Wednesday, June 26, 2024

பொதுவாகவே அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்றைய நிலை இருக்கிறது*.

*பொதுவாகவே  அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்றைய நிலை இருக்கிறது*.

இன்று திமுக 40/ 40 வெற்றிதான். திமுக வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 1967 முதல் திமுக கூட்டணி மூலம் தேர்தலை சந்தித்து இல்லை. திமுக தனியாக நின்றத்தும் இல்லை. இந்த வெற்றி நாளை தோல்வியாக மாறலாம். திமுகவும அதை சந்தித்தும் உள்ளது. இன்றைய தீண்டப்படாத கட்சி  என திமுக சொல்லும் பாஜகயுடனும் கூட்டணி வைத்துள்ளது.










1972 தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெறும் என்று பலரும் ஆருடம் சொன்னார்கள்.
ஆனால் அன்று தேர்தல் களம் கண்ட
 திமுக வானது அண்ணாவின் காலத்தை விட அதிகத் தொகுதிகளைப் பெற்று வெற்றியடைந்தது. அது வேறு விஷயம். 

நான் இப்போது உள்ள அரசியல் நிலைமைக்கு வருகிறேன். இதற்கிடையில் எவ்வளவோ அரசியல் விஷயங்களைச் சொல்லலாம். அதற்கு இடமில்லை!

ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி கட்சியைக் கைப்பற்றி விட்டார் அதன் மூலம் வெற்றி அடைந்து விட்டார் என்று பேசினார்கள். இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு அவரது கதையே முடிந்து விட்டது என்கிறார்கள்.

அதேபோல் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்று நடைபயணம் எல்லாம் மேற்கொண்ட போது அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவை மலர வைத்து விடுவார் என்றெல்லாம் நம்பிக்கையாகப் பேசினார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அப்படி சொன்னவர்கள் எல்லாம் அவருக்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள். இப்படித்தான் அரசியல் நோக்கர்கள் ஊடகங்கள் எதிர்வினையாளர்கள் அரசியல் அறிந்தவராக சொல்லிக்கொண்ட எல்லோரும் உலவுகிறார்கள். அல்லது தான் மட்டும் தான் அறிவாளி என்பது போல நடந்து கொள்கிறார்கள். 70% மக்கள் தங்கள் வாய்க்கு வந்ததை பேசுவது தான் தேர்தல் நேரங்களில் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இந்திய அரசியல் சாசனத்தின் வெளியீடுகளை எல்லாரும் கையில் பிடித்துக் கொண்டு தூக்கிக் காட்டுகிறார்கள்.
இந்திய அரசியல் சாசனத்தைக் கேலிக் கூத்தாக்கியவர் இந்திரா காந்தி அவர்கள் தான். அதெல்லாம் வசதியாக மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அப்போது அகிலேஷ் யாதவின் தந்தை இப்போது இருக்கும் லல்லுப் பிரசாத் யாதவ் காஷ்மீர் பாரூக் அப்துல்லாஹ் தமிழ்நாட்டில் தி.மு.க எல்லோரும் இந்திரா காந்திக்கு எதிர்வினையாற்றி அப்போது ஆற்றினார்கள். திமுக அரசியல் சட்ட சாசனத்தையே எரித்தார்கள்.

இந்த கும்பல்கள்தான் இப்போது அரசியல் சாசனத்தை நாடாளுமன்றத்தில் தூக்கிக் காட்டுகின்றன. இதுதான் கருத்துக்களின் கோளாறுகள் என்கிறேன். நடைமுறைக்கு ஆகாத சந்தர்ப்பவாதங்கள் அந்தந்த நேரத்தில் நியாயங்கள் என மோசமான நிலையில் அரசியல் ஆனது கும்பல் மனப்பான்மையை எட்டிக் கொண்டிருக்கிறது.

 அரசியல் சரித்தன்மை என்பதே இல்லை!காலத்துக்கு ஏற்ற கோலங்கள் கோலத்திற்கு ஏற்ற வேசங்கள் வேறு என்ன சொல்வது?

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ConstitutionofIndia
#emergency

26-6-2024.


Tuesday, June 25, 2024

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.
••••
"வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி களின் சுயமரியாதையை பார்த்து இந்தியாவே சிரிக்கிறது... அண்ணா❓கலைஞர் காலத்தில் இப்படி இல்லையே⁉️உறுதிமொழியை தவிர வேறு எதுவும் அவை ஆவனத்தில் ஏறாது என தெரியதா⁉️டயர் நக்கிகள் என இவர்கள் சொல்லி ஏகடியம் செய்ய என்ன தகுதி உள்ளது. வேற என்ன மக்கள் பிரச்சினையா பேச போறாங்க இதெல்லாம் எதிர்பாத்ததுதானே…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ப்பில் தொடர்பில்லாத பிரச்சனைகளை முன்வைத்து தங்களுடைய விசுவாசங்களை காட்டியது அருவருக்கத் தக்கது மட்டுமல்ல ,
தவறான நடைமுறையாகும்.

திமுக எம்பிக்கள் ஒவ்வொருவரும் தவறாமல் தளபதி வாழ்க!
 என்று சொல்வதோடு 
"தமிழ்நாட்டின் எதிர்காலம் உதயநிதி" என்று சொல்லத் தவறவே இல்லை.

 அதைக் கடந்து யாரெல்லாம் தங்களுக்கு அரசியலில் பின்புலமாக இருந்தார்கள் என்பதை பொதுவெளியில் ஒரு அரசியல் சாசனத்தை வழிநடத்துகிற அவையில் எ.வ. வேலு வாழ்க!
கே கே எஸ் எஸ் ஆர் வாழ்க! கனிமொழி வாழ்க!
 என்றெல்லாம் துதி பாடியது எந்த விதத்திலும் அரசியல் நாகரீகம் அல்ல.
 இந்தப் போக்குகள் கண்டிக்கப்பட வேண்டும் .
தவிர்க்கப்பட வேண்டும்.
 காரணம் இவர்கள் எதற்காக பொறுப்பேற்க வந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிவிட்டு வேறு எதையும் பேசாமல் இவர்களுடைய உரைகளிலும் இதே போல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் புராணம் பாடுவது கேட்பதற்கு புளித்துப் போய்விட்டது.
 இன்றைக்கு நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையை பேச வந்த எ.வ. வேலு அவர்கள் புறநானூற்று பாடல் ஒன்றைச் சொல்லி புறநானூற்றில் போருக்குச் சென்ற அந்த மகனைப் போல உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று அவருக்கு வெண்சாமரம் வீசுகிறார். இதெல்லாம் வெளிப்படையான ஒப்பந்தங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருத வேண்டி உள்ளது.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
25-6-2024.


என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost 
25-6-2024.


*Believe in yourself and be positive*.

*Believe in yourself and be positive*. There will be times when it seems like everything that could possibly go wrong is going wrong. When you feel like quitting, remember that sometimes things have to go very wrong before they can be right. Sometimes you have to go through the worst, to arrive at your best. Understand a negative thinker sees a difficulty in every opportunity. A positive thinker sees an opportunity in every difficulty. Be positive and keep moving...

#ksrpost
25-6-2024.


Monday, June 24, 2024

#*கவியரசர்கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24, 1927*.

#*கவியரசர்கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24, 1927*.

*Don't wait until everything is just right*

*Don't wait until everything is just right*. It will never be perfect. There will always be challenges, obstacles and less than perfect conditions. So what. Get started now. With each step you take, you will grow stronger and stronger, more and more skilled, more and more self-confident and more and more successful.If you love what you are doing, you will be successful...... 

#ksrpost
24-6-2024.


Sunday, June 23, 2024

#*எனது சுவடு-பகுதி 63* இந்திரா காந்தி கோவிலில் குறி கேட்டாரா

#*எனது சுவடு-பகுதி 63* 

இந்திரா காந்தி கோவிலில் குறி கேட்டாரா? @ksrvoice 

#ksradhakrishnan, #indiragandhi, #Stalin, #politics, #kamarajar,  #mgr, #kamarajar #kalaignar #karunanidhi #kamarajar #kaamarajhistoryintamil, #kamarajaruntoldstory, #kamarajarmovie, #nedumaran ,#bjp,  #india, # #congress, #rahulgandhi, #politics, #netaji, #upelection, #socialist, #modi #party,  #mission , , #delhi , 

https://youtu.be/tAG3HwYZttU?si=rsfFqpG2cF7An9iE

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-6-2024.

நிலைகள மாறலாம்…. பிறர் மாறலாம்… நான் என்றும் சரியான போக்கில்….

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது…




#ksrpost 
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
23-6-2024.

*The reality of life is that it will not always be fair to you*

*The reality of life is that it will not always be fair to you*. Life is going to treat you unfairly throughout your journey and a lot of it won't make any sense. It is not because you deserve it in any way. It is the only way life can challenge you to help strengthen and prepare you for your long and incredible journey. Yes you will finally understand that all those broken pieces were stepping stones to create a strong you. Keep going. .. 
#ksrpost
23-6-2024.


