Monday, October 31, 2022

*நாளை தமிழ்நாடு-66*

#*நாளை தமிழ்நாடு-66*
————————————
*இன்றைய தமிழ்நாடு அமைந்து (1956)வருகின்ற நாளை நவம்பர் 1ம் தேதி அன்று 66ஆண்டுகள் நிறைவு பெறும். இது நமக்கு மகிழ்ச்சியா?* 
*துக்கமா?* 
*என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சிலவற்றை பெற்றோம்*.
*நாளை இது குறித்து விரிவான எனது கட்டுரை*.

#ksrpost
31-10-2022.


#*சரணாகதி* தான் இருக்கும் தளத்தில் ஏதாவது வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு பாசாங்குத்தனமான சரணாகதியாக பிறர் காலில் விழ வேண்டும் என்ற எண்ணம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஏற்பட்டுவிட்டது.

#*சரணாகதி* 
தான் இருக்கும் தளத்தில் ஏதாவது வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு பாசாங்குத்தனமான சரணாகதியாக பிறர் காலில் விழ வேண்டும் என்ற எண்ணம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஏற்பட்டுவிட்டது. 

சரணாகதி என்பது வைணவத்தில் ஆழ்வார்கள் பாசுரங்களில் சொன்ன தெய்வீகமான, உண்மையான தத்துவம். இது அப்படியல்ல. போலித்தனமாக தன்னுடைய வயதையும் யோசிக்காத கையைக் கட்டி நிற்கின்ற சரணாகதி.

 இன்னொரு பக்கம் தனக்குத் திறமை இருக்கின்றதோ, இல்லையோ தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பெரிதாக ஊதி, பிழையான புகழ்பாடக் கூடிய வகையில் தங்களுக்கென்று  பிஆர் வைத்து லட்சங்கள் கோடிகளை வாரியிறைத்து பலர் பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். இது கடந்த பத்தாண்டுகளாக நடக்கின்றது. 

ஓட்டை காசுக்கு விற்பது என்கிற நிலையில் மக்கள் இருக்கும்போது, இதுதான் பொது வாழ்க்கையின் லட்சணம்.

  இந்தப் பொதுவாழ்க்கையில் இப்படிப்பட்ட நாற்றங்களுக்கிடையில் எப்படி உண்மையான களப்பணி ஆற்ற முடியும்? எனவே நான் அடிக்கடி சொல்கிற ‘தகுதியே தடை’ என்ற நிலைப்பாடு உண்மையாகிவிட்டது.  அறம், மெய்ப்பொருள், உண்மையான, நேர்மையான பொதுவாழ்க்கை என இல்லாமல், எல்லாமே பாசாங்கு,துட்டு, காசு என்றாகிவிட்டது. நேற்று வரைக்கும்   கடுமையான விமர்சனம் செய்த ஒருவரின் வாய், இன்றைக்கு  காசு கொடுத்தால் நேற்று விமர்சனம் செய்தவர்களை கூச்சமில்லாமல் புகழ் பாடுகிறது.  

 பொது வாழ்வில் களப்பணி ஆற்றுவது ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது பொதுவாழ்க்கை என்ற நிலை இல்லாமல், சுய வாழ்க்கை, தனிமனிதர் புகழ்பாடுதல் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்ட நிலையில், நமக்கான சில அமைதியான திட்டங்களை வைத்துக் கொண்டு, சுயமாக எவரின் தயவும் இல்லாமல் செயல்படுவது விடுதலை மட்டுமல்ல, 1960, 70, 80,1990வரை அரசியல்  களத்தில் நான் பணியாற்றியவிதமாகவும் அமையும் என்று நினைக்கிறேன்.
***

நண்பர்களே,நெருக்கடிகளின்போதும் காலகட்டங்களிலும் மெளனமாக இருப்பது என்பது   நல்லது எனபார்கள் .ஆனால் நீங்கள் நினைப்பது போல் அடியேன் இல்லை. சொல்ல வேண்டியவற்றை சொல்வேன்.அதை எத்தனை பேர் கேட்பார்கள் எனக்கு தெரியாது. எதை அழிக்க முடியாதோ, எது என்றும் நிலைத்திருக்குமோ அதுதான் மெய்ப்பொருள்.

But friends saying,accept the situation and move on. Unable to yield….

#ksrpost 
31-10-2022.


Sunday, October 30, 2022

#*நிமிரவைக்கும் நெல்லை* #*Tirunelveli District* (then)

#*நிமிரவைக்கும் நெல்லை*
#*Tirunelveli District* (then)
https://youtu.be/Se2QufKzQ78

முதன்முதலாக தமிழ் இலக்கியத்துக்கு ஞானபீட விருது பெற்ற அகிலனுக்கு நூற்றாண்டு விழா.கிரா-100.




தமிழகத்தைப் பொறுத்தவரை அகிலன், த.ஜெயகாந்தன் இருவர் மட்டுமே ஞானபீட விருது பெற்ற படைப்பாளிகள். நானறிந்தவரை பொள்ளாச்சி அருட்செல்வர் ந.மகாலிங்கம், அகிலன், காருக்குறிச்சி அருணாசலம், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் என்.டிவானமாமலை, வழக்கறிஞர் பாளை சண்முகம் என சில முக்கிய புள்ளிகளுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு .




