Wednesday, May 31, 2017

மாறுபட்ட தீர்ப்புகளை உயர்நீதிமன்றங்கள் வழங்குகின்றன.

ஒரே பிரச்சனையை குறித்த வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகளை உயர்நீதிமன்றங்கள் வழங்குகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மாட்டிறைச்சி தொடர்பான வழக்கில் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது. ஆனால் கேரளா, ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்கள் இதற்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. 

இதுபோலவே நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளில் உயர் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகள் ஒரே வழக்கு சிக்கல்களுக்கு மாறுபடுகின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம். சிக்கல்களை ஒன்றாக பாவிக்க வேண்டுமென்ற நிலைப்பாடு இருந்தும் இந்த முரண்பாடுகள் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தொடர்கின்றது. இதுவரை நூற்றக்கும் மேலான வழக்குகளில் இப்படியான போக்கு நடந்தேறியுள்ளது. 

அரசியலமைப்புச் சட்டத்திலும், நீதிமன்ற நடைமுறையிலும் இந்த சமன்பாடற்ற நிலையை போக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

#உயர்நீதிமன்ற_தீர்ப்புகள்
#highcourt
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-05-2017
 

பனாமாவின் முன்னாள் அதிபர் கொடுங்கோலம் மானுவெல் நொரீகா மரணம்.

சர்வாதிகார, கொடுங்கோலர்கள் பட்டியலில் உகாண்டா வின் இடியமின், ஜெர்மனின் ஹிட்லர் , கம்போடியாவின் போல்பார்ட், லைபீரியாவின் சார்லஸ் டைலர், சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் ஆகியோர் வரிசையில் இடம் பெற்று இருந்த பனாமாவின் அதிபர் மானுவெக் நொரீகா மரணம் என்ற செய்தி அந்நாட்டு மக்களிடையே மகிழ்சியை செய்திகளின் வழியாக காணமுடிகின்றது. இந்த வரிசையில் இன்னும் இரு கொடுங்கோலர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவர் ஜிம்பாப்வே யின் ராபர்ட் முகாபே, இலங்கையின் ராஜபஷ்சே.

Happy London History Day

Happy London History Day. We’ll be sharing posts about the Great Clock of Westminster which started working today in 1859.
Clock Tower and New Palace Yard seen from the tower of St Margaret's Church, 1897
 

Tuesday, May 30, 2017

Nethaji


ONGC எண்ணெய் நிறுவனம்

இன்று (30/5/2017) தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் உள்ள மணிநகர் ஆற்றுப்பாலத்தில் செயற்கை கோள் மூலம் எண்ணெய் எடுக்கும் பணிக்காக சர்வே நடத்தி வருகிறது.

Never get too attached to something that isn't yours.
Purpose of suffering is to connect you to your Self. It indicates that you got carried away by all the transient things around you.

Monday, May 29, 2017

கி.ரா அவர்களின் 95வது பிறந்தநாள் விழா.


பொடிக்கும்,தாடிக்கும் இடையில் அதாவது அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளுக்கும் , தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்கும் இடையில் செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்தவர் கி.ரா என அன்புடன் அழைக்கப்படும் கி.இராஜநாராயணன் அவர்கள். 
கி.ரா அவர்களின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு புதுவையில் கதைசொல்லி, பொதிகை- பொருநை-கரிசல் சார்பில் விழா நடைபெற உள்ளது. நீண்ட நாடகளாக எதிர்பார்த்த ஞானபீட விருது இந்தாண்டில் 95வது அகவையில்
அவருக்கு கிடைத்துவிட வேண்டும் என்று ஆவலுடன் உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தகுதியற்றவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் முனைவர்(கெளரவ டாக்டர்) பட்டம் அளித்து வருகின்றது. மனோன்மணி பல்கலைக்கழகம் மட்டுமே கி.ராவை கெளரவித்தது.

சென்னை, மதுரை என இரு பலகலைக்கழகங்கள் மட்டுமே இயங்கி வந்த காலக்கட்டத்தில் நானும், கவிஞர் மீராவும் இவ்விரு பலகலைகழகத்தில் எது முந்திக் கொண்டு முனைவர் பட்டம் அளிக்கப் போகின்றது? என ஒருவருடன் ஒருவர் வினவிக் கொள்வோம். அவருக்கு கிடைக்க வேண்டிய டாக்டர் பட்டமும் தள்ளிக் கொண்டே போகின்றது. எதிர்ப்பார்ப்புகளுடன் காலச்சக்கரம் ஏறத்தாழ 35 ஆண்டுகள் சுழன்று விட்டன.

கி.ரா அவர்களின் பிறந்தநாள் விழா புதுவையில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப் பட்டுள்ளது. அவ்விழாவில் கவிஞர் மீரா அவர்களின் அண்ணம் பதிப்பகத்தின் சார்பில் அதன் உரிமையாளர் கதிர் அவர்கள்5 நூல்கள் வெளியிட உள்ளார். இந்நிகழ்ச்சியை கழனியூரான் ஒருங்கினைத்து உள்ளார்

அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

#கிராபிறந்தநாள்விழா
#கவிஞர்மீரா
#ஞானபீடவிருது
#அண்ணம்பதிப்பகம்
#KSradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-05-2017

The Statue of Liberty

The Statue of Liberty surrounded by scaffolding as workers complete the final stages in Paris (1885)




#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
28-05-2017


Light House, Chennai.

among all the pretty words
we're just looking
for an open heart
and a little bit of truth...
- Lord Byron.
இங்கே பலருக்கு கட்சி ஆரம்பித்ததுமே முதலமைச்சர் கனவு வந்துவிடுகிறது. சிலருக்கு முதலமைச்சர் கனவு வந்த பிறகுதான் கட்சியே தொடங்க படுகிறது. மக்களை படித்தோம், மக்களுக்காக போராடினோம், மக்களுக்காக வாதாடினோம் என்பதே இல்லாமல் இப்படி விபரீதமான ஆசைகள்...
'ஊர் சேராது ......!'
Light house shade, Chennai.

