Saturday, February 27, 2021

#காவேரி_வைகை_குண்டாறு_இணைப்புத்_திட்டம் #பிரதமர்_என்ற_நிலைக்கு_உயர்ந்தும் #பக்குவமற்று_கர்நாடகத்தின்_முன்னாள்_முதல்வராகவே_இருக்கும்_பிரகஸ்பதி_தேவகவுடா #சில_கடந்த_கால_நினைவுகள்......


எதிர்ப்பு தெரிவித்து வரும் #முன்னாள்_பிரதமர்_தேவகவுடா, பிரதமராகஇருந்தபோதும் பக்குவம் இல்லாமல்தான் நடந்துகொண்டார் என்பதை குறித்த எனது கருத்துக்கள் இன்றைய(27-2-2021)தமிழ் இந்துவில்....


------------------------------------
காவேரி – வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு 45 டி.எம்.சி உபரி நீரை தமிழகம் பயன்படுத்த முடியாது என்று நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடா புரிதல் இல்லாமல் கூறியுள்ளார். அவர் காவேரி பிரச்சினையில் சிக்கல் வரும்போதெல்லாம் கர்நாடகத்தின் பிரதிநிதி போல தப்பும் தவறுமாக தமிழ்நாட்டை பழித்து தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தேவகவுடா போலவே காவேரி சிக்கலில் நியாயம் இல்லாமல் இன்று வரை பேசி வருகின்றனர். காவேரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு எதிராக வாட்டாள் நாகராஜ் கர்நாடக தமிழக எல்லையில் உள்ள ஓசூர் வரை வந்து ஆர்பாட்டம் நடத்தி விட்டு சென்றுள்ளார்.
கர்நாடக அரசியல் கட்சித்தலைவர்கள் தான் இப்படி என்றால் நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடாவும் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்நாடகத்தை சேர்ந்த மறைந்த இ.எஸ்.வெங்கட்ராமைய்யாவும் தமிழகத்துக்கு காவேரியில் உரிமைகளை மறுத்து பேசியதுதான் வேதனையான விடயம். நாட்டின் உயர்ந்த பொறுப்பு வகித்த இவர்கள் எப்படி நேர்மைக்கு புறம்பாக குரல் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கு ஆதரவாக கொடுக்கலாம் என்பது நமது வினா..?
காவேரி கடைமடை நதிநீர் பாத்திய உரிமைகள் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும், கேரளத்துக்கும் உண்டு என்று காவேரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தும்; கர்நாடகா என்ன நினைக்கிறது என்றால், அங்கு மழை பொழிந்தால் அந்த வெள்ள நீரை அகற்றும் காவேரி மூலமாக தமிழக காவேரி டெல்டா பகுதிகள் அதன் வடிகாலாகத்தான் அங்குள்ள கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்திற்கும் காவேரியில் சமஉரிமை உண்டு என்றும் ஹெல்சின்கி கோட்பாட்டின்படி சட்டப்பூர்வமான உரிமைகள் தமிழ்நாட்டிற்கு இருந்தும் கர்நாடகம் அர்த்தமில்லாமல் பிடிவாதமாக காவேரியில் வம்பு செய்கிறது.
தாமிரபரணி – கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் ஒரு புறம் நடக்கின்றது. இதில் எந்த சிக்கலும் இல்லை, ஏனெனில் தாமிரபரணி தமிழ்நாட்டில் பொதிகை மலையில் உருவாகி கடலில் புன்னக்காயலில் சேர்வதால் புவியியல் ரீதியாக வேறு மாநிலம் இதில் சம்மந்தபடவில்லை.
தற்போது காவேரி - வைகை - குண்டாறு இணைப்புக்கு பணிகள் துவங்க இருக்கின்றன. இந்த சமயத்தில் தேவையில்லாமல் கர்நாடகத்திலிருந்து இந்த திட்டத்தை எதிர்த்து கூப்பாடு சத்தம் கேட்கிறது. இதை மத்திய அரசும் பாராமுகமாக இருக்கக்கூடாது.
இதே போலவே, எதிர்காலத்தில் தமிழகம் திட்டமிட்ட தென்பெண்ணை - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகம் போலவே ஆந்திர மாநிலமும் பிரச்சினையை உருவாக்கலாம் என்பதை நாம் உணரவேண்டும். எனவே, தேவகவுடாக்கள், எடியூராப்பாக்கள், சித்தராமையாக்கள் போடும் கூப்பாடுகளுக்கு தமிழகம் தக்க பதிலடி கொடுத்து, அவர்கள் வாயை மூடி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவகவுடா, காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் வழக்கு தொடரவேண்டுமென்று சொல்வதும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.
சரி, அடுத்து பிரச்சினைக்குள் வருகின்றேன், காவேரி கடைமடை பகுதியான தமிழகம் காவேரி - வைகை - குண்டாறு இணைப்பில் நீரை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உருவாகும் என்று கர்நாடகம் கூறியுள்ளது. இதே மாதிரி சிக்கல் தானே, கர்நாடகத்திற்கும் மகாராஷ்டிரத்திற்கும் இடையே உள்ள மகதாயி நதிநீர் பிரச்சினை. தமிழகத்தில் காவேரி கடைமடை பிரச்சினை என்றால் மகதாயி கர்நாடகம் கடைமடை பகுதியாகும். நாம் எப்படி காவேரியில் கர்நாடகத்தை மீதுள்ள தவறை எடுத்துச்சொல்கின்றோமோ, அதே போலதான் கர்நாடகமும் மகதாயி நதிநீர் பிரச்சினையில் மகாராஷ்டிரத்தை குறை சொல்கிறது. ஒரே பிரச்சினையில் மகதாயில் ஒரு நியாயம், காவேரியில் மட்டும் அநியாயாம் என்று நினைத்து கர்நாடகம் பிழைப்பட்டு பேசுகின்றது. இதிலிருந்தே கர்நாடகத்தின் சுயநல போக்கை தமிழகம் நிரூபிக்கலாம்.