Saturday, June 22, 2024

#சிவகாசிபகுதியில் ஊனை உருக்கி, உடலை வருத்தி சொற்ப கூலிக்கு காலை முதல் மாலை வரை ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் கூலி தொழிலாளர்கள், சில நேரங்களில் பட்டாசுகளோடு ரத்தமும் சதையுமாக கருகி போகிறார்களே.




அந்த மாதிரி உழைத்து பிழைக்கும் குடும்பத்தில் இறந்தவர்கள் யாருக்காவது அரசு 10 லட்சம் இழப்பீடு கொடுத்திருக்கிறதா.

உழைத்து பிழைக்கும் ஏழைகளை கிள்ளுக்கீரைகளாக ஒதுக்கி புறம் தள்ளும் அரசு, கொளுத்து மதத்து குடித்தே குடல் வெந்து சாகும் குடிகார பசங்க குடும்பத்துக்கு 10 லட்சம் பணம் கொடுப்பது ஏற்புடையதுதானா.

உழைக்கும் ஏழைகளுக்கு மதிப்போ, அங்கீகாரமோ கிடையாதா

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost 
22-6-2024.


*Be yourself, neverr let anyone determine your self-worth and don't ever forget your worth

*Be yourself, neverr let anyone determine your self-worth and don't ever forget your worth*.You might feel unwanted and unworthy to one person, but you are priceless to another. Spend time with those who value you. No matter how good you are to people, there will always be one negative person who criticizes you. You need to feel at peace More than you need to feel in control. Smile, ignore, and carry on.. 

#ksrpost
22-6-2024.


Friday, June 21, 2024

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 
வாழை விவசாயம்
(இன்று அல்ல 1995இல்)

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost 
21-6-2024.


கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள்

#கள்ளக்குறிச்சிகள்ளச்சாராயசாவுகள் 
———————————————————-
மே 2023 ல் மே 13ஆம் தேதியன்று மரக்காணம் எக்கியார் குப்பம். இன்றைக்கு கள்ளக்குறிச்சி போன்ற இடங்களிலும் நிகழ்ந்த கள்ளச் சாராய சாவுகள்  தொடர்ந்து என்னைப் போன்ற சாத்வீகமான நடைமுறையாளர்களின் மனதை அதிகம் வேதனைப்படச் செய்கிறது.

எளிய விலை மதுவிற்கு ஆசைப்பட்டு 
வருமானம் ஏதுமற்ற விவசாயக் கூலி மனிதர்கள் தங்கள் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக காய்ச்சப்படும் இத்தகைய குறைந்த விலை சாராயத்திற்கு ஆட்பட்டு உயிர் இழந்து போகிறார்கள்.

அரசு மதுக்கடையின் விலைவாசி உயர்வுக்கும் இத்தகைய மனிதர்களின் கூலி வருமானத்திற்கு இடையே சமத்துவமின்மை நிலவுகிறது.  குறிப்பாக கவனித்தால் இவர்கள் நகர்புறக் கூலி ஆட்கள் அல்ல! குறைந்த கூலிக்கு உழைக்கும் கிராமப்புறக்கூலியாட்கள்.
 
ஆகவே அவர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப இத்தகையக் கள்ளச்சாராய விற்பனையாளர்களை நாடுகிறார்கள். 

கள்ளச்சாராயத்தால் கண் பார்வை பறிபோனவர்கள் வாழ்நாள் முழுக்க எத்தனால்  என்று சொல்லக்கூடிய ஸ்பிரிட் அதாவது எரி சாராயத்தை போதைக்காக வாங்கிக் குடித்து இறந்து போனவர்கள் என நிகழ்ந்து வரும் மனிதமரணங்கள்  தமிழ்நாட்டில் ஒரு தொடர்கதை ஆகவே இருக்கிறது.

இப்படியான மரணங்கள் வகையில் தமிழ்நாடு அரசு குறிப்பாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 10 லட்ச ரூபாய் பணத்தை நஷ்ட ஈடாக அவர்களின் குடும்பத்திற்கு வழங்குகிறார்.

சரி ! தமிழ்நாட்டின் பிராந்தியப் புல்லுருவிகளின் கள்ளச்சாராய விற்பனையால் நிகழும் மரணங்களுக்கு ஏன் முதல்வர்   நஷ்ட ஈடு வழங்குகிறார்.  தேசத்திற்கும் மொழிக்கும் நாட்டிற்கும் தொண்டு செய்தும் கூட பலருக்கும் கிடைக்காத இந்தப் பணம்  கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர் குடும்பத்துக்கு மேலதிகம் கொடுக்கப்படுவதை எப்படிப் புரிந்து கொள்வது?

#சிவகாசிபகுதிகளில்பட்டாசு தொழிற்சாலையில் இறந்து போகக்கூடிய சிறுவர் சிறுமியர் அல்லது சில குடும்பங்களுக்காக இந்த அரசு வழங்கும் நஷ்ட ஈடு 50000 ஒரு அதிகபட்சம் மூன்று லட்சம்   என்று இருக்க இந்தக்கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பணம் வழங்கப்படுகிறது?

பெரியாறு கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது மூழ்கி இறந்த நபருக்கு இழப்பீடு 2 லட்சம்.

தஞ்சாவூரில் அப்பர் சாமி கோவில் தேர், உயர் அழுத்த மின்சாரம் தாக்கி எரிந்து, 11 பேர் இறந்த சம்பவத்தில் இழப்பீடு 5 லட்சம்.  இப்படி பல சம்பவங்கள் .

கள்ளச்சாராய மரணத்திற்கு இழப்பீடு பத்து லட்சம்.கள்ளச்சாராய மரணத்துக்குதான் மதிப்பு அதிகம் போல.

நான் கேட்பது என்னவெனில் பட்டாசு தொழிற்சாலை மூலமாக தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் கணக்கில் கொள்ளப்படவில்லையா?இரவும் பகலும் 
அப்படியாகத் தொழில் செய்து நாட்டு வருமானத்தை பெருக்கக் கூடிய மக்களுக்கான நஷ்ட ஈடு இவ்வளவு குறைவாக இருக்கக் கள்ளச்சாராயம் குடித்து வீணில் செத்துப் போனவர்களுக்கு எதற்கு பத்து லட்சம் அறிவிக்கிறார் முதல்வர்? அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இப்படிக் கள்ளச்சாராயம் குடிக்கப் போகிறவர்களால் நாட்டுக்கு என்ன லாபம் இருக்கிறது. பட்டாசு தொழிற்சாலையில் கரு மருந்துகளுடன் வயிற்றுப் பசிக்கு உழைப்பவர்களுக்கும் கள்ளச்சாராயம் குடிப்பவர்களும் ஒன்றா? இவர்களுக்கு வரிப்பணத்தில் இருந்து இத்தனை லட்சங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? ஒரு வேளை நாளை ஒரு குடிகாரன் 10 லட்சம் பணம்  தன் மனைவி பிள்ளைகளுக்குத்தான் செத்துப்போனால் கிடைக்கும் என்பதற்காக அதை வாங்கிக் குடித்து இறந்து போக ஆர்வம் கொண்டால் என்ன செய்வது?

இன்ஷூரன்ஸ் பணங்களுக்காக கொலைகள் கூட நடக்கும் சூழ்நிலையில்  கள்ளச்சாராய மரணங்களில் மட்டும் இப்படி நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? 

இவர்களுக்கு எதற்கு 10 லட்சம்? 
முதல்வரின் இந்தக்
கரிசனம் அபத்தமானது! மட்டுமல்லாமல்  கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை அல்லதுஅதைக் குடிக்க போவோரைத் தண்டிக்கும் வகையில் எந்த எச்சரிக்கையும் மற்ற நிர்வாக அசிரத்தையத்தான்  குறிக்கிறது. இது ஒரு அரசு நிர்வாகத்தவறு மட்டுமல்ல மனித உயிர்களின் மீது அலட்சியமாக இருக்கும்  இந்த அரசைக் கேள்விக்கு உள்ளாக்கும்
அறங்களும் கூடியது.

இந்த அரசியலின் உண்மை முகம் இத்தகைய நிழல் வருமானங்களில் தான் அதிகாரமாகவும் நிர்வாகமாகவும் இயங்கி வருகிறது . இது ஒரு வெட்கக் கேடான சம்பவம்.

எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தை முன்னிட்டு  ஆளும் அரசை ராஜினாமாச் செய்யும்படி கூறுவது ஒன்றும் மிகை அல்ல. இன்னும் பல மணல்த் திருட்டு, மர கடத்தல் உட்பட தமிழக காவல்துறையை கைக்குள் வைத்துக் கொண்டு நிகழ்த்தும் மோசடியான காரணங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டியதுதான் இந்த அரசு! என்பதில்  மாற்றுக் கருத்துகள்ஏதும் இல்லை.

