Wednesday, July 31, 2019

#நிலக்கடலை விளைச்சல்


120 -130 நாள் வேலை
400 கிலோ கடலையை உடைச்சா 350 கிலோ வரை கடலைபருப்பு கிடைக்கும்.
பக்கத்திலுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளாரகள் வாங்கி சென்று விடுவார்கள்.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2019.


Image may contain: plant and outdoorImage may contain: sky, food and outdoor
Image may contain: food

#பாலாற்றின் குறுக்கே 40 அடியாக உயர்த்தப்படும் தடுப்பணையால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

#பாலாற்றின் குறுக்கே 40 அடியாக உயர்த்தப்படும் தடுப்பணையால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் 22 அடியாக உள்ள தடுப்பணைகளை 40 அடியாக உயர்த்திக் கட்டும் பணியில் ஆந்திர அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாற்றின் மூலம் வடமாவட்டங்களில் 4.25 லட்சம் எக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கணேசபுரம் பகுதியில் பாலற்றின் குறுக்கே புதிய தடுப்பணையை கட்ட முயன்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு மத்திய நீர்வள குழுமத்துடன் 2 மாநில அரசுகளும் கலந்து பேசி சுமூக முடிவு காண வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து ஆந்திர அரசு பல்வேறு இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணியை தொடர்ந்தது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தது. 
ஆந்திர அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பாலாறு பாதுகாப்பு சங்கங்கள் ஆகிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. இதனால் ஆந்திர அரசு தற்காலிகமாக அந்த பணிகளை நிறுத்தியது. அதன்பிறகு, தமிழக அரசு தொடர்ந்து வழக்கை நடத்தாததால், கடந்த 2016ஆம் ஆண்டு ஆந்திர அரசு பெரும்பள்ளம், எஸ்.எம்.பள்ளம், சாமுண்டிபள்ளம், ஒக்கல்ரேவ் ஆகிய இடங்களில் பாலற்றின் குறுக்கே 5 அடியில் தடுப்பணைகளை கட்டத் துவங்கியது. தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயிலின் அருகே 5 அடி உயரமாக இருந்த தடுப்பணையை 12 அடியாக உயர்த்திக் கட்டியது. 
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அப்போது ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில், பாலற்றின் குறுக்கே இருந்த அனைத்து தடுப்பணைகளின் உயரத்தையும் 12 அடியாக உயர்த்தி தற்போது அது 22 அடியாக உயர்த்திக் கட்டியுள்ளது. 
இந்த நிலையில் 22 தடுப்பணைகளையும் தற்போது 40 அடியாக உயர்த்திக் கட்ட அந்த மாநில அரசு ரூபாய். 43 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஆந்திர மாநில தேர்தல் முடிந்தவுடன் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தடுப்பணைகளை கட்டும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலத்துக்குட்பட்ட கிடிமாணிபெண்டா செல்லும் சாயின் அருகேயுள்ள கங்குத்தி ஊராட்சியில் பாலற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரம் 40 அடியாக அதிகரிக்கப்படும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இதுபோல, மற்ற தடுப்பணைகளையும் விரைவாக கட்டி முடிக்கும் எனத் தெரிகிறது. எனவே பெருமழை பெய்தாலும் இனி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
ஆந்திர அரசு இத்தனை தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில் தமிழக அரசு 2 தடுப்பணைகள் குறித்து மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பேசி வருகிறது. தற்போது உள்ள வழக்கில் 22 தடுப்பணைகளின் ஆதாரத்தையும் திரட்டி உரிய முறையில் வாதத்தை முன்வைக்க வேண்டும். வழக்கை துரிதமாக நடத்தி இரு மாநில முதல்வர்களும் கலந்து பேசி பாலாறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். 
அதேபோல, பாலாறு விவகாரத்தில் நதிநீர் ஆணையம் ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த பாலாற்றின் தண்ணீரை நம்பியே வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் உள்ளது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் இதை கவனிக்குமா?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-07-2019

இன்றைய (31-7-2019)தினமணியில் எனது பத்தி.......... தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு

இன்றைய (31-7-2019)தினமணியில் எனது பத்தி.......... 
தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு
வழக்கறிஞர். கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
————————————————

