Friday, February 26, 2021

#காட்சிப்_பிழைகள்

 #காட்சிப்_பிழைகள்

———————————
நீண்ட காலத்திற்குப் பிறகு உத்தமர் நேர்மையின் இலக்கணம் ஓமந்துரார், பொது வாழ்வில் தன்னைத்தானே அழித்துக் கொண்ட வ.உ.சிதம்பரனார் படங்களை தமிழக சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் படங்களை 1950-களிலே திறந்திருக்கவேண்டும். ஏனோ, இதுவரை இப்படிப்பட்டத் தலைவர்களின் படங்களைத் திறக்காமல் பாசாங்கு தனமான ஆட்சிகள் இங்கு நடந்தது வேதனையான விடயம். ஓமந்துரார், வ.உ.சிதம்பரனார் படத்தை காலந்தாழ்த்தி திறந்தது, வில்லிப்புத்தூரார் சொன்னதுபோல வான் பிழையாகும். சரி, இன்னொரு நேர்மையான முதல்வர் பி.எஸ்.குமாரசுவாமி ராஜா அவர் படத்தை திறப்பதற்கு இவர்களுக்கு மனம் வரவில்லை. ராஜபாளையத்தைச் சேர்ந்த் நேர்மையான முதல்வர், அவர் படம் இல்லாமல் தமிழக சட்டமன்ற வரலாறு கிடையாது என்பதெல்லாம் இங்கு உள்ளோருக்கு தெரிய வாய்ப்பில்லை. அரசியல் வரலாறு தெரியாதவர்கள் தான் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகமுடியும். எல்லாம் காட்சி பிழைகள் தான்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...