Friday, July 31, 2015

மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காக்க தாமதிக்கும் தமிழக அரசு - Western Ghats.




மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காக்க தாமதிக்கும் தமிழக அரசு - Western Ghats.
____________________________________________

நேற்றைக்கு(30-07-2015) மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றி எழுதிய பதிவில் சொல்லியவாறு, தமிழ்நாடு அரசு தன்னுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.

மேற்குத் தொடர்ச்சிமலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசின் கருத்தை பலமுறை கேட்டு, இன்றோடு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான  காலக்கெடு முடிவடைந்தது.

நீதிமன்றத்தில் வாய்தா பெறுவது போல நினைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசாங்கம் மாதவ காட்கில், கஸ்தூரி ரங்கன் அறிக்கைகள் மீது தன் ஆய்வு அறிக்கையை அனுப்ப இன்னும் அவகாசம் கேட்டு தாமதிக்கின்றது? சுற்றுச்சூழல் பிரச்சனையில் விரைந்து செயல்பட அரசுக்குத் தயக்கம் ஏன்? இதனுடைய அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணராமல் ஒரு மாநில அரசு இருப்பது கண்டனத்துக்கு உரியதல்லவா?

மேற்குத் தொடர்ச்சிமலை உள்ளடங்கிய  குஜராத், கோவா, மகாராஷ்ட்டிரம், கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய ஆறு மாநிலங்களில் தமிழகத்தை தவிர்த்து மற்ற ஐந்து மாநிலங்களும் எப்போதோ தங்களுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி விட்டது.

ஆனால் தமிழக அரசு தன்னுடைய அறிக்கையை இதுவரை அனுப்பாமல் சவலைக் குழந்தையைப் போல கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பது நியாயம் தானா?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015.

ஆஷா சரத்க்கு சல்யூட் - Salute to Asha Sharath.


தமிழில் பாபநாசம், மலையாளத்தில் த்ரிஷ்யம் படங்களில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் அதற்கான கம்பீரத்தோடு நடித்த நாற்பத்து நான்கு வயது நடிகை ஆஷா சரத்தின் புகழைக் களங்கப் படுத்தும் வகையில் ஆபாசப் படத்தை வலைதளத்தில் சில விசமிகள் பரவச் செய்தது அதிர்ச்சியாக இருந்தது.

தைரியமாக உறுதியுடன் ஆஷா சரத் கொச்சி மாநகர போலீஸ் கமிசனரிடம் புகார் கொடுத்தது பாராட்டக் கூடிய செய்தி ஆகும். திரைத்துறையில் உள்ள பலர் இதுமாதிரியான விஷயங்களில் நமக்கெதற்கு வம்பு என்று நினைத்து ஒதுங்குபவர்கள் மத்தியில் ஆஷா சரத் ஒரு தைரியமான பெண் ஆளுமைதான். அவருக்கு ஒரு சபாஷும் சல்யூட்டும்.

 “இந்த சம்பவம் தொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறியதாவது: சமீபத்தில் சமூக வலைதளங்களில் தரக்குறைவான படங்கள் மற்றும் பதிவுகளை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இதுதொடர்பாக கொச்சி நகர் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளேன். தற்போது இந்த வழக்கு விசாரணை மாநில சைபர் போலீஸ் செல் மூலம் நடத்தபட்டு வருகிறது.

விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு தகுந்த தண்டனை பெறுவார்கள் என நான் நம்புகிறேன். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக போராடும் பொழுது பெண்கள் அனைவரும் கைசேர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.”

" I have filed a petition with the City Police Commissioner of Kochi. I am so grateful to the authorities that immediate action has been initiated on my petition. As has been reported, the case is now being investigated into by the state cyber police cell. I am given to understand that proceedings are already on and that the culprits shall be brought to law at the earliest. I believe that such criminal offences against women shall not go unpunished and I therefore am committed to fight this case till it is legally remedied. We all should join hands to ensure that women are respected and not humiliated. I thank u all, each one of u and especially the media, once again for taking up this issue as a priority.  Asha sharath​ "

பாபநாசம் திரைப்படத்தில் குற்றவாளியை கைது செய்யாமல் கோட்டை விட்டதைப் போல கொச்சி காவல் துறை ஆஷா சரத்தின் புகாரிலும் குற்றவாளிகளைப் பிடிக்காமல் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பது தான் நம்முடைய கருத்து.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015.

##KsRadhakrishnan #KSR_Posts #AshaSharath

30-07-2015 நாள் ஒரு கருப்புதினம் . Mercy denied, the execution list before NDA



30-07-2015 நாள் ஒரு கருப்புதினம் .



In the two years that he has been President, Mukherjee has rejected the mercy pleas of 31 convicts (22 cases), and pardoned one. The Supreme Court subsequently commuted the sentences of 15 convicts (9 cases). Previous president Pratibha Patil had granted clemency to 34 of 39 convicts.


The first execution under the NDA government could come any day now. President Pranab Mukherjee in July rejected the mercy pleas of six convicts in five cases, while a seventh had seen his petition rejected in October 2013. Among the latest six, however, Maharashtra sisters Seema Mohan Gavit and Renuka Shinde, as well as Assam’s Holiram Bordoloi, have moved court and their execution is on hold.
None of these has been convicted in a terror case. Two such convicts, too, are on death row: 2000 Red Fort attack convict Mohammad Arif, whose mercy petition is pending, and 1993 Bombay blasts convict Yakub Memon, whose petition the President has rejected; both have moved the Supreme Court which reserved its verdict last month.
The two hangings carried out under UPA-II were of terror case convicts Ajmal Kasab (November 2012) and Afzal Guru (February 2013). Unlike their executions, however, any hanging now cannot take place suddenly, or in secret. On January 21, a bench led by then Chief Justice of India P Sathasivam laid down guidelines requiring the government to give at least 14 days’ notice before an execution “to allow the prisoner to prepare himself… (and) have a last and final meeting with his family members”.

In the two years that he has been President, Mukherjee has rejected the mercy pleas of 31 convicts (22 cases), and pardoned one. The Supreme Court subsequently commuted the sentences of 15 convicts (9 cases). Previous president Pratibha Patil had granted clemency to 34 of 39 convicts.
Their mercy petitions all rejected..

Surender Koli
Koli, a domestic help in businessman Moninder Singh Pandher’s home in Nithari, Noida, was convicted of rape, murder and cannibalism during 2005-2006. The trial court gave him death in five cases; Allahabad High Court confirmed it in one case; the Supreme Court upheld it in February 2011. The President rejected his mercy petition on July 20, 2014. Four days later, the Supreme Court rejected his review petition.

Jagdish
The resident of Manasa in Madhya Pradesh’s Neemuch district was convicted of killing his wife, four daughters and son by the additional sessions judge, Manasa. The sentence was confirmed by Madhya Pradesh High Court, then upheld by the Supreme Court in September 2009. The President rejected his mercy petition on July 7, 2014.

Rajendra Prahladrao Wasnik
Wasnik took three-year-old Vandana away, ostensibly to buy her biscuits. The naked body of the child, bearing injuries, was found in the fields later. The death sentence, awarded by the first additional sessions judge, Amravati, was upheld by Bombay High Court’s Nagpur bench in March 2009 and by the Supreme Court in February 2012. The President rejected his petition on July 31, 2014.

Ajay Kumar Pal
The domestic help of an Indian Forest Service officer in Ranchi was arrested on June 2, 2003, for killing the officer’s wife, their son, two other children who were visiting the family, and another help. The death sentence by a special CBI court was upheld by Jharkhand High Court and then the Supreme Court on March 16, 2010. The President rejected his mercy petition on October 27, 2013.
…These ones have EARNED RESPITE

Holiram Bordoloi
He was convicted of leading the killing of three persons, including a six-year-old, in Morigaon district of Assam and sentenced by a sessions judge on May 5, 2003. The Supreme Court confirmed the sentence on April 8, 2005, noting that “the dragging of Nagarmol Bordoloi by Holiram to his house and then cutting him into pieces in broad daylight in the presence of bystanders” was an aggravating circumstance. Bordoloi’s mercy petition, pending for nine years, was finally rejected on July 5, 2014. Bordoloi filed a writ petition against the “inordinate delay in disposing the mercy petition by the President”. On August 7, Gauhati High Court suspended the execution for a month.

Seema Gavit & Renuka Shinde
shsa
Mercy petition rejected on July 7, 2014. Subsequent appeal citing delay in disposal is pending in Bombay High Court.

Saibanna Ningappa Natikar
While on parole after receiving a life sentence for the murder of his wife, Natikar, in 1994, suspected the fidelity of his second wife and killed her, along with her daughter. The Supreme Court confirmed the sentence in 2005, and the President rejected his mercy petition on January 4, 2013. Karnataka High Court stayed the execution after being told that matters relating to a delay in decisions on mercy petitions were pending in the Supreme Court.

Dharampal
The resident of Sonepat was sentenced to 10 years for rape. While on parole in 1993, he, along with his brother Nirmal, killed the rape victim, along with her parents and two brothers. Both were sentenced to death on May 5, 1997. Punjab and Haryana High Court confirmed the sentence in 1998; the Supreme Court upheld death for Dharampal but commuted Nirmal’s sentence in 1999. The President rejected Dharampal’s mercy petition on March 25, 2013, but the execution has been stayed by the high court.

B A Umesh
The former CRPF constable was arrested for the rape and murder of Jayashree Maradi Subbaiah, 37, and sentenced to death by a fast-track court in 2006. The sentence was upheld by Karnataka High Court, then confirmed by the Supreme Court on January 2, 2011. The President rejected his mercy petition on May 12, 2013. He filed a fresh petition that is pending before a Supreme Court constitution bench.

Yakub Abdul Razak Memon
Yakub Memon is the sole convict who was awarded death sentence last year by SC in the 1993 Mumbai serial blasts case. Yakub Memon is the sole convict who was awarded death sentence last year by SC in the 1993 Mumbai serial blasts case.