தமிழகத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1960இல் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வடாற்காடு மாவட்டம், தென்னாற்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம், மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் என 13 மாவட்டங்கள் இருந்தது. அதன்பின், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் தனியாக பிரிந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் புதுக்கோட்டை, ஈரோடு என பிரிந்தது. இதுதான், தமிழகத்தின் மாவட்டங்கள் பிரிந்த காலகட்டம்.
பழைய சென்னை ராஜதானியில் நீதிக்கட்சி ஆண்டபோது, வடாற்காடு மாவட்டத்திலிருந்து திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, பல்லவநேரி போன்ற தமிழ் பகுதிகளும், கடப்பாவிலிருந்து மதனப்பள்ளி, வாயல்வாடி என்ற இரு பகுதிகளையும் சேர்த்து சித்தூர் மாவட்டம் உதயமானது.
1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2019: விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் உருவாக்கப்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்தான் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது. முதன் முதலாக ஈரோடு மாவட்டத்துக்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்ஜிஆர். நெல்லை மாவட்டத்தை பிரித்து, தூத்துக்குடியை தலைநகராகக்கொண்டு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது நெல்லை மாவட்டத்துக்கு, கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். ஆனாலும் நெல்லை மீது பற்றுகொண்ட அந்த ஊர் மக்கள், நெல்லை என்ற பெயரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, “நெல்லை கட்டபொம்மன் மாவட்டம்” என்று அழைக்கப்படும் என்று எம்ஜிஆர் அறிவித்தார். விருதுநகர் மாவட்டத்தை காமராஜர் மாவட்டம் என்று அறிவித்தார். சிவகங்கை மாவட்டத்தை பசும்பொன் தேவன் திருமகனார் மாவட்டம் என்று அறிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டினார். அண்ணா பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்குதான் அண்ணா பெயர் சூட்ட வேண்டுமென்று கலைஞர் கோரிக்கை வைத்தார். பின்னர் 1989ல் கலைஞர் முதல்வரானதும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று இருந்ததை நீக்கினார். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கை அண்ணா மாவட்டம் என்று அண்ணா பெயரை சூட்டினார். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. பின் சம்புவராயர் பெயரில் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது.
இப்படி பல பெயர்களோடு தமிழக மாவட்டங்கள் இருந்தது. 1996 காலக்கட்டத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரங்களால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி இந்த பெயர்கள் நீக்கப்பட்டன.
தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி இன்றுமுதல் தென்காசி மாவட்டம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்காசி , செங்கோட்டை, கடையநல்லூர் , சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர் , சிவகிரி , ஆலங்குளம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய புதிய மாவட்டமாக உருவாகியுள்ளது. திருவேங்கடம் பகுதி மட்டும் வானம் பார்த்த கரிசல் பூமி ஆகும்.
மேற்காணும் தாலுக்காக்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள். என்னுடைய விவசாய நிலங்கள் இந்த மாவட்டத்தில் இருப்பதால் இந்த மாவட்டமும், தொலைவில் சென்று விட்ட திருநெல்வேலி மாவட்டமும் அதன் மீதான நேசமும் உரிமையும் ஒருத்துளிக்கூட குறைத்துக் கொள்ள முடியாது. அதே போல் விருதுநகர் மாவட்டமும் என் விருப்பத்திற்குரிய மாவட்டம் என சொல்வேன்.
என்னதான் இருந்தாலும் 60, 70களில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் *தெற்கு சீமை* என்ற புவியியல் கம்பீரம் இழந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது. 1986ல் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தபோது எனது ஆதங்கத்தை மனதில் ஏற்பட்ட ஒருவித தாக்கத்தை அன்று தினமணியில் பதிவு செய்தேன். அந்த மண்நேசம் இன்றும் மாறாதது.
நெல்லை மாவட்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் திருவில்லிபுத்தூர், விருதுநகர்(விருதுபட்டி), சாத்தூர், ராஜாபாளையம் ஆகிய வட்டாரங்கள் ஒருங்கிணைத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது . எத்தனை மாவட்டங்களாக பிரிந்தாலும் திருநெல்வேலியின் தனித்துவம் மட்டும் நிலைத்து நிற்கும்.
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என திருஞானசம்பந்தரும்
"தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும்,
"பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய வரிகள் இந்த மாவட்ட பிரிவுகளால் பொய்த்துப் போகுமா என்ன?
சரி, என்னசெய்வது? ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தனி வாழ்வு என்ற காரணமாக இடப்பெயர்ச்சி செய்து தனிக்குடும்பமாக பிரிவதில்லையா? அவ்வாறாக கருதி இப்பிரிவை ஏற்று எல்லாத்துறைகளிலும் வளர்ச்சிக் கண்டு தென்காசி மாவட்டம் முன்னேற்றம் காண வேண்டும்.

