கடந்த 7.7.2016 அன்று முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை சோதிக்க மத்திய அணைப் பாதுகாப்பு முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே. பிள்ளை தலைமையில் குழு முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மூவர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் தலைவர் நாதன் ஓய்வு பெற்றதால், பி.ஆர்.கே. பிள்ளை அந்த குழுவின் தலைவராக பொறுப்புக்கு வந்தார். எட்டு மாதங்களுக்குப் பின் தென்மேற்கு பருவ மழையால் நீர் வரத்து அணைக்கு அதிகமாக வருவதால் திரும்பவும் அணையின் பலத்தை ஆய்வு செய்ய இந்தக் குழு வந்திருந்தது. கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள், தமிழக அதிகாரிகள், தமிழகப் பொதுப்பணித் துறையின் படகில் சென்று ஆய்வு நடத்தினர். "அனைத்துவிதமான ஆய்வுகள் மற்றும் சோதனைக்குப் பின் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. இதனால் கேரளாவுக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்படாது. அணையை ஒட்டியுள்ள 13 சட்டங்களும் சரியாக பராமரிக்கப்படுகின்றன. இது குறித்து மாதம் ஒரு முறை ஆய்வும் நடத்தப்படுகிறது" என்று ஆய்வுக்குப் பின் உறுதிபட திரு. பிள்ளை அவர்கள் குறிப்பிட்டது தமிழகத்துக்கு ஆறுதலான செய்தி.
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...

No comments:
Post a Comment