 மதுரையில், கி.ரா.வுக்கு 60 ஆம் ஆண்டு மணிவிழா,  சென்னையில் கி.ரா.70, கி.ரா. 75, ஆண்டு விழாக்கள், 80, 85, தில்லியில் தினமணி- டில்லி தமிழ் சங்கம் 90 ஆம் ஆண்டு விழாக்கள், புதுவையில் கி.ரா.வின் 95 ஆம் ஆண்டு விழா ஆகியவற்றை நான்  முன்னின்று நடத்தியதுண்டு. 95 ஆம் ஆண்டு விழாவுக்கு ( இதன் முதல் நாள் என் தாய் 98 வயதில் எனது கிராமத்தில் காலமானர். செய்யவேண்டிய காரியங்களை  கிரா 95 விழா  அன்று காலை வரை முடித்துவிட்டு சென்னைக்கு விமானத்தில் வந்து விழாவுக்கு புதுச்சேரி சென்றேன்)      அன்று திமுக செயல் தலைவர்,இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துச் செய்தி கேட்டிருந்தேன். அவருடைய உதவியாளர் தினேஷ் அவர்களிடம் அது குறித்து நினைவுபடுத்தினேன். ஆனால் வரவில்லை. ஏனோ தெரியவில்லை.  அப்போது துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யநாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் எல்லாம் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார்கள். அன்றைக்கு யாரும் இவ்வளவு மும்முரமாக கி.ரா.வை கொண்டாடவில்லை. இன்றைக்கு அரசு சார்பில் கி.ரா. நூற்றாண்டு விழாக்கள் நடக்க இருக்கின்றன. மகிழ்ச்சி. அதற்க்கு அழைப்பு கூட இல்லை. அப்போது நான் தலைமை கழக நிர்வாகி வேறு…நான் கொண்டாடிய கி.ரா.மீது கடந்த 2021 முதல் திடீர் பாசம். இதுவும் மகிழ்ச்சியே . ஒருவர் 2016 வரை கிராவை புறக்கனித்தவர் கிராவை அப்பா என உறவு கொண்டவதும் மகிழ்ச்சிதான்.

வரும் 3-11-2022 அன்று காலை அகிலன் நூற்றாண்டு விழா கருத்தரங்கம், சென்னை லயோலா கல்லூரியில் நடக்கவிருக்கிறது. அதில் நான் பங்கேற்கிறேன். எனக்குத் தெரிந்தவரை,  அகிலன் நூற்றாண்டு விழாவை அவர் பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் அண்ணன் புலவர் மதிவாணன் நடத்தியதாக செய்தி வந்துள்ளது. அகிலன் என்ற ஆளுமையை பெரிய அளவுக்கு யாரும் கண்டு கொள்ளவில்லை.

#ksrpost
30-10-2022.

பசும்பொன் தேவர்

  பசும்பொன் தேவர் பிறந்தது மறவர் சமூகம், ஆனால்….

தேவர் உயிரோடு இருக்கும் போதே
அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள்,

தேவரை பற்றி முழுமையான வரலாற்றை
எழுதியது அகமுடையார்கள்,

தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம்,

தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிருத்துவ சமுகம்,

தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து
முதன்முதலில் நூலாக வெளியிட்டது
ஆதரித்த நாயுடு/நாயக்கர் சமூகம்,

தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர்,

தேவரை முதன்முதலில் சொற்பொழிவு
ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர்,

தேவரை பற்றி முதன்முதலில் பாடல்
எழுதியவர் நாடார் சமூகத்தவர்,

தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை
வைத்தது பிள்ளைமார் சமூகம்,

தேவரின் வாழ்க்கை வரலாற்றை
முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்,

தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள்
கொண்டாடியது பர்மா மக்கள்,

இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல்
கொலைக்கும் தேவருக்கும் துளியும்
சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டுபிரசுரம் கொடுத்தவர் பிஎல் சமூகத்தவர்,

தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில்
வைக்கசொன்னவர் வன்னியர்  சமூகத்தவர்

பாராளுமன்றத்தில் தேவர் சிலையை
நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்

சாதிக்காக வாழவில்லை...
சாதித்து வாழ்ந்த
பசும்பொன் !

சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட தெய்வீக திருமகனார்..


Saturday, October 29, 2022

ஈழத்தில் தமிழர்களின் ஆதரவோடு வாழும் தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் நலன் குறித்து தென் மாநில முதல்வர்களை சந்திப்பு.

ஈழத்தில் தமிழர்களின் ஆதரவோடு வாழும் தெலுங்கர்கள்,
மலையாளிகள், கன்னடர்கள் நலன் குறித்து தென் மாநில முதல்வர்களை சந்திப்பு. 
—————————————————-
இலங்கையில் கடந்த நூற்றாண்டில் மலையகத்துக்குத் தமிழர்கள் சென்றது போல,  ஆந்திரத்திலிருந்து தெலுங்கர்களும் அங்கே சென்று மலையகத்தில் வாழந்தனர். அதை போலவே மலையாளிகள், கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு கன்னட மொழி பேசும் மக்கள் அங்கு உள்ளனர். ஈழம் மற்றும மலையக தமிழர்களிடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஏறத்தாழ இருபது, இருபத்தைந்து கிராமங்களில் தெலுங்கு பேசும் மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டாக அங்கே குடியிருக்கின்றனர். அவர்களுடைய பிரச்னைகள் குறித்து தெலங்கானா முதல்வரிடம் பேச   ஹைதராபாத் வந்துள்ளேன் . இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மற்றும் என். சந்திரபாபு நாயுடுவையும் சந்திக்க உள்ளோம். மேலும் கேரள முதல்வர், கர்நாடக முதல்வரையும் சந்திக்க வேண்டும்.

இலங்கையில் தெலுங்கைத் தாய்மொழியாகப் பேசும் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. நிரந்தரமாக ஒரே இடத்தில் இல்லாது இடம்பெயர்ந்து வாழும் இவர்களைப் பல தொண்டு நிறுவனங்கள் குடியமர்த்தி வருகின்றன. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழ்ந்தாலும், வடக்கு-கிழக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பேர் வாழ்கின்றனர். தமிழ்,தெலுங்கு பேசுகின்றனர்.

#ksrpost
29-10-2022.

Thursday, October 27, 2022

My mind reading…..

"Conquer Fear, Conquer All."
"தடைகளை உடைத்து எல்லா வகையிலும் வெற்றி கொள்ள இன்னும் நிறைய    வீரியமாக பயத்தை தள்ளி வெல்லுங்கள், அனைத்தையும் வெல்லுங்கள்."  
…..
Success need not necessarily  be material
But the acceptance of your concept or principles.
Wisdom is not practical but sublime truth…
…..
நண்பர்களே,
டில்லியோ, சென்னையோ தற்போது சற்று அமைதி.
பேச வேண்டிய காலம் வரும்.பேசுவேன்.
…..

