Wednesday, August 31, 2022

*நெல்லை தின விழா 2022* *நாளை,செப்-1 திருநெல்வேலி நாள்* *September 1 -Tinnevelly day*

*நெல்லை தின விழா 2022*
*நாளை,செப்-1 திருநெல்வேலி நாள்*
*Tomorrow, September 1 -Tinnevelly day*
*Boat Club, Chennai* 
————————————
1.தமிழ்த்தாய் வாழ்த்து
2.விளக்கு ஏற்றுதல்
3.வரவேற்புரை - திரு. *சங்கர் மணி*,செயலாளர்
4.சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கம் அறிமுகம் - திரு. *சைமன் ஜெயக்குமார்*, தலைவர்

5.விழா சிறப்புரை :
திரு. *கே எஸ் இராதாகிருஷ்ணன்*  வழக்கறிஞர், செய்தி தொடர்பு செயலாளர், திமுக. நூலாசிரியர்  - நிமிர வைக்கும் நெல்லை. 

திரு *சு. தில்லை வள்ளல் MD, DM*-cardiology,FSCAI, இதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தலைவர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவமனை சென்னை.

திரு. *சுந்தரேசன் IAS,* சிறப்புச் செயலாளர் புதுச்சேரி அரசு

திரு. *அலெக்ஸ் பால் மேனன் IAS*
இணை ஆணையாளர், MEPZ
இந்திய தொழில் மற்றும் வர்த்தக துறை.

திரு.*அர்ஜுன் சரவணன்*, காவல் கண்காணிப்பாளர் ,சிறப்பு குற்றப்புலனாய்வு துறை, தமிழ்நாடு 

திருமிகு.*நெல்லை உலகம்மாள்* அவர்கள் மனிதவள மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர்.

6. *நெல்லை ரத்னா விருதுகள்-  2022*

தோழர். *ஆர்.நல்லகண்ணு* அவர்கள்,
 மூத்த அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

திரு. *பாலம் கல்யாணசுந்தரம்* அவர்கள்,
சமூக சேவகர் மற்றும் நிறுவனர் அறம் அறக்கட்டளை

திரு.*நெல்லை சு முத்து* அவர்கள்,
விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர்

திரு. டாக்டர் *கலைமாமணி செவாலியர் விஜிபி சந்தோஷம்* அவர்கள், தலைவர் விஜிபி குழுமம்.

7.  விருந்தினர்களை கௌரவித்தல்
8. நன்றியுரை- திரு. *ராஜா வைரமுத்து* பொருளாளர்
9. நாட்டுப்பண்
10. இரவு விருந்து.

http://www.keetru.com/index.php/2010-08-20-14-34-38/06/10502-2010-08-20-01-45-03

#ksrpost
31-8-2022.


*வேலுப்பிள்ளை பிரபாகரன்* *தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்* | *எனது நட்பு* *பகுதி-2, Part-2*




https://youtu.be/j_7fnL3yPDs




கொர்பச்சோவ் (Mikhail Sergeyevich Gorbachev[e]

*கொர்பச்சோவ்* :
———————————-
*'சோவியத் யூனியன்' கொர்பச்சோவ் காலமானார். என்னை ஈர்த்த உலக தலைவர்களில் இவரும் ஒருவர்*.

சோவியத் யூனியனின் (USSR)கடைசி அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ்(கோர்பச்சேவ் )(வயது 91) காலமானார்.

ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய 1991 வரையிலான சோவியத் யூனியனின் அதிபர் கொர்பச்சோவ்.இவரின் பெரெஸ்த்ரோயிக்கா முக்கியமானது.

1985- 1991வரை சோவியத் யூனியன் அதிபராக இருந்தார்.