Sunday, May 28, 2017

Always fight for the things you love.
Never give up on something you really want. It’s difficult to wait, but worse to regret.
Sometimes the only person you can trust is yourself.


டான் குயிக்சாட் கதைதான்

தேர்தலில் மக்கள் ஆதரவு பெற்று தமிழகத்தை தாராளமாக யார் வேனுமானலும் ஆட்சி செய்யட்டும்....
தடை ஒன்றும் இல்லையே.
அது; அ,ஈ என யாரும் இருக்கலாம்.
வாயால் கோட்டை கட்டலாம் .....
காரிய சித்தமில்லையே....
வாய் சொல்யாடல் ஊர் சேராது.
டான் குயிக்சாட் கதைதான்.....??!!

Saturday, May 27, 2017

ஒசாமா பின் லேடன் குறித்த சமீபத்தில் வெளியான The Exile

வாசித்ததில் நேசித்தது. 

ஒசாமா பின் லேடன் குறித்த சமீபத்தில் வெளியான The Exile எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அந்த புத்தகத்தில் அவரது மறைவிடங்கள் குறித்தும் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஆனால் கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை. ஆனாலும் அந்த புத்தகத்தில் வெகுஜன பிரதிநிதி ஒருவரின் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.  அக்கருத்து மனதை கவர்ந்தது. 
 

அவர் கூறிய கருத்தின் சாரம்சத்தை உங்களுடன் பகிர்கின்றேன். 

நிரந்தரமான இந்த உலகில் ஆணென்றும் பெண்ணென்றும், அதிசய பிறவி என்றும் பலரும் பிறக்கலாம், வாழலாம், மண்ணில் புதையுண்டு போகலாம்.  ஆனால் மனித நேயம் என்னும் மானிட குணம் தான் என்றும் நிலைத்து நிற்கும். அதுவே வரலாற்று பாறைகளில் கல்வெட்டாக நிலைபெறும்.  

சண்டைகள்,கலகங்கள், மனித
உயிர்களை அழித்தல் என்பது தேவைதானா? சூழ்ச்சிகளாலும் வன்மங்களாலும் விளைவது  
என்னவாக இருக்கும்? நிச்சயம் தவறான உதாரணமாகவே இருக்கும். 

தன் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களை எட்டி உதைப்பதும் அத்துடன் நில்லாமல் உயரத்தின் உச்சத்திற்கு ஏறிச் சென்று உதவியவர்களை அலட்சியப்படுத்துவதும் ஜனசக்தியின் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தன்னை நம்பியவர்களையும், தனக்கு உதவியவர்களையும் ரணத்தில் தள்ளிவிட்டு சென்றால்  தள்ளிவிட்ட உன் மரணம் கூட  மக்களின் மனதில் அனுதாபத்தை பெற முடியாது. 

மனித நேதத்திற்கு புறம்பாக நடந்துக் கொண்டால் அதனை வரலாற்றுப் பிழையாகவே எதிர்காலம் வாசிக்கும். உன்னை நம்பியவர்களை உனக்கு கரம் கொடுத்தவர்களை காயப்படுத்தாதே. 

அந்த புத்தகத்தில் படித்ததில் பிடித்த கருத்து இது. 

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது. 

#மனிதநேயம் 
#ஒசாமாபின்லேடன் 
#Exile 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷணன்
27-05-2017
 

Friday, May 26, 2017

பம்பை - அச்சன்கோவில் - தமிழக வைப்பாறுடன் இணைப்பு.

பூகோள அறிவின்றி அமைச்சர்கள் கோரிக்கை வைப்பது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதகாதா?

பம்பை - அச்சன்கோவில் - தமிழக வைப்பாறுடன் இணைப்பு. 
-------------------------------------
சற்று முன் டெல்லி வட்டாரத்தில் இருந்து ஒரு செய்தி கிடைத்தது. அந்த செய்தி என்னவெனில் , வைப்பாறு கேரளாவை சார்ந்தது என்றும் அச்சன்கோவில், பம்பை ஆற்று நீர்  வைப்பாறில் கலந்து அரபிக்கடலில் கலங்கின்றது எனவும் , இதில் பிரதமர் தலையிட்டு தமிழகம் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் வைத்தாக நம்பப்படுகின்றது. 
 


வைப்பாறு தமிழகத்தின்  எல்லைக்குட்பட்டது. அங்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டு வறண்டு காணப்படுகின்றது. மேலே கிடைக்கப் பெற்ற செய்தி உண்மையெனில் பூகோள அறிவில்லாத அமைச்சர்களை நாம் தேர்வு செய்ததற்கு வெட்கி தலைக்குனிய வேண்டிய நிலை.

தேசிய நதிநீர் இணைப்புக் குறித்து  உச்சநீதி மன்றத்தில் நான் தொடுத்த பொதுநல வழக்கில் நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டு , கங்கை-மகாநதி-கிருஷ்ணா-காவேரி-வைகை-தாமிரபரணி-குமரியில் உள்ள நெய்யாற்றில் கலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும். கங்கை குமரியை தொட வேண்டும்.

கேரளாவில் உள்ள அச்சன்கோவில்- பம்பை நதிப்படுகைகளை தமிழகத்தின் சாத்தூர் பகுதிதில் உள்ள வைப்பாறு உடன் இணைக்கப்பட வேண்டும். இத்துடன் கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலந்து வீணாகும் நீரை கிழக்கு முகமான தமிழகத்தின் பக்கம் திருப்பி விடவேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து  1983ல் வழக்கு தொடுத்து உச்சநீதிமன்றத்தில் 27-02-2012ல் என்னுடைய வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்றேன்.

அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 1975 முதல்  43 வருடங்களாக விவாதிக்கப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்தை பரிந்துரைத்தது.  உண்மை நிலை இவ்வாறு இருக்க வைப்பாறு எப்படி கேரளாவின் எல்லைக்குட்பட்டு இருக்கும்? பூகோள அறிவின்றி அமைச்சர்கள் கோரிக்கை வைப்பது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதகாதா?

தேசியநதிநீர்இணைப்பு 
#அச்சன்கோவில்பம்பைவைப்பாறு 

#KSRadhakrishnanpostings
#KSrpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-05-2017
 

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி

ஆழ்ந்த இரங்கல்கள் 

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றேன். 

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அவரை இழந்து வாடும் மாவட்ட கழகத்தினருக்கும், குடும்பத்தினருக்கும் என் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
 

தட்டார்மடம் எனும் கிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் தேங்காய் சிரட்டை தொழில் செய்து வந்தார் பின்னர் கீதா ஹோட்டல்ஸ் என வணிகத்தை விரிவாக்கம் செய்து முன்னேறியவர். 

1980களில் அறிமுகமானவர். எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் பி.எச்.பாண்டியன் சட்டப் பேரவை தலைவராக இருந்த போது,இவர்  தூத்துக்குடி நகர மன்ற தலைவராக இருந்தார்.  1982ல் அவர் மீது கடன் கொடுத்த பணத்தை விட அதிக வட்டி வசூலிக்கின்றார் என்று வழக்கு பதிவானது. உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கை நடத்தி   வழக்கில் இருந்து குற்றமற்றவர் என நிருபித்து வழக்கில் இருந்து விடுவித்தேன். அன்று எனது அறைக்கு வந்து வக்கிலய்யா என கையைப் பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தது நினைவிற்கு வருகின்றது. அதன் பின்னர் சென்னை வரும் போதெல்லாம் என்னை பார்க்காமல் தூத்துக்குடி செல்ல மாட்டார். 

1989 தூத்துக்குடியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இரா.கிருஷ்ணன் என்பவர் வெற்றி பெற்றது செல்லாது என வழக்கு தொடுத்தார். அந்த வழக்கிலும் வெற்றி தேடிதந்தேன். 
என் ஆழ்ந்த இரங்கல்கள்.

1983ல் கோவில்பட்டியில் எடுத்தப்படம். — with Sembakkam Jaikumar.

Thursday, May 25, 2017

தேவையற்ற சர்ச்சைகளும் வெற்றுக் கூச்சல்களும்

தமிழக அரசியலில் யார் அரசியலுக்கு வரவேண்டும், யார் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என தற்போது விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு சில அரசியல்வாதிகள் அரசியலில் முதல்வர் பதவியை அடைவதற்காக தமிழராக பிறந்தவர்கள் தான் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் என பேசுவதை கேட்க நேர்ந்தது. அவர்கள் இப்படி பேசுவதற்கு முன், தமிழகத்தில் பிறக்காமலேயே, இந்த மண்ணுக்கு போராடாமலேயே எப்படி தமிழகத்தின் முதல்வராக முடியும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டாமா?

இந்திய அரசியல் சட்டத்தின்படி, தேர்தலில் போட்டியிட இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். இந்திய குடிமகனான எவரும் இந்தியாவின் எந்த தொகுதியிலும் தேர்தலில் போட்டியிடலாம் என அரசியல் சட்டம் தெளிவுபடுத்துகிறது. இந்த அரசியல் சட்டத்தை ஏற்று தேர்தலில் போட்டியிட்டவர்களே இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இதை மதிக்காதவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் விதிமுறைக்குட்படுவதாக வேட்புமனுவில் கையொப்பமிட்டு தேர்தலில் போட்டியிடுவது நகைமுரண்.

‘வந்தேறிகள்’ என இவர்களால் அழைக்கப்படுபவது எந்த விதத்தில் நியாயம்?
அவர்களும் இந்நாட்டு மக்களே. இப்படி பேச எப்படி சட்டம் அனுமதிக்கிறது எனத் தெரியவில்லை. எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற இம்மாதிரி நடவடிக்கை ஆபத்தானது என்பது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு புரிதல் வேண்டும்.

அப்படியானால், இந்தியரும் மற்றும் தமிழ் சகோதர, சகோதரிகளோ உலகின் பல நாடுகளில் பிரதமராகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மேயர்களாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று உள்ளனர். இவர்கள் மேலை நாட்டில் வெள்ளையர்களால் தேர்தலிலும் வென்றுள்ளார்கள்.

தென் அமெரிக்க நாடான கயானாவின் பிரதமர் நாகமுத்து எனும் தமிழர்.

சிங்கப்பூரின் துணைப்பிரதமர் தர்மன் ஷ்ன்முகரத்தினம் இந்தியாவின் பூர்வ குடிமகன். மேலும் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

நார்வே, ஓஸ்லோ மாநகரின் துணை மேயர் காம்சி (எ) ஹன்சிகா குணரத்னம் எனும் தமிழர் ஈழத்தை சார்ந்தவர்.

கனடா, ஸ்கார்புரோ ரூச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபேசன் எனும் தமிழர் பொறுப்பில் இருந்தார்.

