Tuesday, February 28, 2017

bill on to Re Call

Good move of Varun bill on to Re Call
MPs and MLAs
-------------------------------------
MPs and MLAs should be recalled within two years from being elected if 75 per cent of those who voted for them are not satisfied with their performance, according to a bill moved by BJP MP Varun Gandhi.

Stating that the countries all over the world have experimented with the concept of Right to Recall, the Lok Sabha MP has proposed an amendment in the Representation of the People Act 1951 through his Representation of the People (Amendment) Bill, 2016. As per the legislation, recalling process can be initiated by any voter of the constituency by filing a petition before the Speaker, signed by at least one-fourth of the total number of electors in that constituency.

Srilanka

When #Srilanka has out-rightly rejected foreign judges and lawyers, Sumanthiran offering 18 more months is an exercise in futility, inexcusable, a criminal waste of time and a body blow to #Tamils seeking justice!
 #hrc34
ஈழத்தமிழரும், ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டமும்
---------------------------------------
தற்போது ஜெனிவாயில் கூடியுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், ஈழத்தமிழருக்கு நீதிக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடையே இருக்கிறது.
ஒவ்வொரு மார்ச் மாத துவக்கத்திலும், இந்த எதிர்பார்ப்புகள் கடந்த 2010லிருந்து இருக்கின்றது. இதைக் குறித்து பெரிய விவாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வரும் கூட்டத்தில் அமெரிக்கா என்ன முடிவெடுக்க போகின்றதோ அதன் அனுகுமுறை எப்படி இருக்குமோ என்று அறிய முடியவில்லை.
கடந்த ஆண்டு, தென்கிழக்கு ஆசியாவில், இலங்கை பிலிப்பைன்ஸ், சீனா அருகில் உள்ள பசிபிக்கடல் குறித்தான பல புவி அரசியல் பிரச்னைகளை மனதில் கொண்டே அமெரிக்கா காய்களை நகர்த்துகின்றது.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கடந்த 20.10.2016-ல் அமெரிக்க படைகள் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து திரும்ப பெற வேண்டுமென்றும், ஸ்பார்ட்லி தீவில் அமெரிக்காவின் இராணுவக் கப்பலும், ஆறு இராணுவ தலங்களையும், விரைவாக திரும்ப பெற வேண்டுமென்று எச்சரித்தார் இந்த நிலையில் அமெரிக்கா தன்னுடைய இராணுவத் தளங்களை சிங்கப்பூர் மலேசியாவிற்கு மாற்றலாம் என்று நினைக்கின்றது.
தாய்லாந்தையும் இதற்காக அமெரிக்கா பரிசீலிக்கின்றது. ஆனால், இந்த மூன்று நாடுகளும் சீனாவினுடைய நெருக்கடியினால் தயங்குகின்றது. இதற்காகவே அமெரிக்க தளபதி அட்மிரல் ஹாரி பி ஹாரிஸ் கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் இலங்கையோடு பேசி இராணுவக் கப்பல்கள் இலங்கையில் அருகில் வந்து செல்ல தோதுவான முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவும் திரிகோண மலையில் எண்ணை கிடங்குகள் அமைக்கவும், வேறு காரணத்திற்காக குத்தகை ஒப்பந்தத்தை செய்ததாக தகவல்கள்.
திரிகோணமலை தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்தும் துறைமுகப் பகுதிகளாகும்.
ஏற்கெனவே 1970களில் வாய்ஸ் ஆப் அமெரிக்கா எண்ணெய் கிடங்குகள் அமைக்கவும், அமெரிக்கா திட்டமிட்டபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்ததன் விளைவாக அமெரிக்காவின் நோக்கம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்து மகா சமூத்திரத்தில் இருந்த டீகோகரசியா தீவிலிருந்த அமெரிக்காவில் இருந்த அந்த காலத்தில் எச்சரித்து திரும்ப அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்கா இலங்கை அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்ற நேரத்தில் நிச்சயமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு எடுக்குமா என்பது கேள்விக்குறி? இந்தியாவும், இந்தப் பிரச்னையில் எப்போது போல் தட்டிகளிக்கும். பிரிட்டன் இதைக் குறித்தான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஏற்கெனவே ஈழத்தமிழர்களுக்கு எதிராகதான் முடிவுகளை எடுத்தது.
ஆஸ்திரேலியாவும், கனடாவும் இந்த முறை என்ன அனுகுமுறை எடுக்கபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திரும்பவும் சிங்கள அரசு கால அவகாசம் கேட்டும், உதவிகள் கேட்டும்தான் ஆணையத்தில் தனது வேண்டுகோளை வைத்துள்ளது. திரும்பவும், பழைய திருடி கதவை திறடி என்ற கதையைதான்.
இன்றைக்கு ஈழத்தமிழர்கள் நலனுக்காக செய்ய வேண்டிய கடமை உலகச் சமுதாயத்திற்கு உள்ளது.
அவை
1. இலங்கையில் நடந்த கொடுமைகளை விசாரிக்க சர்வேதேச சுதந்திரமான நம்பகமான விசாரனைதான் அடிப்படையில் உண்மைகளை வெளிப்படுத்தும். இதனால், ஈழத்தில் கடந்த காலத்தில் நடந்த போர்க் குற்றங்களின் உண்மைகளை அறிய முடியும்.
2. தமிழர்களிடம் அபகரித்த நிலங்கள் வீடுகளை சிங்கள மக்களிடமிருந்து திரும்ப பெற்று அதன் உரிமையாளர்களிடம் வழங்குவது.
3. வடக்கு, கிழக்கு மாநிலங்களிலிருந்த இராணுவத்தை திரும்பப் பெறுவது.
4. மாகான கவுன்சிலகளுக்கான அதிகாரங்களை கூடுதலாக்கி நில நிர்வாகம், உள்துறை சார்ந்த காவல் துறை அதிகாரம், மீன்பிடித் தொழில் சம்பந்தமான அதிகாரம் போன்ற முக்கிய அதிகாரங்களை மாகான கவுன்சிலருக்கு வழங்க வேண்டும்.
5. ஈழத்தமிழர்கள் விரும்பும் தீர்வை அறிய பொது வாக்கெடுப்பை ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகளையாவது குறைந்தபட்சம் மேற்கொண்டால்தான் ஈழத்தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கலாம். இதற்கு உலக நாடுகளுடைய ஆதரவு இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நிலையில் ஈழத்தமிழருடைய நலனும், உரிமைகளும் கேள்விக்குறியாக இருப்பது வேதனையான விடயம்.
#ஈழத்தமிழர் 
#இலங்கைபிரச்னை
#ஐநாமனிதஉரிமைஆணையம்
#srilankatamils
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
28.02.2017

இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க

இராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ள 22 இடங்களின் பட்டியல்.!
1. திருப்புல்லாணி (SN 236)
2. பெரியபட்டிணம் (SN 26)
3. ரெகுநாதபுரம் (SN 61/1C)
4. பனைக்குளம் (SN 81/1D)
5. களரி (SN 6)
6. புள்ளந்தை (SN 3)
7. களரி (SN 335/2B) 
8. புத்தேந்தல் (SN 208/1B)
9. திருப்புல்லாணி (SN 24)
10. உத்திரகோசமங்கை (SN 121/122)
11. அச்சடிபிரம்பு (SN 125)
12. பட்டணம்காத்தான் (SN 375)
13. பட்டணம்காத்தான் (SN 150)
14. பழங்குளம் (SN 103/104)
15. சித்தார்கோட்டை (SN 180/1A5)
16. தேவிபட்டினம் (SN 333)
17. பெருவயல் (SN 414)
18. அத்தியூத்து (SN 221/222)
19. ஆற்றங்கரை (SN 113/2B)
20. கீழ் நாகாச்சி (SN 127/6A2)
21. பிரப்பன்வலசை (SN 107/2A)
22. சாத்தக்கோன்வலசை (SN 150/2B).
Source :Vgovindaraj
#ஹைட்ரோகார்பன்
#hydrocarbon
#ramanathapuramdt
#இராமநாதபுரம்மாவட்டம்
#ongc
#KSRadhakrishnanpost

Monday, February 27, 2017

ஈழத்தமிழர்கள்.

இம் முறையாவது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐநா மன்றத்தில் ஏதாவது செய்யுமான்னு சிலர் கேட்கின்றார்கள் .....

எதிர்வரும் ஐ நா மனித உரிமைக் கழகம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா? 

அமைப்புகளும் மக்களும் செய்ய வேண்டியது என்ன? 

