Saturday, July 9, 2016

Chennai

இந்த தேவாலயத்தின் மற்றொரு முக்கிய அம்சம் இங்குள்ள  மணி கோபுரம். இந்த கோபுரத்தில் மொத்தம் ஆறு மணிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சுமார் 150 கிலோ எடை கொண்டவை. சென்னை நகரில் தற்போது இருப்பவற்றிலேயே அதிக எடை கொண்ட இந்த மணிகள், காலங்கள் கடந்தும் இன்றும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த தேவாலயத்தைப் போன்றே ஒரு ஆழ்ந்த அமைதியை நமக்கு பரிசளிக்கக் கூடிய மற்றொரு தேவாலயம், அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அருகில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்.

சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம், கிரேக்கர்களின் ஐயானிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. முக்கோண கூரையும் அதனைத் தாங்கும் வேலைப்பாடுகள் கொண்ட உயர்ந்த தூண்களும் கொண்ட ஐயானிக் பாணி, அந்தக்கால கிரேக்கர்களால் மிகவும் ஸ்டைலான மாடலாக கருதப்பட்டது. 

லண்டனுக்கு வெளியே அமைந்துள்ள மிக நேர்த்தியான ஆங்க்லிகன் தேவாலயமாக கருதப்படும் இதனை, இங்கு வசித்த ஆங்கிலேயர்களே கைக்காசுபோட்டு 1815இல் கட்டியுள்ளனர். இதற்காக அந்த காலத்திலேயே சுமார் ரூ.2 லட்சத்து 7000 செலவானதாம். இந்த தேவாலயத்தை ஒட்டித்தான் இந்த சாலையே கதீட்ரல் சாலை என அழைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...