தமிழக அரசு ராசிமணலில் அணை கட்டக் கூடாது என்று கர்நாடகம் தடுக்கின்றது. ஆனால் மேகதாட்டில் மட்டும் கர்நாடகா நடைமுறையை மீறி அணை கட்ட துடிக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவேரி நீரை கூடுதலாக தரமாட்டோம் என்றும், காவேரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசிய தேவகவுடா எப்படி இந்தியா பிரதமராக வந்தார், அப்பொழுது என்ன நடந்தது என்பதையும் இப்போது சொல்லவேண்டும்.
கடந்த 1996 நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல் கட்டத்தில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ 33,000 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி வாய்ப்பை இழந்தேன். ஆனாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அந்த தொகுதி வாக்காளர்களுக்கு கிராம கிராமமாக சென்று நன்றி சொல்லிவிட்டு சில நாட்களுக்கு பின் காரில் சென்னைக்கு திரும்பினேன். திருச்சியை கடந்து காவேரி ஆற்றின் பாலத்தில் பயணம் செய்யும்போது, நண்பகல் 2 மணி என்று நினைக்கின்றேன், தேவகவுடா இந்தியாவின் புதிய பிரதமர் என்று காரிலிருந்த வானொலியில் செய்திகளைக் கேட்டதும் எனக்கு மனதில் வேதனையாக இருந்தது. ஏனெனில் காவேரி நடுவர் மன்ற தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சித்தோஷ் முகர்ஜி காவேரி டெல்டா மக்களின் பிரச்சினையை அறிய டெல்டா பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டப்பொழுது அங்குள்ள மக்கள் அவரை பூர்னகும்பத்தோடு வரவேற்றனர். தஞ்சை மாவட்ட கோவில்களுக்கு அவரே வேண்டிவிரும்பி சென்றபோது பரிவட்டம் கட்டப்பட்டது. இதை எல்லாம் குற்றச்சாட்டுகளாகச் சொல்லி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவேரி நடுவர் மன்ற நீதிபதி சித்தோஷ் முகர்ஜி பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று Quo warranto ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த ரிட் மனுவில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மாநிலங்களை எதிரியாக (Responds) சேர்த்து இருந்தார். நிலுவையில் இருந்த அந்த வழக்கு திரும்ப பெறவில்லை. தமிழகம், புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து வழக்கு தொடுத்த மனிதர் எப்படி இந்திய நாட்டின் பிரதமர் ஆகமுடியும்…?
பிரதமர் பதவி ஏற்று தேவகவுடா அந்த பதவிக்கான அரசியல் சாசனம் உறுதிமொழி எப்படி எடுக்கமுடியும்..? என்ற கேள்விகள் காவேரி பாலத்தினை கடக்கும் போது என் மனதில் ஓடின.
சென்னைக்கு திரும்பிய பின் இதன் தரவுகளை எல்லாம் சேகரித்தேன். வழக்கறிஞர் நண்பர் பாத்திமாநாதனும் நானும் தேவகவுடா எப்படி பிரதமராக முடியும்? தமிழகம், புதுவை, கேரளத்தை எதிரிகளாகச் சேர்த்து வழக்கு தொடுத்தவர் இந்திய நாட்டின் பிரதமர் பதிவிக்கு தகுதியற்றவர் என்று Quo warranto ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக 28.11.1996 அன்று நான் தாக்கல் செய்தேன். இது அரசியல் அமைப்புக்கு விரோதமானது மட்டுமல்ல அரசியல் சாசன சிக்கலை உருவாக்குமென்று பல தரவுகளோடு ரிட் மனுவில் குறிப்பிட்டு இருந்தேன்.
மேற் குறிப்பிட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்னற நீதிபதி ஜே.கனகராஜ் முன்னிலை 29.11.1996 அன்று விசாரணைக்கு வந்து வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது நான் பிரதிவாதிகளாகச் சேர்த்த மத்திய அரசு, பிரதமர் தேவகவுடா, தமிழக அரசு, புதுவை அரசு, கேரள அரசு, காவேரி நடுவர் மன்றம் என்று 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அன்று பகல் 12 மணிக்கு இந்த வழக்கு விசாரணை முடிந்ததும், இந்த செய்தி உளவு துறை மூலம் டெல்லி வடக்கு பிளாக் பிரதமர் அலுவலகத்திற்கு உடனே தெரிவிக்கப்பட்டது.
அன்றே, சென்னை மத்திய உளவுத்துறையில் ஐபி அதிகாரிகள் இருவர் இந்த வழக்கு மனுவை வாங்க என்னுடைய 22 லா-சேம்பருக்கு வந்தனர். இந்த வழக்கு மனுவின் நகலை பரபரப்பாக வாங்கிச் சென்று, மறுநாளே இந்த வழக்கை பிரதமராக இருந்த தேவகவுடா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் திரும்பப்பெற்றார்.
அந்த புண்ணியவான் அன்றைய பிரதமர் தேவகவுடா. இவர் வகிக்கும் பதவிக்கு ஏற்ற கண்ணியம் இல்லாதவர். முன்னாள் பிரதமராக இருந்தவர் இப்போதும் வாட்டாள் நாகராஜ் மாதிரி பேசிவருகிறார். இப்படிப்பட்ட மனிதர்களையும் அகில இந்திய தலைவர்களாக கொண்டாடுகிறோம் என்ன சொல்ல. அன்றைக்கு அரசியல் களத்தில் இருந்த யாரும் இது குறித்து கருத்து சொல்லவே இல்லை.