Control your emotions. Learn to react less in midst of stupids with artificial masks.




பொறுத்துக்கொள்க.
……
சிறியன சிந்தியாதான் 'தாய் என உயிர்க்கு நல்கி,
தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
 நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?தீயன பொறுத்தி' என்றான் -



 சிறியன சிந்தியாதான்.    -#கம்ப_காவியம்.             (அரியது, பெரியது, இனியது)
…..
Be proud of yourself because you have come a long way of more than fifty years in Poltics. Prove yourself to yourself, not others. It is not thankless job for me. It is part and parcel of my life journey.

The woods are lovely, dark and deep.�But I have promises to keep,�And miles to go before I sleep,�And miles to go before I sleep.
……

“I care for myself. The more solitary, the more friendless, the more unsustained I am, the more I will respect myself.” 
― Charlotte Brontë, Jane Eyre

#ksrpost
27-10-2022

#* செய்ந்நன்றி கொன்ற மகற்கு*….. -#ப்ரியன்- (*மூத்த பத்திரிகையாளர் கல்கி ப்ரியன் அவர்களின், சமூக வலைதளங்களில் என்னைக் குறித்தான அவரின் நேற்றைய (26-10-2022)பதிவு. நன்றி ப்ரியன்*)



-----------------------
                        
 கோவை மாவட்டத்தில் பழங்குடியினர் வாழும் சின்னாம்பதி என்னும் கிராமத்தில் காவல் துறை நடத்திய அராஜகத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.. இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு தொகுப்புக்காக இந்த  சம்பவம் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டன. அந்த நிகழ்வு பற்றி வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய "மனித உரிமைகள் என்றால் என்ன?'" என்ற சிறு கையேட்டில் படித்ததாக ஞாபகம். எனவே அந்த புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தேன்.

அதைத் தேடும்போது ராதா எழுதிய "ஈழத் தமிழர் பிரச்னை- சில குறிப்புகள்" என்ற புத்தகம் கண்ணில் பட்டது. 2012 ஆகஸ்டில்
திமுக நடத்திய  "தமிழ் ஈழம்ஆதரவாளர்கள்"
(TESO) மாநாட்டை ஒட்டி வெளியிட்ட புத்தகம்.  இந்த புத்தகத்துக்கு நான்  பிழை திருத்தியது நினைவுக்கு வந்தது. அது மட்டுமா? டெசோ மாநாட்டை வெற்றிகரமாக நடத்த கலைஞர் வழிகாட்டுதலில் ராதா கிருஷ்ணன் கால நேரம் பார்க்காத கடின உழைப்பும் நினைவு அடுக்குகளில் பளிச்சிட்டது.
      
ஈழ விவகாரத்தில் திமுகவை குறித்த மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட காலகட்டம் அது.எதோ திமுகவே ஈழத்திற்கு படைகளை அனுப்பி தமிழர்களை இனஅழிப்பு செய்து விட்டதாக ஜெயலலலிதா, வைகோ, சீமான்,  இன்னும் பலர் ஆவேசமாக பரப்புரை செய்து வந்தார்கள். ஓட்டு அரசியலில் இந்த விமர்சனங்கள் உண்டாக்கிய பாதிப்பை சரியாக அளவிட முடியாவிட்டாலும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஈழத் தமிழர்களிடையே திமுகவுக்கு  மிகப் பெரிய அவப்பெயரை அந்த  விமர்சனங்கள் உண்டாக்கின.
      
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கலைஞருக்கு தர்மசங்கடமான நேரமது.

திமுகவின் மீது பூசப்பட்ட கறையை முற்றிலுமாக நீக்க முடியா விட்டாலும் சேதத்தை குறைக்க முயன்று கொண்டிருந்தார் அவர்.  அப்போது அவருக்கு உதவியாகவும் உறுதுணையாகவும்  இருந்தவர் தான் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
பிரபாகரன் முதற்கொண்டு அனைத்து ஈழப் பிரமுகர்களோடும் 30, 40 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பட்ட உறவு முறையை பராமரித்து வந்தவர். கேஎஸ்ஆர் திருமணத்தில் தான் பிரபாகரனைப் முதலில் பார்க்கிறார் கலைஞர்.மயிலை சாலைத் தெருவில் பிரபாகரன் ராதாவுடன் இருந்தபோது லட்சிய வெறியோடு வலம் வந்து கொண்டிருந்த பிரபாகரனை நானும் பார்த்திருக்கிறேன்.
       
தனது ஈழத்தொடர்பை பயன்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மட்டுமல்லாது இலங்கையிலிருந்த முக்கிய தமிழ் பிரமுகர்களிடமும் கலைஞரின் எண்ண ஓட்டங்களை எடுத்து வைத்தார் கேஎஸ்ஆர். ஈழத்தமிழர் பிரச்னையில் கலைஞரின் கடிதங்கள், கட்டுரைகள்,திமுகவின் தீர்மானங்கள் ஆகியவற்றை தொகுத்து "கலைஞரும் ஈழத்தமிழரும்" என்ற புத்தகத்தையும்  வெளியிட்டார் ராதா .
       
12-08-2012 அன்று "டெசோ" மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டுககாக "கருத்துரு விளக்கம்" என்ற கையேட்டையும் தயாரித்தார் கேஎஸ்ஆர் . கலைஞரின் வழிகாட்டுதலில் ராதாகிருஷ்ணன் என்ற தனிமனிதனின் உழைப்பு தான் அந்த மாநாடு.அது முடிந்த பின்  ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்துக்கு ஸ்டாலின் போனார் . அப்படியே லண்டனுக்கும் போனார்கள் அவர்கள். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஈழத்தமிழர் பிடிஎப் ஏற்பாடு செய்த மாநாட்டில்,புலம் பெயர்ந்த தமிழீழ பிரமுகர்களைச் சந்தித்து திமுகவின் நிலைப்பாட்டை எடுத்து வைக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு  கேஎஸ்ஆர் மூலம் கிடைத்தது.இதை எல்லாம் பலர் மறந்து விட்டனர்

ராதாவின் அயராத  செயல்பாடுகள் காரணமாக தமிழர்களிடையே  ஈழ விவகாரத்தில் திமுகவின் மீதிருந்த கசப்புணர்வும் வெறுப்புணர்வும் ஓரளவு குறைந்தது என்றால் அது மிகைப்படுத்தல் அல்ல.
  
