Monday, August 27, 2018

பெண்ணுடல் அழகின் கற்பிதம்....

நன்றி தீக்கதிர் புத்தக மேசை

பெண்ணுடல் அழகின் கற்பிதம்
____________________________

சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாக வாசி முடிக்கப்பட்ட புத்தகம் அண்டனூர் சுரா அவர்கள் எழுதிய "கொங்கை"
எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய பதின்பருவத்திலிருந்து யோசித்துக்கொண்டிருக்கும் அல்லது அவளின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் அவளின்  முலைகளைப்பற்றிய எண்ணங்களும், சமூகப்பார்வையையும் சொல்லும் விதம்,
"நாம நெனக்கற மாதிரிதா ஒவ்வொருத்தரும் நெனச்சுருக்காங்க"என்று சொல்லும் அளவுக்கு எங்கோ ஏதோ ஒரு காலகட்டத்தில் சிறு துளியேனும் நிச்சயமாக நடந்திருக்கும்.. ஆக நாவலாசிரியர் கூறுவது போல புனைவு அல்ல.. நடந்து கொண்டிருக்கும் நிஜம்.

படித்து முடிப்பதே தெரியாத வகையில் கதையோட்டம் அமைத்திருப்பது சிறப்பு..

இது பெண்களுக்கான நூல் மட்டும் அல்ல..முலைகளைப்பற்றிய மனிதர்களின்  கண்ணோட்டத்தை அலசி நம் கைகளில் சேர்த்திருக்கிறார்.ஆக அனைவருக்குமான ஒரு சிறு நாவல் "கொங்கை"
மாற்றத்தை அவ்வளவு சீக்கிரத்தில் கொண்டுவர முடியாதுதான்.. ஆனாலும் இது போன்ற நிஜங்களை வாசிக்கும்பொழுது சிந்தனை மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

பெண் உடல் சம்பந்தமாக விளம்பரங்களின் தாக்கம் என்பது  பெண் உடல் அழகு என்றும் அடிமைப்படுத்தவும் வழிவகுக்கிறது என்பதையும் நாவலின் மூலம் பதிய வைக்கிறார்.

நாவலில் வரும் விஜி கதாபாத்திரம் துறுதுறுவென நாமும் அந்த வயதில் அவ்வளவு கேள்விகளுடனும் பதில்களுடனும் இருந்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை தந்தது..
சந்திரா டீச்சர் எல்லாம் தெரிந்தும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கும் சராசரி அம்மா..
அன்பான நட்புக்குரிய தந்தையாகவே இருந்தாலும்  இப்படியான அருவருக்கத்தக்க சமூகத்தில் அவருக்கும் தன் பெண்பிள்ளையின் மீது சிறு சந்தேகமாவது எழவே செய்கிறது..

இன்றைய சமூகத்தில் சம்பந்தமே இல்லாமல் உடல் மாற்றங்களால் கேளிக்கிண்டல்களுக்கு ஆட்பட்டு மனம் நொந்துகொண்டிருக்கும் சிறுமி விமலா.. அவளின் கையில் இந்த புத்தகம் முன்னமே கிடைத்திருக்கலாமே என்ற ஆதங்கம் மட்டும் இன்னும் குறையவில்லை.. கிடைத்திருந்தால் நிச்சயம் அவள் முலையை வெட்டியிருக்க மாட்டாள்.. ஆனால் கதை வேறு வழி பயணித்திருக்கும்..

புத்தகம் வாசித்தவுடன் எழுந்த மிகப்பெரிய ஆச்சரியம் ஒரு ஆண் எழுத்தாளர் பெண்ணின் உணர்வுகளை புரிந்து எழுத முடியுமா.....
முடியும் என நாவல் மூலம்  நிரூபித்திருக்கிறார். அண்டனூர் சுரா.

வாழ்த்துக்களும் நன்றிகளும் அண்டனூர் சுரா

கொங்கை
பாரதிபுத்தகாலயம் வெளியீடு
விலை ரூ.70
95 பக்கங்கள்
___________________________________
இந்தியாவில் மட்டுமல்ல இந்த பார்வை.இன்றைய மனித சமுதாயத்தில் பெண்ணுடல் என்பது கவர்ச்சிப்பொருளும் விளம்பரப்பொருளுமே..அவளின் கழுத்து, கூந்தல் என அனைத்து அங்கங்களும் எங்களுக்கே சொந்தம் என்ற சிந்தனையும் ,  அடிமை என்ற மனநிலையுமே மேலோங்கி இருக்கிறது..இது எல்லாவற்றையும் உடைத்து
அவளின் வலிகளையும் உணர்வுகளையும் தெரியப்படுத்தி பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும்..படித்து ஒரு வாரம் ஆகியும் இந்த நிமிடம் படித்து முடித்த உணர்வு..

2 comments:

  1. உங்களது மாறுபட்ட விமர்சன பார்வைக்கு நன்றி தோழர்

    ReplyDelete
  2. சிறந்த விமர்சனம்

    ReplyDelete

ஷோ கம்யூன் வாழ்வு…. என்றார். #polyamoryயும் #molecule எனும் சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship

ஓஷோ  கம்யூன்  வாழ்வு….  என்றார். #polyamoryயும் #molecule எனும்  சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship-என மே...