Sunday, September 30, 2018

இலங்கை பயணத்தில் யாழ்ப்பாணம்

இலங்கை பயணத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திரிகோணமலை ஆகிய பகுதிகளில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டு கொழும்பு வந்தபோது, வடக்கு, கிழக்கு மாகாண ஈழ சகோதரர்கள் எங்களைப் பார்க்க வரவில்லையே என்று ஆதங்கத்துடன் வருத்தமாக குறிப்பிட்டனர். எங்களது பயண திட்டம் மிகவும் குறுகிய காலத்திற்குள் அமைக்கப்பட்டது. அனைத்து இடங்களுக்கும் சென்றுவர எங்களால் இயலவில்லை. அப்படியிருக்கையில் உங்களை புறக்கணித்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தமுறை இந்த பகுதிகளுக்கு வரும்போது உங்களை சந்திக்க விழைகிறேன். கொழும்பு நகரில் நாளை வரை இருக்கிறேன். வாய்ப்பிருப்பவர்கள் வாருங்கள். சந்திப்போம். 

நன்றி;வணக்கம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30/09/2018

No comments:

Post a Comment