கங்கை - மகாநதி - கிருஷ்ணா - காவேரி - வைகை குமரி மாவட்ட நெய்யாறு, கங்கை குமரியை தொடவேண்டுமென்றும் தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்றும், கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை அரபிக்கடலுக்கு போகவேண்டிய நீருக்கு எவ்வளவு தேவையோ அதன்பின் உள்ள உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பவேண்டுமென்றும், கேரள அச்சன்கோவில் – பம்பை தமிழகத்தில் சாத்தூரில் உள்ள வைப்பாற்றுடன் இணைக்க வேண்டுமென்றும், தென்னக நதிகள் இணைப்பு குறித்தும், தாமிரபரணி- கருமேனியாறு - நம்பியாறு இணைப்பும், காவேரி - வைகை - குண்டாறு இணைப்பும் தென்பெண்ணை பாலாறு இணைப்பு தொகுப்பை குறித்தும் என்பதை உள்ளடங்கிய தேசிய நதிநீர் இணைப்பு 1983-ல் பொதுநல வழக்கு தொடுத்தேன்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது தேசிய நதிகளை இணைக்கவேண்டுமென்று பிரதமர்கள் பி.வி.சிங், நரசிம்மராவ், எச்.டி.தேவகவுடா, மன்மோகன் சிங் அமைச்சர்வையில் இருந்த நீர்வளத்துறை அமைச்சர் ஹரிஸ் ராவத், மோடி அமைச்சரவையில் இருந்த உமாபாரதி, ஆகியோரை என்னுடைய உச்சநீதிமன்ற நதிநீர் இணைப்பு பொது நலவழக்கு மனுவை வழங்கி வெவ்வேறு காலங்கட்டங்களில் சந்தித்து இவர்களிடம் பேசியது குறித்து ஏற்கனவே என் சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டுயுள்ளேன்.
தேவகவுடாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின் கடந்த 1997 ஜனவரி டெல்லி குளிர் காலத்தில் மறைந்த மத்திய அமைச்சராக இருக்க ராம்விலாஸ் பாஸ்வான் பரிந்துரையில் அன்றைய பிரதமரை தேவகவுடாவை சந்தித்து என்னுடைய நதிநீர் இணைப்பு உச்சநீதிமன்ற வழக்கு குறித்து பேச சந்தித்த போது; நிற்க வைத்து என்னிடம் கேட்டக் கேள்விகள் எல்லாம் இன்றும் மனதில் உள்ளன. அன்றைக்கு மறுமலர்ச்சி திமுகவில் இருந்தேன். பிரதமர் தேவகவுடாவை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நதிநீர் இணைப்பு குறித்து என் மனுவின் நகலையும், என் கடித்தத்தையும் கொடுத்தேன் அதை பார்த்து படிக்கக் கூட மனமில்லாமல் என்னிடம் நடந்து கொண்ட பண்பினை இந்த இடத்தில் சொல்லவேண்டும். ‘You are Radha Krishnan, you filed case against me, you are from vai.gopalsamy party’ என்று கேட்டுவிட்டு ’where is water to give tamilnadu’ என்று மொட்டையாக பேசி அனுப்பிய மனிதர் தான் இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
பிரதமர் என்ற உச்சப் பதவிக்கு சென்ற
பின்பும் பக்குவமில்லாத மனிதராகவே இன்று வரை இருந்து வருகிறார். இன்றைக்கு பண்பற்ற முறையில் காவேரி தண்ணீர் தரமுடியாது, காவேரி வைகை குண்டாறு இணைப்பு நீரைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார். முன்னாள் பிரதமர் என்ற தகுதியை இழந்துவிட்டர் என்பதை நாம் உணரவேண்டும்.
கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தோடு நதிநீர் சிக்கல்களில் தமிழகத்திற்கு நியாயம் இருந்தும் அனைத்தும் மறுக்கப்படுகின்றது. அதற்கு பல பின்னணிகளும் சில காரணங்களும் உள்ளன. அதை உணராமல் நாம் வெட்டி கூப்பாடு போட்டு கொண்டிருந்தால் அண்டை மாநிலங்களில் நதிநீர் சிக்கல்களை தீர்த்துக்கொள்ளமுடியாது. ஐரோப்பாவில் யுகோஸ்லேவியா மலைப்பிரதேசத்திலிருந்து தமிழகம் போன்ற ரூமேனியாவிற்கு தாராளமாக நீரை வழங்குகின்றன. நைல், ரைன் நதி, துர்க்மெனிஸ்தான் கேரிங்கம் கால்வாய் அண்டை நாடுகளுக்கு எல்லாம் உபரி நீரை வழங்கும் போது இங்கு மட்டும் ஒரே நாட்டில், கர்நாடகம், கேரளம், ஆந்திரா மாநிலங்கள் தமிழகத்திற்கு எல்லா நியாயங்கள் இருந்தும் நீர் வழங்க மறுத்து நொண்டியாட்டம் அண்டை மாநிலங்கள் ஆடுகின்றன. காவேரி நடுவர்மன்றம் தீர்ப்பு கொடுத்த பின்பும் தேவகவுடா போன்ற பண்பற்ற, விசாலமான எண்ணங்கள் இல்லாத மனிதர்களால் இப்படி எல்லாம் அலங்கோலங்கள் நடக்கின்றன.
தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினைகள் பற்றிய தொலைநோக்குப் பார்வையும் இல்லை, யதார்த்த புரிதல்களும் இல்லை. ஏன் குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த ஆர்.வெங்கட்ராமன், காவேரி பாயும் தஞ்சையில் பிறந்தவர்தான். ஆனால், தன்னுடைய நினைவு தொகுப்பில் 1995 கட்டத்தில் வெளியான ’My Presidential Years’ என்ற புத்தகத்தில் 506-வது பக்கத்தில் காவேரி பிரச்சினை குறித்து சரியாக அறியாமலும் தெளிவில்லாமலும் பிழையாகவே கூறி இருக்கிறார். இப்படித்தான் பிரச்சினைகளின் தன்மைகளை தெரியாத தலைவர்கள் நம்மிடம் இருக்கின்றன. இவர் தமிழக அமைச்சர், மத்திய அமைச்சர் இந்தியாவின் குடியரசு தலைவர், நுண்மான் நுழைபுலம் கொண்டவர் இவரே காவேரி பிரச்சினையைத் தவறாக எழுதியுள்ளார். வேற யாரை குறை சொல்ல..?
தேவகவுடாக்கள் எடியூரப்பாக்கள் சித்தராமையாக்கள் போகிற போக்கில் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழகத்தின் உரிமைகளைத் தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் அதை சரியாக வாதிடுபவர்களை நாடாளுமன்றம், சட்டமன்றம் செல்ல தமிழக மக்கள் வாய்ப்பு வழங்காத போது தேவகவுடா போன்றவர்களின் உளரல்களைக் எப்படி கட்டுப்படுத்தமுடியும். இந்த விடயங்கள் இன்றைக்கு உள்ள முன்னால் இன்னால் அமைச்சர்களுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியுமா என்பதே சந்தேகம். ஆனாலும் நடந்தவற்றை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் இதை சொல்கின்றேன்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27.02.2021

