Saturday, January 21, 2017

குருசேத்திரமான மெரினா கடற்கரை-ஜல்லிக்கட்டு

Yes darling 
நேற்று  20/01/ 2017 இரவு  10 மணிக்கு பிறகு சென்னை நகரின் குருசேத்திரமான மெரினா கடற்கரைக்கு பார்வையாளராக தோழர்களின் அழைப்பை ஏற்று  சென்றேன் .முத்துக்குமார் மறைவு ,2009 முள்ளிவாய்க்கால் கொடுரம் , கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளில் என்னோடு அப்போது களப்பணி ஆற்றிய மாணவர்கள் இன்றைய இளைஞர்கள் கடந்த 2 நாட்க்களாக சும்மா வந்து இங்குள்ள போராட்ட களத்தையும் நிலைமையையும்  பார்க்க வாங்க  . அரசியல்வாதிகளுக்கு இங்கு இடமில்லை 
நீங்கள் எந்த பதவியும் வகிக்காதவர் . உங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் எல்லாம் எம்பி ஆகிவிட்டனர் என்றனர் . உங்களை போன்ற ஆட்கள்  இங்கு என்ன நடக்கிறது என்று போராட்டத்தை  பார்க்க வர வேண்டும் என்றனர் . நானும் இன்று பின்னிறவு ஒரு பார்வையாளனாக அங்கு சென்றேன் . இனியனும் , ராஜேஸ் மற்றும் சில தோழர்கள் அழைத்து சென்றனர்.போராடும் குழுக்கள் எப்படி போராடுகிறார்கள் என்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது .
ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே. குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக்கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும் வேறு ஆரம்பங்களைக் கொண்டதாகத்தான் எனக்குப் படுகிறது.இளைஞர்களின் கட்டுப்பாடு ;போக்குவரத்து வாகனங்களை சரிசெய்து போக்குவரத்திற்கு வழி செய்தனர் . பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக இருந்தது மகிழ்ச்சியை தந்தது .

குறுகிய இரண்டு நாட்களுக்குள் திட்டமிட்ட நிர்வாகம் பாராட்டகூறிய வகையில் நடத்துகின்றனர் . உண்மையான போர் குணம் இந்த இளைஞர்களிடம் இருக்கின்றது  .போராட்டத்தில் இருந்த  இளைஞர்களிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 'அரசியல் இல்லாத அரசியல்''அரசிய்வாதி இல்லாத அரசியல்வாதி'என்ற நிலைப்பாடு எப்படி என்று அவர்களிடம் நானும் விவாதித்தேன் . ஜல்லிக்கட்டு என்ற குறியீடை தாண்டி தமிழ்நாட்டில் நலனில் அக்கறை கொள்கிறோம் என்றார்கள் . நான் அவரிடம் தமிழகத்தில் பிரச்சனைகள் நூற்றுக்கு மேல் இருக்கும் . குறிப்பாக பலருக்கு இப்பிரச்சினைகளே  தெரியவில்லை . இந்த பிரச்சினைகளில் 50க்கு மேலாக பட்டியலிட்டு எனது செய்தி கட்டுரை நாளை( 21/1/2017)ஒன் இந்தியா என்ற இணையதள இதழில் வருகிறது;
விவசாயிகள் பிரச்சினை , தமிழகத்தில் உள்ள முக்கிய  நதிநீர் ஆதரர பிரச்சினைகள் , தமிழக உரிமைகள் , தமிழகத்தில் கிடப்பில் போடபட்ட திட்டங்கள் , மணல்கொள்ளைகள் என பட்டியல் இட்டுள்ளேன் .அதை படித்து விவாதியுங்கள் ஜல்லிக்கட்டோடு இல்லாமல் இந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து போராடுங்கள் என்றேன் .பயன் உள்ள குளிர்ந்த கடல் காற்றோடு நேற்று இரவு அமைந்தது . இது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது .  நம்மளையும் மதித்து நம்மால் வளர்க்கப்பட்ட இளைஞர்கள் நேசத்தோடு , பெருமதிப்பு கொடுத்து சீராட்டியது மனத்திற்கு  இதமாக இருந்த்து . 
44 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில்  உழைத்ததற்கான அங்கிகாரம் தான் இந்த அன்பான அழைப்புகள் ....

சென்னை மெரினாவின் ஆழி சூழ் பெருங்கூட்டம் போராட்டமாக  தெரியவில்லை இது ஒரு சல்லிக்கட்டு வெற்றி விழா  கொண்டாட்ட கூட்டம் .
................................................
இந்தப் போராட்டத்திற்கு அரசியல் தலைமை வேண்டும், தத்துவப் பின்னணி வேண்டும் என்று சிலர் கரிசனம் காட்டுகிறார்கள். தத்துவப் பின்னணி யுடன் (political ideology) கட்சி நடத்தும் யாருக்கும் உள்நோக்கம் (inner agenda)  இல்லாதிருக்கிறதா..... இந்தப் போராட்டம் இயற்பியல் தத்துவப்படி ஒரு மோதாற்றல் (Impulse, a momentum with initial velocity zero) அதன் வலு தான்,அந்தச் சுத்தியலடிதான் இந்தியாவையே நடுங்க வைத்திருக்கிறது... உங்கள் பட்டறையில் காய்ச்சப்பட்ட இரும்பை இதில் கூர் தீட்ட நினைக்கக் கூடாது.


#Jallikkattu
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
21/01/17



No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...