நாடு விடுதலைக்குப் பின் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பிரிவு தலைமை இடமாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை செயல்பட்டது. 1967-ம் ஆண்டு அண்ணா முதலமைச்சர் ஆனதும் சைதாப்பேட்டையில் இருந்த இந்த தலைமை இடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாகத்திற்கு காஞ்சிபுரமும், வழக்கு மன்றத்திற்கு செங்கல்பட்டு என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை இருந்தது. தற்போது உதயமாகவுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகிய நகரங்கள் இடம் பெறுகின்றன. மேலும் கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, பெருங்குளத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், திருநீர்மலை, மேடவாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளும் சேர்க்கப்படுகிறது.
குன்றத்தூர் பேரூராட்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் இடம்பெறுகிறது. ஊராட்சி ஒன்றியங்களில் காட்டாங்கொளத்தூர், புனித தோமையர்மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகியவை இடம் பெறுகிறது.
அன்றைய சென்னை மாநிலத்தில் 13 மாவட்டங்களாக இருந்து இன்றைக்கு 35 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வட்டாரங்களில் இருந்து தங்களுக்கு தனி மாவட்டம் வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டம் மட்டும் தான் இதுவரை பிரிக்கப்படாத மாவட்டங்களாகும்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சி தனிமாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் தனி மாவட்டமாக வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முசிறி தனிமாவட்டமாக வேண்டுமென்றும், வேலூரிலிருந்து திருப்பத்தூர்,அரக்கோணம் தனிமாவட்டங்களாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், சேலம் மாவட்டத்திலிருந்து மேச்சேரி தனிமாவட்டமாக வேண்டுமென்றும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
எங்கள் வட்டாரத்தை சேர்ந்த சிலர் திருவேங்கடம், எட்டையபுரம் பகுதிகளை கோவில்பட்டியுடன் இணைத்து கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கி தனிமாவட்டமாக அமைய வேண்டுமென்ற கோரிக்கையும் உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பிரிக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள் கூட சரியாக பிரிக்கப்படவில்லை என்றும் பலருக்கு குறைகள் உண்டு. இதற்கு காலமும், அரசியல் சூழ்நிலையும் தான் பதில் சொல்ல வேண்டும். வேறென்ன சொல்ல?
மாவட்டங்கள் பிரிப்பு என்பது விரைவான நிர்வாக பலாப்பலன்கள் பெறுவதற்கும், திட்டங்களுடைய பயன்கள் உடனே மக்களிடம் செல்ல வேண்டும். தாமதங்கள், தடைகள் இருக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே. ஆனால், அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் ஒரு கோப்பு எடுத்தால் உடனே முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி தான் பிரச்சனையை சரிசெய்ய வேண்டியுள்ளது. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் பசுபதி என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் 1960களில் இருந்தார். குளம் பராமரிப்பு, ஆயக்காட்டு பணிகள் குறித்து ஏதாவது மனு கொடுத்தால் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிப்பார். கீழ் அதிகாரிகளுக்கு சொல்லாமலேயே அவரே தலத்திற்கு வந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா என்று கவனிப்பார்.
அன்றைக்கு கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, திருவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், நாங்குநேரி, ராதாபுரம் போன்ற பெரிய தாலுக்காக்கள் இருந்தன. அதன் பின்னர் தான் விளாத்திகுளம், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சிவகிரி, கடையநல்லூர், திருவேங்கடம் என பல தாலுக்காக்கள் பிரிந்தன. இவ்வளவு பரந்து விரிந்த மாவட்டத்தில் சாதாரண அம்பாசிடர் காரில் ஒரு ஆட்சித் தலைவர் வடக்கே சாத்தூரிலிருந்து தெற்கே தோவாளை வரை, மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை முதல் கிழக்கே வங்கக் கடல் வரை தன்னலம் கருதாமல் அன்றைக்கு பணியாற்றினார். இன்றைக்கு அம்மாதிரியான அதிகாரிகளையும், அந்த நிலைகளையும் நினைத்துப் பார்க்க முடியுமா.
அன்றைக்கு பரந்து விரிந்த நெல்லை மாவட்டத்தில் அப்போது வடமேற்கே இராஜபாளையம் எல்லை, வடகிழக்கே அருப்புக்கோட்டை, சாயல்குடி எல்லை, தெற்கே முப்பந்தல் வரை எல்லை இருக்கும். அன்றைக்கு இதுமாதிரி சாலை வசதிகள் இருக்காது. பல இடங்களுக்கு மண் சாலையில் தான் பயணிக்க வேண்டும். இருப்பினும் அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் பசுபதி அவர்கள் 10 நாளைக்கு ஒரு முறையாவது ஒரு தாலுக்காவிற்கு வந்து செல்வார். பணிகள் நடக்கின்றனவா என்று தானே மேற்பார்வையிடுவார். இன்று மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு குறைவான பகுதிகளில் வசதிகள் நிறைந்திருந்தும் கூட மக்கள் நல பணிகளில் நேரடியாக கண்காணிக்க செல்வதில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தயக்கங்கள் உள்ளது. அன்றைக்கு பசுபதி முதலமைச்சர் காமராஜரிடமே ஏதாவது திட்டம் சரியில்லை என்றால் அதை நடைமுறைப்படத்த முடியாது என்று தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லக்கூடிய தைரியம் அன்றைக்கு இருந்தது.
மாவட்டங்கள் அமையும்போது நிர்வாக வசதி, மக்கள் நலன், புவியியல் ரீதியாக ஒருங்கிணைந்த பகுதிகளின் அடிப்படையில் பிரிக்க வேண்டும். மாவட்டத்தில் 15 முதல் 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒரு மாவட்டமாக பிரித்தால் நல்லது.
சிறியதே அழகு என்று மானிடம் முன்னிறுத்தும் கருத்து. மாவட்டங்கள் பிரித்து அதிகாரிகளுக்கு ஆளுமையை எளிமைப்படுத்துவது அவசியம் தான். அதேபோல, அதிகாரிகளும் கடமையை உணர்ந்து தங்களுடைய பணிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று சிந்தித்து மக்கள் நல அரசுக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கம்பீரமான மாவட்டங்கள் என்று ஒரு காலத்தில் சொன்னது தாலுக்கா தலைநகரங்கள் போல தற்போது மாவட்டத் தலைநகரங்கள் ஆகிவிட்டது என்று ஒரு நண்பர் சொன்னார்.
நான், “காலங்கள் மாறிவிட்டன. மாற்றத்திற்கேற்றார் போல நம்மையே மாற்றிக் கொண்டால் தான் ஜீவிக்க முடியும் என்றேன்”.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2019 
-செய்தித்தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com.