சாதகமான முடிவுளைக் கொண்டு வருவதற்கு உண்மையாகவும் திறமையாகவும் வினைத்திறனுடன் செயல்படும் தமிழர் தரப்பினருக்கு  நாம் ஒவ்வொருவரும் எப்படி வலுவூட்டலாம்? 

வெற்றுக் கோஷங்களையும் வீர வசனங்களையும் தவிர்த்து சரியான திசையில் வெற்றியை நோக்கி பயணிப்போமா?

தென் தமிழக மாவட்டங்களின் உரிமைக் குரல்:

தென் தமிழக மாவட்டங்களின் உரிமைக் குரல்:
-------------------------------------
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வறட்சி, தொழில் வளர்ச்சியில் புறக்கணிப்பு, வேலைவாய்ப்பு இல்லாத திண்டாட்டம்,  அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலையில் உள்ளது. தமிழர்கள் வரலாறு, குமரிமுனையில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் அனைத்து திட்டங்களிலும் சென்னையிலே அடைக்கப்படுகின்றன.  

இப்பகுதிகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய நீண்ட கால திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் கிடப்பில் போட்டுள்ளது.

ஆனால், சுற்றுச்சூழலை பாதிக்கும் கூடன்குளம், அணுஉலை தேனியில் நீயூட்ரீனோ, புதுக்கோட்டை நெடுவாசல், கங்கைகொண்டான் குளிர்பான ஆலைகள் என மக்களை பாதிக்கும் ஆலைகள் மட்டும் மிக ஆர்வத்தோடு தென்மாவட்டத்தில் அமைக்கப்படுகின்றது. 33 நதி தீரங்களின் மணல் கொள்ளை, கடற்கரை தாது மணக் கொள்ளை, கிரானைட் கொள்ளை என தென்கத்தில் வளங்கள் சூரையாடப்படுகின்றன. இந்த ஆலைகளால் பெரும் கேடுகள் தான் வருங்காலத்தில் ஏற்படும். தென் தமிழகம் என்ன....சுற்றுச் சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் அமைய குப்பைக்கூடையா?

சேது கால்வாய்த் திட்டம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், குமரி மாவட்ட குளைச்சல் துறைமுக திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றாமல் உள்ளன.

மீன்பிடி துறைமுகங்களான கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், திருநெல்வேலி மாவட்டம் உவரி தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, புன்னைக்காயல், வேம்பாறு, இராமநாதபுர மாவட்டத்தின் வாலிநோக்கம், பாம்பன் - இராமேஸ்வரம் போன்ற மீன்பிடி துறைமுகத் திட்டங்களும் நிறைவேற்றப்படாமலும் உள்ளது.

நாங்குநேரி சிறப்புப் பொருளாதார தொழில் மையம் அமைக்கப்பட்டும், பயன்படுத்தாமல் பூட்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ரயில்வே தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் ரயில் கோட்டத்தில் தான் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை - தென்காசி - செங்கோட்டை - புனலூர் கொள்ளம் அகல ரயில் பாதை ஆமை வேகத்தில் நகர்ந்து நிறைவாகாமல் உள்ளது. மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை நிலுவையிலே நீண்ட காலமாக நிற்கின்றது. திண்டுக்கல் - பழனி சபரிமலை - ரயில் பாதை திட்டமும், பேச்சளவிலே உள்ளன.

மதுரை விமான நிலையமும் மேலும் விரிவாக்கக் கூடிய பணிகளை தொடங்க வேண்டும் 

தென் மாவட்டத்தில் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமான நிலையங்களான கோவில்பட்டி, கயத்தார், செட்டிநாடு, போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்கள் 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததாக இருக்கின்றது. அங்கு விமானப்படை தளங்கள்,விமான பயிற்சி நிலையங்கள், அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கலாம்.

தூத்துக்குடி விமானநிலையமும், பன்னாட்டு விமான நிலையமாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தும், செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாக இருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில், விளையும் பூக்கள் போன்ற பயிர்களை பாதுகாக்க தொழில் பூங்கா அமைக்கப்படவும் இல்லை. அங்கு ரப்பர் தோட்ட தொழிலும் நாளுக்கு நாள் மடிந்துக் கொண்டு வருகிறது.
 
 
நீராதார பிரச்னைகளில் குமரி மாவட்ட நெய்யாறு, திருநெல்வேலி மாவட்ட அடவிநயனார், உள்ளாறு, செண்பகவல்லி அணை உடைப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை திட்டம், முல்லை பெரியாறு, போன்ற நீராதார பிரச்னைகளும் தீர்க்கப்படாமல் உள்ளன.

தாமிரபரணி கருமேனியாறு, இணைப்புத் திட்டம் நிறைவேறாமல், நீண்டகாலமாக பணிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதைக் குறித்து உச்சநீதிமன்றத்தில், 34ஆண்டுகாலமாக போராடி, நான் வாங்கிய தீர்ப்பின் அடிப்படையில், இந்த நதி பிரச்னைகள் தீர்வு ஏற்படுமா என்பது கேள்வி குறியாக உள்ளது. கேரளாவில் உள்ள நதி படுகையான அச்சங்கோவில் - பம்பை ஆற்றுப்படுகைகள் தமிழகத்தில் வைப்பாரோடு இணைக்க வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசு திட்டம் 1975 ஒப்புதல் பெற்றும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இராமநாதபுர மீனவர்களுக்கு ஆதாரமாக விளங்குகின்ற கச்சத்தீவு, அங்குள்ள மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கடலில் தாக்கப்படுவதால் நித்தமும் நடக்கின்ற நிலை.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள தமிழகத்திற்கு சொந்தமான கண்ணகி கோட்டத்தை கேரளா அரசு ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுத்தளம் 

நெல்லை மாவட்டத்தில் மகேந்திர கிரியில் இந்திய விண்வெளி மட்டும் திரவ எரிவாயு, தொழிற்நுட்ப மையம் அமைக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும். 

ஐ.ஐ.டி. , ஐ. ஐ.எம்., போன்ற உயர்நிலை நிலையங்கள் தென்மாவட்டங்களில் அவசியம் நிலவ வேண்டும்.

சமனர்கள் அமைத்த கழுகுமலை வெட்டுவான் கோவில் வரலாற்று ரீதியாக பராமரிக்க வேண்டும்.

தூத்துக்குடி இராமேஸ்வரத்திலிருந்து கப்பல் போக்குவரத்தை இலங்கைக்கும் அந்தமானுக்கும் துவக்க வேண்டும்.

திருநெல்வேலி அருகே உள்ளஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கை 10 ஆண்டுகால மத்திய அரசின் பரிசீலனையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை உடனே வெளியிட வேண்டும். அந்த பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மதுரை அருசே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழராய்ச்சி பணிகள் தொய்வில்லாமல் நடக்க வேண்டும்.

மேற்கு தொடர்ச்சிமலையின் வனபகுதியில் பாதுகாக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றப்பட வேண்டும். கஸ்தூரி ரங்கன், காட்கில் அறிக்கையில் பணிந்துரைக்கப்பட்ட ஏற்புடைய பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

தென் மாவட்டங்களில் குடிசைத் தொழிலாக விளங்கும் தீப்பெட்டி உற்பத்தி, சிவகாசி பட்டாசு தொழில், அச்சுத் தொழில, திண்டுக்கலில் பூட்டு, பருத்தி அரைவை ஆலைகள் எல்லாம் நசிந்து விட்டன.

சுற்றுலாத்தலங்களாக கொடைக்கானல், குற்றலாம், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, கிறிஸ்தவர்கள் வணங்கக்கூடிய புனித சவேரியர் உலாவியம், மணப்பாடு, முண்டன்துறை - களக்காடு, புலிகள் சரணாலயம், திருச்செந்தூர்,  போன்ற இடங்களில் சுற்றுலா வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில், கிராஃபைட் தொழிற்சாலை அமைந்துவிடும் என்று ப. சிதம்பரம் அமைச்சராக இருந்த போது உறுதியளித்தார். அந்த உறுதியும் இன்று காற்றில் பறந்துவிட்டது. 

இவ்வாறு பலத் திட்டங்கள் என நீண்ட பட்டியல் இடலாம்.