மேலும் பிரான்ஸ், பிரிட்டனின் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் சில தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரமீளா ஜெயபால், கமலா ஹாரீஸ், ரோகித் கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமீ பேரா ஆகியோர் அமெரிக்க காங்கிரஸ் செனட்டிலும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அமெரிக்க அரசு பரிபாலணத்திலும் முக்கிய பங்காற்றுகின்றனர். கடந்த 14.05.2017 டில்லியில் இருந்து வரும் பிரபல ஆங்கில ஏடான இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், "POWERPLAY: THE NEW INDIAN AMERICAN NETWORK IN WAHSINGTON" என்ற முழுப்பக்க கட்டுரையில் அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இவர்களுடைய பணிகள் அமெரிக்கர்களால் வெகுவாக பாராட்டப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வந்தேறிகள் என்றால் இந்த பெருமை இந்தியாவிற்கு கிடைத்திருக்குமா?

இப்படி நீண்ட பட்டியலே உள்ளது.

இவர்கள் எல்லாம் வந்தேறிகள் என அந்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருந்தால் இந்த பொறுப்பிற்கு வர இயலுமா அங்கே வாழும் தமிழர்களின் நிலை உயருமா? ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தமிழை தேசிய மொழியாக அறிவிக்கவும் கற்பிக்கவும் கோரிக்கை வைக்க முடியுமா?

தமிழ்நாடில் பிறந்து இந்த மண்ணின் மைந்தராக மண் வாசனையோடு தாய்மொழி தமிழை ஏற்றுக்கொண்டு இந்த மண்ணின் உரிமைக்காக இதயசுத்தியோடு போராடி உழைத்தவர்கள் தமிழ்நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்று சர்ச்சைக்குரிய வாதத்தை வைப்பது ஆரோக்கியமற்ற நிலையாகும். தேவையற்ற குழப்பங்கள், கடுமையான சிக்கல்களுக்கும் வித்திடும்.

தமிழகத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அப்புறப்படுத்துங்கள். இதில் எவ்வித தயவு தாட்சண்யமும் வேண்டாம். அதை விடுத்து வந்தேறிகள் என அவசியமற்ற பிரச்சனைகளை உருவாக்குவது நல்லதல்ல.

வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பினால் சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும். உலகமயமாக்கல் என்கிற நிலையில் இந்த வாதங்கள் அனைத்தும் எடுபடாது.

தேசாந்திரிகளும், உலக நாயகர்களும் இருக்கும் வரை இதுபோன்ற விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதுவே உண்மையும், யதார்த்தமும்.
ஒரு மாநிலத்தில் பிறந்து இன்னொரு மாநிலத்தில் முதல்வராக முடியுமா? என்றொரு கேள்வியும் எழுந்தது.

இதற்கு,
• அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் சர்பானந்தா பிறப்பால் ஒரிசாவை சேர்ந்தவர்,
• குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானி பிறப்பால் பர்மாவை சேர்ந்தவர்.
• உபியின் முதல்வர் யோகி பிறப்பால் உத்ரகாண்டை சேர்ந்தவர்.
• டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஹரியானாவை சேர்ந்தவர்.

இவர்களே இந்தியாவில் எந்த பகுதியில் பிறந்தாலும் தான் விரும்பும் தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் செல்வாக்கை பெற்று முதல்வர் பதவிக்கு வரலாம் எனும் முன்னுதாரணங்கள்.
இப்படியான நிலையில் இந்த சர்ச்சைகள் தவிர்ப்பது நல்லது. இதற்கு மேல் இதுகுறித்து பேசுவதும், விவாதிப்பதும் நல்லதுமல்ல, நாகரிகமும் அல்ல.

#வந்தேறிகள்
#பிறநாட்டில்_தமிழர்களுடைய_தேர்தல்_வெற்றிகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-05-2017

Maha rani Gayatri Devi

It is Gayatri Devi's  8th BirthAnniversary today. She was born in London. She loved horses and was an excellent rider and polo player. She was very fond of cars and is credited with importing the first Mercedes-Benz W126, a 500 SEL to India. She started schools in Jaipur, the most prominent of which is the Maharani Gayatri Devi Girls’ Public School, established in 1943. DidYouKnow that she ran for Parliament in 1962 and won the constituency in the Lok Sabha in the world's largest landslide, winning 192,909 votes out of 246,516 cast. This has been confirmed by the Guinness Book of Records. She was considered a fashion icon and featured in Vogue magazine's Ten Most Beautiful Women list.

We all know she was Maharani of Jaipur and daughter of Ccoch Bihar family. Imp aspect of her life is the fact that she worked hard for welfare of ppl of Rajasthan becoz she eas also 3 time MP from Jaipur having won Lok Sabha elections in 1962 1967 and 1971. Perhaps she eas first from Indian royal families to enter public life. Her entry in public life started in real sense the women empowerment in a conservative state like Rajasthan. She was MP from an opposition party and she also opposed policies of Congress and Indira Gandhi. But Mrs Gandhi was a clever politician. Looking to the popularity and influence of Jaipur royals, Mrs Indira Gandhi in 1968 appointed husband of Maharani Gayatri Devi ji, Maharaja Maan Singh as India's ambassador to Spain. Maharaja Man Singh also performed duties as Rajpramukh-Governor of Rajputana from 1949-1956. Maharaja was also a regular trained commissioned officer of British army in 1933. Later on he was busy in adm duties. British govt in India assigned him honarary rank of Lt. General of Indian army.

Gayatri Devi was considered arguably as the most beautiful woman  of her times -- known for her sheer chiffon saris and matchless pearl necklace !! She was a princess of Cooch Behar State and was the third wife of Maharaja Sawai Man Singh of Jaipur !! 
It was because of her massive election victory as the Swatantra Party candidate that irritated Indira Gandhi so much that she and the Rajmata of Gwalior were jailed.

I had the privilege  of meeting Maharani  Gayatri Devi and had watched a polo match with her. She was a Great Lady  !!