The chartered accountant brother of fugitive Mumbai blasts accused Tiger Memon was sentenced to death by a TADA court in 2007. The Supreme Court upheld it in March 2013, and the President rejected the mercy petition in April 2014. On June 2, 2014, the SC stayed the execution, and referred his plea to a constitution bench, which has reserved its verdict.

Sonu Sardar
In November 2004, Sardar killed five members of a family in Chhattisgarh, and was convicted on the eyewitness account of a 10-year-old girl who escaped. The death penalty was confirmed by the Supreme Court in 2012, the mercy petition rejected by the President on May 5, 2014. On June 19, 2014, the SC stayed the execution and referred the case to a constitution bench.

Courtesy : Indian Express

http://ksr1956blog.blogspot.in/2015/07/blog-post_30.html
via - Leena Manimekalai​

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #AbolishDeathPenalty




Leena Manimekalai​

மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச் சூழல் பிரச்சனையில் தமிழ்நாட்டின் பாராமுகம்- Western Ghats - Neglections Government of Tamil Nadu .

மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச் சூழல் பிரச்சனையில் தமிழ்நாட்டின் பாராமுகம்- Western Ghats - Neglections Government of Tamil Nadu .





ஏற்கனவே என்னுடைய தளங்களில் இதைக்குறித்து விரிவான பதிவைச் செய்திருந்தேன். மாதவ காட்கில், கஸ்தூரி ரங்கன் ஆகிய குழுக்களின் அறிக்கைகள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டும் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.

குஜராத்திலிருந்து தமிழகம் வரை ஆறு மாநிலங்களில் படர்ந்த இம்மலையில் பரப்பளவு 60,000சதுர கி.மீட்டர்கள். இதில் சுற்றுச் சூழல் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று இந்தக் குழு வழங்கிய அறிக்கைகளை எதிர்த்து பல சுயநல சக்திகள் போராடின. ஆனால் இந்த அறிக்கை குறித்து தமிழக அரசு எந்த நிலைப்பாட்டையும் இதுவரைத் தெரிவிக்கவில்லை.

இதில் தமிழகத்தில் 6914சதுர கி.மீட்டர் மேற்குத் தொடர்ச்சிமலையின் பரப்பு அடங்கியுள்ளது. இயற்கையை அழித்து மாசுபடுத்துகின்ற சக்திகளிடமிருந்து காக்க இந்த ஆறுமாநிலங்களுடைய அறிக்கையை மத்திய அரசு எதிர்ப்பார்த்தது. ஆனால் தமிழக அரசு அளிக்க வேண்டிய அறிக்கையின் அவகாச கால இன்றுடன் (31-07-2015) முடிவடைகின்றது.

தமிழக அரசுக்கு மேற்குத் தொடர்ச்சி  மலை சுற்றுச்சூழல் பற்றிய அறிக்கையை வழங்குவதற்கு என்ன தயக்கம்? ஏன் மெத்தனப் போக்கு?
இந்தப் பிரச்சனையை எத்தனைபேர் அறிவர்? இது வேதனையிலும் வேதனை.


See also : http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_24.html


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015.


பம்பை-அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு- Pamba Achankovil Vaippar link.



கடந்த 24-07-2015 அன்று டெல்லியில் உள்ள சரம்சக்தி பவனில் அமைந்துள்ள, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு, “உச்சநீதிமன்றம் கடந்த 2012ல் எனது வழக்கில், நதிநீர் இணைப்பு குறித்து வழங்கிய தீர்ப்பின் மீது என்ன செயல்பாடுகள் நடந்துள்ளது” என்று அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சென்றிருந்தேன்.

இந்த அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீசசி சேகரைச் சந்திக்கச் சென்றபோது அவருடைய அறையில் அவர் இல்லை. எனவே அவருக்கு அடுத்துள்ள அதிகாரிகளான, துணை மற்றும் இணைச் செயலாளர்களைச் சந்திக்கக்கூடிய சூழல்தான் அப்போது அமைந்தது.

அந்த அதிகாரிகளிடம் உச்சநீதி மன்றத்தின் தீர்பின் மீது அரசு என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று கேட்டேன். குழு அமைத்ததுடன், உரிய ஆலோசனைகள் நடத்தி நவலவாலா தலைமையில் நதிநீர் இணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்திக்கவும், நினைத்தபோது அவரும் டெல்லியில் இல்லை.

தென் மாவட்டங்களுக்குப் பயன்படும் அச்சன்கோவில்- பம்பை-வைப்பாறு பற்றிக்கேட்டபொழுது, மத்திய அரசு கொள்கை ரீதியிலாக இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
கேரள அரசும் இந்த பிரச்சனையில் முரண்டு பிடிக்கிறார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் அப்போது என்னிடம் தெரிவித்தனர்.


இதைக்குறித்து நான் எடுத்துச் சென்ற குறிப்பை (Notes) அவர்களிடம் வழங்கி, இதைப் பரிசீலனை செய்யுங்கள் என்று  அளித்தேள்.

அந்த குறிப்பில் நான் குறிப்பிட்டது-

பம்பை-அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பால் குறிப்பாக தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் சில பகுதிகள் பயன்பெறும்.  குறிப்பாக, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், சிவகிரி, விளாத்திகுளம், இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புதூர், சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் பாசான  வாய்கால்கள் அமைக்கப்படவேண்டும்,

 இந்திராகாந்தி காலத்தில், ராஜஸ்தான் பாலை நிலத்தில் வெட்டப்பட்ட, ஆண்டுதோறும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் கால்வாய்கள் போன்று இப்பகுதியில் வெட்டப்படும் கால்வாய்கள் அச்சன் கோயில் -பம்பை- வைப்பாறு திட்டத்தால் நடைமுறைக்கு வரும்.

வறட்சியில் வாடும் கரிசல் மண்ணில் இப்போது கண்ணில்படும் கருவேல மரங்களும், வேலி மரங்களும் போன்ற வறட்சிக் காட்சிகள் கண்ணை பார்வையை விட்டு அகலும். இந்த இணைப்பின் மூலம் கேரளாவிலிருந்து 22டி.எம்,சிக்கு அதிகமான அளவில் இருக்கும் உபரி நீரைத் தமிழகத்திற்குத் திருப்பலாம்.

அப்படித் திருப்பும் பொழுது, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் வசதிக்கும் திட்டங்களைத் தீட்டலாம்.
தமிழ்நாட்டின் 40சதவிகித பூமி இதனால் பயன்பெறும். இந்த திட்டத்தை இந்திரா காந்தி காலத்திலிருந்து மத்திய அரசு வலியுறுத்தியும் கேரளா மௌனம் சாதிக்கிறது.

1995ல் இத்திட்டத்தை வரையறுத்தும், எந்த நடவடிக்கைகளும் இப்போதுவரை இதுகுறித்து இல்லை. தமிழ்நாடு, கேரள பொதுப்பணித்துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி. தேனீர் சாப்பிட்டுக்  கூடிக்கலைந்தது தான் இதுவரை நடந்துள்ளது.

இதைக்குறித்து மத்திய அரசு கூட்டிய  ஐந்து கூட்டத்திலும், இத்திட்டம் பற்றி விவாதிக்கப் பட்டுள்ளது. ஆனால் கேரளா இதற்கு எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை, எங்களிடமே தண்ணீர் இல்லை என்றும், கேரளாவின் மீன்வளம் பாதிக்கப்படும் என்று ஒப்புக்குக் காரணங்கள் சொல்லி அரபிக்கடலுக்கு வீணாகத் தண்ணீரை அனுப்புகிறது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், 500மெ.வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் அதிக அளவு கேரளாதான் பயனடையும். அதுமட்டுமில்லாமல்,  தென்மாவட்டங்களில் இருந்துதான் கேரளாவிற்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பண்டங்கள் அனுப்பப் பட்டுவருகின்றன.  இவையெல்லாம் அந்தக் குறிப்பில் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தேன்.


இப்படியெல்லாம் காரணங்கள் இருந்தும் கேரளா இத்திட்டத்தை மறுப்பது நியாயம் தானா?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015















தூக்குதண்டனை கூடாது - சில குறிப்புகள்.

இந்திய சட்ட ஆணையம், மரண தண்டனை குறித்து இதுவரை பொறுப்பிலிருந்த குடியரசுத் தலைவர்கள் பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்ட கருணைமனுக்களின் எண்ணிக்கை குறித்து
கருத்துகளை வெளியிட்டுள்ளது.

பக்ருதீன் அலி அகமது காலத்திலும், சஞ்சீவ ரெட்டி காலத்திலும் கருணை மனுக்கள் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு நன்றாக நினைவு இருக்கின்றது. இந்தியாவிலே முதன்முதலாக உச்சநீதிமன்றம் தூக்குதண்டனை இறுதி செய்து மூன்று முறையும் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட குருசாமி நாயக்கர் வழக்கை இரண்டு வாக்கியத் தந்திகளை வைத்துக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து அவரைக் காப்பாற்றியவன். அந்த நிலையில் குருசாமி நாய்டக்கருடைய கருணை மனு வைகோவின் மூலமாக சஞ்சீவ ரெட்டியிடம் வழங்கப்பட்டது என்பது நன்றாகத் தெரிந்த உண்மை.

ஆனால், சஞ்சீவ ரெட்டி காலத்தில் எந்த மனுவும் பரிசீலனையில் இல்லை என்று சட்ட ஆணையம் குறிப்பிட்டு இருப்பது எப்படி என்று தெரியவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட வர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர்கள் ஏற்றதால் இந்தியாவில் 306 பேர் தூக்கு தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். கடந்த 1950 ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு, மரண தண்டனை குற்றவாளிகள் குடியரசுத் தலைவர்களுக்கு அளித்த கருணை மனுக்கள் குறித்த பட்டியலை சட்ட ஆணையம் வெளி யிட்டுள்ளது. இதில் மேற்கண்ட தகவல் இடம் பெற்றுள்ளது.