#கள்ளக்குறிச்சிகள்ளச்சாராயசாவுகள்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-6-2024.


*Being alone is better than being used*

*Being alone is better than being used*. Some roads you need take alone. No friends,No partners. Just you and universe. Understand single isn't a status. It's a word that describes a person who is strong enough to enjoy life without depending on the wrong people. Yes being alone (loneliness) in your life do not come/happen to destroy you, but to help you realize your hidden potential and power. Let difficulties know that you are too difficult and you can do it, believe in yourself. Keep going... 

#ksrpost
21-6-2024


Thursday, June 20, 2024

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost 
20-6-2024.


*No man with a complex life can be happy*

*No man with a complex life can be happy*! The simple secret of the happiness is simple life. There is nothing more beautiful than living a simple life in this complex universe. Simple life and peaceful mind are very close friends!. It is very difficult to be simple. The ability to simplify means to eliminate the unnecessary so that the necessary may speak. If you lead a simple life; you will own the most beautiful treasures of the world...... 

#ksrpost
20-6-2024.


Wednesday, June 19, 2024

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு நிலக்கடலை பயிர்.KSR

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 

நிலக்கடலை பயிர்.

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost 
19-6-2024.


#சந்துரு அறிக்கை மேலும்சிக்கலைதான் தமிழக அரசுக்கு உண்டு பண்ணும். #இது நடுநிலையான அறிக்கை இல்லை



———————————————————
நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது எனக்கு நண்பராகவும் அறிமுகமானவர் இருந்திருக்கிறார். நான் அவ்வப்போது முகப்புத்தகத்தில் எழுதுவதைப்  படித்துவிட்டு கே எஸ் ஆர் எதோ புலம்பி கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் கூட அவர் சொன்னதாக என்னிடம் சிலர் கூறுவார்கள்.




அப்படிப்பட்ட மனிதர் பெண்கள் பொட்டு - குங்குமம் வைத்துக் கொள்ளக் கூடாது திலகம் இட்டுக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் தனது அரசு ஆலோசனைக்கான அறிக்கையில் சொல்லுகிறார்.

இது முற்றிலும் அபத்தமாக இருக்கிறது நாத்திகம் பேசட்டும் முற்போக்கு பேசட்டும் இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண்கள் திலகமிட்டுக் 
 கொள்வது  என்பது மரபு சார்ந்த பாரம்பரியமான வழக்கம்.

தமிழின் சங்கத் திணைகளில் கூட ஆண்கள் போருக்குச் செல்லும்போது வெற்றி பெற்று வர வேண்டும் என்று 
அவர்களது நெற்றியில்
வீரத் திலகமிட்டு அனுப்புவதை எல்லாம் படித்திருக்கிறோம்.

அது ஒரு மங்களத்தின் குறியீடு மட்டுமல்ல கண்ணாறுகளின் பெயரால் செல்லமும் அழகும் சேர்ந்த ஒரு கலைச்செயல். அக்காலத்தில் ஆண்கள் பெண்கள் எல்லோரும் பொட்டிட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

நீதிபதி சந்துரு அவர்கள்  
இத்தகைய மக்கள் வழக்காறுகளை எதோ மதக் குறியீடு என்றும் அதுவே மதஅதிகாரம் என்பது போல  வகைப்படுத்துகிறார்!
இந்த அறிக்கையில் காணப்படும் பல விஷயங்களை பார்க்கும் போது என்னைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல  பலருக்கும் மிகுந்த அபத்தமாகவும் நடைமுறைக்கு பொருந்தாத  தான் தோன்றித்தனமான மிகைமதிப்பீடுகளாகத்தான் புரிந்து கொள்ளப்படும்..

தன்னைக் கம்யூனிஸ்ட் காரர் என்று சொல்லிக் கொள்ளும் முன்னாள் நீதிமான் சந்துரு அவர்களுக்குத்  தெரியாதா?
இந்தியாவைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கி வந்த பெண்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் மனைவிமார்களும் பொட்டிட்டுக் கொள்வது இல்லையா? தோழர் பிரகாஷ் காரந்துடைய மனைவி பிரந்த, உ. வாசுகி நெற்றியில் திலகம்   கொண்டு தானே பொதுவெளிகளுக்கு  வருகிறார்! தெலுங்கானா சாயுத போராட்டம் வரலாற்றில்  மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரய்யா பொட்டு வைத்த பெண் போராளிகளை குறிப்பிடுகிறார. அண்ணாவும் பொட்டை பற்றி எழுதியுள்ளார்.

தமிழ் சங்க இலக்கியங்கள், கவிதைகளை எழுதி வந்த பாரதியார் மனோன்மணியம் சுந்தரனார் போன்ற பலரும் நெற்றியில் திலகம் இட்டு வாருங்கள் என்று தான் சொல்கிறார்கள்.  இப்படி தமிழ் காலாச்சார தரவுகள் உண்டு. இதில் என்ன தவறு இருக்கிறது? இப்படியான ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட்  அறிக்கைகளால் தான் இங்கே ஜாதிக் கலவரம் மதக் கலவரம் போன்றவை  மேலும் தூண்டப்படுகின்றன. நான் ஏற்கனவே பல முறை சொன்னது மாதிரி இந்துக் கோவில்களில் ஆறு கால பூஜைகள் நடக்கட்டும் மசூதிகளில் பாங்கு ஓதி தொழுகை நடக்கட்டும். கிறிஸ்தவ தேவாலயங்களில் மணியோசைகளுடன்  பிரார்த்தனைகள் நடக்கட்டும். சீக்கிய வழிபாட்டுத் தலங்களில் கிரந்தங்கள் ஓதப்படட்டும்.. இப்படி அவரவர்  நம்பிக்கைகள்ப் பிரகாரம் அவர்களுடைய வழக்கங்களும் வழிபாடுகளும் நிகழட்டும்.  

அப்படித்தானே பல காலமும் இருந்து வந்திருக்கிறது!.இதில் குறுக்கீடு செய்வதன்  மூலம் ஒருவர் என்ன அடைய நினைக்கிறார்.
பண்பாட்டுக் கலாச்சாரங்களில் தலையிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா பல்வேறு நாகரிகங்கள் கொண்ட தொன்மையானது. சந்துரு சொல்வது மாதிரி பொட்டிட்டுக் கொள்வது  வெறும் அடையாளங்கள் சார்ந்தவை மட்டுமல்ல! பல தொன்ங்களையும் சடங்கியல்களையும் உள்ளடக்கியது.
அவற்றை எல்லாம் பகுத்தறிவுக்குள்   கொண்டு வரும்போது அது குறிப்பாக யாரை நோக்கி குறி வைக்கப்படுகிறது  என்பதுதான் இங்கு அரசியல் ஆகிறது மட்டுமல்ல பல பிரச்சனைகளுக்கும் காரணம் ஆகிறது. 

அரசியலை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும்! இந்த வழக்காறுகள் மேல் கை வைக்க கூடாது! தனது சொந்தக் கருத்தாக இருந்தாலும் கூட அதைச் சூழலின் மீதான நடைமுறை மற்றும் நடுநிலையோடு தான் முன்வைக்க வேண்டும். 

இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்வதையே நான் தவறு என்கிறேன். இது உண்மையில் ஒரு மத நல்லிணக்க நாடு!  (Communal harmony not secular) எல்லா மதங்களும் இங்கு உண்டு உயிர்த்து வாழ உரிமை உள்ள நாடு என்பதுதான் எனது நம்பிக்கையும் என்னுடைய நடுநிலைவாதமும். 

இதற்கு மேல் மேதமை உள்ளவர்கள் இதில் ஏதேனும் இப்படியான பிரச்சனைகளைக் கொண்டு வரும்போது உண்டாகும்  முரண்பாடுகளால் ஒற்றுமைக்கு சிக்கல் வருவதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வழியில் சந்துரு இந்த அறிக்கை மேலும் சிக்கலை தான்  தமிழக அரசுக்கு உண்டு பண்ணும்.

இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளில் கூட பெண்கள் பொட்டிட்டுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்..
எதையும் பரிசீலிக்காமல் அறிவார்ந்த தளத்தில் நாம் ஒன்றைச் சொல்லும் போது அது அபத்தமாகி விடுவதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது நீதி அரசர்களுக்கு மட்டுமல்ல தேச நல்லிணக்கத்தை விரும்பும்  எந்தச் சாமானியர்களுக்கும் பொருந்தும்.

#நீதிபதிசந்துருஅறிக்கை
#justicechandrureport

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
19-6-2024.


#NalandaUniversity













நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கு போட்டிகள்

நாடாளுமன்ற மக்களவைத்  தலைவர் பதவிக்கு போட்டிகள் இருப்பதாகத் தெரிகிறது. நாட்டு விடுதலைக்கு முன் 1926 முதல் 1947 வரை இம்மாதிரி மக்களவை தலைவர் பதவிக்கு போட்டிகள் இருந்தன.