மிக்கைல் செர்கேவிச் 

 ( பி 2-3-1931  
இ30 -8-2022) இவர் சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது, கடைசி அதிபர். 1985 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்தார். 1988 முதல் 1989 வரை சுப்ரீம் சோவியத் தலைமைப் பீடத்தின் தலைவராகவும், 1989 முதல் 1990 வரை சுப்ரீம் சோவியத்தின் தலைவராகவும் பதவியில் இருந்தார். கருத்தியல் ரீதியாக, கொர்பச்சோவ் தொடக்கத்தில் மார்க்சியம்-லெனினிசக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், பின்னர் 1990களின் முற்பகுதியில் சமூக ஜனநாயகத்தை நோக்கிச் சென்றார். இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன. இவருக்கு 1990இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கொர்பச்சோவ், ருசியாவில் இசுத்தாவ்ரப்போல் பிரிவில் பிரிவல்னோயே என்ற நகரில் ருசிய, உக்ரைனிய ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இசுத்தாலினின் ஆட்சியில் தனது இளமைப் பருவத்தில் பொதுவுடைமைக் கட்சியில் சேருவதற்கு முன்பு ஒரு கூட்டுப் பண்ணையில் கூட்டு அறுவடை இயந்திரங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டார். மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, ​​அவர் 1955 இல் சட்டப் பட்டம் பெறுவதற்கு முன்பு 1953 இல் சக மாணவியான ரைசா தைத்தாரென்கோவை மணந்தார். இசுத்தாவ்ரப்போலுக்குச் சென்ற அவர், கொம்சோமால் இளைஞர் அமைப்பில் பணியாற்றினார். 1953 இல் இசுத்தாலினின் இறப்பிற்குப் பிறகு, சோவியத் தலைவர் நிக்கித்தா குருச்சேவின் இசுத்தாலினியத்திற்கு எதிரான சீர்திருத்தங்களுக்குத் தீவிர ஆதரவாளரானார். 1970 இல் இசுத்தாவ்ரப்போல் பிராந்தியக் குழுவின் கட்சியின் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில், அவர் இசுத்தாவ்ரப்போல் கால்வாயின் கட்டுமானத்தை பணியை மேற்பார்வையிட்டார். 1978 இல், அவர் கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டு மாஸ்கோ சென்றார். 1979 இல் கட்சியின் ஆளும் பொலிட்பியூரோவில் சேர்ந்தார். சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் இறந்த மூன்று ஆண்டுகளுக்குள், யூரி ஆந்திரோப்போவ், கான்சுடான்டின் செர்னென்கோ ஆகிய தலைவர்களின் சுருக்கமான ஆட்சியைத் தொடர்ந்து, பொலிட்பியூரோ 1985 இல் கொர்பச்சோவை கட்சியின் பொதுச் செயலாளராகவும், அரசுத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

சோவியத் அரசையும் அதன் சோசலிசக் கொள்கைகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருந்த போதிலும், குறிப்பாக 1986 செர்னோபில் பேரழிவிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் அவசியம் என்று கோர்பச்சோவ் நம்பினார். சோவியத்-ஆப்கான் போரில் இருந்து விலகி, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்க அதிபர் ரீகனுடன் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். உள்நாட்டில், கிளாஸ்னோஸ்த் ("திறந்த தன்மை") என்ற அவரது கொள்கையானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்த அனுமதித்தது. அதே நேரத்தில் அவரது பெரெஸ்த்ரோயிக்கா ("மறுசீரமைப்பு") கொள்கை அதிகாரப் பரவலாக்கல் மூலம் பொருளாதார முடிவெடுத்து செயல்திறனை மேம்படுத்த முயன்றது. அவரது ஜனநாயகமயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் காங்கிரசின் உருவாக்கம் ஆகியவை ஒரு கட்சி அரசுக்கு சவாலாக அமைந்தது. 1989-1990-இல் பல்வேறு கிழக்கு ஐரோப்பிய சோவியத் உறுப்பு நாடுகள் மார்க்சிய-லெனினிய ஆட்சியைக் கைவிட்டபோது கொர்பச்சோவ் இராணுவ ரீதியாக தலையிட மறுத்துவிட்டார். உள்நாட்டில், வளர்ந்து வந்த தேசியவாத உணர்வு சோவியத் ஒன்றியத்தை உடைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மார்க்சிய-லெனினியக் கடும்போக்குவாதிகள் 1991 ஆகஸ்ட் மாதத்தில் கோர்பச்சேவுக்கு எதிராக நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதி தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து, கொர்பச்சோவின் விருப்பத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியம் கலைந்ததை அடுத்து அவர் தனது பதவியைத் துறந்தார். பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அவர் தனது கொர்பச்சோவ் அறக்கட்டளையைத் தொடங்கினார், ருசிய அரசுத்தலைவர்கள் போரிஸ் யெல்ட்சின், விளாதிமிர் பூட்டின் ஆகியோரக் கடுமையாக விமர்சித்தார். மேலும் ருசியாவின் சமூக-ஜனநாயக இயக்கத்திற்காக பிரச்சாரம் செய்தார். இவர்  நேற்று (30-8- 2022) மாஸ்கோவில் கடுமையான மற்றும் நீடித்த நோயால்" இறந்தார்.