ஆனால் வைகோ, சீமான் போன்றவர்கள் 2016 தேர்தலுக்கு பிறகும் கூட அந்த வெறுப்பணர்வை விசிறிவிட்டுக்கொண்டுதானிருந்
தார்கள். அரசியல் தட்பவெப்ப நிலை  திமுகவையும் வைகோவையும் நெருங்க வைத்திருக்கிறதது. அவரை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆககியிருக்கிறது. .அதற்கு அவர் தகுதியானவர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
திமுகவின் மீது சீமான் மற்றும் பல்வேறு சிறு குழு தலைவர்களின் விமர்சனங்கள் தொடரும் . முள்ளி வாய்க்கால் நினைவு நாளின்போது அவைகளின டெசிபல் அதிகமாகும்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் பின்னால் அரசியலுக்கு வந்து fast trackல் ஏற்றம் பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு. 1989சட்டமன்ற தேர்தலில் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் நின்ற போது பிரச்சாரத்தை   பற்றி கல்கிக்கு எழுதுவதற்காகச் சென்றிருந்தேன்.அப்போது அவருக்கு உதவியாளராக இருந்தவர் கூட எம்.பி.ஆகும்  அதிசயம் நடந்தது.

கேஎஸ்ஆர் உழைப்பை பிழித்தவர் களுக்கு வாய்ப்பின் வாசலைத் திறக்கும் விசால மனது இல்லாதது  என் போன்ற அவரது பரந்த உலகில் முழுதும் வாழும் எண்ணற்ற நண்பர்களுக்கு வருத்தம் கொடுக்கும் விஷயமே.

ராதாவைப் பொறுத்தவரை "கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே" என்பது "விதி"யாகி விட்டது.அவரே அடிக்கடி சொல்வது போல " தகுதியே  தடை". அறிவார்ந்தவராக இருப்பது மட்டுமல்லாமல் அவர் கட்டிக்காக்கும் சுயமரியாதை கூட அவருக்கு எதிராக  சமயங்களில் சதி செய்யும்.

ஆனால் கேஎஸ்ஆர்  இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர்கிறார். இலங்கை மீது போர்  குற்ற விசாரணை, தமிழ் நாட்டு நலன்; தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சி,  நதிநீர் பிரச்சனைகள், சுற்று சூழல், தூக்கு தண்டனை எதிராக, தேர்தல் சீர்திருத்தம் என்று தனது எழுத்துக்கள் மற்றும் பொது நல வழக்குகள்-சட்டப் போராட்டங்கள் மூலம் சமர் செய்து வருகிறார்.

இந்த சூழலில் திமுகவிலிருந்த தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன்..கலைஞர் மறைவுக்கு பிறகு  கேஎஸ்ஆருக்கும் திமுக தலைமைக்கும்  உறவு சுமூகமாக இல்லை என்பது வெளிப்படையான விவகாரம். புதிய அதிகார மையங்களுக்கு கேஎஸ்ஆர் பன்முகத் திறமை தெரியவில்லையா அல்லது அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ராதா நடக்கவில்லையா என்ற பிரச்னைக்குள் நான் போக விரும்பவில்லை. 

எனவே அவரின் " நீக்கல்" விவகாரத்தை ஒதுக்கி வைப்போம்.
ஆனால் ராதா போன்றவர்கள் கட்சியில் இருந்தால்-அவர்கள் பயன்படுத்தப்பட்டால்-- கட்சிக்குதான் வலிமை என்பது என் கருத்து.இதை கலைஞர் புரிந்து கொண்டிருந்தார். பல பிரச்னைகளில், பின்னணியில் இருந்து செய்யப்படும் யுக்திகளின் மூலம் கட்சிக்கு சாதகமான நிலைப்பாடுகளை உருவாக்கலாம்.அதற்கேற்ற உலக நாடுகள் , டில்லி, பலமாநிலங்கள் தமிழக வரை தொடர்புகளோடும் பரந்துபட்ட பார்வையோடும் இருந்தவர் கேஎஸ்ஆர் . தற்போது திமுக  சந்திக்கும் சில பிரச்சனைகளை சமாளிக்க ராதாவின் ஐம்பது வருட மேலான அரசியல் அனுபவம் உதவியாக இருக்கும்.

ஜெயலலிதா ஊழல் வழக்கை பங்களூருக்கு மாற்றியது; கலைஞர் கைது செய்யப்பட்டபோது  அந்த காட்சியை உள்ளடிக்கிய வீடியோ காஸட்டை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சி க்கு கொண்டு சேர்த்தது;
அறிவாலயம் வெளிகேட்டை உடைத்து உள்ளே போக முயற்சித்த கமிஷனர் முத்துகருப்பனை தடுத்து நிறுத்தியது; மனத உரிமை மீறல்களுக்காக புகார் கொடுக்க ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா அவர்களை சம்பந்தப்பட்ட  மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அழைத்துச் சென்றது;  அண்ணா நகர் ரமேஷ் பிரச்சனை,சைதை-ஆண்டிபட்டி இடைத்தேர்தகளில் ,திமுகவினர் மீது அடக்குமறையை கையாண்ட துணை கமிஷனரை நடுசாலையில் தைரியமாக எதிர் கொண்டது----இப்படி கட்சிசார்ந்த ராதாகிருஷணனின் பங்களிப்புகள் நிறையவே உண்டு.