#வேறு_என்ன_சொல்ல

சாதி அமைப்பு தமிழகமா?

சாதிகளற்ற தமிழகமா? 

சாதிகள் உண்டென்று கும்மியடி தமிழகம்.

வேறு என்ன சொல்ல...


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSR_Post

26.02.2021

விகடனில் வந்த கி.ரா.வின் மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழா

விகடனில் வந்த கி.ரா.வின் மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழா


https://www.vikatan.com/arts/literature/ki-rajanarayanan-micha-kadhaigal-book-release-event-highlights?utm_source=webengage&utm_medium=web_push&fbclid=IwAR0y2DaMwpQNvz0ZvAeYMknv2Eb7-asHmvsXBxPW5qVcVjCk8TxROChUPEY

#பல_நேரங்களில்_சில_மனிதர்கள்.


———————————————————-
வெள்ளித் திரையில் நடிப்பு ஒரு தொழில் தான்.
சரி, பொது வாழ்விலும் அரசியலிலும் நடிப்புத் தொழிலை செய்தால் எப்படி..?
பல நேரங்களில் சில மனிதர்கள்.
அன்று, ஆங்கிலேயரின் ஒரு லட்சம் பண பேரத்திற்கு விலை போகாத வ.உ.சி ....
இன்றும் நம்முள்.....
போலி மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க பைத்தியக்காரத்தனமான தேர்தல் முறை. கட்சி ஆட்சி என்கிற கார்ப்பரேட் ஆட்சி முறை. ஒவ்வொரு தேர்தலுக்கும் பல கோடிகளை செலவழித்தாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ள தேர்தல் முறையில் ஊழல் செய்யாமல் அல்லது கார்ப்பரேட்களின் தயவில்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்பதே நிதர்சனம். மக்களை ஏமாற்றும் தேர்தல் முறையில் தகுதியற்றவர்களே ஆட்சியையும் அதிகாரத்தையும் பெறுகின்றனர்...
(படம்) சந்தியாவோடு பல்லாங்குழி விளையாடும் ஜெயல்லிதா....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26.02.2021

பாலூட்டும் அன்னை நடமாடும் தெய்வம் !

 பாலூட்டும் அன்னை நடமாடும் தெய்வம் !



Friday, February 26, 2021

#தா_பாண்டியன்


—————————-
*இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் தா. பாண்டியன் காலமாகிவிட்டார்.*
சற்று பின்னோக்கிப் பார்க்கையில் அவருடனான அறிமுகம் 1972ல் இருந்து. அவருடைய இளமைக் காலத்தில் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பிதப்புரத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். பிதப்புரத்தில் தான் பாரதியின் தந்தையார் பருத்தி ஆலை தொடங்கி அது முழுவதும் முடியாமல் இன்றைக்கும் அந்த ஆலை இடிபாடுகளுடன் மகாகவி பாரதியை நினைவுப் படுத்திக் கொண்டு இருக்கிறது. கோவில்பட்டி பக்கம் அடிக்கடி வருவார்.
சென்னையில் படிக்கும் பொழுது பிராட்வேயில் உள்ள ஜனசக்தி அலுவலகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் மறைந்த சோ. அழகர்சாமி அவர்களோடு சென்று அவருடனும் ஜெயகாந்தனுடன் பேசிக்கொண்டிருந்த காலங்கள் எல்லாம் உண்டு. அந்த காலகட்டத்தில் என்ஃபீல்ட் மோட்டர் பைக்கில் இதேபோன்று அரைக்கை சட்டை அணிந்து தோளில் சிகப்பு துண்டுடன் அவர் ஓட்ட, நான் அவர் பின் அமர்ந்து சென்ற நினைவுகள் வருகிறது.
இந்திய சோவியத் நட்புறவு ISCUS கூட்டங்களுக்கு அதே பைக்கில் அவருடன் சென்றது நினைவுக்கு வருகிறது. வழக்கறிஞர் என்.டி. வானமாமலை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.டி. சுந்தரவடிவேலு, மதுரை டாக்டர் திருஞானம், ராஜபாளையம் அலெக்ஸ் எனப் பெரும் மக்கள் அன்றைக்கு அந்த அமைப்பில் இருந்தனர்.
ஜனசக்தி ஆசிரியராக இருந்தபோது ஜனசக்தி இதழ் டேப்லாய்ட் (tabloid) வடிவில் வரும். பிலிட்ஸ் கரண்ட் பத்திரிகை போன்று வரும். அதில் அதில் கடைசி பக்கம் தா.பா பக்கம் என்று வரும். அந்தப் பக்கத்தில் அவர் பல புதிய விஷயங்களையும், உலக அரசியல், இந்திய அரசியல் தமிழக அரசியல் குறித்து அவர் எழுதி வந்ததையெல்லாம் அன்றைய காலகட்டத்தில் ஆர்வத்துடன் படித்ததுண்டு. காங்கிரஸ் மாணவர் அணியில் இருந்த போது சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி அன்றைக்கு காங்கிரஸ் கூட்டணியை இரண்டு போது மக்களுக்காக அவர் நடை பயணம் மேற்கொண்டபோது அவருடன் இரண்டு மூன்று முறை சென்றதுண்டு. சில நேரங்களில் நல்லகண்ணு, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சோ. அழகிரிசாமி, எ.நல்லக்கண்ணு ஆகியோர் தலைமையில் அந்த நிகழ்ச்சி நடந்த போது தா. பாண்டியன் அதில் கலந்துக் கொள்வார். இப்படி எல்லாம் பழைய நினைவுகள். நல்ல சிந்தனையாளர். ஆங்கிலப் பேராசிரியர். நுண்மான் நுழைப்புலம் கொண்டவர். உசிலம்பட்டியில் பிறந்தாலும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். பழ கருப்பையாவுக்கு பேராசிரியர். என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறார். கி.ரா. உடன் அவரை சந்தித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. கதைசொல்லி வாசகர். இதெல்லாம் கடந்த கால நினைவுகள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அவருடைய மறைவு கவலையளிக்கிறது.



ஆழ்ந்த இரங்கல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26.02.2021.

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

 நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் 

நதி செய்த குற்றம் இல்லை 

விதி செய்த குற்றம் 

அன்றி வேறு யாரம்மா. 

பறவைகளே பதில் சொல்லுங்கள் .

#காவேரி_வைகை_குண்டாறு_இணைப்புத்_திட்டம் #பிரதமர்_என்ற_நிலைக்கு_உயர்ந்தும் #பக்குவமற்று_கர்நாடகத்தின்_முன்னாள்_முதல்வராகவே_இருக்கும்_பிரகஸ்பதி_தேவகவுடா #சில_கடந்த_கால_நினைவுகள்......