20-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராகப் பரவலாகக் கருதப்பட்ட கொர்பச்சோவ் தொடர்ந்து சர்ச்சைக்குரியவராகக் காணப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு உட்படப் பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற இவர், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்ததிலும், சோவியத் ஒன்றியத்தில் புதிய அரசியல், பொருளாதார சுதந்திரங்களை அறிமுகப்படுத்தியதிலும், கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் மார்க்சிய-லெனினிய நிர்வாகங்களின் வீழ்ச்சியை சகித்துக்கொள்வதிலும்ன் ஜெர்மானிய மீளிணைவிலும் அவர் முக்கியப் பங்காற்றியதற்காகப் பரவலாகப் பாராட்டப்பட்டார். ஆனால் சோவியத் கலைப்பை விரைவுபடுத்தியதற்காகவும், இந்த நிகழ்வால் ருசியாவின் உலகளாவிய செல்வாக்கில் சரிவைக் கொண்டு வந்து பொருளாதார சரிவைத் தூண்டியமைக்காகவும் ருசியாவிலும் முன்னாள் சோவியத் நாடுகளிலும் இவர் அடிக்கடி விமரிசிக்கப்பட்டு வந்தார். இன்றைய புட்டின் வரை இவர் காட்டிய வழியில் ருசிய ஆட்சி நடத்துகின்றனர்.

#KSR post 
31-8-2022.

Tuesday, August 30, 2022

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை

*முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள  வள்ளுவர் சிலை புனரமைக்கப்படுவது மகிழ்ச்சியான செய்தி*. 

*தலைவர்  கலைஞர் ஆட்சியில்    கடந்த 2000-ம் ஆண்டில், அதாவது டிசம்பர் மாத இறுதிநாள் இரவில்    புத்தாயிரம் தொடங்கிய ஆண்டில் திருவள்ளுவர் சிலையை குமரி முனையில் கலைஞர்    திறந்து வைத்தார். இடைப்பட்ட காலத்தில் அந்த சிலையை அதிமுக ஆட்சியாளர்கள் சீர்படுத்தாமல் இருந்தார்கள்.* 

*கடந்த   2004-ல் ஒரு முறை வள்ளுவர் சிலை பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கின்றது என்று    அன்றைய மாவட்ட  செயலாளர்,   சுரேஷ்ராஜன் கலைஞரிடம் சொல்லிருந்தார். அவர் என்னிடம், “நீ ஊர்ப்பக்கம் செல்லும்போது கன்னியாகுமரி சென்று வள்ளுவர் சிலை எப்படி இருக்கிறது என்று பார்த்து வா” என்று சொல்லி அனுப்பினார்*.

*அப்பொழுது  2004 ( நாடாளுமன்ற தேர்தல் முன்) ஜனவரி 20 அன்று கேமிராமேனுடன் கன்னியாகுமரி   சென்று படம் எடுத்து கொண்டும் அதுகுறித்து அறிக்கை தயார் செய்தும் கலைஞரிடம் வழங்கினேன்*.

*அந்த சமயத்தில் ஜெயலலிதா ஆட்சியில் வள்ளுவர் சிலை பராமரிக்கப்படாமல் தவிர்க்க பட்டது. இன்றைய திமுக ஆட்சியில் முதல்வர்  தளபதி ஸ்டாலின்  அவர்கள் அதை   முன்னெடுத்து பராமரிப்பு பணி நடக்க உத்தரவிட்டு பணி நடந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது*. 

*அரசியல் மனமாச்சரியங்களை கடந்து  தமிழகத்தின் அடையாளங்கள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது*

#ksrpost
30-8-2022.