#GayatriDevi
K. S . Radhakrishnan 
25/5/2017
 

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம், 
மாக்கியவெல்லியம்,
சாணக்கியம், 
நெறி சார்ந்த அரசியல், 
நேர்மையான அரசியல், 
தந்திர உபாயங்கள், 
ராஜதந்திரங்கள், 
அரசியல் சூழ்ச்சிகள், 
அரசியல் குடிலங்கள், 
மக்கள் நல அரசு (Welfare State), ஜனநாயகம், 
குடியரசு, 
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, 
விலை போன வாக்குகள் (மன்னிக்கவும். வாக்கு விபச்சாரம்), 
பிரச்சார அரசியலும், 
உறுதிகளும்-மறதிகளும், 
ஊழலும், ஊழலை நியாயப்படுத்த சேவை கட்டணம், 
நீதிவிசாரணைகள், 
நீதிவிசாரனை அறிக்கைகள், 
கிடப்பில் போட்ட அறிக்கைகள்,
ஜனநாயகத்தின் இறையான்மை மக்கள் சக்தி தான்.
இப்படியான 
பதங்களுக்கு, சொல்களுக்கு அகராதியில் நேர்மையான, யதார்த்தமான,பின்நவீனத்துவ பாணியில் அர்த்தங்கள் என்ன?

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
25/5/2017
#ksrposting
#ksradhakrishnanposting
Photos:Ancient Rome
British Parliament,London
  

The Naxalbari Movement 1967-72

 
When on 25th May 1967, a police party shot dead 8 tribal women and 3 tribal men in the village of Naxalbari in the terai region of Bengal, Charu Mazumdar announced that this was the beginning of a revolution. Standing with him in support of such an announcement were Kanu Sanyal and a local tribal leader Jangal Santhal.
.
In the elections of February 1967, had failed to get elected. He and his supporters, including Charu Mazumdar attributed his failure to his standing the rights of tribals. Mazumdar opined that force was the only way tribals could get what was rightfully theirs.
.
Following upon this, on 18th May 1967, under the leadership of Jangal Santhal, Kanu Sanyal and Charu Mazumdar, the tribal peasants of a few villages in the terai region of Bengal formed a 'Peasants Council'. This council resolved to forcibly take away the harvest from land on which tribal peasants were forced to work but which otherwise was owned by jotedars. Individual tribal peasants were allotted small portions of the land of local jotedars. Then they, along with people assigned by the Peasant Council, forcibly harvest crop on the jotedars land.
.
Jyoti Basu, the leader of the Communist Party of India (Marxist), was the Home Minister of Bengal at this time found himself incapable of talking to those who insisted on the use of such force or of stopping them.
.
On 23rd May 1967, a police party headed by inspector Sonam Wangdi entered the village called Kheru Jote to arrest those involved in forcible harvesting.
.
The police party was surrounded by a group led by Jangal Santhal and Sonam Wangdi was killed in a hail of arrows. The rest of the police party ran away dropping their weapons. The tribals picked up the weapons and later deposited them at the police station. While it may be said that the police was incompetent, it also needs to be noticed that this sort of violence meeting a police party was unprecedented.
.
In search of the killers of the sub-inspector, two days later a larger troop of police entered a neighbouring village called Naxalbari. When a crowd gathered to oppose the entry of the police into the village, the police opened fire. Here they shot dead nine tribal men and women. Many women had children tied to their back. But the police, we have already noticed that the Bengal police was particularly incompetent, was skittish and seeking revenge. It was the 25th of May 1967.
.
At this Charu Mazumdar, the young man who had been advocating tribal peasants to take possession of the crop and the land, announced the beginning of an all round insurrection.
.
On 28th June 1967, Charu Mazumdar addressed a gathering of tea plantation workers and tribal peasants and announced the plan to forcibly grab the land of tyrannical landlords for use by peasants.
.
Groups of tribals armed with bows and arrows attacked the properties of jotedars and police stations. A few government officials, shopkeepers and landlords were lynched. This was very much in line with frequent tribal uprisings that had happened across India over many centuries. However, there was one important addition to the uprising this time. This was China. Charu Mazumdar and his friends insisted that their way of using violence and murdering people was justified by the ideology of Marxism as practised in China. Kanu Sanyal would later say that he had reservations about choosing such a murderous path. But he would wait for two years before breaking away from Charu Mazumdar.
.
China, ever eager to foment trouble in India, quickly announced an ideological affinity to the course of action that Charu Mazumdar and his friends advocated. Radio Beijing came out with a long broadcast on how important it was for this insurrection to succeed and how much help China was willing to offer for its success. It offered all support, financial and weapons, to the political grouping that Charu Mazumdar had formed.
.
Home Minister Jyoti Basu proved entirely incapable of handling the killings and burnings that followed. The terrorised people did not know what to do.
.
While Jyoti Basu sat helpless in Kolkata, Naxalbari was flooded by other ministers from the communist party. Among them was Harekrishna Konar. The ministers insisted on directing the police force from their camp offices inside the police station. Effectively this meant preventing the police from taking any action against anyone. At the same time the Communist ministers made no effort to reach out to the angry tribal peasants either. This resulted in an increase in attacks on non-tribals, and those who owned property.
.
It was almost as if the state had dissolved in this part of Bengal.
.
Finally, by July the government began to take some action. Announcements were made demanding the surrender of wrong-doers. By August, as a result of police action but mostly because many who had participated in the first flush of violence did believe that they had done wrong, some 1000 persons had been arrested.
.
Charu Mazumdar, Kanu Sanyal and Biswanath Mukherjee, the three non-tribals who claimed to lead, escaped.
.
Such chaos lasted till 1972 when elections were held once again.
.
In March 1972, the people voted out the leftists and self-proclaimed revolutionaries who were running the government and gave a majority to the Congress party.
.
The new government was headed by the lawyer Siddharth Shankar Ray. He ordered the police to take effective action against those egging on the tribals to rebel. The police resorted to various illegal measures. These included the custodial murder of Charu Mazumdar.
.
Kanu Sanyal and Jangal Santhal were arrested, tried and imprisoned.
.
Kanu Sanyal was finally released from jail in 1977. He returned back to organising the tribal peasants and help them fight for their rights. But this time he did not advocate armed insurrection. He also remained in the forefront of opposition to land acquisition for building the Tata Nano factory at Singur in 2006. On 23rd March 2010, he hanged himself at his home at village Seftullajote near Siliguri.
.
Jangal Santhal was released from prison in 1979. Life outside had changed, he discovered. No one was interested in him or his ideas of armed insurrection any more. By now he had four wives and found it difficult to manage them. He also turned alcoholic. He died in 1987, unsung.