------------------------------------
நேற்றைக்கு பெங்களூரில் காவேரி – வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு 45 டி.எம்.சி உபரி நீரை தமிழகம் பயன்படுத்த முடியாது என்று நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடா புரிதல் இல்லாமல் கூறியுள்ளார். அவர் காவேரி பிரச்சினையில் சிக்கல் வரும்போதெல்லாம் கர்நாடகத்தின் பிரதிநிதி போல தப்பும் தவறுமாக தமிழ்நாட்டை பழித்து தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்.




கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தேவகவுடா போலவே காவேரி சிக்கலில் நியாயம் இல்லாமல் இன்று வரை பேசி வருகின்றனர். காவேரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு எதிராக வாட்டாள் நாகராஜ் கர்நாடக தமிழக எல்லையில் உள்ள ஓசூர் வரை வந்து ஆர்பாட்டம் நடத்தி விட்டு சென்றுள்ளார்.
கர்நாடக அரசியல் கட்சித்தலைவர்கள் தான் இப்படி என்றால் நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடாவும் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்நாடகத்தை சேர்ந்த மறைந்த இ.எஸ்.வெங்கட்ராமைய்யாவும் தமிழகத்துக்கு காவேரியில் உரிமைகளை மறுத்து பேசியதுதான் வேதனையான விடயம். நாட்டின் உயர்ந்த பொறுப்பு வகித்த இவர்கள் எப்படி நேர்மைக்கு புறம்பாக குரல் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கு ஆதரவாக கொடுக்கலாம் என்பது நமது வினா..?
காவேரி கடைமடை நதிநீர் பாத்திய உரிமைகள் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும், கேரளத்துக்கும் உண்டு என்று காவேரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தும்; கர்நாடகா என்ன நினைக்கிறது என்றால், அங்கு மழை பொழிந்தால் அந்த வெள்ள நீரை அகற்றும் காவேரி மூலமாக தமிழக காவேரி டெல்டா பகுதிகள் அதன் வடிகாலாகத்தான் அங்குள்ள கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்திற்கும் காவேரியில் சமஉரிமை உண்டு என்றும் ஹெல்சின்கி கோட்பாட்டின்படி சட்டப்பூர்வமான உரிமைகள் தமிழ்நாட்டிற்கு இருந்தும் கர்நாடகம் அர்த்தமில்லாமல் பிடிவாதமாக காவேரியில் வம்பு செய்கிறது.
தாமிரபரணி – கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் ஒரு புறம் நடக்கின்றது. இதில் எந்த சிக்கலும் இல்லை, ஏனெனில் தாமிரபரணி தமிழ்நாட்டில் பொதிகை மலையில் உருவாகி கடலில் புன்னக்காயலில் சேர்வதால் புவியியல் ரீதியாக வேறு மாநிலம் இதில் சம்மந்தபடவில்லை.
தற்போது காவேரி - வைகை - குண்டாறு இணைப்புக்கு பணிகள் துவங்க இருக்கின்றன. இந்த சமயத்தில் தேவையில்லாமல் கர்நாடகத்திலிருந்து இந்த திட்டத்தை எதிர்த்து கூப்பாடு சத்தம் கேட்கிறது. இதை மத்திய அரசும் பாராமுகமாக இருக்கக்கூடாது.
இதே போலவே, எதிர்காலத்தில் தமிழகம் திட்டமிட்ட தென்பெண்ணை - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகம் போலவே ஆந்திர மாநிலமும் பிரச்சினையை உருவாக்கலாம் என்பதை நாம் உணரவேண்டும். எனவே, தேவகவுடாக்கள், எடியூராப்பாக்கள், சித்தராமையாக்கள் போடும் கூப்பாடுகளுக்கு தமிழகம் தக்க பதிலடி கொடுத்து, அவர்கள் வாயை மூடி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவகவுடா, காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் வழக்கு தொடரவேண்டுமென்று சொல்வதும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.
சரி, அடுத்து பிரச்சினைக்குள் வருகின்றேன், காவேரி கடைமடை பகுதியான தமிழகம் காவேரி - வைகை - குண்டாறு இணைப்பில் நீரை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உருவாகும் என்று கர்நாடகம் கூறியுள்ளது. இதே மாதிரி சிக்கல் தானே, கர்நாடகத்திற்கும் மகாராஷ்டிரத்திற்கும் இடையே உள்ள மகதாயி நதிநீர் பிரச்சினை. தமிழகத்தில் காவேரி கடைமடை பிரச்சினை என்றால் மகதாயி கர்நாடகம் கடைமடை பகுதியாகும். நாம் எப்படி காவேரியில் கர்நாடகத்தை மீதுள்ள தவறை எடுத்துச்சொல்கின்றோமோ, அதே போலதான் கர்நாடகமும் மகதாயி நதிநீர் பிரச்சினையில் மகாராஷ்டிரத்தை குறை சொல்கிறது. ஒரே பிரச்சினையில் மகதாயில் ஒரு நியாயம், காவேரியில் மட்டும் அநியாயாம் என்று நினைத்து கர்நாடகம் பிழைப்பட்டு பேசுகின்றது. இதிலிருந்தே கர்நாடகத்தின் சுயநல போக்கை தமிழகம் நிரூபிக்கலாம்.
தமிழக அரசு ராசிமணலில் அணை கட்டக் கூடாது என்று கர்நாடகம் தடுக்கின்றது. ஆனால் மேகதாட்டில் மட்டும் கர்நாடகா நடைமுறையை மீறி அணை கட்ட துடிக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவேரி நீரை கூடுதலாக தரமாட்டோம் என்றும், காவேரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசிய தேவகவுடா எப்படி இந்தியா பிரதமராக வந்தார், அப்பொழுது என்ன நடந்தது என்பதையும் இப்போது சொல்லவேண்டும்.
கடந்த 1996 நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல் கட்டத்தில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ 33,000 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி வாய்ப்பை இழந்தேன். ஆனாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அந்த தொகுதி வாக்காளர்களுக்கு கிராம கிராமமாக சென்று நன்றி சொல்லிவிட்டு சில நாட்களுக்கு பின் காரில் சென்னைக்கு திரும்பினேன். திருச்சியை கடந்து காவேரி ஆற்றின் பாலத்தில் பயணம் செய்யும்போது, நண்பகல் 2 மணி என்று நினைக்கின்றேன், தேவகவுடா இந்தியாவின் புதிய பிரதமர் என்று காரிலிருந்த வானொலியில் செய்திகளைக் கேட்டதும் எனக்கு மனதில் வேதனையாக இருந்தது. ஏனெனில் காவேரி நடுவர் மன்ற தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சித்தோஷ் முகர்ஜி காவேரி டெல்டா மக்களின் பிரச்சினையை அறிய டெல்டா பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டப்பொழுது அங்குள்ள மக்கள் அவரை பூர்னகும்பத்தோடு வரவேற்றனர். தஞ்சை மாவட்ட கோவில்களுக்கு அவரே வேண்டிவிரும்பி சென்றபோது பரிவட்டம் கட்டப்பட்டது. இதை எல்லாம் குற்றச்சாட்டுகளாகச் சொல்லி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவேரி நடுவர் மன்ற நீதிபதி சித்தோஷ் முகர்ஜி பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று Quo warranto ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த ரிட் மனுவில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மாநிலங்களை எதிரியாக (Responds) சேர்த்து இருந்தார். நிலுவையில் இருந்த அந்த வழக்கு திரும்ப பெறவில்லை. தமிழகம், புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து வழக்கு தொடுத்த மனிதர் எப்படி இந்திய நாட்டின் பிரதமர் ஆகமுடியும்…?
பிரதமர் பதவி ஏற்று தேவகவுடா அந்த பதவிக்கான அரசியல் சாசனம் உறுதிமொழி எப்படி எடுக்கமுடியும்..? என்ற கேள்விகள் காவேரி பாலத்தினை கடக்கும் போது என் மனதில் ஓடின.
சென்னைக்கு திரும்பிய பின் இதன் தரவுகளை எல்லாம் சேகரித்தேன். வழக்கறிஞர் நண்பர் பாத்திமாநாதனும் நானும் தேவகவுடா எப்படி பிரதமராக முடியும்? தமிழகம், புதுவை, கேரளத்தை எதிரிகளாகச் சேர்த்து வழக்கு தொடுத்தவர் இந்திய நாட்டின் பிரதமர் பதிவிக்கு தகுதியற்றவர் என்று Quo warranto ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக 28.11.1996 அன்று நான் தாக்கல் செய்தேன். இது அரசியல் அமைப்புக்கு விரோதமானது மட்டுமல்ல அரசியல் சாசன சிக்கலை உருவாக்குமென்று பல தரவுகளோடு ரிட் மனுவில் குறிப்பிட்டு இருந்தேன்.