இதில் பலவற்றை நான் கல்கி இதழில் பதிவு செய்திருக்கிறேன்.ஒருமுறை மறைந்த முரசொலி மாறன் கட்சி பொதுக்குழுவில் பேசும்போது "அறிவாலயத்தைநான் எப்போது தொடர்பு கொண்டாலும் ராதாகிருஷ்ணன்தான் பதில் சொல்கிறார்; மற்றவர்கள் தலைவர் வரும்போது மட்டும் "பிலிம்" காட்டுகிறார்கள்" என்று பேசி விட்டார்.
அன்றிலிருந்து இரு சீனியர்கள் ராதாவுக்கு எதிராக தங்கள் "வேலை களை" காட்டத்துவங்கி விட்டனர்.மாறன் இருந்திருந்தால் கேஎஸ்ஆர்  டில்லி அரசியல் வரை ஏற்றம் பெற்றிருப்பார். இவைகள் பழைய கதைகளாக இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதோ.... முதல் பத்தியில் சொன்ன,  எனக்கு  வேண்டிய புத்தகம் கண்ணில் படும் முன் ராதாவின் மற்றொரு புத்தகம் தென்படுகிறது. 2014ல்  ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தை முன்னிட்டு அவர் எழதிய கலைஞரின் அணிந்துரை இருந்த ஆங்கிலப் புத்தகம்: Impunity in Sri Lanka
இலங்கை மீது போர் குற்றங்களுக்காக "பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை ஏன்  தேவை " என்பதை ஆதாரபூர்வமாக விளக்கும் புத்தகம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல.
இத்தனை வருட அனுபவத்தில், தனது அறிவுசார் தளத்தில்   தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் வகையில் அவரே ஒரு  இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
                    
                        ---------------+--+---
Re posted on 27-10-2022.
#ksrpost

Tuesday, October 25, 2022

#தகுதியே தடை

*சூழ்நிலை எளிதாக இருக்கும் போது  உன்னை யாரென்று தெரிவதில்லை, கடினமாக இருக்கும் போதும், சவால்கள் அதிகமாகும் போதும் தான் உன்னை யாரென்று தெரியும்!*
உன்னை கலங்கடிக்க, எத்தனை கற்கள் பிறர் உன் மீது எறிந்தாலும், நீ முன்னெடுக்கும்முயற்சியாலும், நம்பிக்கையாலும், அவர்களை வெற்றி கொள்…

Train your mind to see the good in every situation.
உன்னை எளிதாக எடுத்துக்கொண்டவர்களுக்குஉன் பணிகள் பதில் சொல்லும். ‘உண்மை தோற்பதில்லை
தாங்கள் என்றும் ஒர் வெற்றியாளரே நல்லோர் உள்ளத்தில் என்றும் உள்ளவரே’ என நண்பர்கள் கடந்த நன்கு நாட்களில் கூறியது புது தெம்பை தந்தது 
#தகுதியே தடை 

#KSRPost
25-10-2022.

Monday, October 24, 2022

Madras High court buildings- Pictures

Madras High court buildings- Pictures



உங்களுக்கான அங்கீகாரம் கூண்டுக்குள் இல்லை

உங்களுக்கான அங்கீகாரம் கூண்டுக்குள் இல்லை. பொது வெளியில் உள்ளது என பல  நண்பர்களின் கருத்து. கடந்த 4 நாட்களில் தமிழகம், வட இந்தியா, ஈழம், வெளிநாட்டு நண்பர்கள், பத்திரிக்கையாளர் சொன்னது.. நடப்பது நடக்கட்டும். பணியில் எப்போதும் போல…. 

K.S.Radha Krishnan Profile- both Tamil & English

K.S.Radha Krishnan Profile

வழக்கறிஞர் கே.எஸ்இராதாகிருஷ்ணன்

 

தமிழகத்தின் அரசியல் களத்தில் 49 ஆண்டுகளாககளப்பணியாற்றுபவர்வழக்கறிஞர்மனித உரிமைகள் மற்றும்சுற்றுச்சூழல் ஆர்வலர்எழுத்தாளர்நூல் ஆசிரியர்கதைசொல்லியின் இணை ஆசிரியர்சமூக வலைதளங்களில்செயல்படுபவர்தமிழகத்தின் அரசியல் கட்சிகளிலேயே முதல்முதலாக செய்தி தொடர்பாளராக 23 ஆண்டுகளுக்கு முன்புநியமிக்கப்பட்டவர்தேர்தல் களங்களை கண்டவர்பல்வேறுபோராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசமும் கண்டதும்உண்டுதொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் என பலஅடையாளங்கள் உண்டுஇப்படி பல தளங்களில் செயல்பட்டுவருபவர்கர்மவீரர் காமராஜர்திமுக தலைவர் டாக்டர்கலைஞர்.வி.கேசம்பத்கவிஞர் கண்ணதாசன்பழ.நெடுமாறன்விவசாயிகளின் தலைவர் சிநாராயணசாமிநாயுடுதிருவைகோ ஆகியவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழகசட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில்போட்டியிட்டார்இவரோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின்தலைவர் பிரபாகரன் ஆரம்பக் கட்டத்தில் தங்கியிருந்து நட்புபாராட்டியவர்அப்போது வெளி உலகத்துக்கே தனது முகத்தைகாட்டாமல் தலைமறைவு வாழ்வில் இருந்தார் பிரபாகரன்எவ்வளவோ பணிகள்காலம் தந்த பாடங்கள் என கடந்த காலச்சக்கரங்கள் வேகமாக நகர்ந்துவிட்டனசுடுமணலில்பயணமோதென்றல் பயணமோ என்று பாராமல் நிம்மதியானஅரசியல் பயணமாக உள்ளதுஏற்ற இறக்கங்கள் எல்லாம்இதில் இயற்கையான நிலைப்பாடு ஆகும்எவ்வளவோ தமிழகஅரசியல் முக்கிய நிகழ்வுகள் கண் முன் நிகழ்ந்துள்ளன.