Wednesday, May 24, 2017

pathetic India.

The photograph portrays the family spend their sleep under Urinals. The worst thing is the today's pathetic India.

இந்த படத்தை பாருங்கள். தங்குவதற்கு இடமின்றி  சிறுநீர் கழிக்கும் ஒதுங்கிடத்தில் படுத்து உறங்குகிறது இந்த குடும்பம். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியா. 

அவர் அரசியலுக்கு வருவாரா, இவர் அரசியலுக்கு வருவாரா என்று தறுதலைகளை பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு இருக்கிறோம்.   யதார்த்தம் என்ன என்று  பார்க்காதவரை நல்லது சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருக்கும். 
நாடு எங்கோ போகிறது.......???
..............
சாரயாத்துக்கு இந்த  நாட்டுல   தண்ணீர் கொடுக்கிறது.  விவசாயத்துக்கு  தண்ணீர் இல்லை......

தொலைக்காட்சி வெட்டியான விவாதங்களும் கால விரயமும்.

பயனளிக்காத தொலைக்காட்சி வெட்டியான விவாதங்களும் கால விரயமும்.

-------------------------------------

சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்கள் கண்ணியமற்ற முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டுக்கு நன்மை பயக்காத, ஆரோக்கியமற்ற விவாதங்களில் கலந்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றேன். அதே சமயத்தில் அன்புக்கூர்ந்து அழைக்கப்படும் போது என்ன கருப்பொருள், யாருடன் விவாதிக்க போகின்றோம், யார் நெறியாளர் என்பதை எல்லாம் அறிந்த பின்னரே விவாதத்தில் கலந்துக் கொள்வது குறித்து முடிவு எடுக்கின்றேன். 


எந்த வகையிலும் பயனளிக்காத தலைப்புகள், கண்ணியமற்ற பேச்சாளர்கள், விவாதத்தை ஆரோக்கியமாக கொண்டு செல்லாத நெறியாளர்கள் , கருத்தை சொல்லும் போது வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கும் எதிர் கேள்விகளை வைக்கும் தொலைக்காட்சி பணியாளர்கள் நம்மை சில சமயங்களில் கொதிப்படைய வைக்கின்றன. 


அவ்வாறு நெறியற்ற முறையில் விவாதம் நடத்தப்படு போது விவாதத்தில் இருந்து முதன் முதலாக  வெளிநடப்பு செய்து கண்டனத்தை பதிவு செய்ததும் அடியேன் தான்.


விவாதத்தின் அடிப்படையில் நமது கருத்தை முன்வைக்க அனுமதி மறுக்கும் போதோ அல்லது திட்டமிட்டே இடையூறு ஏற்படுத்தும் போது நாம் விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதில் தவறு இல்லை. விவாதத்தில் வெளிநடப்பு செய்வதால் நாம் தோல்வியடைந்ததாக கருதுகின்றார்கள். நிச்சயம் இல்லை. கருத்தை முன்வைக்க அனுமதிக்கப்படாத போது அங்கு நாற்காலியை நிரப்ப நாம் எதற்கு அவர்களுக்கு பயன்படு பொருளாக காட்சியளிக்க வேண்டும். அப்படியென்ன அவர்கள் தொலைக்காட்சி வாயிலாக நம் முகத்தை காட்டி பிரபலம் அடைய வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது? 


பெரும்பாலான விவாதங்கள் பிரச்சனைக்கு   காணும் வழியையோ அல்லது அதற்கான வழிமுறைகளையோ பற்றி பேசுவதில்லை. வெட்டியாக கூடி கலைகின்றனர். 


நேரத்தை விரயம் செய்யும் இதுபோன்ற விவாதங்களும் , தொலைக்காட்சி விவாதங்களும் மக்களின் அறிவுக் கூர்மையை பாழ்படுத்துகின்றன.


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 

பண்பில்சொல் பல்லா ரகத்து.


#தொலைக்காட்சிவிவாதம்

#ஆரோக்கியமற்றவிவாதத்தில்வெளிநடப்பு 

#KSRadhakrishnanpostings

#KSRpostings 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

24-05-2017

தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகு

     காங்கிரஸ் கட்சியில் 1960 மற்றும் 70களில் ஏ.பி.சி. வீரபாகு நாடறிந்த அக்கட்சியில் முன்னனித் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 60 ஆண்டுகளுக்கு முன்பே தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரியை நிறுவி பிற்பட்ட அந்த பகுதிக்கு கல்விச்சேவையை வழங்கினார். வ.வு.சி ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரியையும் நிறுவினார்.

