Sunday, March 26, 2023

#நேற்று-இன்றைய அரசியல்….



————————————————————-
இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு அகில இந்திய கட்சிகள்தாம் கண்முன் இருக்கின்றன. ஒன்று பாஜக, மற்றொன்று காங்கிரஸ். அகில இந்திய அளவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கான தளம் குறைந்து கொண்டே வருகிறது. எதிர்க்கட்சி என்ற அளவில் காங்கிரஸ் வலுவாக பெரிதாக இருந்தால்தான் நாட்டுக்கு நல்லது. 

காங்கிரசில் நேரு குடும்பத்தை தவிர்த்து பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி, பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய்பி றநாட்டுக் குடியுரிமை பெற்றிருந்ததால் சோனியா பிரதமராக முடியாது என்ற எதிர்ப்பு எழுந்ததின் காரணமாக சோனியாவின் பிரதிநிதியாக மன்மோகன் சிங் பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சாமானியன், நேர்மையானவன் என்று சொன்ன மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் நீடிக்க முடியவில்லை. விபிசிங், தேவகவுடா, ஐ.கே. குஜ்ராலாலும் அப்பதவில் செயல்பட முடியவில்லை. இது கடந்த கால வரலாறு.
 
ஒரு சாமானியன் இந்தியப் பிரதமர் ஆவது எளிதான விடயம் அல்ல. இதையெல்லாம் புரிந்து கொண்டு அரசியலைப் பேச வேண்டுமே ஒழிய, ஒரு புள்ளியை வைத்துக் கொண்டு ஏதோ ஆதரவு இருக்கின்றது என்பதற்காக எதையும் பேசிவிட்டுச் செல்வதில் நியாயங்களும் கிடையாது. ஜனசக்தி என்ற மக்கள் குரல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். அப்படியில்லாமல், நியாயத்தின் பக்கம் இல்லாமல், பெருவாரியான குரல்கள் அநியாயத்தை ஆதரிக்கிறது என்றால், அந்த பிரஜா சக்தியின் குரல் மக்கள் குரல் அல்ல; மாக்கள் குரல். அது ஜனநாயகத்துக்கும் உகந்ததல்ல.

இந்தியாவின் தேர்தல் அரசியல் களத்தில் தனிநபர்களின் மீதான பக்தியும் மோகமுமே சாதி-மத வாதங்கள் வாக்குகளாக மாறுகின்றன.  ஓட்டுக்கள் விற்பனை, தனிமனித துதிகள், பண பரிவர்த்தனை -வியாபார லாப அரசியல் என்ற நிலை….

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
26-3-2023.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...