கே.எஸ்.ஆர் என்ற அழைக்கப்படும் இவர்திருநெல்வேலிமாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தார்சட்டப் படிப்பில் தனது முதுநிலைக்கல்வியை முடித்தபின் 1981 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடுவழக்கறிஞர் கழகத்தில் பதிவு செய்து கொண்டுசென்னைஉயர்நீதி மன்றத்தின் பல்வேறு சிவில்கிரிமினல் மற்றும்பொதுநல வழக்குகளில் வழக்குரைஞராக வாதாடியுள்ளார்.

திருகே.எஸ்இராதாகிருஷ்ணன் அவர்கள் புது தில்லியில்இயங்கி வரும் இந்திய சட்ட நிறுவனத்திலும்சர்வதேச சட்டஅமைப்பின் (இந்தியா பிரிவுமற்றும் இந்தியா மத்தியஸ்தகவுன்சில் ஆகியவற்றில் ஆயுட்கால உறுப்பினராக இருந்துவருகிறார்.

இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவின் இணைச்செயலாளராக இருந்து வருகிறார்பல்வேறு அரசு அமைத்தவிசாரணை கமிஷன்களிலும் வழக்கறிஞராக ஆஜராகி உள்ளார்.

தமிழக அரசின் அறநிலையத் துறையின் சார்பாக பல்வேறுவழக்குகளில் வழக்கறிஞராகவும்தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் கழகத்தின் சட்டஆலோசகராகவும் இருந்து வந்தார்.

கொச்சி துறைமுக கழகத்தின் மத்தியஸ்த அமைப்பின்நடுவராக இருந்தார்.

மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் உறுப்பினராக 12 வருடங்கள் இருந்தார்.

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் பயணிகளின் நலவாரியத்தின் உறுப்பினர்மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின்ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்தார்.

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ்அமைந்துள்ள குழந்தை தொழிலாளர் மற்றும் தொழிலாளர்கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின்உறுப்பினராகவும் இருந்தார்.

.நாமன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பைஉதறி அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவருடைய சகாக்கள் இன்றைக்கு உச்சநீதிமன்றஉயர்நீதிமன்ற நீதிபதிகள்இவரால் அரசியலுக்கு வந்தவர்கள்இவரால் உயர்ந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு முன்னாள்இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்அமைச்சர்கள்.

மக்களுக்கான நீதி சேவை:

  1. சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் மக்கள் நலனுக்காக பல்வேறு பொதுநல வழக்குகளை தொடர்ந்தவர்அதில் நாட்டில் உள்ளநதிகளை தேசியமயமாக்குதல்கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி மாவட்டம்நெய்யாறோடு இணைத்தல்கேரளாவில் உள்ளஅச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் உள்ளவைப்பாறோடு இணைத்து மற்றும் மேற்கே கேரளாவில்மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரைதமிழகத்திற்கு திருப்பி விடக் கோரி என்று 1983 ஆம்ஆண்டு முதல் போராடி உச்ச நீதிமன்றத்தில் போராடி27-02-2012ல் தீர்ப்பையும் பெற்றார்உச்சநீதிமன்றத்தில்சிறைக் கைதிகளுக்கான வாக்குரிமைக்காகவும்பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மூன்றடுக்குமுறைக்காகவும் போராடினார்பல்வேறு ஊழலைஒழிக்க தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவரவும்வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுநலவழக்குகளையும் தொடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் தொடர்ந்தகுறிப்பிடத்தக்க பொதுநல ரிட் மனுக்கள்:

  1. விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள்அவர்களுக்குகடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள்தொடுத்து உரிய ஆணைகளையும் உயர்நீதிமன்றத்தில்பெற்றார்.
  2. தூக்குத் தண்டனை கூடாது என்று இன்றைக்கு எட்டுதிக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. 1983 ல்உச்சநீதிமன்றம் நிராகரிக்கப்பட்டுகுடியரசுத்தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடிசெய்யப்பட்டுஇனிமேல் வேறு வழி இல்லைதூக்குதண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில்தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகுருசாமி நாயக்கரைவெறும் மூன்று வரி தந்தியில்சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில்இருந்து காப்பாற்றியதெல்லாம் கடந்த காலம்இது ஒருஉயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் செய்தகடமையாகும்.
  3. கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகிகோவிலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பயணிகள்வருவதற்கு கேரள அரசு தடை விதித்தையடுத்துசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஅங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள்வழிபாட்டை தொடர வழி செய்தார்.
  4. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின்பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்குஏனையவழக்குகளிலும் வழக்கறிஞராக வாதிட்டவர்.
  5. ஈழத் தலைவர்கள் பாலசிங்கம்சந்திரஹாசன்டாக்டர்சத்யேந்திரா எம்.ஜி.ஆர்ஆட்சிக் காலத்தில்தமிழகத்திலிருந்து நாடு கடத்தியபோது வழக்குத்தொடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்பஅழைக்கப்பட்டனர்இந்த வழக்கை சிறப்பு அனுமதிபெற்று நடத்தினார்.
  6. 1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில்இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்துவெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூடவேண்டி தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறுஇடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுதமிழக அரசு70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்துசுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதுஇந்த உத்தரவால்ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதி மகிழ்ச்சியடைந்துதிருகே.எஸ்.ஆர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்தநன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
  7. 1983 இவர் தொடர்ந்த ரிட் மனுவினால் திருநெல்வேலிமற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு வறட்சிபாதிக்கபட்ட பகுதியாக அறிவித்தது
  8. காவல் நிலையத்தில் இறந்த பலரது குடும்பங்களுக்குபொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டுதொகையை பெற்றுத் தந்துள்ளார்.
  9. விவசாய மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இவர்தொடர்ந்த ரிட் மனுக்கள் பல நிலுவையில் உள்ளன.
  10. காவிரி பிரச்சினையிலும்முல்லைப்பெரியாறிலும்எடுத்துக்கொண்ட வழக்குமன்ற நடவடிக்கைகள்.
  11. சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் சட்ட மேலவைஅமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று உத்தரவு பெற்றார்.
  12. தேசிய மனித உரிமை ஆணையத்திலும்மாநில மனிதஉரிமை ஆணையத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல்செய்துள்ளார்சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில்அப்பாவி மக்கள் கர்நாடக அரசால் மைசூர் சிறையில்வாடியவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்தார்.
  13. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதல்முதலில் வழக்கு தொடர்ந்தார்.