Ashoka Pillars

*Emperor 

 during his reign (c. 268 to 232 BCE) erected a series of pillars throughout the Indian subcontinent*.

Two of them, a bull capital and a lion capital were excavated from the site of Rampurva in Bihar in 1876 and 1907 respectively.

#Heritage #Culture #Tradition
#KSR post 
30-8-2022.

*வாழ்க்கை சில சமயம் நாம் விரும்புவதைத் தருவது இல்லை.!!!!.* *நாம் அதற்கு தகுதியானவர்களாக இல்லை என்பதற்காக அல்ல. !!!!* *நம் தகுதிக்கு அது சிறந்தது இல்லை என்பதற்காக கூட இருக்கலாம்.!!!!*

*வாழ்க்கை சில சமயம் நாம் விரும்புவதைத் தருவது இல்லை.!!!!.*
*நாம் அதற்கு தகுதியானவர்களாக இல்லை என்பதற்காக அல்ல. !!!!*
*நம் தகுதிக்கு அது சிறந்தது இல்லை என்பதற்காக கூட இருக்கலாம்.!!!!*
*வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும். !!!*
*   தகுதியே அதனை என்ற நிலையில்;அதுவரை அவமானங்கள், சிறுமைகள் என சிலவற்றை பொறுத்துக் கொண்டும், சிலவற்றை சகித்துக் கொண்டும் பணி என ஓடிக் கொண்டே இருப்போம்.!!!!*

#ksrpost
30-8-2022.


Monday, August 29, 2022

Ramakrishna Hegde

Undoubtedly, *

* revolutionized the political scene in Karnataka. Hegde was the first non Congress politician to rise to the post of CM in the history of Karnataka. He served as CM for three terms 

I fondly remember Hegde on his 96th birthday today…
My well Wisher.

Ramakrishna Mahabaleshwar Hegde (29 August 1926 – 12 January 2004) was Cmship for three terms between 1983 and 1988. He was elected to the Karnataka Legislative Assembly in 1957, 1962, 1967, 1983, 1985 and 1989, and to the Rajya Sabha for two terms, 1978–83 and 1996–2002. He also served as Minister of Commerce and Industry in the Union government (1998–1999).
Some memories…

#KSR post 
29-8-2022.

*கிரா-100* *தொகுப்பு- இரண்டு பகுதிகள்* கிரா. 100 (நூற்றாண்டு)

*கிரா-100*  கி. ராஜநாராயணன்
*தொகுப்பு- இரண்டு பகுதிகள்*
————————————
கிரா. 100    (நூற்றாண்டு) வரும் செப் 16 ஆம் நாள் தொடங்க இருப்பதை முன்னிட்டு இக்கட்டுரைகள் அடங்கிய நூல் 



பொதிகை-பொருநை- கரிசல், கதைசொல்லி வெளியீடாக இரு தொகுப்புகளாக 1250 பக்கங்களில் வெளி வர இருக்கின்றன.

கி.ரா. படைப்புகளைப் பற்றியும் கி.ரா.வைப் பற்றியும் எழுதி அனுப்பிய படைப்பாளிகள், விமர்சகர்கள், 
சக தோழர்கள், வாசகர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி!

கட்டுரைகள் எழுதியவர்கள் தங்கள் முகவரியை rkkurunji@gmail.com என்ற இமெயிலுக்கு தெரிவித்தால்

இரு தொகுப்புகளும் அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தொகுப்பில் கீழ்க்கண்டவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

1.      தோழர் கி.ரா.
ஆர்.நல்லகண்ணு

2.      கரிசல் இலக்கியத்தின் தந்தை
பழ.நெடுமாறன்

3.      ஆண்டுதோறும் கோவில்பட்டியில் கூடுவோம்; அண்ணாச்சி கி.ரா. புகழ் பாடுவோம்!
வைகோ

4.      கி.ரா.-வும் கிரிமினல் வழக்கும்
ஜி.ஆர்.சுவாமிநாதன்

5.      கரிசல் மண்ணின் மைந்தர்
சிவகுமார்

6.      கோபல்ல கிராமம் நாட்டார் நாவலா?
நா. வானமாமலை

7.      கரிசல் காட்டுக் கதைஞர்
காசி ஆனந்தன்

8.      ராஜநாராயணனின் படைப்புலகம்
எம்.ஏ. நுஃமான் (இலங்கை)

