Sunday, March 19, 2023

#வஉசி சுப்பிரமணியசிவா திருநெல்வேலிசதி வழக்கு

#வஉசி 
சுப்பிரமணியசிவா
திருநெல்வேலிசதி வழக்கு 


வழக்கறிஞர் சாது கணபதி பந்துலு. 

————————————————————
வ.உ.சிக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் திருநெல்வேலி சதி வழக்கில் முறையே 40, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையைக் குறைக்க இவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் வழக்கறிஞர் சாது கணபதி பந்துலு. இவருடைய வீடு இன்றைக்கும் நெல்லை திருநெல்வேலி சந்திப்பு வரதராஜப்பெருமாள் கோவில் தெருவில் உள்ளது. இந்த வீட்டில் பாரதி சிறிது காலம் தங்கி தனது கவிதா உலகில் உலாவி, சில கவிதைகளையும் படைத்தது உண்டு. பந்துலு வீடு, ‘பசிப்பிணி நீக்கும் மருத்துவர் இல்லம் ’ போல. யார் சென்றாலும் உணவருந்தலாம் என்ற நிலை இருந்தது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தனது சொந்த செலவில் சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்கு பந்துலு அழைத்துச் சென்றார். நெல்லை நகர் மன்றத் தலைவராக இருந்தவர். அவருடைய படம் நெல்லை நகர் மன்றத்தில் வைக்கப்படவில்லை என்பது வேதனையான செய்தியாகும். நெல்லை எழுச்சி நாளுக்கு முதல் நாள் அதாவது, 12.03.1908 அன்று பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சாது கணபதி பந்துலு சதித்திட்டம் தீட்டினார் என்று ஆங்கில காவல்துறையின் அதிகாரி காவலர் குருநாத அய்யர் மூலமாக வழக்கும் புனையப்பட்டது, இன்றைக்கு இந்த பந்துலுவின் வீட்டில் பந்துலுவின் தம்பி மகன் டாக்டர் ராஜாராம் (வயது 82 ) குடியிருக்கிறார். வ.உ.சி., பாரதி, ‘சிவம் பேசினால் சவம் எழுந்திருக்கும்’ என்று தனது பேச்சால் புகழ்பெற்ற சுப்பிரமணிய சிவா, ஓட்டப்பிடாரம் மாடசாமி, செங்கோட்டை வாஞ்சிநாதன் போன்றோர் வந்து சென்ற வீடு இது. இந்த வீட்டை திருநெல்வேலியின் அடையாளமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும்.




#வஉசி
#சுப்பிரமணியசிவா
#திருநெல்வேலிசதி_வழக்கு #வழக்கறிஞர்_சாதுகணபதி_பந்துலு.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
#KSR_Post
19-3-2023.
நன்றி- படங்கள், R Narumpu Nathan
Tirunelveli (திருநெல்வேலி)

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...