இப்பட்டியல் குறித்த பகுப்பாய்வில், “ஆயுள் மற்றும் மரணம் குறித்த விதி, அரசின் சித்தாந்தம் மற்றும் பார்வையை மட்டும் சார்ந்ததில்லை; குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட பார்வைகள் மற்றும் நம்பிக்கையையும் சார்ந் தது” என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. 1950 ஜனவரி 26-ம் தேதியிலிருந்து இதுவரை 437 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 306 மனுக்கள் ஏற்கப் பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. 131 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

1950 முதல் 1982 வரை ஆறு குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். இக்கால கட்டத்தில் 262 மரண தண்டனைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டுள்ளது. ஒரே ஒரு மனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், 181 கருணை மனுக்களில் 180 மனுக்களை ஏற்றுக் கொண் டுள்ளார். சர்வ பள்ளி ராதாகிருஷ் ணன் தனக்கு வந்த 57 கருணை மனுக்களையும் ஏற்றுக் கொண் டுள்ளார். அதைப்போலவே, குடியரசுத் தலைவர்கள் ஜாகிர் உசேன், வி.வி. கிரி ஆகியோரும் தங்களுக்கு வந்த அனைத்து கருணை மனுக்களையும் ஏற்று தண்டனைக் குறைப்பு செய்துள் ளனர். குடியரசுத் தலைவர்கள் ஃபக்ருதீன் அலி அகமது, நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோருக்கு கருணை மனுக்கள் வரவேயில்லை.

மாறிய சூழல்

1982 முதல் 1997 வரை மூன்று குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். அவர்கள் 93 கருணை மனுக்களை நிரா கரித்து, 7 மனுக்களை ஏற்றுக் கொண் டுள்ளனர். ஜெயில் சிங் தனக்கு வந்த 32-ல் 30 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். ஆர். வெங்கட்ராமன் 50-ல் 45 கருணை மனுக்களை நிராகரித் துள்ளார். சங்கர் தயாள் சர்மா தனக்கு வந்த 18 கருணை மனுக்களையும் நிராகரித்துள்ளார்.

1997-2007

1997 முதல் 2007 வரை இரண்டு பேர் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தனர். கே. ஆர். நாராயணன் தன் முன் வந்த கருணை மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்துல் கலாம், இரண்டு முறை மட்டுமே முடிவெடுத்தார். அதில் ஒரு மனுவை நிராகரித்தும், ஒரு மனுவை ஏற்று தண்டனைக் குறைப்பு செய்தும் நடவடிக்கை எடுத்தார். இவர்களின் 10 ஆண்டு காலத்தில், கருணை மனுக்களை பரிசீலித்து முடிவெடுப்பதற்கு இடைவெளி விட்டனர்.

பிரதீபா பாட்டில் 5 மனுக்களை நிராகரித்தும், 34 மனுக்களை ஏற்று தண்டனைக் குறைப்பும் செய்தார். தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதுவரை பரிசீலித்த 33 மனுக்களில் 31 மனுக்களை நிராகரித்துள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிக்ராம் ஜீத் பத்ரா உள்ளிட்டோரால் திரட்டி ஆவணப்படுத்தப்பட்டவை. குடியரசுத் தலைவர்கள் ராஜேந்திர பிரசாத், எஸ். ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், வி.வி. கிரி, ஃபக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா ஆகியோரால் பரிசீலிக்கப்பட்ட கருணை மனுக்களின் அதிகாரப் பூர்வ எண்ணிக்கை தெரிய வில்லை.

இத்தகவல்கள் அனுபவப் பூர்வமாக சரிபார்க்கப்பட்டவை. இந்த எண்ணிக்கை முழுமையானதாக இல்லாமல் இருக்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டதை ஏற்றுக்கொண்டாலும் எப்படி சஞ்சீவ ரெட்டி, பக்ருதீன் அலி காலத்தில் கருணை மனுக்கள் பரிசீலனைக்கு வரவில்லை என்று குறிப்பிட்டது கேள்விக்குறியானது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-09-2015.
____________________________________________________



ஒரு தூக்குக் கயிறு தூக்கிலிடப்பட்டது. (எனது
தினமணி கட்டுரை)
_______________________________________________

இன்றைக்கு தூக்கு தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று பல இடங்களிலிருந்தும் பல தரப்பினர் குரல்களை எழுப்புகின்றனர். ஆனால் 33ஆண்டுகளுக்கு முன்னால் உச்சநீதிமன்றமும், குடியரசுத்தலைவர் கருணை மனுவும் தள்ளுபடியாகி, இனிவேறு வழியில்லை தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமியை, வெறும் இரண்டு வார்த்தை தந்தியால் காப்பாற்றியது இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கின்றது.

அன்றைக்கு இம்மாதிரி ஊடகங்களோ செய்தித்தாள்களோ இந்நிகழ்வை பெரிதாக வெளியிட்டதில்லை. விளம்பரப்படுத்த விரும்பவில்லை ஆனால் இந்தப் பதிவு தூக்குதண்டனை வரலாற்றில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பிடுகின்றோம். இன்றைக்கு தூக்குதண்டனை பற்றி பேசும் எவரும் இந்த முன் உதாரணமான வழக்கை மறந்துவிட்டு பேசுவதுதான் வேதனையாக இருக்கின்றது. சுயநலமில்லாமல் எந்தவித வழக்கறிஞர் கட்டணமும் இல்லாமல் சமூகப் பொறுப்போடு செய்த காரியத்தை உரிமையோடும் அப்போது எவ்வத வசதிவாய்ப்புகளும் இல்லாத காலத்தில் இவ்வழக்கிற்காக தனிமனிதனாக உழைத்ததை சொல்லவேண்டியது என்கடமை.

சில மேனாமினுக்கிகள் வெறும் எழுத்துகளில் தூக்குதண்டனைகு எதிராக குரல்கொடுக்கின்றோம் என்று வாய்ஜாலம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சம்பவத்தை திட்டமிட்டு ஏன் மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய “தூக்குக்குத் தூக்கு” என்ற நூலில் இந்த செய்திகள் எல்லாம் இடம்பெற்றும், அதன் தரவுகளைப் பயன்படுத்திக் கொண்டு இச்சம்பவத்தின் முக்கியத்துவம் தெரிந்தும் மூடி மறைத்துவிடுவதுதான் இவர்களது சமூகப் பிரக்ஞை.

பயங்கரவாதம் சம்பந்தமான குற்றங்களைத் தவிர்த்து மற்ற குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலானஇந்திய சட்டக் கமிஷன் மத்திய அரசிடம் பரிந்துரைத்து அறிக்கை வழங்கியுள்ளது. 270பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஏன் மரணை ரத்து செய்யப்படவேண்டும் என்ற காரண காரியங்களைக் குறிப்பிட்டுள்ளது. 1962 சட்டக் கமிஷன் தூக்குதண்டனை நடைமுறையில் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

5 நூற்றாண்டில் ரோமன் சட்டப்படி, உடலில் எண்ணை ஊற்றி எரித்தும், உயிரோடு புதைத்தும், எரியும் நெருப்பில் போடுவதும், தூக்கில் போடுவதும், கழுத்தைப் பிடித்து நெரிப்பதும், கல்லால் அடித்து சாகடிப்பதும், அபாயகரமான விலங்குகளுக்கு இரையாக்குவதும், சிலுவையில் அறைவதும், கழுவேற்றுவதும், உடலை நான்கு துண்டுகளாய் வெட்டுவதும், உயிரோடு தோலை உரிப்பதும் என்ற வகைகளில் மரண தண்டனையினை நிறைவேற்றினார்கள்.

ஆங்கிலோ சாக்ஸன் காலத்தில் பிரிட்டனில் இம்மாதிரிதான் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. மெக்ன கர்ட்டா (மகா சாசனம்) பிரகடனத்திற்குப் பின் (1215ம் ) இம்மாதிரியான நடவடிக்கைகள் குறைந்தன. 18ம் நூற்றாண்டில் பாபிலோன் அரசர் ஹமுராபி இயற்றிய சட்டத்தில் தூக்கு தண்டனை சட்டப் பூர்வமாக்கப்பட்டது. ஹமுராபி சட்டத்தின் படி 20குற்றங்களுக்கு தூக்குதண்டனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஹமுராபி அரசனின் சட்டங்கள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போன்ற முரட்டுத்தனமாகவும் நாகரிகமற்றதாகவும் இருந்தன.

உலகநாடுகளில் தூக்குதண்டனையினை இன்றளவிலும் நடைமுறைப் படுத்துகின்ற உள்ள 59நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவரை உலகிலுள்ள 103நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேரவேண்டும் என்பதுதான் மனித உரிமைகள் ஆர்வலர்களுடைய விருப்பமும் ஆகும்.


அன்றைக்கு கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக்கயிற்றின் முனை வரை சென்று காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் கிட்டத்தட்ட 32ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டாய் நடந்து வரும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.

தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இன்றும் நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, நாடு இழக்கும்! தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால் மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக ஈடு இணையற்றதாக அமையும்.
1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார்.

குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மனதிற்குள் உறுதி செய்தது.. அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. குருசாமி போட்ட கருணை மனுக்கள் இந்திய அரசால் மும்முறையும் நிராகரிக்கப்பட்டிருந்தது.

குடும்பச் சொத்தை வைத்து குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார். இந்த கொலைவழக்கில் திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் அவரது தண்டனையை உறுதி செய்தது. வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் உச்சநீதிமன்றமும் நிராகரித்துவிட்டது.

குருசாமியைக் காப்பாற்ற அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீட்டுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் நினைவில் கொண்டு குருசாமி இடைக்காலத் தடையும் வழங்கினார்.

ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, மேல்குறிப்பிட்ட இரண்டாவது கருணை மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது. குருசாமி தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50பேர் கையெழுத்திட்ட கருணை மனுவை 1981 செப்டம்பர் 8 அன்று குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். அப்போதைய உள்துறை இணை அமைச்சர் வெங்கடசுப்பையாவிடம் அம்மனு ஒப்படைக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இந்த இடைக்கால ஆணையும் தள்ளுபடியாகி தூக்குதண்டணை உறுதி செய்யப்பட்டது.

அடுத்த ஐந்து நாட்களில் குருசாமியின் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்த, அவர் பரம்பரையைச் சேர்ந்தவர் தானா? என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது.

பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், மூன்றாவது கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.

இந்த நேரத்தில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி அளித்த தீர்ப்பில் தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் ஐந்து ஆண்டுகளாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.

1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21ம் தேதி காலையில் தூக்கு தண்டனை வழங்குவது என உறுதி செய்யப்பட்டது. இத்தகவல் நெல்லையிலிருந்து வைகோவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே என்னுடன் கலந்தாலோசித்த பின்பு, டெல்லியில் உச்சநீதிமன்றத்துக்கும், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இரண்டு தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன.

அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்றைய தலைமை நீதிபதி கே.பி.என்.சிங் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகையால், அவர் தங்கி இருந்த சென்னை அரசினர் விருந்தினர் விடுதிக்கு நான் விரைந்து சென்று அனுமதியைப் பெற்றேன். அந்த அனுமதியின் அடிப்படையில் தந்திகளை ரிட் மனுவாக்கி, அதற்கு ரிட் மனு எண் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நான்காவது கோர்ட்டில் அமர்ந்திருந்த நீதிபதிகள் வி.ராமசாமி, டேபிட் அன்னுசாமியிடம் மறுநாள் திங்கள்கிழமை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றவியல் வழக்குகளை தலைமையேற்று நடத்தி வந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் பத்மினி ஜெசு துரை அவர்களை முன்கூட்டியே உரிய நோட்டீஸ் கொடுத்ததன் அடிப்படையில், இவ்வழக்கை விசாரிக்க அரசுத்தரப்பில் ஆஜரானார். இவ்வழக்கில் என்.டி.வானமாமலை ஆஜரானார். நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடப்பட்டது. நீதிபதிகள் என்.டி.வி.யின் வாதங்களைக் கேட்டு மதியம் 2மணி அளவில் குருசாமி தூக்குக் கயிறுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கினர்.

அத்தோடு அரசு வழக்கறிஞர் பத்மினி ஜெசுதுரையிடம் இந்த இடைக்கால உத்தரவை தமிழக அரசுக்கும், பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திற்கும் சொல்லப்பட்டுவிட்டதா? தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதாக போன்ற விவரங்களை உரிய ஆதாரங்களோடு நாங்கள் மாலை நான்கு மணிக்கு இந்த நீதிமன்றத்திலிருந்து எழும்பும்போது தவறாமல் சொல்ல வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தனர்.

இவ்வாறு குருசாமியை அன்றைக்குக் காப்பாற்றியது இரண்டு வார்த்தை தந்திதான். இன்றைக்கு இருப்பது போல கைப்பேசியோ, பிரதி எடுக்க நகலக வசதிகளோ கூட அப்போது கிடையாது. ரெமிங்டன் தட்டச்சு மூலமே பிரதி எடுக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் எந்த தட்டச்சு மனுவும் இல்லாமல் வெறும் தந்தியை மனுவாக பாவித்து தூக்குதண்டனையை நிராகரித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமில்லாமல் ஒரு அதிசயமாகவும் பார்க்கப்பட்டது.

இதன் பின் உச்சநீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் ஆற்றப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக என்னைப் பாராட்டினர். இந்த வழக்கில் ஒவ்வொரு நடவடிக்கையும் நல்லபடியாக நிறைவேறுமா என்று சந்தேகத்தோடு அணுகும்போது, வெறும் 24மணி நேரத்தில் நினைத்த காரியமெல்லாம் மிகச்சரியாக நிகழ்ந்தது.

அன்றைக்கு இந்து பத்திரிகை மாத்திரம் இதுகுறித்து எழுதியது. “இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது” என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல முறையீட்டு மனுவை நான் கையெழுத்திட்டு தாக்கல் செய்தேன். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியிருந்தேன்.

அவையாவன:
1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் ‘அரிதினும் அரிதான வழக்கு’(Rarest of rare cases) களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.
3. கொலை செய்தவன் குடும்பத்தில் ஆதரவாக நிற்க யாருமில்லை என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் குருசாமியின் நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.

“தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!” என்றது அந்தத் தீர்ப்பு!

நீதிபதிகளின் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில், டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க, அதுவே (அந்தத் தாதமே) ரணமே தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஷேர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர்நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப் பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).

மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை ‘கன்விக் வார்டர்’ ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.

அன்றைக்கு குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்…. இல்லை இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது அதுவே முதன் முறை! வெறும் இரெண்டு வார்த்தை தந்திகளை வைத்துக்கொண்டு உச்சநீதிமன்றமும், குடியரசுத் தலைவரும் நிராகரித்த பின்பு ஒரு தூக்குதண்டனைக் கைதி தூக்குதண்டணையிலிருந்து விடுதலை செய்யப்பட்டது இந்திய வரலாற்றில் முதன்முறையாகும்.

இந்த குருசாமி வழக்கின் மூலம் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.

அந்தக் காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்னோடு தங்கி இருந்த காலம். பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டரையர் போலவே வீரபாண்டிய கட்டபொம்மன் மீதும் அவருக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. ஆகவே இவ்வழக்கு குறித்து விசாரணைகள் வந்தபோதெல்லாம் என்னாச்சி அண்ணா என்று நீதிமன்றத்திலிருந்துத் திரும்பும் போது கேட்பது வாடிக்கை. அப்போது வை.கோ திமுகவில் இருந்தார். தலைவர் கலைஞர் அவர்களிடம் இந்த வழக்கைக் குறித்து அவர் சொல்லியதும் உண்டு.

பழ.நெடுமாறன், மறைந்த இலங்கை தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர் ப.மாணிக்கம் ஆகியோரெல்லாம் ஆர்வமாக இவ்வழக்கு பற்றி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுண்டு. தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டபின், தீர்ப்பையே மாற்றியமைக்க வைத்த ஒரே வழக்கு இதுதான்… ஒரு தூக்குக் கயிறு தூக்கிலிடப்பட்டது.


We deeply regret the resumption of the death penalty in Chad. Ten people were executed by firing squad on Saturday, 29 August morning, after being sentenced to death under the new anti-terrorism law the previous day. This is the first use of the death penalty in the country since 2003.

This is particularly disappointing given that, in September 2014, the Government of Chad had announced that a penal code aimed at abolishing the death penalty had been approved by the cabinet. However, on 30 July 2015, the National Parliament of Chad adopted a new law on terrorism which introduced the death penalty.

The use of the death penalty is an extremely unfortunate development and goes against recommendations on the abolition of death penalty that were accepted by Chad during its Universal Periodic Review in the UN Human Rights Council in March 2014. We call upon the Government of Chad to introduce an official moratorium aiming at abolition of the death penalty.

There are also serious concerns regarding the speed with which these executions have been carried out. Any trial which could lead to the imposition of the death penalty must rigorously comply with all aspects of a fair trial.

We also call upon the Chadian authorities to review the anti-terrorism law adopted last July as it contains a very vague definition of terrorism inconsistent with principles of legality, and potentially puts many people at risk of execution.

#execution #DeathPenalty #IndianLawCommission
#KsRadhakrishnan #KSR_Posts



_____________________________________________________

இந்தியாவே துயரத்தோடு அப்துல் கலாமை நல்லடக்கம் செய்வதற்கு முன்னால் அவர் விரும்பாத தூக்குதண்டணை ஒன்றை அவர் நல்லடக்க நாளில் நிறைவேற்றியது வேதனையாக உள்ளது.

யாஹூப் மேமன் இன்று (31-07-2015) காலை 6 :30 மணிக்கு நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

அப்துல்கலாமின் நல்லடக்கம் செய்யும் நாளில் அவருடைய  கொள்கைக்கு மாறான செயலை, பல ஆண்டுகள் நடக்காத தூக்குதண்டனையை இன்றைக்கா நிறைவேற்றுவது?.

இதை டெல்லியில் உள்ள பாதுஷாக்கள் உணரவேண்டாமா?
குடியரசுத் தலைவராவது இன்றைக்கு வேண்டாம் என்று தடுத்திருக்க வேண்டாமா?.


தொடர்ந்து 1980களிலிருந்து தூக்குக் கயிற்றுக்கு எதிராக, ஆந்திராவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் அவர்களுடன் களப்பணி ஆற்றியுள்ளேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வாரிசு குருசாமி நாயக்கரை 1983ல் தூக்குக் கயிறிலிருந்து காப்பாற்றிய போது, சரியான பணி என்றும், தூக்குத்தண்டனை கூடாது என்றும் அப்போது தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

அச்சமயத்தில் தி.மு.கவில் இருந்த திரு.வைகோ அவர்களுக்கு இது குறித்த முழுவிபரமும் தெரியும். அவருடைய முயற்சி இந்தப் பிரச்சனையில் பிரதானமானது.

தூக்குதண்டனையைக் குறித்து, என்னுடைய ”தூக்குக்குத் தூக்கு” என்ற நூலில் இந்தியாவின் தூக்குத் தண்டனைப் பற்றிய வரலாற்றை விரிவாக எழுதியுள்ளேன். இத்தோடு என்னுடைய குறிப்புகள் ...





1. THRICE TO HANG - NEVER TO DIE THE HISTORIC CASE OF GURU SWAMI - 1987






2. தூக்கு தண்டனை தூக்கிலிடப்படவேண்டும். 1983





3. ஒரு தூக்குக் கயிறு தூக்கிலிடப்பட்டது

சதாம் உசேனுக்குத் தூக்குத் தண்டனை! தீவிரவாதி முகமது அப்சலின் கழுத்தில் தூக்குக் கயிறு இறுகுமா? என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று வைகோ அவர்களால் குருசாமி காப்பாற்றப்பட்டார். 

இச்சம்பவம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டாய் நடந்து வரும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.

தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இந்தியாவின் முதல் இன்றும் நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, இந்தியா இழக்கும்! தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக அமையுமேயானால், தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால்; மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக; ஈடு இணையற்றதாக அமையும்.

1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார். குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை வைகோ அவர்களை ஈர்த்தது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வைகோ மனதிற்குள் உறுதி செய்தார். அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. 