9.      தகுதியால் வாழ்தல் இனிது!
நாஞ்சில் நாடன்

10.    கி.ரா.-வின் கதாபாத்திரங்கள்
கே. வைத்தியநாதன்

11.    கி.ரா. ஓர் இயல்பு நெறியாளர்
எஸ். தோதாத்ரி

12.    கி.ரா.- தெளிவின் அழகு
ஜெயமோகன்

13.    ‘கோபல்லகிராமம்’ காட்டும் சித்திரம்!
ஆ.மாதவன்

14.    வாழ்க தமிழுடன் இடைசெவல் நாயனா
நெல்லை கண்ணன்

15.    முன்னத்தி ஏர்
பூமணி

16.    கரிசல் மண்ணின் கதைசொல்லி
அம்பை

17.    ஆயிரம் கதைகளின் நாயகன்
எஸ் ராமகிருஷ்ணன்

18.    தடங்கல்
அ.முத்துலிங்கம்

19.    கி.ரா. எனும் ஞான பீடம்
எஸ். ஏ. பெருமாள்

20.    குடும்பத்தில் ஒரு நபர்’ : மாடும் பதிலியும்
பெருமாள்முருகன்

21.    கிரா... சமூக விடுதலையின் உறுதிப்பாடு
சி.மகேந்திரன்

22.    கருந்தழற்பாவைகள்
கோணங்கி

23.    கரிசல்காட்டுச் சம்சாரி வாழ்க்கைச் சீரழிவுகள்: 
கி.ராஜநாராயணன் புனைகதைகளை முன்வைத்து
ந.முருகேசபாண்டியன்

24.    கி.ரா.வும் அண்ட்ரண்டா பட்சியும்
இளம்பாரதி

25.    ஒரு நாவலும் மூன்று கதைகளும்
அ.கா.பெருமாள்

26.    சாதராணமான அசாதாரணர் 
கலாப்ரியா

27.    இலக்கியப் பிதாமகன் கி.ரா.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்

28.    கி.ரா.வின் வழித்தோன்றல்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி
ச.தமிழ்ச்செல்வன்

29.    கி.ராவின் படைப்புலகம் - பருத்திப் பாலின் தீரா ருசி!
தமிழச்சி தங்கபாண்டியன்

30.    கி. ரா. வின் ‘மொழி வேதியியல்’
பெ. மகேந்திரன்

31.    கதை சொல்லி வாழ்ந்தவர் கி. ரா.
நாஞ்சில் சம்பத்

32.    “மாமி வைத்த மோர் குழம்பு ரொம்ப ஜோர்
கமலா ராமசாமி

33.    எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர்
சோ. தர்மன்

34.    கி.ராஜநாராயணன் : மகத்தான ரசிகர்
பாவண்ணன்

35.    மனிதருள் நீ ஒரு அபூர்வப் பிறவி !!!
சுப்புலட்சுமி செகதீசன்

36.    அது ஒரு தரிசனம்
ராவ்

37.    நன்றே கருதியவர் கி.ரா.
கல்யாணராமன்

38.    கி.ரா.வின் கரிசல் இலக்கியத்தில் மருதவாழ்க்கை
சு.வேணுகோபால்

39.    கி.ரா. மானுட எழுத்துக்காரர்
பவா செல்லதுரை

40.    கி.ராஜநாராயணனின் கன்னிமை
பா.செயப்பிரகாசம்

41.    கி ரா கரிசல் பல்கலைக்கழகம்
சி. மோகன்

42.    அடையா நெடுங்கதவம்
கிருஷி ராமகிருஷ்ணன்

43.    ஜூலி ப்ளோரா அல்லது உப்பு முத்தம் கனிவு சிறுகதையை முன் வைத்து 
கீரனூர் ஜாகீர்ராஜா

