Thursday, March 21, 2019

தூத்துக்குடி

#தூத்துக்குடிநாடாளுமன்றத்தொகுதி கழக வேட்பாளர் கவிஞர். #கனிமொழி அவர்களை இன்று தூத்துக்குடியில் சந்தித்து தேர்தல் பணிகளை குறித்து விவாதித்தேன். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமல்லாமல் தொகுதி முழுவதும் பணிகளை ஆற்றக்கூடிய விடயங்களை குறித்து அவரிடம் பேசினேன். உடன் முன்னாள் ஒன்றியச் செயலாளர் பா.மு.முத்து, பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டியன், முன்னாள் நகரச் செயலாளர் ராமன், ராஜகுரு மற்றும் பல நிர்வாகிகள் உடன் வந்தனர். சென்னையிலிருந்து இன்றைக்கு காலையில் தூத்துக்குடியில் இறங்கியதிலிருந்து தேர்தல் பணிகள் குறித்தான நடைமுறைகளைக் குறித்து பல கழகத் தோழர்களிடம் விவாதித்து திட்டமிடப்பட்டுள்ளது.

#தூத்துக்குடி_நாடாளுமன்றத்_தொகுதி
#தூத்துக்குடி

#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-03-2019


No comments:

Post a Comment