குருசாமி போட்ட கருணை மனு இந்திய அரசால் மும்முறை தள்ளப்பட்டுவிட்டது. அவர் தமிழ்நாட்டு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. 

அவரது வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் இந்தியத் தலைமை நீதிமன்றம் தள்ளிவிட்டது. சிறையில் வைகோ அவர்களும், குருசாமியும் அவ்வப்போது பேசிக் கொண்டதில், குடும்பச் சொத்தை வைத்து குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார்.

வைகோ மக்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன் குருசாமியைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தான் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார்.

துரதிர்ஷ்டவசமாக, மேல் குறிப்பிட்ட கருணை மனு தள்ளுபடி ஆகிவிட்டது. (ஏற்கனவே ஒரு முறையும் கருணை முறையீடு தள்ளப்பட்டுள்ளது) தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. வைகோ மீண்டும் ஒரு கருணை முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அய்ம்பது பேர் கையெழுத்திட்டு செப்டம்பர் 8 அன்று (குடியரசுத் தலைவரிடம்) தந்தார். அதை (அப்போதைய) உள்துறை இணை அமைச்சர் வெங்க சுப்பையாவிடம் தருமாறு வைகோ கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தண்டனை தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்பொழுது நாள் செப்டம்பர் 9 ஆகிவிட்டது. குருசாமிக்குச் சாவு மணி அடிக்க இன்னும் அய்ந்தே நாள்தான் உள்ளது. வேகமான வைகோவின் முயற்சியில் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்தானா  கட்டபொம்மன் பரம்பரை தானா என்ற உண்மையைக் கண்டறியும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது. பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. 

சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.

இந்த நேரத்தில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி அளித்த தீர்ப்பில் தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து  இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் அய்ந்தாண்டாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.


1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21 காலையில் தூக்கு நாளாக தேதியும் குறிக்கப்பட்டுவிட்டது. சென்னையிலிருந்த வைகோ அவர்களுக்கு நெல்லையில் இருந்து அவருடைய நண்பர் குட்டி என்ற சண்முக சிதம்பரம் குருசாமி வழங்கிய இடைக்காலத் தடை நீக்கப்பட்டு தூக்கு உறுதியாகிவிட்டது என்ற துயர செய்தியை தெரிவித்தார். 

உடனே வைகோ அவர்கள் சமபத்தில் மறைந்த சீனியர் வழக்கறிஞர் என்.டி.வானமாமலையை இரவென்று பாராமல் அவரை எழுப்பி இப்பிரச்சினையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார். அந்த ஆலோசனையின்படி, டெல்லியில் உச்சநீதிமன்றத்துக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்ககோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

அதனடிப்படையில், தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்றைய தலைமை நீதிபதி கே.பி.என்.சிங் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகையால், அவர் தங்கி இருந்த சென்னை அரசினர் விருந்தினர் விடுதிக்கு இக்கட்டுரையாளர் விரைந்து சென்று அனுமதியைப் பெற்று அந்த அனுமதியின் அடிப்படையில் தந்திகளை ரிட் மனுவாக்கி, அதற்கு ரிட் மனு எண் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நான்காவது கோர்ட்டில் அமர்ந்திருந்த நீதிபதிகள் வி.ராமசாமி, டேபிட் அன்னுசாமியிடம் மறுநாள் திங்கள்கிழமை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது. 

அன்றைக்கு குற்றவியல் வழக்குகளை தலைமையேற்று நடத்தி வந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் பத்மினி ஜெசு துரை அவர்களை முன்கூட்டியே உரிய நோட்டீஸ் கொடுத்து இவ்வழக்கை விசாரிக்கும்பொழுது அரசு தரப்பில் ஆஜராக வந்திருந்தார். இவ்வழக்கில் எவ்வித வழக்குக் கட்டணமும் வாங்காமல் என்.டி.வானமாமலை ஆஜரானார். என்.டி.வானமாமலை நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடினார். அவரோடு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் உடன் ஆஜரானார். 

நீதிபதிகள் என்.டி.வி.யின் வாதங்களைக் கேட்டு 1 மணி அளவில் குருசாமி தூக்குக் கயிறுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கினர். வழங்கியது மட்டுமல்லாமல், அரசு வழக்கறிஞர் பத்மினி ஜெசு துரையிடம் இந்த இடைக்கால உத்தரவை தமிழக அரசுக்கும், பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திற்கும் சொல்லப்பட்டுவிட்டதா? தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதாக போன்ற விவரங்களை உரிய ஆதாரங்களோடு நாங்கள் பிற்பகல் இந்த நீதிமன்றத்திலிருந்து எழும்பும்போது தவறாமல் சொல்ல வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தனர். இவ்வாறு பல தடைகள், குறுகிய அவகாசத்தில் வைகோ அவர்களுடைய மேலாண்மையால் சாதிக்க முடிந்தது.

அதைப்போன்றே உச்சநீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக வைகோ அவர்களை பாராட்டினர். இந்து பத்திரிகை இதுகுறித்து எழுதியது. இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.

வைகோ அவர்களின் வழிகாட்டுதலின்படி இக்கட்டுரையாளர் (கே.எஸ்.இராதாகிருஷ்ணன்) அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல முறையீடு தாக்கல் செய்யும் பொறுப்பை நிறைவேற்றினார். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியது. அவையாவன:

1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் ‘அரிதினும் அரிதான வழக்கு களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.

3. கொலையுண்டவனுக்கு ஆதரவாக நிற்க யாருமில்லை என்ள வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் (குருசாமியின்) நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150 பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். அப்படியே தான் தூக்கிலிடப்பட்டு விட்டாலும் தனது உடல் வைகோவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படத்தனர்.

“தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!” என்றது அந்தத் தீர்ப்பு!

நீதிபதிகளின் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில் டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க அதுவே (அந்தத் தாதமே) மணரண் தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஷேர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர்நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப் பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. 

இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).

மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க நீட் ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை ‘கன்விக் வார்டர்’ ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.

குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்; இல்லை; இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட் ஒருவர்; உயிர் காப்பாற்றப்பட்டது இதுவே முதன் முறை!

குருசாமி வழக்கு மூலம் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.

சங்கொலி, 17.11.2006



4. தூக்குக்குத் தூக்கு - The Death Penalty.








கடந்த 2012ம் ஆண்டில் என்னை பலவகையில் வார்ப்பித்த பொதுவுடைமைவாதியும், பிரபல மூத்த கிரிமினல் வழக்கறிஞரும், எங்கள் நெல்லைச் சீமையைச் சேர்ந்த மறைந்த என்.டி. வானமாமலை அவர்களின் நினைவாக, தூக்குதண்டனை குறித்து இந்தியா மற்றும் உலக அளவில் இதுவரை நடந்த நிகழ்வுகளையும்,  நீதிமன்ற நடவடிக்கைகளையும் குறித்து விரிவான நூல் “தூக்குக்குத் தூக்கு” எழுதி வெளியிட்டேன்.

அது இரண்டாவது பதிப்பாக வர இருக்கின்றது. அதற்கான பணிகளை, இளவல் கார்த்திக்.புகழேந்தி ஆற்றிவருகிறார். அதன் ஆங்கிலப்பதிப்பை கொண்டுவரும்  பணிகளை இராதா இராமச்சந்திரன் ஆற்றிவருகிறார்.

கடந்த, 1984ம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வாரிசான குருசாமி நாயக்கர் ஒரு கொலைவழக்கில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் தூக்குதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் குருசாமி நாயக்கருடைய மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டிக்கு குருசாமிநாயக்கர் சார்பில் அளிக்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடியாகி, இதற்குமேல் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்றநிலை இருந்தது.

அன்றைக்கு வை.கோ அவர்கள் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் என்னிடம். “கட்டபொம்மன் வாரிசைக் காப்பாற்ற வேண்டும் என்ன செய்யலாம்.”என்று என்னிடம் கேட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வழக்குபற்றிய நிலையினைக் குறிப்பிட்டதும் என்னிடம் கோபப்பட்டார்.  அன்றைக்கு இதைக்குறித்து, தலைவர் கலைஞர் அவர்களிடம் இப்படியான பிரச்சனை இருக்கிறது என்றும் வை.கோ அவர்கள் சொல்லியிருந்தார்.

இறுதியில் ஒரு முடிவு எடுத்து, பாளையங்கோட்டை சிறையிலிருந்து குருசாமி நாயக்கர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற  பதிவாளருக்கும், சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் தனித்தனியாக இரண்டுவரி தந்தி கொடுக்கச் சொல்லி,  “என்னைக் காப்பாற்றுங்கள்” என்ற தந்தியை வைத்து, 48 மணி நேரத்தில் முயற்சி திருவினையாக்கும் என்பதின் அடிப்படையில் அவர் கழுத்தை நெருங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிற்றை நீதிமன்ற
மறு உத்தரவால் வெட்டினோம்.

இதற்காக அன்றைக்கு இருநாட்கள் உறக்கமில்லாமல், பாடுபட்டது உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு சாதிக்கமுடியாத சாதனையை நிகழ்த்திய திருப்தியை அளித்தது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1984ல்
உச்சநீதிமன்றமும், குடியரசுத்தலைவரும் தள்ளுபடி செய்த மனுவை, அதன் அதிகாரங்களுக்குக் கீழ் உள்ள உயர்நீதிமன்றம் தூக்குதண்டனையை நிறுத்தி, ரத்து செய்த இந்த சம்பவம்  இந்தியாவிலே முதன்முதலாக நடந்த நிகழ்வு.

தண்டனை ரத்தான உத்தரவு கிடைத்தவுடன், இது உண்மைதானா என்று என்னையே மெய்மறக்கச் செய்தது.
முப்பதாண்டுகளுக்கு முன்  இன்றைக்கிருக்கும் அளவுக்கு ஊடகங்களும், தொலைதொடர்புகளும் இந்த அளவுக்கு இல்லை. இச்சம்பவங்களெல்லாம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. விடுதலைவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வாரிசை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றியது மனசாட்சிக்குப் பெருமையாக இருந்தது.