      இந்த ஆண்டு இவருடைய நூற்றாண்டாகும். என்னுடைய கிராமத்து வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர். அவருடைய மடியில் தவழ்ந்தவன் அடியேன். அவருக்கு என்னுடைய பெரியப்பா வி.இராமகிருஷ்ணன் நெருங்கிய சகா ஆவார்.
      பெருந்தலைவர் காமராஜர் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் செலவு பொறுப்பை ஏ.பி.சி யிடமும், தேர்தல் நடத்தும் பொறுப்பை பழ. நெடுமாறனிடம் ஒப்படைத்தார். அச்சமயத்தில் அந்த தேர்தலில் மாணவர் காங்கிரஸ் அமைப்பின் வழியே தேர்தல் பணி ஆற்றியது உண்டு.
      வெள்ளை வெளேரன்று கதர் ஆடையோடு எப்பொழுதும் இருப்பார். தூத்துக்குடி நகர வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். நெல்லை மாவட்ட அரசியலில் முக்கிய புள்ளி ஆவார். அவரது புகழ் ஓங்குக.

#தூத்துக்குடி
#ஏபிசி_வீரபாகு
#வஉசி_கல்லூரி_தூத்துக்குடி
#apc_veerabaghu
#voc_college_tuticorin
#ksradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-05-2017

சென்னை ராஜதானியின் முதலமைச்சர் முனுசாமி நாயுடு (1885 – 1935)

சென்னை ராஜதானியின் முதல்வராக நீதிக் கட்சியைச் சேர்ந்த திருத்தணி முனுசாமி நாயுடு பொறுப்பில் இருந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து பனகல் அரசர் மறைவிற்கு பிறகு 1928ல் நீதிக் கட்சியின் தலைவராக பதவி ஏற்கின்றார். இவருடைய குடும்பத்தினர் என்னுடைய மனைவி வகையில் உறவினர் ஆவார்கள்.
இவரது ஆட்சிக்காலத்தில் வறட்சியும், பொருளாதார சிக்கல்களும் கடுமையாக இருந்தது. இவர் ஜமீன்தாரர்களுடைய வெட்டி ஜம்பத்தை விமர்சித்து அதற்கு தடையாகவும் இருந்தார். இவருக்கும் பொப்பிலிய அரசருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டன. 
இவர் பழகுவதற்கு எளிமையானவர். 1950, 60 களில் நாடாளுமன்றத்தில் தன் பேச்சாலும், வாதத்தினாலும் கவனத்தை திருப்பிய என்.ஜி. ரங்காவின் நெருங்கிய நண்பராவார்.

Bollina Munuswamy Naidu (1885 – 1935) was the Chief Minister of Madras Presidency from October 27, 1930 to November 4, 1932. He was conferred 'Diwan Bahadur' by British Government.

Munuswamy Naidu was born in Tiruttani, Madras Presidency in 1885 in a family of agriculturists. He studied law and worked as a lawyer and businessman. He was one of the early members of the Justice Party. On the death of the Raja of Panagal in 1928, Munuswamy Naidu was appointed President of the Justice Party.

Munuswamy Naidu served as the President of the Justice Party from 1928 to 1932. Under his leadership, the Justice Party won the 1930 Madras Assembly elections and Munuswamy Naidu served as Chief Minister or Premier from 1930 to 1932. During Naidu's tenure, Madras was engulfed in a financial crisis arising out of the Great Depression. His tenure is also remembered for his clash with zamindars and his rivalry with the Raja of Bobbili. Naidu resigned in 1932 sensing serious opposition in party ranks. He lost the leadership of the party to the Raja of Bobbili and eventually retired from active politics. Munuswamy Naidu died in 1935. Munuswamy Naidu was a close associate of N. G. Ranga. Naidu's leadership is also remembered for his efforts to remove restrictions on Brahmins joining the party.


#சென்னை_ராஜதானி
#முதலமைச்சர்_முனுசாமி_நாயுடு
#Bollina_Munuswamy_Naidu
#Madras_Presidency
#chiefminister_munusamy_naidu
#ksradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

23-05-2017
இந்தியா டுடே, அவுட்லுக் போன்ற ஆங்கில வார ஏடுகள் வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், சிறந்த கல்லூரிகள் என்று ஆய்வு செய்து முடிவுகளை தரவரிசை அடிப்படையில் வெளியிடுகின்றன. இதில் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற அனைத்து இந்திய அளவில் உள்ள கல்லூரிகள் அடங்கும்.
நானும் கடந்த இருபது ஆண்டுகளாக கவனித்து வருகின்றேன். நான் படித்த சென்னை சட்டக் கல்லூரி குறித்து தரவரிசை பட்டியலில் எதுவும் செய்தி வராதது வேதனையான விடயமாகும். உயர்ந்த கம்பீரமான,  பழமையான இந்த செம்மண் நிறக்கட்டிடம் பல ஆளுமைகளை கடந்த நூற்றாண்டுகளில் உருவாக்கியது. இந்திய அரசியல் சாசனத்தினை வரைந்தவர்கள், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்ட நிபுணர்கள், பிரபல வழக்கறிஞர்கள் என பல சிறப்புகளை பெற்ற மேன்மக்களை உருவாக்கிய இந்த கல்லூரியைப் பற்றி சிறப்பான செய்தி வரவில்லை. ஆனால் அலிகார், டெல்லி, குருசேத்திரா, கல்கத்தா, பூனே, பாட்னா, பெங்களூரு, பம்பாய், டேராடூன் போன்ற இடங்களில் உள்ள சட்டக் கல்லூரி குறித்து தரவரிசையில் குறிப்பிடும் பொழுது நான் படித்த பழமையான சென்னை சட்டக் கல்லூரி சிறந்த கல்லூரியாக தரவரிசையில் இடம்பெறவில்லை என்று ஆதங்கம்.

