Friday, September 30, 2016

காவிரி..

"இப்பூவுலகம் பொது, தனியன்று"   --கம்பன்
பூவுலகமே பொது என்றால் ஓடும் நதிகள் மட்டும் ஒரு நாட்டிற்கோ, ஒரு மாநிலத்திற்கோ எப்படிச் சொந்தமாக இருக்க முடியும்? 

இக்கருத்தை ஒட்டி இரண்டு செய்திகள் தற்போது உலா வருகின்றன. உச்ச நீதிமன்றம்,  தனது தீர்ப்பில்  தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய  காவிரி நீரின்அளவை உரிய முறையில் ஆய்ந்து, கணக்கிட்டு கர்நாடக அரசு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இரண்டு தீரப்புகளிலும், நடுவண் அரசு உடனடியாக, இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.                   

கர்நாடக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடுவண் அரசின் அமைச்சர் சதானந்த கவுடா கலந்து கொண்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவா கவுடா 
தன் தகுதிக்கு கீழ் இறங்கி கூப்பாடு போடுகிறார் 
 காங்கிரசும், பாஜக-வும் தமிழ்நாட்டிற்கு எதிராகக் கைகோத்து நிற்கின்றனர். ஆகா, தேசியம் திக்கு முக்காடி நிற்கும் அழகே அழகு! 

மோடிக்கும் சோனியாவுக்கும் தமிழ்நாடு எனும் ஒரு  மாநிலம் இந்தியாவுக்குள் ஒட்டிக் கொண்டு இருப்பதாக நினைக்கவில்லை. அவர்கள் இருவருக்கும், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதே முதன்மை நோக்கமாகும். 
இந்திய ஒருமைப்பாடாவது? மண்ணாங்கட்டியாவது?

உரி தாக்குதலுக்குப் பதில் கொடுப்பதற்காக பாகிஸ்தானுடன்  1960 இல் நேரு போட்ட நதி நீர் ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்வோம் என்று பிரதமர் அச்சுறுத்துகிறார். ஆனால் தமிழ்நாடு , கர்நாடக மாநிலங்களிடையே காவிரி நதி நீர் தொடர்பாகக் காணப்படும் பதட்டநிலைக் கண்டு மோடி சிறிதும் கவலைக் கொள்ளவில்லை.  

சும்மாவா சொன்னார்கள் , கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானா என்று ...

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...