எதை எடுத்தாலும் சென்னை என்றே தமிழகத்தின் அடையாளம் என்று நினைத்தால், வளர்ச்சி ஒரு இடத்திலேயேதான் தங்கிவிடும்.
எனவே, தென்மாவட்டங்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு, பெருமளவு நிதி உதவியோடு சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட வேண்டும். தென் மாவட்டங்களுக்கு வளர்ச்சிக்கான வளர்ச்சி கவுன்சிலும் நிறுவ வேண்டும். இதைப் போல் மஹாராஷ்டிராவில் விதர்பா, ஒடிசாவில் சில பகுதிகள்,  பீகார், இந்தியாவில் கிழக்கு மகானங்களான திரிபுரா, மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கப்பட்டுள்ளன. அதை போன்றே தென் மாவட்டங்களுக்கும் மத்திய - மாநில அரசுகள் வழங்க வேண்டிய பொறுப்புகள் உள்ளன.

புறக்கணித்தால் ஆந்திரத்தில் திரும்பவும் தெலுங்கான கோஷம் எழுந்து தனி மாநிலமாக அமைந்துவிட்டதை போல தென்தமிழகம் என்ற தனிமாநில குரல் ஒலிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

சென்னை மட்டும் தமிழகத்தின் அடையாளம் இல்லை. சென்னை என்பது சென்னப்ப நாயக்கர் இடமிருந்து பெற்ற பூமிதான். தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மதுரை தான். தமிழகத்தின் அடையாளம் என்று கருதப்படுபவை தென் குமரி, தமிழ் வளர்த்த, பொதிகை, பொருணை, அடங்கிய நெல்லை பூமி, வேகாத வெய்யிலை தரும் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள், கலைகள் வளர்த்த தஞ்சை, திருச்சி , கோவையும் தான் பூர்வீக அடையாளங்களான தமிழ் மண்ணாகும். 

இந்தக் கருத்துக்களை பரிசீலணைக்காக பதிவு செய்கின்றேன். விருப்பு வெறுப்பு இல்லாமல் சிந்தித்து பாருங்கள் வேறு எந்த நோக்கமும் கிடையாது. புறக்கணிக்கும் போது இயற்கையாக உரிமைக்குரல் கேட்டத்தான் செய்யும். இதை யாராலும் தடுக்க முடியாது. இயற்கை நீதி என்பது ஒன்று உண்டு.
சமன்பாடுகள் முறையாக இருக்க வேண்டும். விருப்பத்திற்கு ஏற்றவாறு புறக்கணிப்பதோ சீராட்டுவது ஜனநாயகத்தை மீறிய நெறிமுறைகள் ஆகும்.

 #tamilnadu
#தென்தமிழகம்
 #ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
27.02.2017

Sunday, February 26, 2017

ஹைட்ரோகார்பன்

ஹைட்ரோ கார்பன் பெயரில் ஷேல் கேஸ் திட்டம்: (பாதிக்கும் திட்டம்  பற்றிய குறிப்புகள்)
-------------------------------------
விவசாயம்,நீர் வளம் பாதிக்கும்
திட்டமான ஹைட்ரோகார்பன் ; வடக்கே புதுச்சேரி, தெற்கே ராமநாதபுரம், மேற்கே தஞ்சாவூர், கிழக்கே காரைக்காலை எல்லையாக கொண்டு ள்ள சுமார் 27,850 கிலோமீட்டர் பரப்பளவில் ஏராளமான ஹைட் ரோ கார்பன் இருக்கிறது அதனால் தான் தென்னிந்தியாவை   ஹோம் ஆஃப் ஹைட்ரோ கார்பன் என்று சொல்கிறார்கள்.
இதற்காகத்தான் அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லி யன் டன் எண்ணெய் 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயு வைத் தோண்டியெடுக்கும் ஒப்பந்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது அதனால் தான்  கேஸ் மற்றும் எண்ணை எடுக்க மத்திய அரசு விரைவாக தனியார் நிறுவனங்கள் மூலமாக முனைந்துள்ளது.இதில் ஒன்று நெடுவயல் ஹைட்ரோ கார்பன் திட்டம்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது.இதற்காக இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிப்படுகையில் 11 இடங்களும், ராஜ ஸ்தானில் கோமதி நதிப்படுகையில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதாவரி ப்படுகையில் 4 இடங்களிலும் குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிப்படுகையில்  5 இடங்கள்  மற்றும் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிப்படுகையில் 4 இட ங்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில்உள்ளது.

ஹைட்ரோகார்பன் மீத்தேன் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். பெயரே சொல்வது போல ஹைட்ரஜனும் கார்பனும் சேர்வது ஹைட்ரோ கார்பன். அது ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுவும் சேர்ந்த மீத்தேனாகவும் (CH4) இருக்கலாம் அல்லது ஈத்தேனாகவோ புரேப்பேனாகவோ கூட இருக்கலாம். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெயரும் பயன்பாடும் மாறுகிறது.


ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் குத்தாலம், சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி, அடியக்காமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூர், ராமநாதபுரம், பெரிய நரிமனம், சீர்காழி அருகே உள்ள காளி ஆகிய இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். இதில், காவிரி படுகையை மையப்படுத்தி, இரண்டு மண்டலங்கள், பெயரிடப்படாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், முதல் மண்டலம், 948 சதுர கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. பெயரிடப்படாத இரண்டாவது மண்டலத்தின் எல்லை, ஆயிரத்து 542 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ஆரம்பிக்கும் இந்த புள்ளியானது, வடக்கு தெற்காக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை தாண்டி முடிவடைகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள, பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலத்தின் வரைபடத்தில், நரிமனம், திருவாரூர், கீழ்வேளூர், அடியக்காமங்கலம், பள்ளிவார்மங்கலம், விஜயாபுரம், கமலாபுரம், நன்னிலம், கூத்தாநல்லூர், பூண்டி, மாத்தூர், கோவில்களப்பால், திருக்காலூர், பெரியகுடி, துளசபட்டினம் ஆகியவையும், தஞ்சாவூர் காவிரி துணை படுகை பகுதிகள் என குறிப்பிடப்பட்டு, அதில், வடதெரு, நெடுவாசல் மற்றும் கிருஷ்ணாபுரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஷேல் கேஸ் எடுக்கப்போவதாக பட்டியலிப்பட்டுள்ள பகுதிகளின் மொத்தப் பரப்பளவு (ஆதார ஆவணங்களின்படி) 3 லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர். 40க்கு 40 என வைத்தால், சராசரியாக 150 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை தன்னகத்தே கொண்டது, முழுமையான பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலமாகும். இந்த இரண்டாவது பகுதியில், ஷேல் கேஸ் எடுக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள், வருகிற 2019ஆம் ஆண்டோடு காலவதியாகிவிடும். இதன் காரணமாக, ஹைட்ரோகார்பன் என்ற பொதுப்பெயரில், கச்சா எண்ணெய் எடுப்பதாக கூறி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டாவது மண்டலத்தைப் போன்றே, முதல் மண்டலத்திற்கான பெயர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது மண்டலத்தில் இடம்பெற்ற பகுதிகளை தவிர்த்து, பெயரிடப்படாத முதல் மண்டலத்தில், ஷேல் கேஸ் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 இடங்களும், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களும், திருவாரூர் மாவட்டம் ஒரு இடமும் இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஷேல் கேஸ் எடுக்கும் உரிமமும், புதிய தலைமுறைக்கு கிடைத்திற்கும் ஆவணத்தின்படி, வருகிற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது.

ஷேல் கேஸ் எடுக்க வெளிப்படையாக 8 இடங்களின் பெயர்கள் தெரியவரும் நிலையில், நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்கள், பெயர் வெளியிடப்படாமலேயே, ஷேல் கேஸ் எடுப்பதற்காக, இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 61 இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்பட இருப்பது, அதற்கான ஆய்வு பணிகள், அடுத்தடுத்த கட்டங்களில், விரைந்து அனுமதி.வழங்கப்பட்ட
தொடங்கப்படலாம்.
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பனைத் தோண்டியெடுக்க அனுமதியைப் பெற்றிருக்கும் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனமானது கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த ஜி.மல்லிகார்ஜூனப்பா
வுடையது. கர்நாடகாவில் பெரிய தொழிலதிபர்.ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்து பிறகு பாஜகவின் சார்பில் மக்களவை உறுப்பினர் ஆனார். மல்லிகார்ஜுனப்பாவின் மகன் ஜி.எம்.சித்தேஸ்வரா 2016 ஆம் ஆண்டு வரைக்கும் மோடியின் மத்திய அமைச்சரவையில் கனரக தொழில்துறை இணையமைச்சராக இருந்தார். இவரது சகோதரர்கள்தான் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல.கணேசன் நெடுவாசல்காரர்களைப் பார்த்து ‘தியாகம் செய்’ என்று சொல்வதை இதனோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டும்.
#ஹைட்ரோகார்பன்