15.மேற்கு தொடர்ச்சி மலைகிழக்கு தொடர்ச்சி மலைபோன்றவற்றின் வளங்களை பாதுகாக்க வழக்கு

  1. தேர்தல் சீர்திருத்தம் குறித்தான வழக்கு
  2. தமிழக நீர்நிலைகளான ஏரிகுளங்கள் பாதுகாப்புகுறித்தான பொதுநல வழக்கு

இவருடைய சீனியர் முதுநிலை வழக்கறிஞர் ஆர்காந்திமறைந்த பிரபல முதுநிலை வழக்கறிஞர் என்.டிவானமாமலைஆகியோர் இவரை வழி நடத்தினர்வழக்குகளில் இவருக்குவழிகாட்டினர்.

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பானபிரச்சினைகள்:

அம்னெஸ்டி போன்ற மனித உரிமை மீறலுக்காக போராடி வரும்உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் பலவற்றுடன்இணைந்து மனித உரிமைகுழந்தை தொழிலாளர் ஒழிப்புபாலியல் தொழில் ஒழிப்பு மற்றும் பல்வேறு சமூகப்பிரச்சினைகளுக்கான தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்தமிழகத்தில் விவசாயப் போராட்டம் வலுவாகஅரசை எதிர்த்து நடந்தபொழுது அதில் பங்கேற்றவர்இவர்சொந்த கிராமத்தில் காவல்துறையினரி துப்பாக்கிச் சூட்டிற்கு 8 விவசாயிகள் பலியானார்கள்அந்த வழக்கையும் சென்னைஉயர்நீதிமன்றம் வரை நடத்தி விவசாயிகளுக்கு விடுதலையும்பெற்றுத் தந்தார்.

மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு வழக்குகளில்தண்டிக்கப்பட்ட சிறைக்கைதிகளுக்கு ஆதரவாகவாதாடியுள்ளார்ஊடகத்தில் மனித உரிமை குறித்துதொடர்ந்து எழுதிவருவது மட்டுமல்லாமல் பலபுத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்மேற்குத் தொடர்ச்சிமலையில் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து பலவிதமானஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

எழுத்துப் பணி:

எழுத்து மற்றும் இலக்கியத்தின் மீது இவருக்கு உள்ளஈடுபாட்டினால் ஊடகத்துறையிலும் அச்சுத்துறையிலும்அனைவராலும் அறியப்படுபவர்திருகிராஜநாராயணன்அவர்களுடன் இணைந்து கதைசொல்லி எனும் காலாண்டுஇலக்கிய இதழை நடத்தி வருகிறார்.

இதுவரை இவர் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதிபல நுல்களை வெளியிட்டுள்ளார்அவற்றில் குறிப்பிடத்தக்கசில:

  1. உரிமைக்கு குரல் கொடுப்போம்
  2. மனித் உரிமைகள் என்றால் என்ன?
  3. நிமிர வைக்கும் நெல்லை
  4. தமிழ்நாடு 50
  5. கரிசல் காட்டில் கவிதை சோலை பாரதி
  6. கனவாகிப் போன கச்சத்தீவு
  7. ஈழத் தமிழர் பிரச்சினை
  8. சேதுக் கால்வாய் – ஒரு பார்வை
  9. தூக்குக்கு தூக்கு
  10. முல்லைப் பெரியாறு
  11. மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்
  12. தமிழ்நாடு சட்ட மேலவை
  13. திமுகவும் சமூக நீதியும்
  14. Eelam Tamil’s Issue
  15. Impunity in Sri Lanka
  16. மாநில சுயாட்சி
  17. தமிழக நதிநீர்ச் சிக்கல்கள்
  18. தமிழக விவசாயிகள் போராட்ட வரலாறு
  19. தமிழக பிரச்சனைகள்சிக்கல்கள்திட்டங்கள்
  20. கதைசொல்லி – கே.எஸ்.ஆர்குறிப்புகள்

தமிழக நதி நீர் பிரச்சினைகள்மத்திய-மாநில உறவுகள்தமிழக விவசாயிகளின் போராட்டம்பாஞ்சாலங்குறிச்சி சீமைசரிதம், Aspects of Democracy & Concepts, தினமணிகட்டுரைகள் தொகுப்பு என இவரின் நூல்கள் அச்சில் உள்ளன.

 

தொடர்புக்கு:
4/359, 
ஸ்ரீ சைதன்யா அவென்யூ
அண்ணா சாலைபாலவாக்கம்,
சென்னை 600041
இணையம்:  www.ksradhakrishnan.in
மின்னஞ்சல்rkkurunji@gmail.com

முகநூலில் பின்தொடர:  https://www.facebook.com/ksradhakrish   |  https://www.facebook.com/RadhakrishnanKS1956/

ட்விட்டரில் பின்தொடர:  https://twitter.com/KsRadhakrish

வலைப்பூவில் பின் தொடர:    http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in

 


 

Profile

K.S.Radhakrishnan – The Profile

 

K S Radhakrishnan is a Political Analyst, Legal Expert, Human Rights and Environmental Activist, Writer and Columnist hailing from Tamil Nadu. He has been actively involved in Tamil Nadu politics for more than 45 years.

Twenty-five years ago, he was elected as the first Spokesperson of a Regional Political Party in Tamil Nadu. He has worked closely with great leaders like Kamarajar, Kalaignar M. Karunanidhi, EVK. Sampath, Poet Kannadasan, Pazha Nedumaran , Farm Folk Leader C Narayanswamy Naidu, Karnataka Former Chief Minister Devaraj Urs, Srilankan TULF Leader A. Amirthalingam, Vaiko and others .

He also participated in Tamil Nadu Legislative Assembly Elections in the year 1989 and 1996 in Kovilpatti.

LTTE Leader Prabakaran, in his early days, stayed along with him and have huge respect for him.