Image may contain: 1 person, smiling

Western ghats....


Image may contain: sky, cloud, tree, mountain, outdoor and nature

Image may contain: sky, mountain, tree, plant, outdoor and nature

Tuesday, July 30, 2019

#TheIndiaInternationalCentre #NewDelhi – #IIC Quarterly #இந்தியாஇண்டர்நேஷனல்சென்டர் – ஐ.ஐ.சி காலாண்டிதழ் (#கதைசொல்லியின் முன்னோடி)

#TheIndiaInternationalCentre #NewDelhi – #IIC Quarterly #இந்தியாஇண்டர்நேஷனல்சென்டர் – ஐ.ஐ.சி காலாண்டிதழ் (#கதைசொல்லியின் முன்னோடி) ---------------------------
இந்தியா இண்டர்நேஷனல் சென்டர் புதுடெல்லியின் ஒரு முக்கிய அடையாளம். டெல்லி லோடி எஸ்டேட்டில் மேக்ஸ்மில்லர் மார்க்கில் இந்த மையம் அமைந்துள்ளது. டெல்லி சென்றால் இங்கு தங்குவதுண்டு. அருமையான ஜாகை. நல்ல நூல் நிலையம், நல்ல நண்பர்களை சந்திக்கலாம். இங்குள்ள சுற்றுச் சூழலே மனதை ஈர்க்கும். இந்தியா இண்டர்நேசனல் சென்டரில் பல்வேறு தரப்பினர் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைப் சேர்ந்தவர்களும் வந்து தங்குவதுண்டு.





இந்த மையத்திலிருந்து ஆங்கில காலண்ட்டிதழ் நடத்தப்படுகிறது. தொடர்ந்து 1965லிருந்து 53 ஆண்டுகளாக இந்த காலாண்டிதழ் வெளிவருகிறது. இந்த இதழில் இந்தியாவின் படைப்பாளிகள் மட்டுமல்லால் நோபல் பரிசு பெற்ற உலக ஆளுமைகளும் தங்கள் படைப்புகளை வழங்கியுள்ளனர்.