மேற் குறிப்பிட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்னற நீதிபதி ஜே.கனகராஜ் முன்னிலை 29.11.1996 அன்று விசாரணைக்கு வந்து வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது நான் பிரதிவாதிகளாகச் சேர்த்த மத்திய அரசு, பிரதமர் தேவகவுடா, தமிழக அரசு, புதுவை அரசு, கேரள அரசு, காவேரி நடுவர் மன்றம் என்று 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அன்று பகல் 12 மணிக்கு இந்த வழக்கு விசாரணை முடிந்ததும், இந்த செய்தி உளவு துறை மூலம் டெல்லி வடக்கு பிளாக் பிரதமர் அலுவலகத்திற்கு உடனே தெரிவிக்கப்பட்டது.
அன்றே, சென்னை மத்திய உளவுத்துறையில் ஐபி அதிகாரிகள் இருவர் இந்த வழக்கு மனுவை வாங்க என்னுடைய 22 லா-சேம்பருக்கு வந்தனர். இந்த வழக்கு மனுவின் நகலை பரபரப்பாக வாங்கிச் சென்று, மறுநாளே இந்த வழக்கை பிரதமராக இருந்த தேவகவுடா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் திரும்பப்பெற்றார்.
அந்த புண்ணியவான் அன்றைய பிரதமர் தேவகவுடா. இவர் வகிக்கும் பதவிக்கு ஏற்ற கண்ணியம் இல்லாதவர். முன்னாள் பிரதமராக இருந்தவர் இப்போதும் வாட்டாள் நாகராஜ் மாதிரி பேசிவருகிறார். இப்படிப்பட்ட மனிதர்களையும் அகில இந்திய தலைவர்களாக கொண்டாடுகிறோம் என்ன சொல்ல. அன்றைக்கு அரசியல் களத்தில் இருந்த யாரும் இது குறித்து கருத்து சொல்லவே இல்லை.
கங்கை - மகாநதி - கிருஷ்ணா - காவேரி - வைகை குமரி மாவட்ட நெய்யாறு, கங்கை குமரியை தொடவேண்டுமென்றும் தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்றும், கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை அரபிக்கடலுக்கு போகவேண்டிய நீருக்கு எவ்வளவு தேவையோ அதன்பின் உள்ள உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பவேண்டுமென்றும், கேரள அச்சன்கோவில் – பம்பை தமிழகத்தில் சாத்தூரில் உள்ள வைப்பாற்றுடன் இணைக்க வேண்டுமென்றும், தென்னக நதிகள் இணைப்பு குறித்தும், தாமிரபரணி- கருமேனியாறு - நம்பியாறு இணைப்பும், காவேரி - வைகை - குண்டாறு இணைப்பும் தென்பெண்ணை பாலாறு இணைப்பு தொகுப்பை குறித்தும் என்பதை உள்ளடங்கிய தேசிய நதிநீர் இணைப்பு 1983-ல் பொதுநல வழக்கு தொடுத்தேன்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது தேசிய நதிகளை இணைக்கவேண்டுமென்று பிரதமர்கள் பி.வி.சிங், நரசிம்மராவ், எச்.டி.தேவகவுடா, மன்மோகன் சிங் அமைச்சர்வையில் இருந்த நீர்வளத்துறை அமைச்சர் ஹரிஸ் ராவத், மோடி அமைச்சரவையில் இருந்த உமாபாரதி, ஆகியோரை என்னுடைய உச்சநீதிமன்ற நதிநீர் இணைப்பு பொது நலவழக்கு மனுவை வழங்கி வெவ்வேறு காலங்கட்டங்களில் சந்தித்து இவர்களிடம் பேசியது குறித்து ஏற்கனவே என் சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டுயுள்ளேன்.
தேவகவுடாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின் கடந்த 1997 ஜனவரி டெல்லி குளிர் காலத்தில் மறைந்த மத்திய அமைச்சராக இருக்க ராம்விலாஸ் பாஸ்வான் பரிந்துரையில் அன்றைய பிரதமரை தேவகவுடாவை சந்தித்து என்னுடைய நதிநீர் இணைப்பு உச்சநீதிமன்ற வழக்கு குறித்து பேச சந்தித்த போது; நிற்க வைத்து என்னிடம் கேட்டக் கேள்விகள் எல்லாம் இன்றும் மனதில் உள்ளன. அன்றைக்கு மறுமலர்ச்சி திமுகவில் இருந்தேன். பிரதமர் தேவகவுடாவை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நதிநீர் இணைப்பு குறித்து என் மனுவின் நகலையும், என் கடித்தத்தையும் கொடுத்தேன் அதை பார்த்து படிக்கக் கூட மனமில்லாமல் என்னிடம் நடந்து கொண்ட பண்பினை இந்த இடத்தில் சொல்லவேண்டும். ‘You are Radha Krishnan, you filed case against me, you are from vai.gopalsamy party’ என்று கேட்டுவிட்டு ’where is water to give tamilnadu’ என்று மொட்டையாக பேசி அனுப்பிய மனிதர் தான் இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
பிரதமர் என்ற உச்சப் பதவிக்கு சென்ற
பின்பும் பக்குவமில்லாத மனிதராகவே இன்று வரை இருந்து வருகிறார். இன்றைக்கு பண்பற்ற முறையில் காவேரி தண்ணீர் தரமுடியாது, காவேரி வைகை குண்டாறு இணைப்பு நீரைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார். முன்னாள் பிரதமர் என்ற தகுதியை இழந்துவிட்டர் என்பதை நாம் உணரவேண்டும்.
கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தோடு நதிநீர் சிக்கல்களில் தமிழகத்திற்கு நியாயம் இருந்தும் அனைத்தும் மறுக்கப்படுகின்றது. அதற்கு பல பின்னணிகளும் சில காரணங்களும் உள்ளன. அதை உணராமல் நாம் வெட்டி கூப்பாடு போட்டு கொண்டிருந்தால் அண்டை மாநிலங்களில் நதிநீர் சிக்கல்களை தீர்த்துக்கொள்ளமுடியாது. ஐரோப்பாவில் யுகோஸ்லேவியா மலைப்பிரதேசத்திலிருந்து தமிழகம் போன்ற ரூமேனியாவிற்கு தாராளமாக நீரை வழங்குகின்றன. நைல், ரைன் நதி, துர்க்மெனிஸ்தான் கேரிங்கம் கால்வாய் அண்டை நாடுகளுக்கு எல்லாம் உபரி நீரை வழங்கும் போது இங்கு மட்டும் ஒரே நாட்டில், கர்நாடகம், கேரளம், ஆந்திரா மாநிலங்கள் தமிழகத்திற்கு எல்லா நியாயங்கள் இருந்தும் நீர் வழங்க மறுத்து நொண்டியாட்டம் அண்டை மாநிலங்கள் ஆடுகின்றன. காவேரி நடுவர்மன்றம் தீர்ப்பு கொடுத்த பின்பும் தேவகவுடா போன்ற பண்பற்ற, விசாலமான எண்ணங்கள் இல்லாத மனிதர்களால் இப்படி எல்லாம் அலங்கோலங்கள் நடக்கின்றன.
தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினைகள் பற்றிய தொலைநோக்குப் பார்வையும் இல்லை, யதார்த்த புரிதல்களும் இல்லை. ஏன் குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த ஆர்.வெங்கட்ராமன், காவேரி பாயும் தஞ்சையில் பிறந்தவர்தான். ஆனால், தன்னுடைய நினைவு தொகுப்பில் 1995 கட்டத்தில் வெளியான ’My Presidential Years’ என்ற புத்தகத்தில் 506-வது பக்கத்தில் காவேரி பிரச்சினை குறித்து சரியாக அறியாமலும் தெளிவில்லாமலும் பிழையாகவே கூறி இருக்கிறார். இப்படித்தான் பிரச்சினைகளின் தன்மைகளை தெரியாத தலைவர்கள் நம்மிடம் இருக்கின்றன. இவர் தமிழக அமைச்சர், மத்திய அமைச்சர் இந்தியாவின் குடியரசு தலைவர், நுண்மான் நுழைபுலம் கொண்டவர் இவரே காவேரி பிரச்சினையைத் தவறாக எழுதியுள்ளார். வேற யாரை குறை சொல்ல..?
தேவகவுடாக்கள் எடியூரப்பாக்கள் சித்தராமையாக்கள் போகிற போக்கில் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழகத்தின் உரிமைகளைத் தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் அதை சரியாக வாதிடுபவர்களை நாடாளுமன்றம், சட்டமன்றம் செல்ல தமிழக மக்கள் வாய்ப்பு வழங்காத போது தேவகவுடா போன்றவர்களின் உளரல்களைக் எப்படி கட்டுப்படுத்தமுடியும். இந்த விடயங்கள் இன்றைக்கு உள்ள முன்னால் இன்னால் அமைச்சர்களுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியுமா என்பதே சந்தேகம். ஆனாலும் நடந்தவற்றை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் இதை சொல்கின்றேன்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25.02.2021

