Monday, February 6, 2017

நாராயணசாமி நாயுடு

இன்று உழவர் வாழ்வுரிமை போராளி நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்.அவர் தலைமையேற்ற நடத்திய விவசாய சங்கத்தின் மாணவர் அமைப்பை 1972-82 வரை கட்டியெழுப்பியவன் என்ற வகையில் அவரை பற்றி பல நினைவுகள்....

விவசாய கடன்கள் ,ஜப்திகளை குறித்து 1975 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு;1972ல்
கோவில்பட்டியில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் மறைந்த துயரம் , 31.12.1980 ல் என்னுடைய கிராமத்தில் 8 விவசாயிகள் விவசாய பந்த் அன்று காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர் . 

விவசாய சங்கவழக்குகள்1970-80களில் சென்னைஉயர்நீதிமன்றத்தில்நடத்தி
அவருக்கானசுமையைகுறைத்தேன் .

சென்னைக்கு வந்தால் என் வீட்டிற்கு வந்து என்னோடு தங்கயிருந்த  விடுதலை  புலிகள் தலைவர்  பிரபாகரனிடம் எனக்கோரு துப்பாக்கி கொடு தம்பி என்று கேட்பார். அதற்கு பிரபாகரன்  நீங்களே போராளி,துப்பாக்கி  உங்களுக்கு எதுகய்யா துப்பாக்கி என இருவரும் பேசிக்கொண்டதை ரசித்ததும் உண்டு  .

மேடையில் கம்பீரமான தோற்றத்துடன் எளிமையாக , எதார்த்தமாக பேசுவார் .எளிமையாகவும் ,சுத்தமாகவும் ஆடைகளைஉடுத்த வேண்டும் என்று சொல்வார்.அவருடைய பிறந்த நாளில் இந்த எண்ணங்கள் இன்று மனதில் தோன்றின . 

#நாராயணசாமிநாயுடு #விவசாயசங்கம் 

#Ksrpost #KSRadhakirushnanpost 

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
6/2/2017

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...