Tuesday, August 28, 2018

தலைவர் கலைஞர்,அடியேன், உயிர்மை குறித்து திரு பாரதிமணி கவிஞர் மனுஷ்யபுத்திரனின் பதிவு .....

தலைவர் கலைஞர்,அடியேன், உயிர்மை
குறித்து திரு பாரதிமணி கவிஞர் மனுஷ்யபுத்திரனின் பதிவு .....
——
உயிர்மை பற்றி கலைஞர்
*****************************************
செப்டம்பர் 1 வெளிவரும் உயிர்மை கலைஞர் சிறப்பிதழ் மூலமாக உயிர்மை 16 ஆம் ஆண்டில் அடியெடித்து வைக்கிறது. இந்த சிறப்பிதழில் எழுதியிருக்கும் நடிகரும் எழுத்தாளுமான பாரதிமணி கலைஞர் உயிர்மை பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார்:
.................................

கலைஞரின்  பரந்துபட்ட வாசிப்பு என்னை பிரமிக்கவைக்கிறது. ஒரு சின்ன உதாரணம். அப்போது நான் உயிர்மையில் தொடராக எழுதிக்கொண்டிருந்த காலம். ஒருநாள் என் நண்பரொருவர் எனக்கு போன் பண்ணி, ‘மணிசார், ஒரு சந்தோஷமான சமாசாரம். என் சினேகிதர் வக்கீலா இருக்காரு. பெயர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்  கலைஞர் வீட்டு நண்பர். இன்னிக்கு காலையிலே கோபாலபுரம் போனாராம். அவர் கையிலே இன்னிக்கு வந்த உயிர்மை இதழ் இருந்தது. தயாளு அம்மாளுக்கு உடம்பு சரியில்லேனு பாக்கப்போயிருக்கார். பெரியவர் இவரைப்பார்த்து, ‘வாய்யா! கையிலே என்ன?... உயிர்மையா? அதை என்னிடம் குடுத்திட்டு உள்ளே போ. என் காப்பி இன்னிக்குத்தான் வரும். நீ வர்ரதுக்குள்ளே மனுஷ்யபுத்திரன் தலையங்கமும், பாரதி மணின்னு ஒரு பையன் எழுதறான்... அவன் கட்டுரையும் படிச்சிட்டுத் தரேன்!’ என்றாராம். அதுக்கு நண்பர், ‘தலைவரே! பாரதி மணி சின்னப்பையன் இல்லை. எழுபத்தஞ்சுக்கு மேலே இருக்கும். ஆனா இப்பொதான் எழுதறாரு’ என்று பதிலளித்தாராம். ஒரு ரெண்டரையணா எழுத்தாளனுக்கு வேறென்ன கொடுப்பினை வேண்டும்! அப்போது மனுஷ்யபுத்திரன் தி.மு.க.வில் சேருவோமென்று, அவரேகூடக் கனவு கண்டிருக்கமாட்டார்!

- பாரதி மணி

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...