Wednesday, March 25, 2015

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் . -- Land Acquisition.(4)







நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வரும் 5ம் தேதியோடு காலக்கெடு முடிவடைகிறது. அதேவேளையில்  அவசரச் சட்டமும் காலாவதி ஆகின்றது. இப்படியான சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

கடந்த டிசம்பர் 31ம் தேதி நில கையக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. மக்களவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 20ம் தேதிமுதல் துவங்குகின்றது. மாநிலங்கள் அவையில் இம்மசோதா நிறைவேறுமா என கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில், அனைத்து எதிர்கட்சிகளும் இந்தச் சட்டம் கூடாது என்று குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளது.

கடந்த இரண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகளிலும் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாக்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மோடி அரசு அவ்வாறு திருத்தங்களைச் செய்யாமல் விவசாயிகள்,  பழங்குடியினர், மீனவர்கள் நலன்களை புறக்கணித்துவிட்டு, புணரமைப்பு , மறுகுடியமர்த்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை எனச்  தெளிவான பரிகாரங்கள் எதுவுமில்லை.

பொதுநோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கு தெளிவான வரையறைகளோ விபரங்களோ சரியாக இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தும் போது 80சதவிகிதம் நில உரிமையாளர் ஒப்புதலும், பொது மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது 70சதவிகித நில உரிமையாளர் ஒப்புதல் வேண்டுமென இருந்ததை 50சதவிகிதம் இருந்தாலே போதும் என இப்பொழுது மோடி அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு, வீட்டு வசதி, தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு என்ற ஐந்து துறைகளிலும் தனியார் கூட்டு நிறுவவங்களோடு செயல்படும்போது விவசாயிகள் தங்கள் ஒப்புதல்களை அளிக்கத் தேவையில்லை என்று இப்பொழுது மோடி கொண்டுவந்துள்ள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நோக்கமென்று சொல்லப்படுகின்ற திட்டங்களுக்கு எந்த மதிப்பீடும், சமூக அக்கறையோ, தாக்கமோ மதிப்பிடத் தேவையில்லை என்று, அடாவடியாக நிலங்களை அபகரித்துக்கொள்ளும் வகையில் இப்போதைய மசோதா அமைந்துள்ளது.

வளமான விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று முந்தைய சட்டத்திலிருந்த பிரிவை மாற்றி, எதைப்பற்றியும் சிந்திக்காமல் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றநிலையில் மசோதா அமைந்துள்ளது. இந்தவகையில் எளிதாக மீத்தேனுக்கும், நியூட்ரினோவுக்கும் நிலங்களை கையகப்படுத்த முடியும்.

முந்தைய சட்டத்தில், நிறுவனங்கள் கம்பெனி திட்டம் 3வது பிரிவின் கீழ்
பதிவு செய்திருக்க வேண்டும். இப்பொழுது அதை அறவே நீக்கி தனியார் நிறுவனங்கள், பங்குதாரர்கள், கார்ப்ரேஷன்கள் என யார்வேண்டுமானாலும் பெரிய முதலாளிகளுக்கு உதவியாக நிலத்தை கையகப்படுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

நிலம் இழந்தோர்கள் இழப்பீடு வழங்குவதற்கு தவறும் பட்சத்தில் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படலாம். இம்மாதிரி பிரச்சனைகளுக்கு ஐந்தாண்டுகள் காலவரையில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்பதை மாற்றி, நீதிமன்றம் சென்று நிவாரணம் கேட்டோ, இடைக்கால தடைகேட்டோ செல்ல முடியாதபடி நீதியே மறுக்கப்பட்டுள்ளது.

இப்படியான கொடிய முறையில் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த மசோதா அமைந்திருக்கிறது என்று பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.


The UPA's 2013 Act made it mandatory to obtain the consent of 70-80% of farmers in case land was acquired for private and PPP projects.

The NDA's amendments to the UPA's land law severely compromise farmer rights and violate the Article 14th of Our Constitution of India.

The Fight for Land will go on....

ஆங்கிலேயர்கள் நில கையகப்படுத்தும் சட்டம் 1894ல் பிறப்பித்து நாட்டின் விடுதலைக்கு முன்னால் ஜமீன்தார்களுக்கும், ஜாகிர்தார்களுக்கும் நிலத்தை அள்ளி வழங்கினார்கள். அதே நிலைமையாக இப்போதைய மோடிதலைமையில் உள்ள  மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்கத்தான் இந்தச் சட்டம்.



தேர்தல் நேரத்தில் மோடி பேசியதென்ன?
இப்போது செய்துகொண்டிருப்பதென்ன?

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
25-03-2015.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...