நாடு விடுதலை பெற்ற பின் பெரும்பாலும் மக்களவைத் தலைவர் பதவிக்கு போட்டிகள் இருந்ததில்லை! ஒருமித்த கருத்தால் தேர்வு இருந்தது.ஆனால் இம்முறை மக்களவை தலைவர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள்.

கடந்த மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்  என யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை! மக்களவை துணைத் தலைவர் பதவிக்கும் கூட ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த முறை மக்களவைத் தலைவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டியதுதான்..

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
19-6-2024.

You stop being unhappy with your self.

You stop being unhappy with your self. You are perfect. Love yourself, love your personality.Without those things you wouldn't be you, be confident with who you are. Stop trying to be looked like someone else and stop trying to get attention those who hurt you.Smile, It will draw people in. Rise your hands and say "my happiness will not depend on others anymore more. I am happy because I love who i am, my flaws and imperfections. They make me me and me is pretty amazing". Yes your hardest times often  lead to greatest moments of your life. Keep going. Tough situations build strong people in the end....
#ksrpost
19-6-2024.


என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு KSR

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost 
18-6-2024.


Tuesday, June 18, 2024

#இன்றைய நெல்லை, தூத்துக்குடி தென்காசி மாவட்ட திமுகவினர் மட்டுமல்ல முதல்வர்ஸ்டாலின், இன்று தூத்துக்குடியில் இருக்கும் கனமொழி கவனத்துக்கு…….. 1949 முதல் 1967 வரை கழகத்தை முன்னெடுத்து. வளர்த்த #அண்ணாவின் முன்னணித் #திமுகதொண்டர்கள்

#இன்றைய நெல்லை, தூத்துக்குடி 
தென்காசி மாவட்ட திமுகவினர் மட்டுமல்ல முதல்வர்ஸ்டாலின், இன்று தூத்துக்குடியில் இருக்கும் கனமொழி கவனத்துக்கு…….. 1949 முதல் 1967 வரை கழகத்தை முன்னெடுத்து. வளர்த்த #அண்ணாவின் முன்னணித் #திமுகதொண்டர்கள்
———————————————————
திமுக அண்ணா தலைமையில் 1967 இல் ஆட்சிக்கு வந்த நேரம். 1967 மார்ச் ஆறாம் நாள் அண்ணா அமைச்சரவை பதவி ஏற்கிறது
அப்போதைய நெல்லை மாவட்டச் செயலாளராக எம்.எஸ.சிவசாமி  பொறுப்பிலிருந்தார்.
தென்காசி,அம்பாசமுத்திரம்,நாங்குநேரி, ராதாபுரம்  தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுகிறது

1968 தென்காசி இடைத்தேர்தலிலும் எம்.எஸ.சிவசாமி  மாவட்டச் செயலாளர்
அதன் பிறகு நடைபெற்ற கட்சித் தேர்தலில் 500வோட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பு இழந்தார்
பின் நெல்லையில் திமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்தவர் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன்  வெற்றி பெற்றார்மதிப்பிற்குரிய ரத்தினவேல் பாண்டியன் அவர்கள். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக விளங்கினார்..அவர் தன் முயற்சியில் திருநெல்வேலி மாவட்டத்திற்கான  தி மு கக்கழகக் கட்டிடத்தைக் கட்டுவதற்கென எட்டயபுரம் மகாராஜாவிடம்  இருந்து ஒரு நிலத்தை பாளையங்கோட்டையில் சலுகையில் வாங்கிப்போட்டார். இப்படி நாட்கள் வருடங்கள் இருக்க…..

திரு ரத்னவேல் பாண்டியன் அவர்களுக்கு பிறகு நெல்லை மாவட்டச் செயலாளராக அழகிய நம்பி வந்தார். அவர் ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்து கட்சி ஆரம்பித்த பிறகு அவர் எம்ஜிஆரின் பின்னால் சென்று விட்டார்.

அவருக்குப் பிறகு வைகோவும், மற்றும் மஸ்தானும் தான் நெல்லை மாவட்ட திமுகச் செயலாளராக இருந்தார் . (பிற்காலத்தில் தான் நெல்லை மாவட்டத்தை விட்டு 1986ல் தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிந்து போய்விட்டது). அந்த சமயத்தில் வைகோ இந்த கழகக் கட்டிடத்தை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார்.

அந்த சமயத்தில் இந்திராகாந்தி அம்மையார் எமர்ஜென்சியை கொண்டு வர பலரும் கைதாகிப் போனதால் அந்தக் கட்டடம் கட்ட முடியாமல் நின்று போனது. அதற்குப் பின்னர் எம்ஜிஆர் ஆட்சியில்,வைகோ திமுகவுக்கு எதிர்கட்சி நிலையில் செயல்பட வேண்டி வந்ததால் அந்தத் திட்டம் முற்றிலும் தள்ளிப் போய்விட்டது.

அதற்குப் பின்னால் மதிமுகக் கட்சியை வைகோ ஆரம்பிக்க அதன் பின்னால் இருந்து நாங்கள் செயல்பட்டோம். இதெல்லாம் ஒருபுறம் இருக்க இப்போது அந்த இடத்தை  அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு விற்று விட்டதாக நெல்லை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். 

அதாவது அந்த இடத்திற்கு துரைமுருகன் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து  இன்றைய நெல்லை மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் வழியாக அதை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு விற்று விட்டதாகத் தெரிகிறது.

அந்த நிலத்திற்கான மொத்த ஆவணங்களும் அதற்கான திட்ட வரைவு நகல்களும் தன்னிடம் பத்திரமாக இருப்பதாக நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார். வைகோவும் அதை உறுதிப்படுத்தினார்.

பிறகு மெல்ல விசாரித்ததில் மேற்படி இடத்தை விற்று திருநெல்வேலி புறவழிச் சாலையில் சினேகா மனநல மருத்துவமனை அருகே கழக கட்டிடத்திற்கு என்று ஒரு இடத்தை வாங்கி போட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

எப்படியோ மாவட்ட கழகத்தின் கட்டிட மனை வேறு இடத்தில் அமைந்தாலும் பரவாயில்லை .அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது  என்பதில்மகிழ்ச்சி.!

நெல்லையில் இது குறித்த பேச்சு  இன்று பரவலாக இருக்கிறது. நெல்லைவாழ் நண்பர்களும் அதை உறுதி செய்கிறார்கள்.

கடந்த காலம் எங்கும் நெல்லை மாவட்டம் திராவிட இயக்கத்திற்குப் பலவகையிலும் தொடர்பில் உள்ள மாவட்டமாக இருந்து வந்துள்ளது.  கலைஞர் அவர்கள் மொழிப்போரை பொறுத்தவரை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று திருநெல்வேலி மாவட்டத்தை வர்ணித்து இருக்கிறார்.

1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 27 ஆகிய இரண்டு நாட்களாக கோவில்பட்டியில் அண்ணா அவர்களின் தலைமையில்  நடந்த திமுக மாநாட்டில் அம்மாநாடு வெற்றி பெற டபிள்யூ டி துரைசாமி (மாநாடு செயலாளர் )பாலகிருஷ்ணன் ஈ வே அ வள்ளி முத்து (வரவேற்பு குழு தலைவர் -அன்றைய நகர் மன்ற தலைவர்) எஸ் நடராஜன் கலிங்கன் (துணைச் செயலாளர்கள்) கலைமணி காசி அ திராவிட மணி (விளம்பரக் குழு உறுப்பினர்கள்) எச் பி துரைசாமி (பொருளாளர்) ஆகியோர் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் சேர்ந்தும் பெரும் பணியாற்றியுள்ளார்கள். நெஞ்சில் நிலைத்து நிற்கும் நெல்லை மாவட்டக் கழக கண்மணிகள் (ஒருங்கிணைந்த 3 மாவட்டங்கள்)

அத்தகைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில்தான் பல காலமாகத் தொடர்ந்து மாவீரன் கே வி கே சாமி ,
தங்கப்பழம், நீதி மாணிக்கம், நெல்லை மஸ்தான், தூத்துக்குடி இரா கிருஷ்ணன், கடையநல்லூர் திராவிட மணி, கா மு கதிரவன், சங்கரன்கோவில் டி ஆர் சுப்பிரமணியம், தம்பிதுரை, தூத்துக்குடி அய்யாசாமி, வெள்ளைத்துரை பாண்டியன், சி பா ஆதித்தனார் ,எம் எஸ் சிவகாமி, தினகரன் நிறுவனர் கே பி கே , கேப்டன்  என் நடராஜன், நெல்லை மஜித், களந்தை ஜின்னா, பக்கீரப்பா, டாக்டர் பத்மநாபன், தென்காசி திரவியம், என் நடராஜன், ரத்தினம், ஏர்வாடி அப்துல் காதர்,

