Sunday, January 15, 2023

#பொங்கல் வாழ்த்துகள் #கிராமத்தின் மண்வாசனை….



—————————————
                              (2)
பொங்கல் நாவில் பட்டதும்
மனதில் அப்படியொரு தித்திப்புநினைவில் என்றும் உன் புன்னகை….. குழைஞ்ச பொங்கல், சோறு, சாம்பார், பல வித ரசம், அப்பளம், கடாரங்காய் ஊறுகாய்-கட்டி எருமை தயிர்,அவியல், சிறுகிழங்கு பொரியலோடு, மாசல் அற்ற தாளித்த வாழைக்காய்-உருளைக்கிழங்கு,பாயசம்-நெய்வடியும் சர்க்கரைப் பொங்கலையும் சாப்ட்டு முடிக்கும்போது…..









என்றும் உன் நினைவில்……உன் அன்பில்…



கிராமத்தின் மண்வாசனை….

உழவர் பெருமக்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கத் துவங்கும் விழா பொங்கல் விழா. பொங்கல் விழா உழவர் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருவாரியான மக்களை உழவர்  பெருமக்களாகக் கொண்ட ஒரு நாட்டில் உழவர் பெருநாள் தேசியத் திருநாளாக உருவாகி நிற்பது பொருத்தமே.

#வடலபுல மகர சங்கராந்தி:

மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது துவக்கத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். தற்போது இது சனவரி 14 அன்று நிகழ்கிறது. இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

வடமொழியில் சங்கரமணம் என்றால் நகர துவங்குதல் என்று பொருள். சூரியன் தனது ராசி மண்டலத்தில் 12 ராசிகள் வழியாகப் பயணிக்கிறார்.

ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன. 12 ராசிகளின் பெயரிலேயே வடமொழியில் மாதங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர்வதே சங்கராந்தி ஆகும்.

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமசுகிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று துவங்குகிறது.

#எத்தனை சங்கராந்திகள்

நாம் முன்பு கூறியது போல் ராசி் மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சங்கராந்தி வீதம் மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன.

உத்தராயண புண்ணிய காலத்தில் 6 சங்கராந்திகள் வரும் மற்றும் தட்சிணாயன காலத்தில் 6 சங்கராந்திகள் வரும். இந்த 12 சங்கராந்திகளும் 4 சங்கராந்தி பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

#உத்தராயணம்   #தட்சிணாயனம் என்பது…. 

உத்தரம் என்றால் வடக்கு. தட்சிணம் என்றால் தெற்கு. அயனம் என்றால் வழி என்பது பொருள்.

சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய வழியில் பயணிப்பது உத்தராயண காலம் ஆகும்.

சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வழியில் பயணிப்பது தட்சிணாயன காலம் ஆகும்.

சங்கராந்தி வகைகள்
வருடத்திற்கு மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன.

தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலத்தில் வரும் 6 சங்கராந்திகள் மற்றும் அதன் மாதங்கள்:

மகரம்-தை, கும்பம்-மாசி, மீனம்-பங்குனி, மேஷம்-சித்திரை, ரிஷபம்-வைகாசி, மிதுனம்-ஆனி.

தட்சிணாயன காலத்தில் ஆடி முதல் மார்கழி வரை வரும் 6 சங்கராந்திகள் மற்றும் அதன் மாதங்கள்:

கடகம்-ஆடி, சிம்மம்-ஆவணி, கன்னி-புரட்டாசி, துலாம்-ஐப்பசி, விருட்சிகம்-கார்த்திகை, தனுசு-மார்கழி.

இந்த 12 சங்கராந்திகளும் 4 பிரிவுகளாக பிரிகின்றன:

• அயனி சங்கராந்தி
• விஸுவ சங்கராந்தி
• விஷணுபதி சங்கராந்தி
• ஷாட்சித முக சங்கராந்தி

அயனி சங்கராந்தி :

மகரம் மற்றும் கடக சங்கராந்திகளை அயனி சங்கராந்திகள் என்பர். இது உத்தராயண மற்றும் தட்சிணாயன சங்கராந்திகள் இரண்டும் சேர்ந்த ஒன்று.

இவையிரண்டும் பருவ நிலை சார்ந்தவை ஆகும். உத்தராயண மற்றும் தட்சிணாயன காலத்தின் ஆரம்பமே அயனி சங்கராந்தி ஆகும்.

#மகர சங்கராந்தி

சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளே மகர சங்கராந்தி ஆகும்.

சூரியன் 29 நாட்கள் 27 நிமிடங்கள் 16 நொடிகள் மகர ராசியில் பயணிப்பார். இது தை மாதத்தின் முதல் நாள் நிகழ்கிறது.

இது வெகு விமர்சையாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

தேவர்களுக்கு காலைப் பொழுதின் ஆரம்பம் மகர மாதம் ஆகும். ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாத இரவு என்பது தேவர்களின் ஒரு நாள் என்று நம்பப்படுகிறது.

காலை பொழுதின் துவக்கமே தை மாதம் ஆகும். எனவே தான் சூரியன் முதலான தேவர்களுக்கு இந்த ஆரம்ப நாளில் இந்துக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி நேபாளம், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, லாவோஸ் போன்ற நாடுகளில் இந்த விழாவானது வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

சங்கராந்தி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பலவாறு கொண்டாடப்படுகிறது:

இந்தியாவில் பல பெயர்களில் இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

*மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி - தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மணிப்பூர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், தெலங்கனா,ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா

*அறுவடை திருநாள் -குறிப்பாக தமிழ்நாட்டில் அறுவடை திருநாள் அல்லது தமிழர் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது. 

சங்கராந்தி என்பது குறிப்பிட்ட வகை மக்கள் இந்த பெயரில் தமிழ்நாட்டில் கொண்டாடுகின்றனர்.

உத்தராயண்- குஜராத் மற்றும் இராஜஸ்தான்

லோரி - இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்

மகர ஜோதி - சபரிமலை,கேரளம்

#பிற நாடுகளில்:

நேபாளம்
தாரு மக்கள்- மாகி
பிறர் - மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி
தாய்லாந்து - สงกรานต์ சொங்க்ரான்
லாவோஸ் - பி மா லாவ்
மியான்மர் - திங்க்யான்
இலங்கை -பொங்கல் பண்டிகை

No comments:

Post a Comment

*Remember your self-respect has to be stronger than your feelings*.

*Remember your self-respect has to be stronger than your feelings*. Life  will be simple if you are stronger and if you believe it will work...