Wednesday, February 8, 2017

தகுதியே தடை..

தியாகத் செம்மல்கள் சசிகலா, பன்னீர்,
தீபா ஆகியோர் பொது வாழ்வில் எத்தனை ஆண்டுகள் கொள்ளகை 
ரிதியாகமக்களுக்கு களப்பணஆற்றினர்?  
இவர்களையும்தமிழகம் கவனிக்கிறது. 

இன்னும் எத்தனை நாட்கள் சசிகலா,தீபா வரனும்.. பன்னீர் வரணும்னு ஏமாற போகிறோம்..

ஜெயா-சசி-பன்னீர் ஊழல் கூட்டணி. ஒரு ஊழல் கட்சி தமிழ்நாட்டை ஆளும் போது தலைவர் இறந்து விட்டார். அந்த ஊழலில திளைக்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும் கூட்டாளிகளுக்குள் கூப்பாடு. 
கொள்ளையடித்து வளர்ந்த கூட்டத்தின் மீதே நமக்கு கோபம் வரவேண்டும். மக்கள் போட்ட ஓட்டை வைத்து கொண்டு இன்றைக்கு இவர் முதல்வர் நாளைக்கு அவர் முதல்வர் என்று இவர்கள் ஆடும் ஆட்டத்தை பார்த்து வெட்கம் ,வேதனைப்படவேண்டும்.

கொள்ளகை, இலட்சியம்,மக்கள் களப்பணி,நேர்மைஇல்லாமல்;எந்தவித அரசியலறிவோ, வரலாற்று வாசிப்பு அறிவோ இல்லாமல் இயங்கும் கழிசடைகளால் நிரம்பி இருக்கிறது இன்றைய அரசியல்.

அடிமைகளெல்லாம் பணம்,பதவியைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு எஜமானரை வேண்டுமானால் தேடி ஏற்றுக் கொள்ளுங்கள். அவரை நாட்டின் 
எஜமானராக்க முயல வேண்டாம்...

நாட்டில்,
தகுதியே தடை

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...