ஈ.வெ.அ.வள்ளிமுத்து,வீரபாகு ,ஏர்வாடி அலிசேக்மன்சூர்,பாளைஉசேன்,ஆலடி அருணா,ஜிஆர்எட்மண்ட்,வழக்கறிஞர்
ஏ.எல்.சுப்பிரமணியம்,ஆ.கருப்பையா,
கிளமெண்ட்,சேர்மன்சூரியநாராயணன்,சவுண்ட்சர்வீஸ்பி.எஸ்.பெருமாள்,முத்தமிழ் அந்தோணி ராயப்பன், தூத்துக்குடி கே.ஆர் ராமலிங்கம், என்.பெரியசாமி
மேலப்பாளையம் சே.க.மு.யூசுப்
களந்தை ஜின்னா,ஏர்வாடி அப்துல்
திருச்செந்தூர் கண்ணபிரான்
திருவை அண்ணாமலை,கே ஆர் பி மணிமொழியன்,நெல்லை நெடுமாறன்
நெல்லை புகாரி,சேர்மன்மஜீத்
பேட்டை புகாரி,கடையநல்லூர் திராவிடமணி,புளியங்குடி பழனிச்சாமி
ஏரல் எஸ்.பி.முத்து,கோவில்பட்டி கலைமணி காசி,காயல் செய்யது அகமது,நாசரேத் பி.எஸ்கே ஜெயபால்
நாசரேத்து  எஸ்.டி.பி.பாலசிங், விளாத்திகுளம் ரத்தினசபாபதி,
நாசரேத்து வணங்காமுடி, முனைவர் மு.பி.பா. என்ற மணி வேந்தன்
நாசரேத்து மோசஸ் டாக்டர் 
கலைக்குழுவினர்
எஸ்.எஸ்.சிவசூரியன் நாடகக் குழு
தேவராஜன் நிர்மலா இசைக்குழு
துரையரசன் கலைக்குழு
பால்க்குளம் தனசேகரன்
அ பு  இளங்கோவன், தூத்துக்குடி ஜோசப், கோவில்பட்டி  பெரியசாமி புதுப்பட்டி செல்வம், இ நம்பி, சிவகிரி சுபகணேசன், சிங்கை கந்தசாமி, கீழ்ப் பாவூர் ராமநாதன், கோவில்பட்டி தமிழரசன், நாசரேத் ஜெயபால், டிஏகே லக்குமணன்,சாமித்துரை, திருச்செந்தூர் நல்ல கண்ணு, தென்திருப்பேரை பன்னீர்செல்வம், களந்தை லாரன்ஸ் கடையநல்லூர் எஸ் எஸ் சாகுல் ஹமீது, புளியங்குடி சேதுராஜ், டாக்டர் உசேன், தாழையூத்து புல்லையா, திசையன்விளை திருவிடை முத்து, சிலாத்திக்குளம் நம்பி, திருக்கருங்குடி துரை நாசரேத்தின் அன்றைய வட்டப்பிரநிதி பி.துரை
கோவில்பட்டி வட்டச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் சங்கரன்கோவில் சேர்மன் பழனிச்சாமி கங்கைகொண்டான் கருப்பையா, ஆலங்குளம் முருகய்யா. கீழ ஈரால் அ, கோ. சி. தங்கப்பாண்டியன், எட்டையபுரம் ஈட்டி ராமசாமி, கோவில்பட்டி பா.முத்து, விளாத்திகுளம் மருது பாண்டியன், சங்கரன்கோவில் சுப்பையா சாத்தான்குளம் மகாராஜன், 
உடன்குடிசித்திரவேல்,மணவைபெந்தலின்,வெள்ளாளன்விளை இம்மானுவேல்,ஆலங்குளம் எஸ் ஆர் எஸ் ,ஆழ்வை சண்முகம் 
மணல் குண்டு மகாராஜன் 
மணல் குண்டு பாலசுப்பிரமணியன் 
தென்திருப்பேரை பன்னீர்செல்வம் 
சி கே சிபாண்டியன்,குருகாட்டூர்தர்மராஜ் 
குருகாட்டூர்பால்ராஜ்,கோட்டூர்அசோகன் 
ஏரல் அறவேந்தன். ஆறுமுகநேரி ச கே ஆதித்தன்,வெள்ளரிக்காய் ஊரணி ஜெயராஜ், ஏர்வாடி யூசப், செவல்குளம் அ.சா. குருசமி போன்ற நெல்லைச் சீமை காரர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை காத்த எண்ணற்ற மறைந்த பல தியாகசீலர்கள் என்றும் நினைவில் இருக்கிறார்கள்.

#அன்றையதிமுக
#dmkhistory

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-6-2024.


*Life isnt easy,as the days, go by*

*Life isn't easy,as the days, go by*. You may find that your purpose becomes more complicated.what am i supposed to do and be and Is this the right path? So many questions will fill your mind, but the truth is that you may never have the answers. But that's okay. Those questions are enough without answer. Create answers by listening to your intuition (heart and mind), trust it and make moves based on it. Life isn't Easy, but the greatest thing you can do is trust and believe in yourself and keep going......

#ksrpost
18-6-2024.


Monday, June 17, 2024

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு #எட்டையபுரம் #ettiyapuram #கேஎஸ்ஆர்போஸ்ட்

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 
#எட்டையபுரம்
#ettiyapuram#கேஎஸ்ஆர்போஸ்ட் 



#ksrpost 
17-6-2024.


எதையும் எதிர் கொண்டேன், எதிர் கொள்வேன்…. அதுவே அடியேன்….KSR

எதையும் எதிர் கொண்டேன், எதிர் கொள்வேன்…. அதுவே அடியேன்….

"வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனால் ஒரே நாளில் எதுவுமே மாறாது
மனவுறுதியுடன்
வாழ்வில் பயணிப்போம்... எந்தச் சூழலிலும் மனம் தளராது  எதையாவது செய்து கொண்டிருப்பவர்களுக்கு இயற்கை சில ஆறுதல்களை அளிக்கத்தான் செய்கிறது’’

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-6-2024


#அரசியல்சாசனம்- #காங்கிரஸ் #திமுக #அரசியல்சாசனதிருத்தம் #பிரிவு356 #Article356 #Constitutionalamendments #Congress #dmk

#அரசியல்சாசனம்- #காங்கிரஸ் #திமுக

#அரசியல்சாசனதிருத்தம்
#பிரிவு356 #Article356
#Constitutionalamendments 
#Congress #dmk
———————————————————
அரசியல் சாசனத்தைத் தூக்கி காட்டும் ராகுல் காந்தியும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதே அறை கூவல் விடுகிற முதல்வர் மு க ஸ்டாலின் இருவரின் செயலையும் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

42வது சட்ட திருத்தத்தை அவசர நிலை காலத்தில்  கொண்டு வந்து நீதிமன்றங்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் செய்து 
அரசியல் சாசனத்தை முற்றிலும் காலி பண்ணியது ராகுல் காந்தியின்  பாட்டியாகிய இந்திரா காந்தி அம்மையார்.  இதுவரை மொத்த அரசியல் சாசனத் சட்ட திருத்த105/ 2021.



காங்கிரஸ் பிரிவு 356 கொண்டு மாநில அரசுகளை 90 முறை (மொத்தம் 115) மாநில அரசுகளை கலைத்தது.  அரசியல்சாசன திருத்தமும் சுமார் 90 முறை ஆகும். மொத்த 

அப்போது காங்கிரஸின் கூட்டணி கட்சியாக இருந்த அபிலாஷ் யாதவின் அப்பா முலையம் சிங் யாதவ்,லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்கள் எல்லாம் கூப்பாடு போட்டுக்  லோக் நாயக் ஜே பி தலைமையில் கொந்தளித்தார்கள்.

1988 ல்   இங்கே தமிழ்நாட்டில் கலைஞர் அன்பழகன் உட்பட பலரும் இதே அரசியல் சாசனத்தைத் தீ வைத்து எரித்தார்கள்.அதன் காரணமாகச் சிறைக்குச் சென்றார்கள்.அப்போதைய பேரவைத் தலைவர் பி ஹெச் பாண்டியன் அவர்களால் அச்சம்பவத்தில் ஈடுபட்ட எம்எல் ஏ க்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்கிற வரலாற்றை எல்லாம் இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள் போல இருக்கிறது.

அகில இந்தியாவிலேயே.. தி.மு.க ச‌ட்டம‌ன்ற உறுப்பினர்கள் தான். சட்ட நகலை எரித்ததற்கு பதவியிழந்தவர்கள்... இவர்கள்.. இன்று பேசுவது நகைப்பை தருகிறது

1. Thiru K. Anbazhagan - 17th November, 1986
2. S.Balan - 17th November, 1986.
3. A. Selvarasan - 17th November, 1986
4. P. Ponnurangam - 17th November, 1986 .
5. Parithi Elemvazhuthi - 17th November, 1986.
6. M. Ramanathan - 19th November, 1986
7. R. Chinnasamy - 23rd November 1986
8. M. Abragam - 29th November, 1986
9. C. Arumugam - 29th November, 1986
10. V.K. Raju - 5th December, 1986 and others 

On the above mentioned dates the members of the assembly mentioned above burnt the constitution in public and were therefore disqualified by the then Tamilnadu Assembly Speaker 
P. H. Pandian

இப்பிடி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அரசியல் சாசனம் தேவ நாகரி எழுத்தில் இருக்கிறது என்பதாக 
 காரணங்களை மாற்றிக் கூறினார்கள்.!
அரசியல் சாசனத்தை எந்த காரணத்தையும் முன்னிட்டு மதிக்காத இவர்கள் இன்றைக்கு வந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்று கூச்சல்ப் போடுவதும் கையடக்கப் சாசனப் பிரதிகளைத் தூக்கிக் காட்டுவதும் எந்த வகையில் நியாயம்!