#காட்சிப்_பிழைகள்

 #காட்சிப்_பிழைகள்

———————————
நீண்ட காலத்திற்குப் பிறகு உத்தமர் நேர்மையின் இலக்கணம் ஓமந்துரார், பொது வாழ்வில் தன்னைத்தானே அழித்துக் கொண்ட வ.உ.சிதம்பரனார் படங்களை தமிழக சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் படங்களை 1950-களிலே திறந்திருக்கவேண்டும். ஏனோ, இதுவரை இப்படிப்பட்டத் தலைவர்களின் படங்களைத் திறக்காமல் பாசாங்கு தனமான ஆட்சிகள் இங்கு நடந்தது வேதனையான விடயம். ஓமந்துரார், வ.உ.சிதம்பரனார் படத்தை காலந்தாழ்த்தி திறந்தது, வில்லிப்புத்தூரார் சொன்னதுபோல வான் பிழையாகும். சரி, இன்னொரு நேர்மையான முதல்வர் பி.எஸ்.குமாரசுவாமி ராஜா அவர் படத்தை திறப்பதற்கு இவர்களுக்கு மனம் வரவில்லை. ராஜபாளையத்தைச் சேர்ந்த் நேர்மையான முதல்வர், அவர் படம் இல்லாமல் தமிழக சட்டமன்ற வரலாறு கிடையாது என்பதெல்லாம் இங்கு உள்ளோருக்கு தெரிய வாய்ப்பில்லை. அரசியல் வரலாறு தெரியாதவர்கள் தான் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகமுடியும். எல்லாம் காட்சி பிழைகள் தான்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25.02.2021

கேமரா வழி

 கேமரா வழியாக பார்த்தால் விவசாயம் அழகாகத்தான் இருக்கும் வயலுக்கு வந்து பார்த்தால் எங்கள் வலி தெரியும்....


