Tuesday, September 18, 2018

ஈழத் தமிழர் பிரச்சினை

ஈழத் தமிழர் பிரச்சினை
==================

பிரித்தானிய தமிழ் பேரவை (BTF) 2012 நவம்பர் 7, 8 தேதிகளில் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து உலகத் தமிழ் மாநாடு பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில், லண்டனில் நடத்தியது. இந்த நிகழ்வுக்கு தளபதி மு.க. ஸ்டாலின், தா. பாண்டியன், டி. ராஜா எம்.பி., பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க. மணி, திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராஜா, ஸ்ரீதரன், யோகேஷ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தமிழ் இனத்தின் பிரதிநிதிகளோடு நானும் கலந்துகொண்டேன். அந்த நிகழ்வின் முதல் வினாவாக என்னிடம், தி.மு.க. ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது என்று வினா எழுப்பியதற்கு, உரிய விளக்கத்தோடு பதில் அளித்த வீடியோ காட்சிதான் இது. இதை இன்றைக்கு அதிர்வு கண்ணன் நினைவுபடுத்தினார். அதனுடைய காணொளிக்கான இணைப்பை அனுப்பியிருந்தார்.

https://www.facebook.com/ksradhakrish/videos/1815807192042295/

#ஈழத்தமிழர்பிரச்சினை 
#BTF 
#லண்டன்மாநாடு 
#worldtamilconference
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-9-2018

No comments:

Post a Comment