தனக்கு வந்தால் இரத்தம்!.அடுத்தவருக்கு வந்தால் தக்காளிச்சட்னியா?!

#அரசியல்சாசனம்- #காங்கிரஸ் #திமுக
#அரசியல்சாசனதிருத்தம்
#பிரிவு356 #Article356
#Constitutionalamendments 
#Congress #dmk



#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
17-6-2024


*Forget yesterday, it has already forgotten you*

*Forget yesterday, it has already forgotten you*.Don’t sweat tomorrow, you haven’t even met. Instead, open your eyes and your heart to a truly precious gift that is today, be thankful for what you have; you’ll end up having more. If you concentrate on what you don’t have, you will never, ever have enough. At the end of the day,  let there be no excuses, no explanations, no regrets.”...... 

#ksrpost
17-6-2024.


Sunday, June 16, 2024

*Facts You May Not Know About India*:

*Facts You May Not Know About India*:

1. India is home to a floating national park called Keibul Lamjao National Park, located in the state of Manipur. It's the only floating park in the world and is famous for its unique ecosystem and the endangered Sangai deer.
2. The world's highest cricket ground, located in Chail, Himachal Pradesh, India, sits at an altitude of 2,444 meters (8,018 feet) above sea level.
3. India is one of the few countries in the world that has a floating post office. It's located in Dal Lake, Srinagar, and it also serves as a tourist attraction.
4. The Indian national kabaddi team has won all the World Cups held till now (as of 2022).
5. Mawsynram, a village in the Indian state of Meghalaya, receives the highest average annual rainfall in the world.
6. Shani Shingnapur, a village in Maharashtra, has houses with no doors. It is believed that Lord Shani, the Hindu god of the planet Saturn, protects the village, and hence, theft is virtually nonexistent.



7. The Kumbh Mela, a Hindu pilgrimage of faith, is the largest gathering of humans on Earth. It is so massive that it is visible from space.
8. India is the world's largest producer of milk, surpassing even the United States and China.
9. The Indian Railways is one of the largest employers in the world, employing over 1.4 million people.
10. The Indian state of Sikkim is the first and only fully organic state in India and the world.
11. The town of Kodinhi in Kerala has the highest number of twins in the world.
12. The Golden Temple in Amritsar, Punjab, serves free meals (langar) to over 100,000 people every day, regardless of religion, caste, or creed.
13. The Indian city of Mumbai has the most significant number of millionaires and billionaires in India.
14. The Lonar Lake in Maharashtra is a unique and mysterious saltwater lake that formed in the crater of a meteor impact around 52,000 years ago.
15. The Indian state of Goa has the highest GDP per capita among all Indian states, owing largely to its thriving tourism industry.
16. The world's largest producer of spices is India, accounting for more than 70% of global spice production.
17. India's first rocket was transported on a cycle and launched from a church.
•••

Physiographic Divisions of India: The Peninsular Plateau of India 🌍
The Peninsular Plateau of India, also known as the Indian Peninsular Plateau, forms an important physiographic division of India. It refers to the flat tableland that lies in the southern part of India and is surrounded by the oceans on three sides. Along with being the oldest landmass of India, it also holds the distinction of being the largest physiographic division of India.

Major Plateaus of Peninsular India: The Peninsular Plateau of India or the Indian Peninsular Plateau, as a physiographic unit, consists of several smaller plateaus. The prominent smaller plateaus of Peninsular India include:
The Marwar Upland
The Central Highlands (or the Madhya Bharat Pathar)
The Bundelkhand Upland
The Malwa Plateau
The Baghelkhand
The Chotanagpur Plateau
The Meghalaya Plateau (Shillong Plateau)
The Deccan Plateau
The Chhattisgarh Plain

Major Hill Ranges of Peninsular India: The plateaus of Peninsular India are divided from one another by river valleys and hill ranges. Major hill ranges of Peninsular India include:
The Aravali Range
The Vindhyan Range
The Satpura Range
The Western Ghats (or the Sahyadris)
The Eastern Ghats
#peninsula #plateau #physiographic #Division #india #maps #Mapping #geography #geographyteacher #geographyquiz #geographyfacts #geomorphology #learn #planetearth #education #onearth #knowledge #learningtogether #school #students #educational #educationmatters #educationiskey #EducationForAll

#ksrpost
16-6-2024.


#*மத்திய அமைச்சர்கள்* *ஜெய்சங்கர் தமிழரா? நிர்மலா சீதாராமனை தமிழரா*? இதை வாசியுங்கள்…

#*மத்திய அமைச்சர்கள்*
*ஜெய்சங்கர் தமிழரா? நிர்மலா சீதாராமனை தமிழரா*?   இதை வாசியுங்கள்…
————————————
நான் போட்ட பதிவை வாசித்து விட்டு
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு தமிழரா? என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்.நல்லது.

ஜெய்சங்கர் அவர்களின் தந்தையார் ஆகிய சுப்பிரமணியம் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர். டெல்லியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்!
தமிழில் உரையாற்றுவார், எழுதுவார் . அக்கால அதிகார வட்டத்தில் நன்றாக அறியப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த அதிகாரி!

தான் 1970களில் எழுதிய கட்டுரைகளில் கலைஞரை மாறனைப் பாராட்டி முரசொலி சுப்ரமணியம் அவர்கள் எழுதியது எல்லாம் இவர்களுக்கு தெரியாது தான்?

முரசொலிப் பத்திரிக்கையில் ஜெயசங்கர் தந்தை சுப்பிரமணியம் அவர்களின் செயல்பாடுகள்  குறித்து கலைஞரும் மாறனும் கூட
குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள்.

அவருடைய புதல்வரான ஜெய்சங்கர் மன்மோகன் சிங் காலம் வரை வெளி விவகாரத் துறை அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்தார்!.

 அதன்பிறகு மோடி பிரதமராக வந்த போதுதான் வெளிவகாரத் துறை #அமைச்சராகஜெய்சங்கர் பொறுப்பேற்றார். இன்றும் நீடிக்கிறார். இது போக ஜெய்சங்கர் அவர்களின் இன்னொரு சகோதரர் டெல்லியில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். மேலும் ஒரு சகோதரர் வரலாற்று அறிஞராக இருக்கிறார் . இத்தகைய தமிழ் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர்களைத் தமிழரா என்று கேட்பது என்ன நியாயம்!

இதுவும் போக #நிர்மலாசீதாராமனை தமிழரா? எனவும் கேட்கிறார்கள்! நிர்மலா சீதாராமன் அவர்களின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முசிறி. மதுரை ரயில்வே காலனியில் அவரது தந்தையார் பணிபுரிந்த போது நிர்மலா சீதாராமன் அங்கே தான் பிறந்தார்! அவரது அம்மா பிறந்த ஊர் திருவெண்காடு. இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களது துணைவியார் பிறந்த ஊருமாகும். பள்ளி வகுப்பை மதுரையிலும் விழப்புரத்திலும்   பட்ட படிப்பை திருச்சியில் உள்ள சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரியிலும் பயின்றவர் தான் நிர்மலா சீதாராமன். இப்படி எழுபது எண்பது வரை தமிழ்நாட்டில் படித்து விட்டு அதற்குப் பிறகு நாங்கள் டெல்லியில் படித்த J N U கல்லூரியில் பிற்காலத்தில் சேர்ந்து பயின்றார். அப்போது எங்களுக்கு வைஸ் சான்சிலராக இருந்தவர் GP திருவாளர் கோபால்சாமி பார்த்தசாரதி! அவர்தான் அமெரிக்காவில் அண்ணாவிற்கு வைத்தியம் நடந்த போது இந்தியத் தூதராக இருந்தவர் . இந்திராவை வழிநடத்திய தமிழர். 1983 இல் இலங்கை தமிழர்கள கொல்லப் பட்டு கலவர காலத்தில் அதை நிறுத்தஇவரை இந்திரா காந்தி இலங்கைக்கு அனுப்பினார்.