25-2-2012

 “ Courage doesn't always roar. Sometimes courage is the quiet voice at the end of the day saying, "I will try again tomorrow."

Sri Lanka #Imran_Khan #Rajapaksa

 ‘’Thank you Prime Minister Rajapaksa and the people of Sri Lanka for a warm welcome and gracious hospitality.Sri lanka is a special friend and strong partner. I agree that the cooperative ties between our two nations are poised to grow and strengthen’’

-Prime Minister Imran Khan.


கொழும்பில் இம்ரான்கானும் ராஜபக்சேவும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தப்பொழுது பாகிஸ்தான் மற்ற நாடுகளை விட ஒரு சிறப்பான ஒரு தனி-முக்கியமான நண்பனாக திகழும் என்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் சொன்னதில் பல விடயங்களும், உள்ளார்ந்த பல அர்த்தங்களும் உள்ளன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25.02.2021

#புதுச்சேரியில்_இதுவரை_ஆட்சிக்_கவிழ்ந்த_வரலாறு


———————————————————-
புதுவையில் கடந்த 30 (1991 தவிர) வருடங்களுக்கு மேலாக நிலையான ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவு செய்தாக நினைவு. அதற்கு முன் பருக் மரைக்காயர், டி,ராமச்சந்திரன், ராமசாமி போன்றோர்களின் காலங்களில் 1960,70 களில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி கவிழ்ந்து உள்ளது. அவை 1969,1974,1977,1980,1985,1991 நிகழ்ந்தன. தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி பிரிவு 356-ன் கீழ் கலைக்கப்பட்டது. புதுச்சேரி காரைக்கால், ஏனாம்(ஆந்திரா அருகே), மாஹி (கேரளா அருகே)என்று இணைந்தது தான் புதுச்சேரி.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹி, மேற்கு வங்கத்தின் சந்திரநாகூர் என்பதெல்லாம் பிரெஞ்சு காலணி பிரதேசகளில் இருந்தது. இந்த பகுதிகள் இந்தியாவில் இணையும் பொழுது புதுச்சேரி தனி யூனியன் பிரதேசமாக அமைந்தது. இன்று மத்திய அரசின் யூனியன் பிரதேசமான டெல்லி, அந்தமான் போல புதுச்சேரியும் யூனியன் பிரதேசமாக திகழ்கின்றது. மத்தியில் இந்திரா காந்தி அவசர நிலை ஆட்சித் தோற்றப் பின்பு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி 1978 , பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இரு பகுதிகளையும் தமிழகத்தோடு இணைத்து விடலாமென்ற போது பாண்டிச்சேரியே எதிர்த்து கொதித்து எழுந்தது. அதனால் அப்போது மொரார்ஜி தேசாயின் விருப்பம் நிறைவேறாமல் போனது.

1969-ம் ஆண்டு முதல் 73 வரையிலான காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் தனது ஆதரவை விலக்கியதால் பரூக் மரைக்காயர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 1974-ல் அதிமுக ராமசாமி முதல்வராக பதவியேற்றார். அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்சினை பூதாகரமாகி 21 நாளில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
பின்னர் 1977-ல் எஸ்.காங்கிரஸ் ஆதரவுடன் அதிமுக ராமசாமி முதல்வராக இருந்தார். ஒரு ஆண்டில் அதிமுகவுக்கு அளித்த ஆதரவை எஸ்.காங்கிரஸ் வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 1980 வரை கவர்னர் ஆட்சியில் இருந்தது.
தொடர்ந்து 1980 முதல் 83 வரையிலான காலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சி இருந்தது. டி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தார். இரு கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, தனது ஆதரவை காங்கிரஸ் விலக்கியதால் ஆட்சி தானாக கவிழ்ந்தது. 1990-ல் ஜனதாதளம் ஆதரவுடன் திமுக ஆட்சி நடந்தது.. முதல்வராக டி.ராமசந்திரன் இருந்த நிலையில் ஓராண்டில் ஜனதாதளம் தனது ஆதரவை விலக்கியது. இதனால் அவரது ஆட்சி கவிந்தது. 1991 ஜனவரியில் வைத்திலிங்கம் முதல்வராக பதவியேற்றார். தற்போது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு 2016-ல் பதவியேற்று 4 வருடம் 9 மாத காலத்தை பூர்த்தி செய்திருந்த வேளையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை இழந்துள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24.02.2021

#விருதுநகரில்.....

 #விருதுநகரில்.....


#விசாரணை_கைதியின்_சிறை_நாட்களை_திரும்பி_பெற_முடியாது #மும்பை_உயர்_நீதிமன்றம்


———————————————————-
விசாரணை கைதிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகும் போது சிறையில் செலவழித்த நாட்களை திரும்ப பெற இயலாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம் கல்யானைச் சேர்ந்த அரேப் மஜீத் என்பவர் புனித பயணம் என்று சொல்லிக்கொண்டு சிரியா சென்று பயங்கரவாதிகள் என்ற நிலையில் 2014-ல் கைது செய்யப்பட்டார். மஜீத் மீதான வழக்கு 6 ஆண்டுகளாக தொடர்கிறது. இதுவரை 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையின் போது நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷ் பிடேல் விசாரித்து மஜித் மீது உள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என அவரை விடுவித்தனர். குற்றவாளி அல்ல என, முடிவுக்கு வரும் நிலையில் அவர் சிறையில் செலவழித்த நாட்களைத் திருப்பி தர இயலாது. ஒருவர் மீது, சந்தேகத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து நீண்ட காலம் சிறை காவலில் வைத்திருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் உச்சநீதிமன்றத்திலும் இதே மாதிரியான வழக்கு வந்தாக நினைவு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25.02.2021.

BBC - MDMK மதிமுக பழைய சங்கதிகள்

https://www.bbc.com/tamil/articles/cpekp475v48o?fbclid=IwAR0AbwO3Tm8L7Jq2sNptv5Gz1mw9yjqMROo_gxGls02hTHu51CtQBCW3uPs