அமர்த்தியா சென், இவான் இளிச், கேப்ரா, கேத்ரில் ரெய்ன், ராமானுஜன், அனந்தமூர்த்தி, மேகானந்த் தேசாய், நாராயணா, என்.ஆர்.மூர்த்தி, ஜெயந்த் நாலில்கர் மற்றும் அப்துல் கலாம், தலாய் லாமா, குஷ்வந்த் சிங், ரோமிலா தாப்பர், நிகில் சக்கரவர்த்தி, ஷியாம் பெனகல் போன்ற பல முக்கிய படைப்பாளிகளின் படைப்புகள் இந்த ஆங்கில காலாண்டிதழில் இடம்பெற்றன. இதை முன்னோடியாக கொண்டு தான் இதன் வடிவமைப்பிலே கதைசொல்லி இதழை கொண்டு வருகிறோம்.

இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், நாட்டுப்புறவியலையும் பல்வேறு பயனுள்ள பத்திகள் ஆய்வுப் பூர்வமாக அற்புதமான பத்தியாளர்களிடம் (Columnist) இருந்து பெறப்பட்டு வெளியிடப்படுகிறது.

The India International Centre publishes a journal for the exposition of cultural patterns and values prevailing in different parts of the world. In 1965, the Centre launched Conspectus, which was subsequently discontinued. In 1974, the journal was revived as the IIC Quarterly, as a multi-disciplinary publication with essays from leading statesmen, writers, thinkers and activists from India and abroad, many of them being policy-makers in the government, academia, members of the intelligentsia and activists.
Originally initiated to publish talks given at the IIC, the Quarterly has widened its scope to focus on concerns of the Centre: on civic and international affairs, ethics and society, folklore and anthropology, indigenous knowledge systems, ecology and the environment, governance, and the arts and literature. The journal’s foremost concern is to promote an understanding of different cultures and civilisations, as well as to focus on contemporary issues of the day, reflecting in print the concerns of the institution.
Over the years, several eminent writers have contributed to this journal. Among them are Amartya Sen, Ivan Illich, Fritjof Capra, Kathleen Raine, A.K. Ramanujan, U.R. Ananthamurthy, Meghnad Desai, Sudhir Kakar, Narayana N.R. Murthy, Jayant Narlikar and A.P.J. Abdul Kalam, to name just a few.
The Quarterly’s in-depth interviews with world leaders and people of commitment engages them in personal insights and political commentary. H.H. the Dalai Lama, Khushwant Singh, Romila Thapar, Nikhil Chakravartty, Shyam Benegal and Ebba Koch are a few among them. Rich in visual commentary, photo essays present the work of outstanding photographers such as Henri Cartier-Bresson, Richard and Pablo Bartholomew, Raghu Rai, Dayanita Singh and Ram Rahman. India’s foremost cartoonists – R.K. Laxman, Sudhir Dar and Abu Abraham – have all contributed generously to the Quarterly.
These volumes are now treasured as collectors’ items.
The Quarterly is published as three volumes a year: two single and one double (theme) volume. Its editors have included a host of distinguished litterateurs such as A. Ravi Shekhar, Mira Sinha Bhattacharya, Roshan Seth, Sima Sharma, Geeti Sen and Ira Pande. It is currently edited by Omita Goyal.
he idea of the India International Centre first came up in October-November 1958, when Dr. S. Radhakrishnan, then Vice President of India, and John D. Rockefeller III discussed setting up a centre for the ‘quickening and deepening of true and thoughtful understanding between peoples of nations’. Mr. Rockefeller suggested an International House on the model of Tokyo’s International House of Japan, in whose founding he had played a great part and offered a generous grant towards this end. Pandit Jawaharlal Nehru, then Prime Minister of India, was so enthused by the idea that he personally took interest in the selection of the beautiful 4.76 acres site adjacent to Lodi Gardens, on which the present complex stands. Later, as the activities of the Centre expanded, an Annexe was added to the main complex in December 1996.
Some of the best minds of the time came together in the preparatory committee to spell out the objectives of the Centre set up by Dr S. Radhakrishnan. They were Dr. C. D. Deshmukh (Chairman), Smt. Kamaladevi Chattopadhyay, Pt. H. N. Kunzru, Professor Humayun Kabir, Dr. V. K. R. V. Rao, Shri Raja Ram, Dr. Malcolm S. Adiseshiah and Shri Prem Kirpal. Dr. C. D. Deshmukh, then Chairman of the University Grants Commission (UGC), was identified by Dr. Radhakrishnan as the person who would be able to set up such an institution. This faith in Dr. Deshmukh was vindicated for by 24 December 1958, the Centre had been founded and by 19 March 1959, it was registered under the Societies Registration Act (XXI) of 1860.