குமரி மாவட்டம் நெய்யாறு நீர் பங்கீடு

குமரி மாவட்டம் நெய்யாறு நீர் பங்கீடு விவகாரம்:
----------------------------------
2004ல் கேரள அரசு நெய்யாறு நீர் திறப்பை நிறத்தியதை எதிர்த்து, தமிழக அரசின் சார்ப்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ரஞ்ஜன் கோகோய் மற்றும் நவீன்சின்ஹா அடங்கிய அமர்வு, இரு மாநில அரசுகளும், இரண்டு வாரங்களுக்குள் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநில அரசு, 2004ல் திடீரென நீர் திறப்பை நிறுத்தியது சட்டப்படி தவறானது எனவும், தமிழக அரசின் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. கேரள அரசு இதை மறுத்துள்ளது. இந்நிலையில், இரு மாநில அரசுகளும், தங்கள் தரப்பு வாதம் குறித்த ஆதாரங்களை சமர்பிக்கும்படி சுப்ரீம் கோர்ட் 24/2/17ல் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த காமராஜரும், கேரள முதல்வராக இருந்த சங்கரும் 1963 காலக் கட்டத்தில் இந்த அணையை திறந்து வைத்தனர். தமிழக அரசு இதற்கான கட்டுமானத்திற்கு உரிய தொகையை வழங்கியது. இந்த அனையை குறித்தான என்னுடைய கருத்துக்கள் தினமணி கட்டுரையில் வெளிவந்தது அதையும் இணைத்துள்ளேன்.

நெருக்கடியில் நெய்யாறு:
.........................................
கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை – வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளும், நியாயங்களும் மறுக்கப்படுகின்றன. இப்போது குமரி மாவட்டத்தின் நெய்யாறு பிரச்சினையிலும் கேரளம், தமிழகத்தின் உரிமைகளை மறுக்கக்கூடிய வகையில் நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்ககோடு பகுதியில் பாசனம் பெறக்கூடிய வகையில் 84.75 அடி கொண்ட நெய்யாறு அணை அமைக்கப்பட்டு அன்றைய கேரள முதலமைச்சர் சங்கரின் முன்னிலையில் அன்றைய தமிழக முதலமைச்சர் காமராஜர் 1963இல் சுந்தரிமுக்கு என்ற பகுதியில் நெய்யாறு இடதுகரை கால்வாயைத் திறந்து வைத்தார். அன்று குமரி மாவட்டத்துக்கு தண்ணீர்விட கேரள அரசு சம்மதித்தது. இந்த நெய்யாறு அணைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் களியல் அணைமுகம், கருப்பையாறு ஆகிய நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலிருந்துதான் தண்ணீர் வருகிறது. இந்த அணைக்கு 40 சதவிகித தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வருகிறது.

1963இல் பாறசாலை அருகே தமிழகப் பொதுப்பணித் துறையின் சார்பில் இரு கால்வாய்கள் அமைக்கப்பட்டு நெய்யாறு இடதுகரை கால்வாய் வழியாக குமரி மாவட்டத்துக்கும், வலதுகரை கால்வாய் வழியாக கேரளத்தின் பாறசாலை, நெய்யாற்றங்கரை என்ற பகுதிகளுக்கும் பாசனத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டது. 1963இல் அன்றைய முதல் அமைச்சர்களாக இருந்த காமராஜரும், சங்கரும் இரு மாநிலங்களில் கிடைக்கிற தண்ணீரைக் கொண்டு இடதுகரை மற்றும் வலதுகரை கால்வாய்கள் மூலம் அந்தந்த மாநிலங்களுக்குப் பாசனத்திற்காக நெய்யாற்று நீரைப் பயன்படுத்தலாம் என்று இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டனர்.

இடதுகரை கால்வாய் மூலமாக குமரி மாவட்டத்தில் அண்டுக்கோடு, இடைக்கோடு, பாக்கோடு, விரிகோடு, ஏழுதேசம், கொல்லங்ககோடு உள்ளிட்ட பகுதிகளில் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இதன் மூலம் நீர் வந்தது. அதுமட்டுமில்லாமல் 200க்கும் மேற்பட்ட பாசனக் கால்வாய்களும் இதன்மூலம் ஆயக்கட்டுக்கு வேண்டிய தண்ணீரைப் பெற்றது. நிலத்தடி நீரால் கிணறுகளிலும் தண்ணீர் ஊற்று வந்தது. இவ்வாறு நியாயமாக நெய்யாற்றின் மூலம் தமிழகம் பெற்று வந்த உரிமை 2003ஆம் ஆண்டு கேரளத்தை ஏ.கே.அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் அரசு வேறு மாநிலங்களுக்கு தண்ணீர் தர வேண்டுமெனில் கேரள சட்டப் பேரவையின் ஒப்புதலோடுதான் தர முடியும் என்ற விநோதமான சட்டத்தைக் கொண்டு வந்தததால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் வழியே பாயும் ஆறுகள் பிரச்சினை குறித்து எந்த மாநிலத்திலும் இதுமாதிரியான சட்டம் இல்லை. கேரளம் மட்டும் இந்திய ஒருமைப்பாட்டை சற்றும் நினையாமல் இதுபோன்ற வேடிக்கையான சட்டத்தைக் கொண்டு வந்தது.

கடந்த காலங்களில் 182 கன அடி தண்ணீர் நெய்யாற்றில் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் அப்பகுதிக்குப் போதுமானதாக இருந்தது. இதுகுறித்து ஓர் ஒப்பந்தம் ஏற்பட 1971இல் தமிழக அரசு ஓரு வரைவு ஒப்பந்தத்தை கேரளத்துக்கு அனுப்பியது. அந்த ஒப்பந்தத்தில் இடதுகரை கால்வாய் தண்ணீர் திறந்து விடும் அளவு எவ்வளவு? எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும்? என்பது குறித்த வரைவு ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. இந்நிலையில் அந்தோனி முதல்வராக இருந்தபோது கேரள அரசு பாசனங்கள் மற்றும் தண்ணீர் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது நெய்யாற்றைப் பிரச்சினைக்குள்ளாக்கி விட்டது. அதன் பின்பு, நெய்யாற்றின் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது.

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், தமிழகம் நெய்யாற்றில் நீர் பெற வேண்டுமெனில் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று அர்த்தமற்ற முறையில் கூறினார். இந்தப் பிரச்சினை தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. தமிழக அரசும் இதற்கு ஏனோ தானோ என்று விளக்கம் கொடுத்துவிட்டு உரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கவில்லை. இதற்கு மத்தியில் 14.11.2008 அன்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் நெய்யாறு பன்மாநில நதி இல்லை என்று பொய்யான செய்தியைப் பத்திரிகையாளர்களிடம் கூறினார். ஆனால் அதே பிரேமச்சந்திரன் கடந்த காலங்களில் நெய்யாறு இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட நதி எள்று குறிப்பிட்டுள்ளார். நெய்யாறு ஒரு பன்மாநில நதி என்பது கேரள அரசு 1958இல் வெளியிட்டுள்ள கேரளாவில் நீர் ஆதாரங்கள் என்ற ஆவணத்தில் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க முன்னுக்குப்பின் முரணாக கேரளம் பேசுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நெய்யாறு இடதுகரைக் கால்வாய் மூலம் குமரி மாவட்டத்தில் இருபோகம் பயிர் செய்யப்பட்டது. வாழையும் நெல்லும் விளைந்தன. கடந்த மூன்று வருடங்களாக விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. இடதுவரைக் கால்வாயில் புதர் மண்டியுள்ளது. விவசாயிகள் தற்போது மரச்சீனியையும், வாழையையும் பயிரிடுகின்றனர். விவசாயம் பொய்த்ததனால் விளவங்கோடிலிருந்து கேரளத்துக்குக் கட்டட வேலைக்குப் பலர் சென்றுவிட்டனர். தொடர்ந்து நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீர் வராததால் குமரி மாவட்டம் வறண்டு விட்டது. பல போராட்டங்கள் நடத்தியும் விடிவுகாலம் வதவில்லை. ஆனால் நெய்யாறு வலதுகரை கால்வாய் வழியாக கேரளத்துக்குச் செல்லும் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. வீணாகும் நீரைக்கூட தமிழகத்துக்கு வழங்க கேரளத்து விருப்பம் இல்லை. அனைத்து நதி நீரையும் கடலுக்குச் செல்ல அனுமதிப்போம். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டோம் என்ற பிடிவாத உணர்வுதான் அங்கு உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீர்வளம் குறைவு. அண்டை மாநிலங்களிலிருந்து வரும் நதி நீரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தின் உரிமைகள் காவிரியிலும், பாலாறிலும், முல்லைப் பெரியாறிலும் மறுக்கப்பட்டது. தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். கேரளத்தில் அரசாங்கள் மாறினாலும் நடவடிக்கைகள் மாறவில்லை. தமிழகத்துக்கு விரோதமாக நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து விரோதம் காட்டி வருவது அரசியல் நாகரிகமற்ற பண்பாடாகும். ஒருமைப்பாடு பேசுவோர் இதுபற்றி கவலைப்படுவது இல்லை. இரண்டு நாள்களுக்கு முன்பு ஆர்.சாம்பசிவ ராவ் குழு முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாகும்.

