Wednesday, August 9, 2017

தோழர். பா.ஏகலைவனின் பதிவைப் பார்த்தேன். எதார்த்தமான செய்தி.

சில சமயங்களில் எனது பதிவை அப்படியே எடுத்து ஒரு பெண் பதிவிட்டால் ஆயிரமென்ன இலட்சங்களில் கூட விருப்பம் தெரிவிப்பார்கள்.

ஆனால் மூலப்பதிவான நம்முடைய பதிவுக்கு எந்த மறுமொழியும் இருக்காது.

ஒரு அரசியல் கட்சித் தலைவரின் பதிவில் கூட அவ்வளவு விருப்பங்கள் (Likes) வருவதில்லை. எந்த கருத்துமில்லாமல்
ஒப்புக்கு பதிவு போட்டாலும் கூட ஆயிரம் விருப்பங்கள் தெரிவிப்பது என்பது அரசியலா அல்லது வேறுவித சிந்தனையா என தெரியவில்லை.

ஒரு கருத்துமில்லாமல் தொலைக்காட்சியில் உப்பு சப்பில்லாமல் பேசினால் கூட அதற்கும் அவர்களுக்கு சபாஷ் கூறும் இந்த மக்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்.

சமூக வலைத்தளங்களும் நியாயமான கருத்துக்களை விட வேறு உளவியல் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டால் கருத்தும் சொல்லும், வாய்மையும் எடுபடாது.

ஆட்டு மந்தைகளும், காக்கா கூட்டங்களும் நீரிருக்கும் நீர் நிலைகளில் உள்ள கொக்குகளும் தான் நினைவுக்கு வருகிறது.

புரிந்து எழுதியுள்ளார் பா.ஏகலைவன்.

பதிவை பார்க்க.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...