இத்தகையப் பின்புலத்தில்
இருந்து வந்தவர்களைப் புரிந்து கொள்ள வேண்டாமா?   குறிப்பாக நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தன் தாய் மொழியாகிய தமிழ் நன்றாகப் பேசத் தெரிவது போலவே இந்தி பேசவும் தெரியும் ஆங்கிலத்திலும்
 நன்றாக பேசுவார் அதேபோல ஜெய்சங்கர் அவர்களும் தமிழில்  பேசுவார். உண்மைகள் இப்படி இருக்க

வெறுப்பு பேச்சை வைத்துக்கொண்டு தமிழர் விரோத போக்கைக் கையாளும்  இன்றைய புதிய தலைமுறைகளுக்கு வரலாறு உள்ளிட்டு எதுவும் தெரிவதில்லை!அவர்களின் தலைவர்களுக்கும் கூட எதுவும் தெரிவதில்லை. ஒருவரை முன் வைத்து அவர்  தமிழ் சமூகத்திற்கு என்ன செய்தார் எப்படிச் செய்தார்! அவர் செய்த நற்பணிகள் என்ன? என்பதையெல்லாம் அறியாமல் அல்லது அறிந்தாலும் மறந்து விட்டு   அவர் தமிழரா? இவர் தமிழரா? என்று கேட்பதில் மட்டும் இவர்களின் வக்கனையும் வினயமும் தெரிகிறது! சரி இவர்கள் மட்டும் என்ன செய்து கிழித்தார்கள்!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-6-2024.


*Never run from problems, run for solutions. Be patient, none of your problems will remain unsolved*.

*Never run from problems, run for solutions. Be patient, none of your problems will remain unsolved*. Problems will not bother you as long as you believe in yourself that you will find a solution.There is no problem that you cannot solve if your focus is on solutions. If there is a problem, there is a solution, and where there is a solution there is progress. Most of the problems are in your minds which you create yourselves. Think logically, and you have a chance to solve a problem. Reacting emotionally, prolongs and worsens your dilemma. if your thoughts are higher than your problems, you can fly above them... 

#ksrpost
16-6-2024.


Saturday, June 15, 2024

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு 

The beauty of village. 
The beauty Of nature 
Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost 
15-6-2024.


*நெல்சன் மண்டேலா நிறுவிய கட்சிக்கு வந்த சோதனை*| *தென் ஆப்ரிக்கா*| *South Africa* @ksrvoice *ஊழல் செய்த மனைவியிடம் விவாகரத்து பெற்றவர் மண்டேலா*

*நெல்சன் மண்டேலா நிறுவிய கட்சிக்கு வந்த சோதனை*| *தென் ஆப்ரிக்கா*| *South Africa* 
 @ksrvoice 

*ஊழல் செய்த மனைவியிடம் விவாகரத்து பெற்றவர் மண்டேலா*

#nelsonmandela , #nelsonmandela, #nelsonmandelaspeech ,#nelsonmandelabiography,  #nelsonmandelafuneral , #nelsonmandelaeffect ,#nelsonmandelasummary,  #nelsonmandelaand , #nelsonmandelaandqueenelizabeth, #nelsonmandelaandobama ,#nelsonmandelaandmichaeljackson, #nelsonmandelaandoprahwinfrey, #nelsonmandelatamil #africannationalcongress, #africannationalcongresshistory, #africannationalcongressanthem ,#africannationalcongressculturalgroup,  #gandhi, #mahatmagandhi ,#gandhijayanti, #india ,#gandhi, #gandhiji,

youtu.be/1vziBduItpU?si…

Subscribe our below mentioned social media platforms:
   / @ksrvoice  
 
#KSRVOICE
#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்வாய்ஸ்
#ksrpost
15-6-2024.

#*உல்லாசபூமி இங்குஉண்டானதே*…. வாழ்வியல்-KSR

#*உல்லாசபூமி இங்குஉண்டானதே*…. 
———————————
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே….
துள்ளாமல் துள்ளம் உள்ளம் சல்லாபமே
பல்லாக்கிலேதேனோடை ஓரமே நீராடும் நேரமேபுல்லாங்குழல் தல்லாடுமே
பொன்மானே கேளாய் ராணி

தலை சாய்க்க இடமா இல்லை 
தலை கோத விரலா இல்லை 
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு, பரவாயில்லை! என்று பாடி கொண்ட என் ஜீவன ஸ்தானம்…. மறக்க முடியுமா⁉️அதுவே அமைதி, அற்புதம், ஆனந்தம் …. 

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!! நிரந்தரத்தைப் பற்றி நாம் பேசும்போது, ​​அதைச் சுற்றி நிலையான மாற்றம் இருந்தபோதிலும், அனுபவங்கள் இருந்தபோதிலும், அனைத்துவித கவலைகள், துயரங்கள் மற்றும் மிருகத்தனங்கள் இருந்தபோதிலும், இவற்றின் தொடர்ச்சியைத்தான் குறிப்பிடுகிறோம், அல்லவா? 

அழிவில்லாத ஒன்றை பற்றி, அல்லவா? 

ஒருவர் எப்படி அதை கண்டுபிடிப்பது?

சிந்தனையால், வார்த்தைகளால் அதை தேட முடியுமா நிலையற்றதன் மூலம் நிரந்தரமானதைக் கண்டுபிடிக்க முடியுமா?

மாறாததை, தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதன் மூலம் - சிந்தனையின் மூலம் - கண்டுபிடிக்க முடியுமா? 

எண்ணம், ஒரு எண்ணத்திற்கு, ஆத்மா என தன்னால் அழைக்கப்படுவதற்கு நிரந்தரத்தன்மையை அளித்து, ''இதுதான் உண்மை'' என்று சொல்லக்கூடும். சிந்தனை மாற்றத்திற்கு பயப்படுவதால், இந்த பயத்திலிருந்து அது நிரந்தரமான ஒன்றைத் உருவாக்குகிறது - மனிதர்களிடையே நிரந்தர உறவு, ஒற்றுமை, நிரந்தரமான அன்பு போன்றவற்றை. 

எண்ணம் என்பதே நிலையற்றது, மாறும் தன்மை கொண்டது; அதனால் அது நிரந்தரம் என்று கண்டுபிடித்து நம்பும் எதுவும், அதைப் போலவே, நிரந்தரமற்றது.இருந்தாலும் நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!!

சிந்தனை, வாழ்நாள் முழுவதும் ஒரு நினைவகத்தை ஒட்டிக்கொண்டு, அந்த நினைவகத்தை நிரந்தரம் என அழைக்கிறது; பின்னர் மரணத்திற்கு பிறகு அது தொடருமா என்பதை அறிய முற்படுகிறது.
சிந்தனைதான் இதை உருவாக்கி, அதற்குத் தொடர்ச்சியைக் கொடுத்து, நாளுக்கு நாள் ஊட்டம் கொடுத்து, அதைத் தக்கவைத்துக் கொள்கிறது. 

அது நேற்று அனுபவித்ததை, இன்று நினைவில் நிறுத்தி, அதன் மூலம்  நாளையை உருவாக்குகிறது; காலம் இதிலிருந்து பிறக்கிறது. எனவே காலத்தின் நிரந்தரத்தன்மை இருக்கிறது; உச்சகட்ட உண்மையை அடைவதற்கான ஒரு கோட்பாடுக்கு சிந்தனை அளிக்கும் நிரந்தரத்தன்மை உள்ளது. 

இவை அனைத்தும் சிந்தனையின் விளைவாகும் - பயம், காலம், உச்ச நிலையை அடைதல், அழியாத்தனமாக மாறுதல்.

ஆனால் சிந்தனையாளர் என்பவர் யார் - இந்த எண்ணங்கள் அனைத்தையும் கொண்ட சிந்தனையாளர் என்பவர் யார்?

சிந்தனையாளர் என்று ஒருவர் உண்மையில் இருக்கிறாரா? 

அல்லது சிந்தனை மட்டுமே உள்ளதா - அதுதான் சிந்தனையாளரை உருவாக்குகிறதா? 

"அவரை" நிறுவிய பிறகு, நிரந்தரமானதை கண்டுபிடிக்க முயல்கிறதா -  ஆன்மாவை திறந்து பாருங்கள்.

தத்துவத்தில் கனிதல்...எனது அடர்த்தியான  லௌகீகச் சூழலில் சாத்திரமாகிறதா பார்க்க வேண்டும்...ஏகந்தம்….

இருப்பினும் வாழ்வு இருப்பு நீர் குமிழ் போன்றது…. 
••
அறுபது ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பூமியில் வாழ்ந்துவிட்டேன். நன்றியற்ற துரோகங்கள் என்னை ரண படித்தி கொண்டியது இந்த மண்னின் சில ஏமாற்றும் தத்தி மனிதரால்… நான் கவலை கொள்ளவும் இல்லை. பின் நவீனத்துவம், இருத்தல்வாதம் எனக்கு மட்டும் அனுமதி வழங்கவே இல்லை.

ஐந்தில் வளையா உளத்தை வளைத்தே
    அறுபதில் வளைக்க முயல்கின்றேன். இனிநைந்து முடங்கும் உடலைப் பேணிடும்
    நல்வழி உழைப்பே அயர்கில்லேன்! 