Fondly called as KSR, he was born on December 31, 1956, in an agricultural family in Kurunjakulam village, Tirunelveli District, Tamil Nadu. After completing his post graduation and a degree in Law, he got himself enrolled as an Advocate with the Bar Council of Tamil Nadu in 1981 and started practising writ in the original side and appellate side of civil and criminal jurisdiction of the High Court of Judicature, Madras and arbitration as well.

Milestones

He is a Life Member of Indian Law Institute – New Delhi, Member of International Law Association (India Chapter) and Indian Council of Arbitration. He is the Joint Secretary of Indian Lawyer’s Association (Tamil Nadu Chapter). He has held various positions in the Public and Government sectors. In the past, he had provided his services as an Advocate representing the State for the HR&CE, Government of Tamil Nadu and was a Legal Advisor for Tamil Nadu Civil Supplies Corporation and Tamil Nadu Industrial Corporation.

He served as an Arbitrator for Cochin Port Trust, Govt. of India. He was a former member of Central Board of Film Certification (under Ministry of Information and Broadcasting, Government of India). He held the position of Committee Member at CBFC for three consecutive terms spanning 12 years.

As a member of many organizations, he has extended his services to satisfaction for all stakeholders. He was a member of Central Advisory Board on Child Labor and Worker’s Education Board (both under Ministry of Labor) and ZRUCC and SRUCC (under Ministry of Railways).

He is a Life Member of Alliance Françoise De Madras and Common Cause (Public Interest Litigation Forum).

Practising the Law for the People

He is recognised and appreciated for his eminence in legal activism. He has filed Public Interest Litigations (PIL) in the Supreme Court of India and in the High Court of Madras for common causes. Some of the best-known petitions were the ones that seek Nationalization of Rivers, Linking of National Rivers and diverting the west-flowing rivers from Kerala to Tamilnadu (originating from the Western Ghats) since 1983. Elaborate very broad electoral reforms PIL on the file of the Supreme Court of India. He had also fought for voting rights for Prisoners and 3-tier system for Panchayat Raj in the Supreme Court of India.

In the High Court of Judicature at Madras, he has filed some significant writs.

  1. In 1983, his writ petition to arrest pollution and undertake remedial actions to prevent industrial hazardous materials emitted by Tamilnadu Cements in Alankulam, Virudunagar district was successful enough to make an interim order possible and consequently the plant was closed down till rectification. The High Court had directed the Government of Tamil Nadu to sanction over 70 crores INR to modernize the plant and implement environment-friendly measures. His timely intervention was a lifesaver for the farmers of Rajapalayam and Sivakasi areas.
  2. As the State Government of Kerala made impediments to the devotees of Kannagi Temple in the Cumbum Valley, he persuaded for the police protection to the worshippers from Tamil Nadu and restored the People’s right to worship in the High Court of Madras.
  3. In 1983, his writ made the Government to declare the districts of Tirunelveli and Tuticorin as drought-hit districts due to monsoon failures.
  4. He filed many PILs on the cases related to custodial deaths and secured compensation for the victims.
  5. His writs on agricultural and environmental issues are still pending for the Court to intervene.
  6. He had filed writs with National Human Rights Commission-New Delhi and State Human Rights Commission-Chennai on various compelling issues.
  7. He was the first writ petitioner for the Koodankulam issue.
  8. Also filed PIL for the preservation of Western Ghats and Eastern Ghats in Madra High Court and also subsequently National Green Tribunal, New Delhi.
  9.  

He has appeared as Counsel to many inquiry commissions appointed by the State government and for many Public Interest Litigations. As a Political Activist, he has seen the inner walls of the prisons quite often.

Human Rights and Environmental Issues

Actively associated with international organizations like Amnesty International, National and Regional Agencies of Human Rights and Democracy, he has undertaken various studies and research on the status of civil liberties, child labour, prostitution and other social issues. He is a warrior against the death penalty and appeared as a counsel for the convicts. He writes extensively on Human Rights in the media and published several books on this subject. His extensive study about environmental issues in the Western Ghats is commendable.

Writing

He is a writer and litterateur and a notable personality in the media and publishing circles. He is the joint editor of Kathai Solli – a folklore magazine along with Thiru Ki. Rajanarayan (Veteran Tamil Writer) and an avid reader of Modern Tamil Literature.

He has written many books in English and Tamil. Some of the important titles are:

  1. Urimaikku Kural Koduppom (On political, economical and human rights issues)
  2. Manitha Urimaigal Endral Enna? (A primer on human rights)
  3. Nimira Vaikkum Nellai (A history of Tirunelveli district)
  4. Tamil Nadu – 50
  5. Karisal Kaatil Kavithai Cholai Bharathi
  6. Kanavaaki Pona Katcha theevu
  7. Eeelam Tamil’s Issue
  8. Sethu Canal Project
  9. 123 – India Odathey! Nil!! (Nuclear Agreement with US)
  10. Thookkukku Thookku
  11. Mullai Periyaru Dam Issue
  12. Human Rights Act – Some Notes
  13. Tamil Nadu Legislative Council
  14. DMK – Social Justice
  15. Impunity in Sri Lanka
  16. History of Tamilnadu Agriculture Agitation
  17. State Autonomy
  18. Collection of KSR Columns in Newspapers and Weekly magazines
  19. Tamilnadu Rights and Pending projects
  20. Tamilnadu Water Issues and Disputes
  21. Veerpandia Kattabomman’s legacy.

Currently, he is working on projects that document the Central and State relationship in India. The edited volumes exploring the federal concept will be shortly published. Books exclusively on Tamil Nadu River Water issues, History of Farmers agitations in Tamil Nadu.

 

Address:

4/359, Sri Chaitanya Avenue, Anna salai

Palavakkam

Chennai – 600 041

India

Reference Link:

Web:  www.ksradhakrishnan.in

Email: rkkurunji@gmail.com

Facebook:https://www.facebook.com/ksradhakrish   https://www.facebook.com/RadhakrishnanKS1956/

Twitter:  https://twitter.com/KsRadhakrish

Blog:   http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in

-- 
K. S. Radhakrishnan,

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...