இவ்விதம் ஒவ்வொரு தளத்திலும் தமிழக உரிமைகள் பறிபோகின்றன. கேரளம் அரிசி, பருப்பு, பால், மீன், கருவாடு, வைக்கோல், மின்சாரம் போன்ற பல அத்தியாவசியப் பொருள்களையும் நம்மிடம் பெற்றுக் கொண்டு நமது உரிமைகளை மறுத்து தமிழகத்துக்கு விரோதமாக கேரளம் நடந்து கொள்கிறது. பத்மநாபபுரம் கோட்டையையும், குமரி முனையிலும், சென்னையிலும் உள்ள கேரள அரசின் சொத்துக்களையும் தமிழகம் எவ்வளவு கண்காணித்து பாதுகாக்கிறது என்ற நன்றி உணர்வுகூட கேரள ஆளும் தரப்பினருக்கு வரவில்லையே! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள உறவுகளைப் பலப்படுத்துவது இப்படித்தானா? இதையெல்லாம் பார்க்கும்போது முண்டாசுக்கவி பாரதியின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

“விதியே விதியே தமிழ்ச்சாதியை
என்செய நினைத்தாய்?”

– தினமணி, 06.08.2008.
#குமரிமாவட்டம் #நெய்யாறு
#neyaru
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
26.02.2017

Saturday, February 25, 2017

பொது வாழ்வு.

Don't miss that orange shirt guy's finger ring :D -thanks,@ Sujatha Ramachandran (The Hindu).
ஆங்கில இந்து ஏட்டின் சிறப்பு செய்தியாளர் சுஜாதா ராமசந்திரன் அவர்கள் தன்னுடைய முகநூலில் பதிவு செய்த படத்தை பாரீர்.
இதுதான் இன்றைய பொது வாழ்வு.
கையில் பெரிய பெரிய மோதிரங்கள், கழுத்தில் இரண்டடிக்கான தங்க வட சங்கிலிகள், கைகளில் காப்புகள் போடுவதைபோல பளபளக்கும் தங்க பிரேசிலேட் இது தான்;இன்றைய அரசியலுக்கு தேவையான அடிப்படை தகுதிகளாகும். 
கற்றல், புரிதல், கொள்கை, இலட்சியம், நேர்மையான களப்பணி, ஒழுக்கம் இதெல்லாம் தேவையில்லை. குடிக்க மது பாட்டிலும், தங்க ஆபரணங்களும், வேறு சிற்றின்பங்களும் இன்றைக்கு அரசியலுக்கு அடிப்படையாகிவிட்டது.

தொலைக்காட்சிதொடர்கள்

மக்களை முட்டாள் ஆக்கும் தொலைக்காட்சிதொடர்களை பார்ப்பதற்கு அபத்தமாக இருக்கின்றது. அதுவும் சன் தொலைக்காட்சியில் இந்த தொடர்களில் எதார்த்தம் இல்லாமல் உள்ளது.
நேற்றைக்கு ஓய்வுப் பெற்ற உயர்நீதிபதி வீட்டிற்கு சென்றபோது,அவர் தலையில் அடித்துக் கொண்டு இப்படியும் தொலைக்காட்சியின் தொடர்களா..என வருத்தமாக சொன்னார்.வில்லன், வில்லிகள் தான் கதாநாயக பாத்திரத்தில் ஏற்று உள்ளது போல் நகர்வு உள்ளது.
பிள்ளையே அப்பனை கொல்வதுபோன்ற காட்சிகள்.கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கும் இத்தொடரகளில் முக்கியத்துவமே கிடையாது.
மெகா சீரியல் பார்க்கிற எல்லோருக்கும் தெரியும் ; வில்லனோ-வில்லியோதான் ஜெயிச்சுக்கிட்டே இருப்பார் ; இத்தொடர்கள் தினத்தந்தி சிந்துபாத் கதையைப் போல முடிவில்லாமல் உள்ளது.
தங்கள் வசதிக்கும், விளம்பரம் மூலம் பண கொழிக்க அபத்தமான நாடகங்கள் நாட்டுககு தேவையா? நல்ல, தரமான தொடர்களாக இல்லையே?
இதையும் தமிழகம் கொண்டாடுகிறது.

Friday, February 24, 2017

விவசாயிகள் தற்கொலைகள்

சுட்ட வார்த்தைகள்....
எமை சுட்ட வார்த்தைகள்
ஒவ்வொரு வரியை வாசிக்கும் போதும் வலியை உணர்ந்தேன்..

நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?

மீடியா ஏன் இதப் பத்தி பேசல... 

சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.

ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.

சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க

போன 20 வருசத்தில 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க

1995-10,720
1996- 13,729
1997-13,622
1998- 16,015
1999- 16,082
2000- 16,603
2001- 16,415
2002- 17,971
2003- 17,164
2004- 18,241
2005- 17,131
2006- 17,060
2007- 16,632
2008- 16,796
2009- 17,368
2010- 15,964
2011- 14,027
2012- 13,754
2013- 11,744
2014- 12,141
2015(Jan-April)- 1,203

இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?

 தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, கவலையின் காரணமாக 200பேர் வரை மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இந்த அசாதாரண நிலை 2012க்கு பின் ஏற்பட்டது. 1972லிருந்து 1992 வரை 75 விவசாயிகளுக்கு மேல் போராட்டத்தில் காவல் துறையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட போராட்ட களங்கள் 1960 கால கட்டங்களிலே துவங்கிவிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர் காலத்தில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் போராடிய கடம்பூர் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திரப் போராட்டட காலத்தில் வங்கத்தில் அவுரி விவசாயிகள், கேரளத்தில் மாப்பிளா என்ற விவசாயிகள் போராட்டம் வரலாற்றில் இன்றைக்கும் நினைவில் இருக்கின்ற நினைவுகள் ஆகும்.

இந்த இரு போராட்டங்களும் உத்தமர் காந்திக்கு மேலும் போராடும் வேகத்தை வழங்கியது.
இதுவரை இந்தியாவில் 5 இலட்சம் விவசாயிகள் தற்கொலையாலும், மனம்உடைந்தும் மறைந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள்கூட சொல்கின்றன.

விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....
#விவசாயிகள்தற்கொலை
#விவசாயம் 
#agriculture
#farmerssuicides
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
24.02.2017

ஆளுநர் சீசரின் மனைவிக்கு ஒப்ப நடந்துகொள்ள வேண்டும்

13/2/2017 ல் எழுதப்பட்டது ...


ஆளுநர் சீசரின் மனைவிக்கு ஒப்ப நடந்துகொள்ள வேண்டும்

வழக்கறிஞர் கே.எஸ்இராதாகிருஷ்ணன்

----------------------------------------------

ஜெயலலிதா மறைவிற்கு பின் .தி.மு.பிளவுப்பட்டு இரண்டுமுகாம்களாக பிரிந்து சட்ட மன்றநாடாளுமன்றஉறுப்பினர்களும் இரண்டு அணிக்கும் ஆதரவுதெரிவித்துள்ளனர்ஒரு அணி தன்னுடைய ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்களை 120 பேருக்கு மேல் கூவத்தூரில் உள்ளவிடுதியில் தங்க வைத்துள்ளனர்இம்மாதிரி நடவடிக்கைகள்இந்தியாவில் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது.