இம்மாதிரியான நிகழ்வுகள் பல  “தூக்குக்குத் தூக்கு” நூலில் பதிவுசெய்துள்ளேன்.  ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி வேலூர்  சிறைக் கொட்டடியிலிருக்கும், பேரறிவாளன், முருகன் , சாந்தன் போன்றோருடைய தூக்குதண்டனை கேள்விக் குறியாகவே வழக்குமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
வாழ்வா சாவா என்ற இந்த போராட்டத்தில், வழக்கில் சம்பந்தப்படாத இந்த அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ”தூக்குக்குத் தூக்கு”  நூலின் இரண்டாவது பதிப்பில் இன்றையவரை நிகழ்வுகளும் மேம்படுத்தப் பட்ட பதிப்பாக பல செய்திகளைச் சேர்த்துள்ளேன்.

இதுவரை இந்தியாவில் மொத்தம் 125பேர் தூக்குதண்டனைக் கைதிகளாகவும்,  115பேர்  ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்ட கைதிகளாக  உள்ளனர்.
2013ம் ஆண்டில் இறுதியாக  தூக்குதண்டனை  நிறைவேற்றப்பட்டது.
‘இந்திய லா கமிசன்’ தூக்குத்தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்து தன்னுடைய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கவும் இருக்கின்றது.  உலக அளவிலும், இந்திய அளவிலும் தூக்குதண்டனை பற்றிய பல தரவுகளையும் தொகுத்தளித்துள்ளேன்.

அந்த தரவுகளைக் குறித்த செய்திகளை சர்வதேச மன்னிப்பு அவையும், இந்தியச் சிறைகளின் புள்ளிவிபரங்கள் குறித்த தரவுகள் மட்டுமல்லாமல், ஃப்ரெண்ட்லைன் மற்றும்  டைம்ஸ்,  எக்கனாமிஸ்ட்  போன்ற சர்வதேச ஏடுகள், சஞ்சிகைகளில் வெளிவந்த தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தொகுத்துள்ளேன்.

 -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-04-2015.

                                                     ********
Many countries, including India, use it to tackle real or perceived threats.
-By R.K. RADHAKRISHNAN

Every time a judge in an Indian court uses the term “rarest of rare”, what follows is the pronouncement of the death penalty. It appears that the judges go by the crime, the proven charges, and then pronounce the maximum punishment. Amnesty International’s latest report, ‘Death Sentence and Executions in 2014,’ says that 64 persons were sentenced to death in 2014, down from 72 in 2013.

Though 72 persons were sentenced to death in 2013, one hanging was carried out (that of Afsal Guru, who was convicted on a terror charge, that activists say, is deeply flawed). Actually, there have only been three executions in India in the past decade. Accounting for Guru, and the lone terrorist who was captured live after the 26/11 attack on Mumbai, Ajmal Kasab, there was only one more hanging during the period. From 2007 to 2014, as many as 649 persons have been sentenced to death.

Two terror convicts, who were in public memory because of the magnitude of the incidents they were said to be involved in, are on death row: the 2000 Red Fort attack accused Mohammad Arif, whose mercy petition is pending, and the 1993 Bombay serial blasts accused Yakub Memon, whose petition the President has rejected. Both have moved the Supreme Court.

With the Supreme Court laying down guidelines, there can be no more secret hangings. On January 21, 2013, a bench led by then Chief Justice of India P Sathasivam laid down guidelines requiring the government to give at least 14 days’ notice before an execution “to allow the prisoner to prepare himself… (and) have a last and final meeting with his family members”.

Amnesty notes an alarming number of countries used the death penalty to tackle real or perceived threats to state security linked to terrorism, crime or internal instability in 2014. At least 607 people were executed in 22 countries and at least 2,466 men and women were sentenced to death in 55 countries in 2014 alone, the Amnesty report says.

“But, alarming as they are, the figures paint a partial picture of the true extent to which people are hanged, shot or given the lethal injection across the world. The reality is likely to be much gloomier but many governments refuse to come clean about how many people they kill each year. In countries such as Eritrea, Malaysia, North Korea and Syria, very little information about the use of the death penalty is available due to restrictive state practice or political instability,” the report added.






                       







தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைகள் பற்றித் தெரிவிக்காமல் அம்மாநிலங்கள் குறித்து இந்த அட்டவணையில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 68ஆண்டுகளில் 1415பேர் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள் என்று கணக்கிருந்தாலும் இந்தக் கணக்குத் துல்லியமானதா என்று தெரியவில்லை. இதுவரை தூக்கிலிடப் பட்டவர்களின் பெயர்களும், தூக்கிலிடப்பட்ட நாளும் கையில் கிடைத்த தகவல் வரை கீழே உள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No.
Name
Date
Location
State
1
Rasha alias Raghuraj Singh
09-Sep-47
Jabalpur Central Jail
Central Provinces and Berar
2
Mahantappa Gangappa
30-Dec-47
Belgaum Central Jail
Bombay State
3
Singavarapu Mahalakshmudu
03-Apr-48
Rajahmundry Central Prison
Madras Presidency
4
Bhavana Venkadu
13-Apr-48
Rajahmundry Central Prison
Madras Presidency
5
Kancharagunta Subbaiah
24-Apr-48
Rajahmundry Central Prison
Madras Presidency
6
Kalidindi Venkata Narasimha Raju
17-May-48
Rajahmundry Central Prison
Madras Presidency
7
Basapppa Gundappa Hadignal
31-Jul-48
Belgaum Central Jail
Bombay State
8
Uppara Bala Obigan Subanna
13-Jul-49
Rajahmundry Central Prison
Madras Presidency
9
Chenchu China Rami Reddy
13-Jul-49
Rajahmundry Central Prison
Madras Presidency
10
Chenchu Peda Rami Reddy
13-Jul-49
Rajahmundry Central Prison
Madras Presidency
11
Jamula Lakshmi Reddy
13-Jul-49
Rajahmundry Central Prison
Madras Presidency
12
Poreddypedda Thippa Reddy
13-Jul-49
Rajahmundry Central Prison
Madras Presidency
13
Uppara Chinna Pullappa
13-Jul-49
Rajahmundry Central Prison
Madras Presidency
14
Jonada Musalaiah
10-Oct-49
Rajahmundry Central Prison
Madras Presidency
15
Hanmanth Bhimappa Bhaskari
17-Oct-49
Belgaum Central Jail
Bombay State
16
Nathuram Vinayak Godse
15-Nov-49
Ambala Central Jail
East Punjab
17
Narayan Dattatraya Apte
15-Nov-49
Ambala Central Jail
East Punjab
18
Adyayya Parappa Ramgouda
16-Jan-50
Belgaum Central Jail
Bombay State
19
Sanna Hanamappa Yamanappa
20-Feb-51
Belgaum Central Jail
Bombay State
Gadgi
20
Vithoba Krishna Thorat
08-Feb-51
Belgaum Central Jail
Bombay State
21
Sidappa Basavaneppa Shiddanavar
17-Dec-51
Belgaum Central Jail
Bombay State
22
Shyama Charan Shukla/Sukul
21-Jun-52
Alipore Central Jail
West Bengal
23
Dyayappa Adivappa Dadi
22-Aug-53
Belgaum Central Jail
Bombay State
24
Ram Chariter Show
07-Jan-55
Presidency Correctional Home
West Bengal
25
Shivarudrappa Virbhadrappa
15-Dec-55
Belgaum Central Jail
Bombay State
Bhandigani
26
Hanmanth Bhimappa Sullanavar
19-Dec-55
Belgaum Central Jail
Bombay State
27
Yallappa Nilappa Annigeri
30-Dec-55
Belgaum Central Jail
Bombay State
28
Birendra Nath Dutta
28-Jan-56
Alipore Central Jail
West Bengal
29
Tippanna Ningappa Agsar
16-May-56
Belgaum Central Jail
Bombay State
30
Pandurang Tatyasaheb Shinde
18-Jun-56
Belgaum Central Jail
Bombay State
31
Sadashiv Satteppa Khanchanale
09-Jul-56
Belgaum Central Jail
Bombay State
32
Bhimappa Shivarayappa Nandi
31-Jul-56
Belgaum Central Jail
Bombay State
33
Yallappa Somappa Nandi
31-Jul-56
Belgaum Central Jail
Bombay State
34
Parasappa Somappa Nandi
31-Jul-56
Belgaum Central Jail
Bombay State
35
Dundappa Basappa Bhadrashetti
11-Sep-56
Belgaum Central Jail
Bombay State
36
Gopal Chandra Ghosh
08-Feb-57
Presidency Correctional Home
West Bengal
37
Shew Prasad alias Lall
20-Dec-57
Presidency Correctional Home
West Bengal
38
Shamsher Sheikh
10-May-58
Alipore Central Jail
West Bengal
39
Sher Mohammad
10-May-58
Alipore Central Jail
West Bengal
40
Abdul Khaleque
12-May-58
Presidency Correctional Home
West Bengal
41
Asgar Ali alias Ashu
12-May-58
Presidency Correctional Home
West Bengal
42
Gura Sahu/Guna Show
29-May-58
Alipore Central Jail
West Bengal
43
Bachan Singh
23-Jun-58
Tihar Jail, New Delhi
Delhi
44
Ajit Bose
09-Aug-58
Presidency Correctional Home
West Bengal
45
Dhanamath Guru alias Badis
18-Aug-58
Berhampore Circle Jail
Orissa
46
Fakir Ahamed
08-Nov-58
Presidency Correctional Home
West Bengal
47
Bipin Bihari Sarkar
24-Jan-59
Presidency Correctional Home
West Bengal
48
Bishnu Charan Saha
24-Jan-59
Presidency Correctional Home
West Bengal
49
Pyare Lal
16-Jun-59
Tihar Jail, New Delhi
Delhi
50
Gurunath Govindrao Deshpande
27-Jul-59
Belgaum Central Jail
Mysore State
51
Ram Gopal
21-Sep-59
Tihar Jail, New Delhi
Delhi
52
Bholanath Choudhury/Sadhukhan
23-Sep-59
Alipore Central Jail
West Bengal
53
Yamanappa Tippanna Savadi
29-Feb-60
Belgaum Central Jail
Mysore State
54
Chinthala Gangula Reddy
10-Aug-60
Rajahmundry Central Prison
Andhra Pradesh
55
Pulagam Ramarao
12-Sep-60
Rajahmundry Central Prison
Andhra Pradesh
56
Dhan Bhadur
11-Oct-60
Jammu District Jail
Jammu and Kashmir
57
Bhadur Singh
11-Oct-60
Jammu District Jail
Jammu and Kashmir
58
Lalsing Mahasing Gurkha
21-Nov-60
Belgaum Central Jail
Mysore State
59
Narain Singh
07-Dec-60
Tihar Jail, New Delhi
Delhi
60
Jampana Satyanarayana Raju
24-Jan-61
Rajahmundry Central Prison
Andhra Pradesh
61
Sahidul Rahaman
01-Apr-61
Dum Dum Central Correctional Home
West Bengal
62
Durga Prasad Katik
01-Apr-61
Dum Dum Central Correctional Home
West Bengal
63
Bandi Mungulu
11-Apr-61
Rajahmundry Central Prison
Andhra Pradesh
64
Aditya Narayan Chatterjee
02-Jun-61
Presidency Correctional Home
West Bengal
65
Boya Danja Yerramala
17-Oct-61
Rajahmundry Central Prison
Andhra Pradesh
66
Md. Sharif
13-Nov-61
Tihar Jail, New Delhi
Delhi
67
Attar Singh
04-Jan-62
Jammu District Jail
Jammu and Kashmir
68
Ramdeo Kurmi
12-Feb-62
Alipore Central Jail
West Bengal
69
Sovan Mati/Shovan alias Palan Mali
12-Feb-62
Alipore Central Jail, Kolkata
West Bengal
70
Sudama Singh
21-May-62
Dum Dum Central Correctional Home
West Bengal
71
Ram Sankar Singh
21-May-62
Dum Dum Central Correctional Home
West Bengal
72
Sanivarapu Venkateswarlu Reddy
26-May-62
Rajahmundry Central Prison
Andhra Pradesh
73
Babulal Das alias Bhuku Das
08-Jun-62
Presidency Correctional Home
West Bengal
74
Kummara Eswarppa
10-Sep-62
Rajahmundry Central Prison
Andhra Pradesh
75
Ediga
21-Dec-62
Belgaum Central Jail
Mysore State
76
Chintehalapudi Andiah
09-Jan-63
Rajahmundry Central Prison
Andhra Pradesh
77
Sk. Babu Sahib
16-Jan-63
Rajahmundry Central Prison
Andhra Pradesh
78
Harnam Singh
19-Jun-63
Tihar Jail, New Delhi
Delhi
79
Bhagwan Singh
19-Jun-63
Tihar Jail, New Delhi
Delhi
80
Arjunen alias Polka Damb
29-Jun-63
Berhampore Circle Jail
Orissa
81
Nagappa Sahebgoudar Patil
26-Jul-63
Belgaum Central Jail
Mysore State
82
Sitaram Kaher
01-Sep-63
Alipore Central Jail
West Bengal
83
Sultan Mondal
22-Oct-63
Presidency Correctional Home
West Bengal
84
Ram Singh
13-Mar-64
Tihar Jail, New Delhi
Delhi
85
Sohan Singh
31-Mar-64
Tihar Jail, New Delhi
Delhi
86
Boya Sanajjimmappa
08-May-64
Rajahmundry Central Prison
Andhra Pradesh
87
Yashwant Bandu koli
10-Aug-64
Belgaum Central Jail
Mysore State
88
Khetra Mohan Dhali
12-Aug-64
Alipore Central Jail
West Bengal
89
Sathi Venkaiah
23-Nov-64
Rajahmundry Central Prison
Andhra Pradesh
90
Bhramar Singh/Bhomour Singh
01-Apr-65
Alipore Central Jail, Kolkata
West Bengal
91
Suman Singh/Samundar Singh
01-Apr-65
Alipore Central Jail
West Bengal
92
Gansa Pahan
07-Jun-65
Presidency Correctional Home
West Bengal
93
Jwala Ran
29-Dec-65
Patiala Central Jail
94
Srichand
26-Oct-66
Tihar Jail, New Delhi
Delhi
95
Manzoor Ahmad
26-Oct-66
Tihar Jail, New Delhi
Delhi
96
Lochan Pal
26-Jul-67
Tihar Jail, New Delhi
Delhi
97
Hasansab Imamsab Jatagar
17-Aug-67
Belgaum Central Jail
Mysore State
98
Maslansab Dadasab Jatagar
17-Aug-67
Belgaum Central Jail
Mysore State
99
Abdul Fakirsab Jatagar
17-Aug-67
Belgaum Central Jail
Mysore State
101
Polanki Ayyanna
28-Feb-68
Rajahmundry Central Prison
Andhra Pradesh
102
Kurra Chakram
28-Feb-68
Rajahmundry Central Prison
Andhra Pradesh
103
Madkami Mala
18-May-68
Berhampore Circle Jail
Orissa
104
Rayi alias Rayi Narasaih
19-Jun-68
Rajahmundry Central Prison
Andhra Pradesh
105
Penbnagonda Chinna Chenna Reddy
08-Aug-68
Rajahmundry Central Prison
Andhra Pradesh
106
Dharam Singh
22-Jan-71
Patiala Central Jail
107
Raghab Naik
03-Aug-71
Berhampore Circle Jail
Orissa
108
Jai Chand
07-Oct-74
Tihar Jail, New Delhi
Delhi
109
Hukum Chand
07-Oct-74
Tihar Jail, New Delhi
Delhi
110
Malakendra Ramachandra Patil
20-Jun-75
Belgaum Central Jail
Karnataka
111
Sambhaji Vithal Patil
20-Jun-75
Belgaum Central Jail
Karnataka
112
Shivaji Vithal Patil
20-Jun-75
Belgaum Central Jail
Karnataka
113
Girimallappa Rudrappa Madgalli
20-Jun-75
Belgaum Central Jail
Karnataka
114
Rajappa Pandappa Nannavar
20-Jun-75
Belgaum Central Jail
Karnataka
115
Vemenappa Bhimappa Madar
20-Jun-75
Belgaum Central Jail
Karnataka
116
Mohinder Singh
06-Feb-76
Patiala Central Jail
117
Laxman Ram
31-Oct-76
Jammu District Jail
Jammu and Kashmir
118
Amrit Bhushan Gupta
18-Jan-77
Tihar Jail, New Delhi
Delhi
119
Shiv Mohan
07-Apr-77
Tihar Jail, New Delhi
Delhi
120
Baksis Singh
01-Dec-77
Tihar Jail, New Delhi
Delhi
121
Joseph Peter alias Kumar
28-Jan-78
Central Jail, Aguada
122
Sidrai Siddappa Sonnad
18-Mar-78
Belgaum Central Jail
Karnataka
123
Khubanna Jakkappa Godekar
18-Mar-78
Belgaum Central Jail
Karnataka
124
Sabu Balappa Jaljannavar
18-Mar-78
Belgaum Central Jail
Karnataka
125
Dundappa Kashappa Managadi
18-Mar-78
Belgaum Central Jail
Karnataka
126
Basappa Shivappa Hadimani
18-Mar-78
Belgaum Central Jail
Karnataka
127
Kampatimar Shankariya
16-May-79
Jaipur Central Jail
Rajasthan
128
Kuljeet Singh alias Ranga
31-Jan-82
Tihar Jail, New Delhi
Delhi
129
Jasbir Singh alias Billa
31-Jan-82
Tihar Jail, New Delhi
Delhi
130
Balbir Singh
27-Apr-83
Patiala Central Jail
131
Mehar Chand
03-May-83
Jaipur Central Jail
Rajasthan
132
Surjit Singh alias Jagjit Singh
06-May-83
Patiala Central Jail
133
Ujagar Singh alias Santa Singh
09-Oct-83
Tihar Jail, New Delhi
Delhi
134
Kartar Singh
09-Oct-83
Tihar Jail, New Delhi
Delhi
135
Hanamanth Laxmappa Mallyar
09-Nov-83
Belgaum Central Jail
Karnataka
136
Rajendra Jakkal
27-Nov-83
Yerwada Central Jail, Pune
Maharashtra
137
Dilip Dhyanoba Sutar
27-Nov-83
Yerwada Central Jail, Pune
Maharashtra
138
Shantaram Kanhoji Jagtap
27-Nov-83
Yerwada Central Jail, Pune
Maharashtra
139
Munawar Harun Shah
27-Nov-83
Yerwada Central Jail, Pune
Maharashtra
140
Mohd. Maqbool Bhat
11-Feb-84
Tihar Jail, New Delhi
Delhi
141
Gulzar Singh
14-Jun-88
Patiala Central Jail
Punjab
142
Bhajan Singh
14-Jun-88
Patiala Central Jail
Punjab
143
Raj Kumar
05-Jul-88
Patiala Central Jail
Punjab
144
Baba Balyogi alias Ganpat
14-Jul-88
Jaipur Central Jail
Rajasthan
145
Satwant Singh
06-Jan-89
Tihar Jail, New Delhi
Delhi
146
Kehar Singh
06-Jan-89
Tihar Jail, New Delhi
Delhi
147
Gurcharan Singh
16-Jun-89
Patiala Central Jail
Punjab
148
Pritam Singh
16-Jun-89
Patiala Central Jail
Punjab
149
Gulab Singh
28-Jun-89
Ambala Central Jail
Haryana
150
Umaid Singh alias Umaida Ram
08-Sep-89
Jaipur Central Jail
Rajasthan
151
Kartick Seal/Sil
21-Aug-91
Alipore Central Jail
West Bengal
152
Sukumar Burman alias Sutku
21-Aug-91
Alipore Central Jail
West Bengal
153
Ranjeet Singh
28-Nov-91
Jaipur Central Jail
Rajasthan
154
Syo Lal
28-Nov-91
Jaipur Central Jail
Rajasthan
155
Raj Gopal
10-Feb-92
Jammu District Jail
Jammu and Kashmir
156
Sukhdev Singh Sukha
09-Oct-92
Yerwada Central Jail, Pune
Maharashtra
157
Harjinder Singh Jinda
09-Oct-92
Yerwada Central Jail, Pune
Maharashtra
158
Balakrishan
1993
Kerala
159
Muthukkutty Chandran aka "Ripper" Chandran
1993
Central Prison, Kannur
Kerala
160
Laxman Naik
16-Jul-94
Berhampore Circle Jail
Orissa
161
Bheru Singh
20-Aug-94
Jaipur Central Jail
Rajasthan
162
Auto Shankar
27-Apr-95
Salem Central Prison
Tamil Nadu
163
13 males
1995
164
Ramchandra alias Ravjee
04-May-96
Japiur Central Jail
165
1 male
1996
Kerala
166
Surja Ram
07-Apr-97
Jaipur Central Jail
Rajasthan
167
3 males
1997
Andhra Pradesh
168
Dhananjoy Chatterjee
14-Aug-04
Alipore Jail, Kolkata
West Bengal
169
Mohammed Ajmal Amir Kasab
21-Nov-12
Yerwada Central Jail, Pune
Maharashtra
170
Mohammad Afzal Guru
09-Feb-13
Tihar Jail, New Delhi
Delhi
171
Yakub Memon
30-Jul-15
Central Jail, Nagpur
Maharashtra