களைப்பாக இருக்கிறது. இனி எடுத்துவைக்கும் அடிகளெல்லாம், கால்பதிக்கும் பாதையெல்லாம் மரணத்தை நோக்கியே என்று தோன்றவாரம்பித்துவிட்டது. இஃதொரு தயார்ப்படுத்தலே. 

(எங்கே படித்து கேட்டது)

ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் 'இதை அனுபவிக்க நான் உயிரோடிருப்பேனா?' என்று யோசிக்கிறேன். இந்த வீட்டை நான் திருத்துவதும்கூட முதுமையடைந்தபின் வசதியாக வாழவேண்டுமென்பதற்காகவே. அப்போது என்னால் தெளிவாகச் சிந்திக்கவியலாது. தீர்மானகரமான முடிவுகளைச் சுயமாக எடுக்கவியலாது. அழகியதோர் சூழலில்,  எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருக்கும் அமைதியான அந்திமமே நான் வேண்டுவது. எவரும் விழைவது அதையே.

உறவுகள் மீதான பிடிப்பினை உதறமுடிந்ததுபோல, மெல்ல மெல்ல யாவற்றினின்றும் விடுபட்டுப் பயணம் தொடங்குவதற்கிடையில் எதையாவது செய்துமுடிக்கவேண்டும். என்னைப் பிறருக்கு நிரூபிக்க அல்ல; என்னைச் சாந்தமுறச் செய்ய. 
I need happiness with #tranquility…..
To be a #Scholargypsy to wander here and there in this globe….

#வாழ்வியல்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-6-2024.


#*திருநெல்வேலி* *மாஞ்சோலை*

#*திருநெல்வேலி*
*மாஞ்சோலை*
————————————
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சுமார் 500 பேருக்கு மேல் வேலை நீக்கம் செய்யப்பட்டு அங்கிருந்து உடனே வெளியேற்றும்படி நிர்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்..

ஆண்டாண்டு காலமாக குறைந்தபட்சம் மூன்று தலைமுறைகளுக்கு மேல் அங்கேயே அந்தத் தோட்ட தொழிலை நம்பி உயிர்வாழ்ந்து வந்த அந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பம் குழந்தைகளுடன் அவ்விடத்தை விட்டுப் பரிதாபமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பாம்பே வர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனம்
இந்த எஸ்டேட்டை 99 வருட காண்ட்ராக்ட் இன் பேரில் நிர்வகித்து வந்தது. இப்போது அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டபடியால் தொழிலாளர்களை அவர்களின் கையறு நிலையில் வீடு திரும்பும் படிச் சொல்கிறது.

ஆனால் உண்மையில் இந்த குத்தகை அல்லது ஒப்பந்தம் 2027-8 ல் தான் முடிகிறது. ஆனாலும் ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று சொல்லி குழந்தைகள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் அவர்கள் வாழ்ந்த வீட்டை விட்டு அங்கே இருந்த சூழ்நிலையை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

இந்த எஸ்டேட்டின் மொத்த பரப்பளவு ஏறத்தாழ 8573 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது என்பது ஒரு கணக்கு. 
இந்த மலைப்பாங்கான பிரதேசமே அல்லது அந்த எஸ்டேடே தங்களது உலகம் என்று நம்பி வாழ்ந்த இந்த மக்கள் இப்பொழுது எங்கே போவது என்று தெரியாமல் திகைத்தபடி நேற்று மலையை விட்டு இறங்கி இருக்கிறார்கள். யோசித்துப் பார்க்கும்போது இவ்வளவு மக்களையும் இனி எந்த இடத்தில் பொருத்துவது என்பது ஒரு கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இப்படி நடந்து கொண்டிருப்பது குறித்த அக்கரையோ இந்த விஷயமோ வெளியே தெரியாதபடி இது நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் பரிதாபம். இதில் தலையிட்டு யார் ஆவண செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

நிலம் இல்லாத ஏழைகளுக்க ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சென்ற திமுக ஆட்சியிலேயே வாக்குறுதி தரப்பட்டது. இன்னும் நான்கு ஆண்டுகளில் மாஞ்சோலை எஸ்டேட்டின் குத்தகை காலம் முடிவடைகிறது. அங்கு வேலை செய்த தேயிலை தொழிலாளிகளுக்கே ஆளுக்கு இரண்டு ஏக்கர் ஏன் பிரித்துத் தரக்கூடாது?  இன்னும் நான்கு ஆண்டுகள் மீதம் இருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக ஏன் மக்களை துரத்த வேண்டும்? 

#மாஞ்சோலை
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-6-2024.

.

.


#*தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு*

#*தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு* 
————————————
தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய தமிழக தொல்லியல்த் துறை கடந்த காலங்களில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது!! அச்சமயத்தில் மத்திய தொல்லியல்த் துறை இயக்குனரின் இட மாற்றத்தால் தொல்லியல்த் துறையின் ஆலோசனை வாரியம் ஆன காபாவின் கூட்டம் நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் கடந்த ஜனவரியில் கிடைக்க வேண்டிய அனுமதி இந்த வாரம் தான் கிடைத்துள்ளது. 

இதை அடுத்து ஐந்து கோடிருபாய் செலவில்  தமிழகத்தின் பல இடங்களில் அடுத்தடுத்த வாரங்களில் அகழாய்வைத் துவக்க தமிழகத் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அகழாய்வு செய்த இடங்களான சிவகங்கை மாவட்டம் மதுரை கீழடி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்மண்டி ஆகிய இடங்களில் இந்தாண்டும்  அகழாய்வுப் பணி துவங்க இருக்கிறது.

மேலும் புதிதாக தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னனூர், ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்யப்பட உள்ளது அதற்கான முதல் கட்ட வேலைகளில் அந்தந்தப் பகுதி அகழாய்வு இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்கிற ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

 தமிழ் நாட்டின் சிறப்பையும் காலகாலமாக வாழ்ந்த மக்களுடைய வாழ்வின் தொன்மங்களையும் பண்பாடு மற்றும் உற்பத்தி உறவுகளையும்  அடையாளங்களையும் அகழாய்வு செய்வதன் மூலம் பல வகையான கடந்த கால உண்மைகள் வெளிப்படும் என்பதால் இத்தகைய ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கிய மத்திய தொல்லியல்த் துறை.

#தமிழகத்தில்அகழாய்வு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-6-2024.

தமிழக அரசியல் தலைவர்கள்

#தமிழகஅரசியல்தலைவர்கள் 

அதிகாலை எழுந்தவுடன் பொறுப்புடன் நாட்டு நடப்புகளுக்காக அனைத்து செய்தித்தாள்களையும் வாசிக்காத ஏன் தொட்டு கூட பாக்காத  சோம்பேறித் பல தலைவர்களை தமிழகத்தில் எனக்கு தெரியும்! யாராவது தட்டி எழுப்பி இப்படி நடந்திருக்கிறது என்று சொன்னால்  ஓ அப்படியா நடந்து விட்டது என்று தத்திகள் போலக் கேட்பார்கள். உடனே  உடன் இருப்பவர்களை men and matter தெரியாமல் ஒர் அறிக்கை தயார் செய்ய சொல்வார்கள். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இதுதான் இன்றைய அரசியல் நிலைமை!

#தமிழகஅரசியல்தலைவர்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-6-2024,

*You are never too old to become better than who you were yesterday*

*You are never too old to become better than who you were yesterday*. Your greatness relies on your ambition so push yourself every single day to learn and improve because your potential is limitless. So take  life day by day and be grateful for the little things. Don't get stressed over what you can't control. And Spend the day appreciating every little thing that comes your way, and you'll end the day feeling deeply grateful for life...Keep going...

#ksrpost
15-6-2024,


அருமையான கைவண்ணம் படைப்புகள்.

வாரணாசி BHU இந்துப் பல்கலைக்கழகத்தின் நண்பர் பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் பாண்டே அவர்கள்  பித்தளையில் செய்த உத்தமர் காந்தி, இராட்டை மற்றும் லாந்தர் விளக்கு போன்ற அரிய பொருட்களை அனுப்பித் தந்தார். அருமையான  கைவண்ணம் படைப்புகள்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-6-2024.


Friday, June 14, 2024

*Cheerfulness is the best promoter of health and is friendly to mind to the body*

*Cheerfulness is the best promoter of health and is friendly to mind to the body*. Fear defeats more than any other  thing in the world. Life shrinks or expands in proportion to one’s courage. If you fear to risk, you cannot grow. If you cannot grow, you cannot be your best. If you cannot be your best, you cannot be happy. If you cannot be happy, what else is there in life. Be cheerful, be healthy and be happy...

#ksrpost
14-6-2024.


பொதுவாகவே அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்றைய நிலை இருக்கிறது*.

*பொதுவாகவே  அரசியலில் எந்த நடைமுறையும் அற்ற கருத்துக்கள் பலவறாக மாறி வரலாம். மனம் போன போக்கில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதாகத்தான் இன்...