ஆந்திரத்தில் 1984-ல் அன்றைய முதல்வர் என்.டிராமாராவ்அரசு கலைக்கப்பட்டு அன்றைய மத்திய இந்திராகாந்தி அரசுபாஸ்கர் ராவை முதலமைச்சராக்கியதை கண்டித்துஎன்.டி.ஆரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மைசூரில்மறைமுகமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்

தமிழகத்தில் 1988-ல் .தி.மு.ஜாஜெ அணி என்றுபிளவுப்பட்ட பொழுது ஜெ அணி எம்.எல்.ஏக்கள் நட்சத்திரஹோட்டலில் ஊர் சுற்றினர்

ஆந்திரத்தில் திரும்பவும் என்.டிமறைவிற்கு பின் 1995-ல்சந்திரபாபு நாயுடு என்.டி.ராவின் துணைவியார் லெட்சுமிசிவபாரதிக்கு பிரச்னை ஏற்பட்டும் ஐதராபாத்தில் நட்சத்திரஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

குஜராத்தில் 1995-ல் சங்கர்சிங் வேகளா கேசுபாய் படேலுக்குஏற்பட்ட பிரச்னையில் 48 சட்டமன்ற உறுப்பினர்களை வேகளாசுற்றுலாவிற்கு அழைத்து சென்று பாதுகாத்தார்.

கோவாவில் 2005-ல் பி.ஜே.பிஆதரவு 12 சட்டமன்றஉறுப்பினர்களை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று காவல்காத்தனர்

ஜார்கண்டில் 2006-ல் அர்ஜணமுண்டா 40 பா..ஆதரவுஎம்.எல்.ஏக்களை இராஜாஸ்தானுக்கு அழைத்துச் சென்றார்.

2007-ல் அருணாச்சல பிரதேசத்தில் 20 சட்டமன்றஉறுப்பினர்கள் கடத்தப்பட்டனர்.

உத்திரகாண்டில் 2016-ல் 27 எம்.எல்.சட்டமன்றஉறுப்பினர்களை பி.ஜே.பிஜெய்பூருக்கு அழைத்துச் சென்றது.

கர்நாடகத்தில் 2014-ல் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பம்பாயிக்குஅழைத்துச் செல்லப்பட்டனர்.

இப்படியாக ஒரு கட்சி பிளவுப்பட்டால் ஆட்சி அமைக்கவிரும்புவர்கள் தங்களுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை கண்தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்வது இந்தியாவில்வாடிக்கையாகி விட்டது.

இதற்கு காரணம் என்ன?

கவர்னர் என்ன முடிவு எடுக்க போகிறாரோ... சட்டமன்றத்தில்தன்னுடைய பலத்தைக் காட்டும் வரை தன்னுடையஆதரவாளர்களை ஒருமுகமாக பாதுகாக்க வேண்டியநெருக்கடி இருப்பதால் இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர்களைதன்னுடைய கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துக்கொள்வது என்ற நிலைஇது எப்படி சரியாதவறாஎன்பதுவிவாதத்திற்கு உரிய விடையம்.

தமிழகத்தில் பொறுத்தவரை இன்றைக்கு ராஜ்பவனை நோக்கிதமிழக ஆளுநர் என்ன செய்ய போகிறார்என்றுதான்அனைவருடைய எதிர்ப்பார்ப்பும் இருக்கிறது.

தமிழக கவர்னர் வாய்மூடி மௌனியாக இருக்கிறாரே... தாமதபடுத்துகிறாரே... என்ற விமர்சனமும் எழுந்து உள்ளது

இன்றைக்கு ஆளுநர் செய்ய வேண்டிய அரசியல் சாசனகடமைகள் என்று எடுத்துக்கொண்டால்

ஆளுநர் முடிவுகள் ......

சசிகலாவைத் ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்துபெரும்பான்மையை சட்டமன்றத்தில நிரூபிக்கக் காலக்கெடுவழங்கலாம்.

அல்லது

ராஜினாமா செய்த பன்னீரை பதவியில் நீடிக்க செய்து முதல்வர்என்ற வகையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவகாசம்கொடுக்கலாம்

அல்லது 

சசிகலாவுக்குப் பதவிப் ஏற்பதில் சிக்கல்கள் இருந்தால் வேறுஒருவரை தேர்ந்தெடுக்கச் சொல்லி ஆளுங்கட்சிக்குஅறிவுறுத்தலாம்.

அல்லது

எதிர்க்கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது.

அல்லது

குழப்பமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில்சட்டமன்றத்தை முடக்க தமிழக ஆளுநர் பரிந்துரைசெய்யலாம்

அதற்கு நாடாளுமன்ற இரு அவைகளும் 60 நாட்களுக்குள்ஒப்புதலும் பெற வேண்டும்தமிழகத்தில் உள்ள சூழலில்ஆளுநர் பிரிவு 164 (1)-ன் படி பன்னீர்செல்வம் முதல்வர்பதவியிலிருந்து விளகிய பின் சசிகலாவை அழைக்கலாம்முதல்வரை நியமிக்கும் அதிகாரம்ஆளுநர் விருப்பம்திருப்தியை பொறுத்ததாகும்

கபூர் வழக்கு - ஜெயலலிதாவின் வழக்கின் தீர்ப்பின் படிசசிகலா பொறுப்பு எடுத்து தன்னுடைய வழக்கில் குற்றவாளிஎன்று தீர்ப்பு கிடைத்தால் அவர் பதவி விலகியாக வேண்டும்.

பன்னீர் விருப்பம் இல்லாமல் நெருக்கடியில் ராஜினாமா கடிதம்வாங்கினர் என்று கூறிகிறார் அவரே இடைக்கால அரசின்முதல்வர்அவரும் முதல்வராக நீடிக்க விரும்புகிறார்இடைக்கால அரசாங்கமும் நீண்ட நாள் நீடிக்க முடியாதுஎன்று என்.டி.ஆர் வழக்கில் தீர்ப்பு உள்ளது.

இப்படியான நிலையில் ஆளுநர் தன் விருப்ப அதிகாரத்தைஅரசியல் அமைப்பு சட்டத்திற்குள் தான் அணுக வேண்டும்காலமும் தாழ்த்தக்கூடாதுஎஸ்.ஆர்பொம்மை வழக்கில்தெளிவாக ஆளுநருக்கும்மத்திய அரசுக்கும்குடியரசுதலைவருக்கும் நெறிமுறைகளை வைத்து தந்துள்ளது.

ராஜ்பவன் என்று கருதாமல் நேர்மையாகநடக்க வேண்டும்என்று அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளதுஎனவேஉடனடியாக கவர்னர் செயல்பட வேண்டிய நேரம்மௌனம்காக்காமல் உரிய நடவடிக்கைகளை ராஜ்பவன் இறங்கவேண்டும்.

இரு மாநிலத்திற்கும் ஒரு கவர்னர் எனவிமான பயனத்தில்வந்து சேர்கிற தொலைவில் இருந்தும்வரமுடியாமலும் , வந்தபிறகும் தெளிவு இல்லாதநிலைமை.உஸ்மானியபல்கலைகழத்தில் சட்டம் பயின்றவரானவித்யாசாகர்ராவ்;

இதுவரை அட்டானி ஜெனரலிடம் கருத்தும்கேட்கவில்லையாம்.

சட்டத்தில் பிஎச்டி பெற்றவர் முன்னாள் குடியரசு தலைவர்டாக்டர் சங்கர் தயாள்சர்மா1996ல் குழப்பத்தில்இரண்டுவாரங்களில்இரண்டு பிரதமருக்கு பதவிபிரமானம்செய்து வைத்தார்.

இப்படியெல்லாம் இருக்கின்ற நிலையில் கடந்த காலங்களில்இவ்வாறான பிரச்னை எப்படி கையாளப்பட்டது என்பது சிலநிகழ்வுகளை இங்கு சொல்ல வேண்டிய அவசியமும் உள்ளது

நாட்டின் விடுலைக்கு பின்,சென்னை இராஜதானியில 1952ஆம்ஆண்டுகுமாரசாமி ராஜா தலைமையில் இருந்த 5பேர்அமைச்சரவை கவிழ்க்கப்பட்டது.மாநிலங்களில் ஆட்சிஅமைப்பது தொடர்பாக இதே போன்று முதன் முதலில்அரசியல் குழப்பங்கள் சென்னை மாகாணத்தில் நிகழ்ந்தது.

1952 ஆம் ஆண்டு தமிழகத்தை உள்ளடக்கிய அப்போதையசென்னை மாகாணத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில்மொத்தமுள்ள 375 தொகுதிகளில் 152 ல் மட்டுமே ஆளும்காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதுஅப்போதுகம்யூனிஸ்ட்கள்பிற கட்சிகளுடனும்சுயேச்சைகளுடனும் இணைந்து ஆட்சிஅமைக்க அழைக்க வேண்டுமென்று ஆளுநர் பிரகாசத்தைநிர்பந்தம் செய்தனர்.

யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்ற குழப்பம்ஆளுநருக்கு ஏற்பட்டது.