தூக்குதண்டனை பற்றிய பிற பதிவுகள் : http://ksr1956blog.blogspot.in/2015/07/blog-post_30.html 



திரிபுரா மாநிலத்தில் மரணதண்டனை ஒழிப்புக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் -  Tripura House resolution: No death penalty, only life in jail.
_________________________________________

திரிபுரா மாநில சட்டமன்றத்தில், கடந்த 08-08-2015 அன்று அம்மாநிலத்தில் தூக்குதண்டனை இனி வழங்கப்போவதில்லை. ஆயுள் தண்டனை தான் என்று அம்மாநில முதல்வர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாணிக்க சர்க்கார் முயற்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சிக்குரிய நடவடிக்கையாகும்.

இம்மாதிரி மற்ற மாநிலங்களில் தூக்கு தண்டனைக்கு எதிரான தீர்மானங்கள் வரவேண்டும் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயம் படைத்தவர்களுடைய கோரிக்கை ஆகும்.

மரண தண்டனை புள்ளி விபரங்கள் :


1. ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் புள்ளிவிபரத்தின்படி, கடந்த ஜூலை மாதம் வரை மரண தண்டனை ரத்து செய்த  நாடுகள்  101.

2. உலகமெங்கும்  கடந்த ஆண்டு மட்டும் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள்:  607
(2013ம் ஆண்டை விட 23% அதிகம்)

3. 2014ம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றிய நாடுகள் எண்ணிக்கை : 22

4.  கடந்த ஆண்டு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் : 2,466

5. 2004 முதல் 2013வரை இந்தியாவில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகள் : 1,303

6.அமெரிக்காவில் 2007 முதல் 2012வரை நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் : 220

7. அமெரிக்காவில் 2007 முதல் 2012வரை விதிக்கப்பட்ட மரண தண்டனைகள் : 504

8. இந்தியாவில் 2004முதல் 2013வரை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட மரணதண்டனைகள் : 3,751

9. 2007முதல் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் 186.


The Tripura assembly Friday passed a private members’ resolution proposing that the Centre be asked to replace the death penalty under Indian Penal Code Section 302 with lifetime imprisonment. The decision to accept the resolution, brought before the assembly by former Speaker and opposition Congress MLA Jitendra Sarkar, was accepted by all members of both the Left Front and the Congress except Congress MLA Ratan Lal Nath who said he was neither voting yes nor no.

Chief Minister Manik Sarkar said, “The fundamental right to life and the death penalty are contradictory. There may be confusion among the public that life imprisonment means 14 years in jail, but life imprisonment is now life in prison.” “It is not an experiment where the culprit comes out of jail and we see if the person has been reformed.

Rather, life imprisonment will send a message to society that the penalty for murder is living inside jail for the rest of your life,” he said. Tripura Law Minister Tapan Chakraborty said, “Most developed countries have abolished the death penalty and instead opted for life in prison as punishment.

We also need to have a reformist outlook and do the same. The Constitution guarantees right to life. The death penalty is a form of revenge.” Congress leader Sudip Roy Barman, leader of the opposition, said while he does not know the party’s line, it is his personal view that the death penalty should be abolished. Moving the resolution, 70-year-old Jitendra Sarkar said India continues to have the death penalty but decisions by the court are appealed against before the President, who sometimes accepts and sometimes rejects them.

He said statistics have shown that there is no correlation between the death penalty and the reduction of heinous crimes — murders do not show a declining trend because of the death penalty. Speaking to The Indian Express, Jitendra Sarkar said, “Human life exists by the grace of god and nature, and humans cannot create life. So we cannot murder human beings, this is something being done by extremists. So government should not commit further murder through the death penalty. If instead, we sentence the culprits to life in prison, then the culprit will be repentant.” He said there was no immediate cause for his resolution and that the Yakub Memon case had nothing to do with it.

 “It is only because of humanistic reasons. I also did not consider the party line. It is my personal view,” he said. The Indian Penal Code is a central law that applies across the country, barring Jammu and Kashmir where the Ranbir Penal Code is the relevant legislation to stipulate punishment for criminal offences. Any amendment to the IPC is in the exclusive domain of Parliament and that is why Tripura’s resolution shall be considered by it as a proposal mooted by a state for changing a legal provision.

Such resolutions are usually referred to the Ministry of Law and Justice which examines the proposal and expresses its views on the subject matter. It is then for the cabinet to decide whether such a proposal is to be accepted and if so, what should be its form. An amendment bill will then be required to be drafted by the Law Ministry and the parliamentary process involving both the Houses shall be pursued.

See more : http://ksr1956blog.blogspot.in/2015/07/blog-post_30.html



சந்தோஷ் குமார், சதிஷ் பூஷன் பாரியார் மற்றும் மகராஷ்டிர அரசு, கிஷன்ராவ் காடா மற்றும் மகராஷ்டிரா மாநிலம் குறித்த இரு வழக்குகள் உச்சநீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு, இந்திய சட்ட கமிஷனுக்கு மரணதண்டனை குறித்து தெளிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

மத்திய சட்ட கமிஷன் , “இது முக்கியமான பிரச்சனை. சட்ட வல்லுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தில் முக்கியமானவர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியது.

அரிதிலும் அரிதான குற்றங்களுக்கு மட்டும் தூக்குதண்டனை வழங்கலாம் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. இந்தக் குழுவுக்கு நானும் தெளிவான விளக்கங்களோடு கடிதம் எழுதி இருந்தேன்.

சட்டக் கமிஷனுடைய மூன்றாண்டு காலம் இந்த ஆகஸ்டு மாத இறுதியில் முடியும் தருவாயில் உச்சநீதிமன்றத்தில் அதன் அறிக்கையை இந்தவாரம் தாக்கல் செய்கின்றது.

அதன் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் உரிய திருத்தங்களோடு மசோதாவை தயாரிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் இதுகுறித்து கருத்து அறிய தாக்கீதும் அனுப்பும்.

தூக்குதண்டனை கூடாது என்று ஆதரவான குரல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-08-2015



பயங்கரவாதம் சம்பந்தமான குற்றங்களைத் தவிர்த்து மற்ற குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலானஇந்திய சட்டக் கமிஷன் மத்திய அரசிடம் பரிந்துரைத்து அறிக்கை வழங்கியுள்ளது. 270பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஏன் மரணை ரத்து செய்யப்படவேண்டும் என்ற காரண காரியங்களைக் குறிப்பிட்டுள்ளது.
1962 சட்டக் கமிஷன் தூக்குதண்டனை நடைமுறையில் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

5 நூற்றாண்டில் ரோமன் சட்டப்படி, உடலில் எண்ணை ஊற்றி எரித்தும், உயிரோடு புதைத்தும், எரியும் நெருப்பில் போடுவதும், தூக்கில் போடுவதும், கழுத்தைப் பிடித்து நெரிப்பதும், கல்லால் அடித்து சாகடிப்பதும், அபாயகரமான விலங்குகளுக்கு இரையாக்குவதும், சிலுவையில் அறைவதும், கழுவேற்றுவதும், உடலை நான்கு துண்டுகளாய் வெட்டுவதும், உயிரோடு தோலை உரிப்பதும் என்ற வகைகளில் மரண தண்டனையினை நிறைவேற்றினார்கள்.

ஆங்கிலோ சாக்ஸன் காலத்தில் பிரிட்டனில் இம்மாதிரிதான் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. மெக்ன கர்ட்டா (மகா சாசனம்) பிரகடனத்திற்குப் பின் (1215ம் ) இம்மாதிரியான நடவடிக்கைகள் குறைந்தன.

18ம் நூற்றாண்டில் பாபிலோன் அரசர் ஹமுராபி இயற்றிய சட்டத்தில் தூக்கு தண்டனை சட்டப் பூர்வமாக்கப்பட்டது. ஹமுராபி சட்டத்தின் படி 20குற்றங்களுக்கு தூக்குதண்டனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஹமுராபி அரசனின் சட்டங்கள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போன்ற முரட்டுத்தனமாகவும் நாகரிகமற்றதாகவும் இருந்தன.

உலகநாடுகளில் தூக்குதண்டனையினை இன்றளவிலும் நடைமுறைப் படுத்துகின்ற உள்ள 59நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவரை உலகிலுள்ள 103நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேரவேண்டும் என்பதுதான் மனித உரிமைகள் ஆர்வலர்களுடைய விருப்பமும் ஆகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2015.

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ #DeathSentences






-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-08-2015





*Confident Walking is more Successful than Confused Running*.

*Confident Walking is more Successful than Confused Running*. Confidence doesn't come when you have all the answers. Be brave to live fr...