#சென்னை_சட்டக்கல்லூரி
#சென்னை
#Madras_Law_College
#Chennai
#ksradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

23-05-2017

 
 

Tuesday, May 23, 2017

உடமைகள் இழந்தோம், உணர்வை இழந்தோம். வெறும் கூடுகளாக ஊர்வலம் வருகின்றோம்

 
-------------------------------------

 ஈழப் பிரச்சனையில் இன்றைய நிலை என தலைப்பிட்டு நேற்று பதிவு செய்து இருந்தேன். அந்த  முகநூல் பதிவை வாசித்த நண்பர் செல்வநாதன் ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  யாழ்ப்பானத்தில் இருந்து அலைபேசி வழி என்னை தொடர்புகொண்டார்.  இலங்கை  சாவகச்சேரியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த  அமரர்.நவரத்தினம்  அவர்கள் 1982 ஆம் ஆண்டு செல்வநாதனை அழைத்து வந்து சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார். எனது உறவினரான , கோவில்பட்டி அருகே உள்ள களாம்பட்டியை சேர்ந்தவருமான  பேராசிரியர்.வெங்கடசாமி அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.  சந்தித்து பேசிய பின்னர் படிப்பதற்கு இடம் அளித்தார். அத்துடன் நில்லாமல் நானே செல்வநாதன் மற்றும் சில ஈழ மாணவர்களுக்கு உள்ளூர் காப்பாளராக  ( local guardian)  கையெழுத்தும் போட்டேன். மாணவப்பருவத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்த அவர்  பட்டப்படிப்பை முடிந்து, பிற நாடுகளுக்கு சென்று பின்னர்  இலங்கை திரும்பிய அவர்,  தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மீண்டும்  ஈடுபடுத்திக் கொண்டார். அப்போதெல்லாம் யார் யாரெல்லாம் புலிகள் இயக்கத்தில் இருக்கின்றார்கள் என்று  யாருக்கும் தெரியாது. எங்கிருந்தோ தகவல் வரும்,  யாரிடமிருந்து வருகின்றது என்றது கூட தெரியாது. அளிக்கப்பட்ட வேலையை செய்வார்கள். மிகவும் இரகசியமான முறையில் இயங்கினார்கள். 

அங்கு நிலைமை எப்படி இருக்கின்றது எனக் கேட்டேன். நடைபினங்களாக வாழ்வதாக கூறினார். ஏன் இப்படி நம்பிக்கை இழந்து  இவ்வாறு பேசுகின்றீர்  என ஆறுதலாக கேட்க மட்டுமே என்னால் முடிந்தது. என்னிடம் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூட வார்த்தைகள் இல்லை.  அவர் அளித்த தகவல்கள் கண்ணீரை வரவழைத்தது. 1983- 84 காலக்கட்டத்தில் கூட கொடுமைகளை,  கொடூரங்களையும் சந்தித்தோம். ஆனால் அப்போது வாழ்வை துறந்து விட வாய்ப்பு இருந்தது. இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. குடும்பத்தினருக்கு விசாரனை என்ற பெயரில் பிரச்சனைகளை அளித்துவிட்டுப் போக மனமில்லை. வாழ வழியில்லை, சாகவும் வழியில்லை என கேள்விப் பட்டிருக்கின்றோம் இப்போது அதனை அனுபவித்து வருகின்றோம். இறுதிப்போரில் காணமல் போனவர்கள் பற்றியும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்தும்  எந்த செய்தியும் இல்லை,  அவர்கள் இறந்து போய்விட்டனர் என கருமகாரியம் செய்யவும் மனமில்லை என்றார். 

மேலும், தமிழர்களின் விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டு  சிங்களவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை.  அரசாங்க வேலைகள் யாவும் சிங்களர்களுக்கே அளிக்கப்படுகின்றது. தனியார்த் துறையிலும் அவர்களுக்கு அடிமைகளாகவே பணியில் அமர்த்தப்படும் நிலை. சுயதொழில் செய்ய இயலாத நிலை. இது தான் நாங்கள் உடமைகள் இழந்து, உணர்விழந்து  உயிரை மட்டும் இழக்காமல் நடைபினங்களாக வாழ்ந்து வருகின்றோம். 

சரி, இதற்கு என்ன தான் தீர்வு? என்றேன். 

அதை சொல்வதற்காகவே தொடர்பு கொண்டேன் என்றார். ஈழத் தமிழர்கள் குறித்து  உங்கள் முகநூல் பதிவில் நீங்கள்  குறிப்பிட்டுள்ளது தான் சரியான தீர்வுகள் . இந்தளவிற்கு எங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் ஓரளவு நிம்மதியுடன் வாழ்வோம்  என உங்கள் பதிவை பார்த்ததும் நண்பர்கள் பேசிக் கொண்டோம் என்றார். 

ஈழப் பிரச்சனையில் இன்றைய நிலை.
--------------------------------------------------------------
ஈழப் பிரச்சனைகள் குறித்து சமூக வலைத் தளங்களில் சற்று சூடான வாதங்களும், பிரதி வாதங்களும் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடந்து வருகின்றன. அதை குறித்தான கருத்தோ விவாதமோ செய்ய விரும்பவில்லை. கடந்த சில நாட்களாக ஈழத்தில் இருந்தும் லண்டன், பாரீஸ், கனடா, நார்வே போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தோழர்கள் பேசினார்கள். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு நாட்டிலும் தாங்கள் பங்கேற்றதைப் பற்றியும் குறிப்பிட்டனர். 

இன்றைக்குள்ள சூழலில் என்ன செய்ய வேண்டும் இந்த பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விடயமாகும். 

அவை,

1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும். 

அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.

2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 

இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.

3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.

5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.

6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர். 

  இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.

#ஈழம்
#இலங்கை
#Eelam
#Srilanka
#ksradhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
23-05-2017

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...