எவரும் எதிர்பாராத நிலையில் நிலையான ஆட்சியை வழங்கராஜாஜி ஒருவரால் தான் முடியும் என்று நம்பிய ஆளுநர்ராஜாஜியை ஆட்சியமைக்க அழைத்தார்.

அப்போது தான் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்துபின்னர் உள்துறை அமைச்சர் என்கிற பெரும் பொறுப்பையும்ராஜாஜி வகித்து முடித்திருந்தார்.

இதனால் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்கராஜாஜி தயங்கினார்தேர்தலில் நின்று வெற்றி பெறாத ஒருவரை எப்படி பதவி ஏற்க அழைக்கலாம் என்கிற கேள்விகள்எழுந்தனஇலக்கிய கர்த்தா நிலையில் ராஜாஜியை ஆளுநர்மேலவை உறுப்பினராக நியமித்து முதல்வரனார்.

கேரளாவில் இது போல 1950ல்பட்டம் தாணு பிள்ளையும் 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்டு ஆட்சி அமைத்தார்.

ராஜாஜி முதல்வரான விதம் அன்று பிரதமராக இருந்த நேருஉட்பட எல்லோருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மூதறிஞர் ஆட்சியில்சில கடுமையான முடிவுகளை எடுத்தார்அவர் கொண்டுவந்தகுலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார். (உரிமைக்குகுரல் கொடுப்போம்) 1995ல் வெளியான என் நூலில் பதிவு.

எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் 1987-ல் வி.என்ஜானகிமுதல்வராக பணியேற்க தமிழக அன்றைய ஆளுநர் குரானாஅழைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை கொண்டு தான்முதல்வரை நியமிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லைஎன்பதற்கு இதுவே சான்றாகும்

மேலும் 1967 இராஜாஸ்தானில் 183 இடங்களில் காங்கிரஸ் 88-ம் எதிர்க்கட்சி 93-ம் வெற்றிப் பெற்றனர்ஆனால் ஆளுநர்காங்கிரஸ் தலைவர் எம்.எல்சுகாடியாவை முதல்வராகபதவியேற்க அழைத்தார்.

1973-ல் ஒடிசாவில் அன்றைய முதல்வர் நந்தினி சத்பதிராஜினாமாவை ஒட்டி பிஜு பட்நாயக் தலைமையில் இருந்தபிரகதி முன்னனி 72 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்ஆனால் அன்றைய ஒடிசா ஆளுநர் பிஜுவை நியமிக்கவில்லை.

1982-ல் ஹரியானாவில் .ஜா.லோக்தள் கூட்டணி - 36, காங்கிரஸ் 35, மொத்த இடங்கள் 90 இருந்தும் .ஜா.லோக்தல் கூட்டணியை அழைத்து விட்டு பின்னால் அதையும்மறுத்துவிட்டார்அன்றைக்கு காங்கிரஸை திரும்பவும் அவர்அழைத்தார்.

1984-ல் ஜம்முகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியிலிருந்து 12 சட்டமன்ற உறுப்பினர்களை பிரிந்ததன் விளைவாக ஆளுநர்மத்திய அரசின் இந்திராகாந்தியின் சொல்லை கேட்டு ஜி.எம்சாவை கேட்டு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்அது பெரிய தேசிய பிரச்னையாகி விட்டது.

அதைப்போலவே 1984-ல் ஆந்திராவில் என்.டி.ராமராவ்அமைச்சரவில் நிதியமைச்சராக இருந்த பாஸ்கர் ராவைஅழைத்து பிரிந்த எம்.எல்.ஏக்களோடு அன்று ஆளுநர் ராம்லால்முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்இதை எதிர்த்துநாடு முழுவதும் கண்டன கூட்டங்கள் நடத்தி டெல்லிராஜாபாட்டையில் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களோடுராஷ்டரபதி பவனை நோக்கி சென்றதெல்லாம் வரலாறு.

திரும்பவும் 2002-ல் காஷ்மீரில் 87 உறுப்பினர்கள் கொண்டஅவையில் 28 இடங்கள் தேசிய மாநாடு கட்சிக்கு கிடைத்ததுகாங்கிரஸுக்கு 21, மக்கள் ஜனநாக கட்சிக்கு 18 ஆனால்ஆளுநர் மக்கள் ஜனநாயக கட்சியை அமைக்க அழைத்தார்இப்படியெல்லாம் பல நிகழ்வுகள் நடந்தே உள்ளனர்.

ஆனால்சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிறுபிக்கவேண்டிய பொறுப்பும்கடமையும் முதல்வர்  ஆற்ற வேண்டும்.

ஆளுநரின் விருப்பமும்திருப்தியும் அரசமைப்புச் சட்டத்தின்164 (1)ன் படி இடடிஞுஞூ டிணடிண்ணாஞுணூ டணிடூஞீண்ணிஞூஞூடிஞிஞு ஞீதணூடிணஞ் ணாடஞு ணீடூஞுச்ண்தணூஞுணிஞூ ணாடஞு எணிதிஞுணூணணிணூகுறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்னையில் ஆளுநருடைய கடமைகளை வினா எழுப்பமுடியாது என்றும்அவருடைய விருப்பத்தை பொறுத்துதான்இந்த பிரச்னை அமையும் என்று தீர்ப்புகள் சொல்லி உள்ளனர்குறிப்பாக கணூச்ணாச்ணீ குடிணஞ்ட கீச்ணிடீடிணூச்ணிகீச்ணஞு திண் எணிதிஞுணூணணிணூ ணிஞூ எணிச்குஈடச்ணூட்ச்டூடிணஞ்ச்ட் ஙண் எணிதிஞுணூணணிணூ ணிஞூகூச்ட்டிடூ ச்ஞீத வழக்குகளில் முடிவாகியுள்ளனர்ஆனால்1998-ல் உத்திர பிரதேசம் முதல்வர் கல்யாண சிங்கைநீக்கிவிட்டுஜகதாம்பிகா பாலை முதல்வராக நியமித்ததுசெல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துகல்யாண சிங் திரும்பவும் முதல்வராக பொறுப்பேற்றார்இதோடுமத்திய அரசு அமைக்கும் போது ஏற்பட்டபிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. நேருக்கு பிறகு சாஸ்திரி பதவி ஏற்ற போது

2. மொராஜி தலைமையில் ஜனதா அரசு கவிழ்ந்து குடியரசுதலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி சரண் சிங் பிரதமராகபதவியேற்க அழைத்தபோது

3. வி.பி.சிங் 1990-ல் பதவியேற்றபோது

4. வாஜ்பாய்தேவகௌடா 1996-ல் பதவியேற்றபோது நடந்தசட்ட சிக்கல்கள் எல்லாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.

இப்படியான சூழலில் கவர்னர் ஒரு வாரத்திற்கு மேல்காலதாமதம் செய்யாமல் நியாயமாக அரசியல் சாசனத்தின் படிதன்னுடைய திருப்தியான கடமைகளை ஆற்ற வேண்டியதுஅடிப்படையாகும்இதில் தனிப்பட்ட அரசியலோகுதிரைபேரத்தை உருவாக்கவோக் கூடாது.

ஆளுநர் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும்தமிழகத்தினுடைய நிர்வாகம் ஸ்தம்பித்து போகும்.  

கடந்து 4 நாட்களாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ள தமிழக முக்கியபிரச்சினைகள்அவை எதுவும் செய்திகளாகயும் வரவில்லைஅதை குறித்துயாரும் அக்கறைப்படவும்மில்லைஏனென்றால்தமிழக அரசு முடங்கி போய் உள்ளதுஅவை உடனடியாககவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

1.   வரலாறு காணாத வறட்சிதற்கொலையாலும்மனவேதனையாலும் 200 விவசாயிகளுக்கு மேல் மரணம்.

2.   பாம்பாற்றின் துணை நதியான செங்கலாற்றில் கேரளாதடுப்பணை கட்டுகிறதுஇதனால் அமராவதி பாசனவிவசாயிகள்பெரும்பாதிப்புக்குள்ளாவார்கள்.

3.   பவானி ஆற்றில் மேலும் ஆறு தடுப்பணைகள் கட்டவும்கேரள அரசு முயன்று வருகிறது.

4.   ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டநடவடிக்கையில் இறங்கி விட்டது.

5.   ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கண்டலேறு அணையில்இருந்து வர வேண்டிய கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்துராப்பூர்வெங்கடகிரிகாளகஸ்தி போன்ற ஆந்திர பகுதிகள்தான் பயன் பெறுகின்றன.

