மதுரைத் தமிழ்ச் சங்கம்:
-----------------------
https://ta.wikipedia.org/s/2t94
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் 'செந்தமிழ்' என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது 5ம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது.சங்கம்4 - பாண்டித்துரைத்தேவருடையது
மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி இச்சங்கத்தின் கீழ் இயங்குகிறது. தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு அரும்பணி ஆற்றிவருகிறது. .[1] திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய நூல்களின் பெருமையே இந்தச் சங்கம் தோன்றுவதற்கு உந்து மையமாக விளங்கியது. .[2]கு. கதிரவேற்பிள்ளையால் 1800 பக்கங்களில் 63900 சொற்களில், மூன்று பாகங்கள் கொண்ட தமிழ்ச் சொல் அகராதியை தமிழ்ச் சங்க அகராதி எனும் பெயரால் மறு பதிப்பாக, முதல் பாகம் 1910 இலும், இரண்டாம் பாகம் 1912 இலும், மூன்றாம் பாகம் 1923 இலும் மதுரைத் தமிழ் சங்கத்தாரால் அச்சிடப்பட்டன.
No comments:
Post a Comment