Dr. Deshmukh invited Joseph Allen Stein to be the architect of the Centre’s building. What Stein created here is best expressed in his own words: ‘There was an attempt to create something which depended upon simplicity and relationships rather than things. So this is not a five-star appearance in marble and granite. But it is a place where a certain kind of relationship exists—between the garden and the building and the water and the earth and the sky, and the learning and activities that take place and the things that happen...’
Dr. Deshmukh was convinced, however, that unlike the Japanese institution, which was mainly supported by businessmen and journalists, the Centre in Delhi would have to lean heavily on the universities--it would have to be ‘a pooled guest-house of the universities--in the metropolis’. Funds were raised from the Rockefeller Foundation, and from 37 Indian universities. On 15 April 1960 Smt. Kamaladevi Chattopadhyay, a Life Trustee and the first Vice-President of the IIC, turned the first sod. In November 1960, Crown Prince Akihito of Japan laid the cornerstone for the superstructure. The building was completed by 22 January 1962 and inaugurated by Dr. S. Radhakrishnan. Prime Minister Jawaharlal Nehru, John D. Rockefeller III and many prominent citizens and intellectuals of Delhi were also present on this historic occasion.
At its inauguration, Pandit Nehru exclaimed, ‘(It) surprises me, now it is here, to realise that we did not have it previously, because the world today is so constituted that there can be no escape from international cooperation…. This international Centre will, of course, not change the nature of the world, but it will help in the process, which is very essential today....’
Through its close contacts with prominent academic and cultural institutions in India and abroad, and through its networking with diplomatic missions in the capital, the India International Centre draws thinkers and professionals from different parts of the world and this country. In the early years visiting delegates have included Pearl Buck, P.M.S. Blackett, Robert Goheen, Paul Gore-Booth, Frederick Leboyer and Ivan Illich.
In recent years, eminent public personalities speaking at the Centre have included H.H. the Dalai Lama, Sogyal Rimpoche, Julius Nyerere from Tanzania, Willy Brandt from West Germany, Henry Kissinger from the U.S., Lee Kuan Yew from Singapore, Shimon Peres from Israel, Fernando Henrique Cardoso from Brazil and Sheikh Hasina from Bangladesh.
The talks and symposia at the Centre range from international and civic affairs, ethics and human rights, environment, ecology and wildlife to dimensions in science and medicine, to religion, philosophy, culture and literature. Among the famous writers and scholars who have been hosted here are such famous personalities as Octavio Paz, Christophe Von Furer-Haimendorf, Gunter Grass, Hasan Fathy, Sayed Hossein Nasr, Dominique Lapierre, Noam Chomsky, Kathleen Raine, Helene Cixous, Mahasweta Devi, Nissim Ezekiel, Salman Rushdie, Vikram Seth, Amitav Ghosh, Amartya Sen and Jung Chang.
From its inception, decision-making of policies at the Centre has been invested in the authority of the Board of Trustees. The five original Life Trustees of the IIC were Dr. C. D. Deshmukh, Pandit H.N. Kunzru, Lala Shri Ram, Nawab Zainyar Jung Bahadur and Smt. Kamaladevi Chattopadhyay. The present Life Trustees are: Dr. Kapila Vatsyayan, Shri Soli J. Sorabjee, Shri N.N. Vohra and Justice B.N. Srikrishna. Each Trustee is an eminent authority in his/her field, bringing years of experience to the governing of the Centre. Every two years, two Trustees are elected in addition to the Life Trustees, to the Board.
Since 1960, there have been ten Directors of the Centre selected by the Board of Trustees, each with years of administrative experience: P.N. Kirpal (I960), D.L. Mazumdar (1961-66), Romesh Thapar (1967-72), J.S. Lall (1973-78), U.S. Bajpai (1979-85), Eric Gonsalves (1986-91), A. Madhavan (1992-95), N.N. Vohra (1995-2003), P.C. Sen (2003-2008) and Kavita A. Sharma (2008-2014).

30-07-2019

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few h...