6.   தமிழகத்திற்கு மின்சார விநியோகத்திற்காக பவர் கீரிட்மூலமாக மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர்கர்நாடகமாநிலம் ரய்ச்சூர் வரை அமைக்கப்பட்ட மின் கடத்திகம்பங்கள் கேரள எல்லையில் நிறுவ முடியாமல் கேரளாதடுக்கின்றதுகடந்த 05.02.2017 கேரள அதிகாரிகளுடன்நடந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

7.   பன்னாட்டு அளவில் டீகோ கார்சியா தீவில் சிக்கல்ஏற்பட்டுள்ளதுஇதில் அமெரிக்கா இராணுவ தளத்தைஅமைப்பதற்கு அந்த தீவில் வசித்த 2000க்கும் மேற்பட்டமோரீஸ் நாட்டினரை வெளியேற்றியதுஇது இந்து மகாசமுத்திரத்தில் அமெடிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மோரீஸ்குத்தகைக்கு விட்டிருந்ததுதற்போது பிரிட்டன் 2036 வரைஅமெரிக்காவுடன் குத்தகையை புதுப்பித்துள்ளதுஇதுநேரடியாக இந்தியாவின் தென் எல்லையிலுள்ள தீவாகும்ஏற்கனவே இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1974 கால கட்டங்களில் இந்த தீவில் அமெரிக்கா தளம் அமைத்தால்இந்தியாவுக்கு நேரடியாக ஆபத்திருக்குமென்று போராடிஅமெரிக்க இராணுவ தளம் அப்போது அப்புறப்படுத்தப்பட்டதுஇப்படியான சிக்கலில் ஆபத்து ஏற்பட்டால் நேரடியாக குமரிமுனையிலிருந்து இராமேஸ்வரம் நாகை வரை உள்ளகடற்கரைப்பகுதிகளுக்கும்நாட்டின் பாதுகாப்பில் பாதகம்ஏற்படும்.

எண்ணூரில் கடலில் கலந்த கச்சா எண்ணெய் பிரச்சனையைமறந்து விட்டார்கள்.

மேலும் காலதாமதம் செய்யாமல் சட்டபடியாக கவர்னரின்விருப்பப்படி தமிழகத்தில் அரசு அமைக்க கடமைகளைமேற்கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் 1977-ல் ராஜஸ்தான் மாநில அரசுகலைத்த போது நடந்த வழக்கின் தீர்ப்புஎஸ்.ஆர்பொம்மைவழக்குஇமாசல பிரதேசத்தில் ராம்ராவ் கவர்னராக அறிவித்தபோது உச்சநீதிமன்ற தீர்ப்புஉத்தரகண்டு - அருணாச்சலப்பிரதேசம் போன்ற சமீபத்தில் வழங்கியதீர்ப்புகள் எல்லாம் மனதில் கொண்டு தமிழக கவர்னர்கடமையாற்ற வேண்டும்.

ஆட்டுக்கு தாடியும்நாட்டுக்கு ஆளுநரும் தேவையாஅண்ணாகேட்டதைபோலஇன்றைக்கு நிலைமைகள் உள்ளன.

கவர்னர் தேவையில்லைகவர்னருடைய தேவைகளும்அவருடைய பணிகளும் தேவையில்லை என்று இராஜமன்னார்கமிஷன் அறிக்கையும்கர்நாடக முதல்வராக இருந்தராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் குழு வெளியிட்டகவர்னர் குறித்து வெள்ளை அறிக்கைபெங்களூரில் நடந்ததென் மாநில முதலமைச்சர்கள் மாநாடுஐதாராபாத்தில்என்.டி.ஆர்கூட்டிய காங்கிரஸ் அல்லா கட்சிகளின் மாநாடுமேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்த ஜோதிபாசு வெளியிட்டவெள்ளை அறிக்கைஸ்ரீநகரில் பாருக் அப்துல்லா கூட்டியமாநாடு பிரகடணம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

கவர்னர் மத்திய அரசின் ஏஜென்டுபிரதிநிதியாக இருந்துகொண்டு கண்காணி வேலை பார்ப்பது கூடாதுகவர்னரைகொண்டு இதுவரை மத்திய அரசு 126 முறை பிரிவு 356 பயன்படுத்தி மாநில அரசுகளை கலைத்து உள்ளதுமுதன்முதலாக 1951-ல் கோபால் சன்ட் ஆட்சி முடக்கப்பட்டதுஅதன் பின்கவிழ்ப்பு 1953-ல் பெப்சுலும், 1954-ல்ஆந்திராவிலும்காங்கிரஸ் அல்லாத கேரள நம்பூதிரிபாடுஆட்சியை 1959-லும் கலைக்கப்பட்டது.

இது தொடர்க்கதையாக எஸ்.ஆர்பொம்மை வழக்கு வரைநடந்தேறியது.

இப்படியெல்லாம் நாட்டு நடப்புகள் நடந்தேறினகவர்னர்தன்னுடைய அதிகாரங்களை வரம்புக்குள் வைத்து முடிவுஎடுப்பதுதான் இன்றைக்கு அவசரமும்அவசியமும் ஆகும்இதைவிட்டுவிட்டு வேறு கடமைகள் ஆற்றுவது ஜனநாயகத்தைமாசுப்படுத்துவதாகும்.

மக்களின் எதிர்ப்பார்ப்புகளை தீர்க்கக்கூடிய அரசு அமைக்கவேண்டியது ஜனநாயகத்தின் அடிப்படை கூறாகும்

ஏற்கெனவே தி.மு. அரசை எந்தவிதமான முகாந்தாரம்இல்லாமல் பர்னலா கவர்னராக இருந்த போதுஅதர்வைஸ்(ணிணாடஞுணூதீடிண்ஞுஎன்று சொல்லி ஆளுநரின்பரிந்துரையே இல்லாமல் கலைக்கப்பட்டதுதமிழகத்தில்மூன்று கலைக்கப்பட்டதில் இரு முறை தி.மு.பழியாகியது.

ஆளுநர் தீண ஙிடிண்ஞீணிட் என்ற முறையில்அணூஞடிணாணூச்ணூதூ நேர்மையாக கண்ணியத்தோடுஆட்சிகள் அமைப்பதில் நடந்து கொள்ள வேண்டும் எனஉச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

ஆளுநரின் விருப்பம் என்பது வானலாவிய அதிகாரம்கிடையாது.

பி.கேநேரு 1968-ல் அஸ்ஸாம்நாகலாந்து கவர்னராகஇருந்த பொழுது தன்னுடைய நினைவுகளில் கவர்னர்அதிகாரங்களும்நாடாளுமன்ற - சட்டமன்றஉறுப்பினர்களுடைய தனி சலுகைகள் என்பது புரியமுடியவில்லை என்றும்அதை ஏன் வரையறுக்கவில்லைஎன்றும் கேள்வி எளிப்பியுள்ளார்இன்றைய நிலையில்தமிழகத்தின் ஆட்சி ஸ்திரத்தன்மையும்ஆளுநரின்விருப்பமான போக்கையும் பற்றியான வினாக்கள் எழுந்தவண்ணம் இருந்தனஎல்லோரும் சட்டத்தின் ஆட்சிக்குகட்டுப்பட்டவர்கள் அதைவிட மேலான குறியீடு எதுவும்ஜனநாயகத்தில் கிடையாது.

இதை மனதில் கொண்டுதமிழக ஆளுநர் தன்னடையபொறுப்பை கண்ணியத்தோடும்நேர்மையோடும்அரசியல்சாசனத்தில் வரையறுக்கப்பட்ட பிரிவுகள் 153லிருந்து 164 வரை அதிகாரத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வதுதான்ஆளுநரின் இலக்கணம்.

இதில் எல்லைதாண்டக் கூடாதுபிரிவு 356-லும்உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகளை ஏற்றவாறுதான் கவர்னர்கடமையாற்ற வேண்டும்உலகிலேயே எங்கும் நிலாதவகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்  கவர்னராகநியமிக்கப்பட்ட ஒருவருக்கு இவ்வளவு அதிகாரங்கள்வழங்கப்பட்டது கவர்னருக்கு மட்டும்தான்.

கவர்னர் சீசரின் மனைவிக்கு ஒப்ப நடந்து கொள்வதுதான்நாட்டுக்கு நல்லது.

 

 

 

 

 

வாழ்வின்சுழற்சி #கிராமசூழல்

#வாழ்வின்சுழற்சி #கிராமசூழல் ———————————— இம்முறை  சித்திரை முதல் நாள் சொந்த ஊரான குருஞ்சாக் குளம் கிராமத்திற்குச் சென்று அங்கே இரண்டு நாட்க...