்கை அரசு இந்து மகா சமுத்திரத்தை அபகரிக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்த மனுவும், அது தொடர்பான ஐநா. ஆவணங்களும் இன்று கையில் கிடைத்தது. அதை படித்துவிட்டாவது இந்து மகாசமுத்திரத்தில் எதிர்காலத்தில் உள்ள ஆபத்தை உணருங்கள். அந்த ஆவணங்களைக் காண இங்கு சொடுக்கவும்.
http://ksradhakrishnan.in/இப்பவாச்சும்-பேசுங்கய்ய/


#இந்திய_பெருங்கடல்
#டீகோகார்சியா
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
20/12/2018

No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.