44.    கரிசல் நாயகன் கி.ரா.
கே. சாந்தகுமாரி

45.    கி.ராஜநாராயணன்: மிச்சமாக முடியாத நினைவுகள்
சமயவேல்

46.    “கி.ரா” இப்படிக் “கீறார்”!
த. பழமலய்

47.    கிராவின் உலகப்பார்வை
பக்தவத்சல பாரதி

48.    Bonding with Black Soil416
Pritham K. Chakravarthy

49.    கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி
சுப்ரபாரதி மணியன்

50.    கி. ரா. திறந்த கதவு
நிஜந்தன்

51.    தமிழர் கிராமிய வாழ்வியல்!
ப.திருமாவேலன்

52.    கி.ரா. நினைவலைகள்
இரவீந்திரன்

53.    கி.ரா.வின் மனம் போல
விஜயா மு.வேலாயுதம்

54.    கி.ராஜநாராயணன் : நாடகங்களும் திரைப்படங்களும்
அ. ராமசாமி

55.    நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா
மணா

56.    அந்தமான் நாயக்கர் நாவல் பற்றி ஓர் அலசல்
தி. இராசகோபாலன்

57.    கி.ரா என்னும் இலக்கிய அபூர்வம்
சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

58.    தன் வாழ்வாலும் எழுதிக்காட்டிய கலைஞன்.
ரவிசுப்பிரமணியன்

59.    கி.ரா எனும் கரிசல் காட்டு மைனா
அ.வெண்ணிலா

60.    கி.ரா. அவர்களிடம் கிடைத்த அனுபவங்கள்
தள.ப.தி. கோபாலகிருஷ்ணன்

61.    எளிமையாய் சொல்லப்பட்ட நவீனகதைகள்
லாவண்யா சுந்தர்ராஜன்

62.    நிலவரைவியல் இலக்கிய முன்னோடி - கி. ரா
அப்பணசாமி

63.    எண்ணமும் எழுத்தும் ஒன்னென
எஸ் இலட்சுமணப்பெருமாள்

64.    கி.ரா.படைப்புகளில் பறவைகள், விலங்குகள், தாவரங்கள்
இரா. நாறும்பூநாதன்

65.    கி.ரா. எனும் நாட்டார் மரபின் கதைசொல்லி
இரா. காமராசு

66.    கி.ரா.வைப்பற்றி...
குரு.ஸ்ரீ.வேங்கடப்பிரகாஷ்

67.    கரிசல் நிலப் பெண்களும், சில காதல் கதைகளும்
எம்.கோபாலகிருஷ்ணன்

68.    கி.ரா. என்ற மகத்தான கதைசொல்லி.
உதயசங்கர்

69.    உறவாக வாழ்ந்த கி.ராஜநாராயணன்
குறிஞ்சிவேலன்

70.    கி.ரா
பாரதி கிருஷ்ணகுமார்

71.    கதைகள் முடிவதில்லை!
அசோகன் நாகமுத்து

72.    காகிதப் பறவைகள்
இரா.மீனாட்சி

73.    ‘கிரா’மியம்
பேரா. சு.சண்முகசுந்தரம்

74.    கி.ரா. என்றொரு மானுடம்
க.பஞ்சாங்கம்

75.    கி. ரா என்கிற சுத்த மனசுக்காரர்!
மு.ராமசாமி

76.    வாசம் பரப்பும் மலர்ச்சோலை
திடவை பொன்னுசாமி

77.    அரங்கம்... மொட்டைமாடி... கேணி...
செல்வ புவியரசன்

78.    நினைவலையில் என் குருநாதர்
சூரங்குடி அ. முத்தானந்தம்

79.    பேச்சு நடையே எழுத்தின் வலிமை 
ப்ரியன்

80.    கி. ரா.
மு.சுயம்புலிங்கம்

81.    கி.ரா. தாத்தாவும் அவரது அனிமேஷன் கதைகளும்...!
யவனிகா ஸ்ரீராம்

82.    கி ரா எனும் மனித நேயம்
ராசி அழகப்பன்

83.    மண்ணின் மைந்தர் கிரா...
சாந்தா தத்

84.    கோபல்ல கிராமமும் மக்களும்
அருள்செல்வன்

85.    கரிசல்காட்டுக் கதுவாலிப் பறவை
கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

86.    கரிசல் இலக்கிய பிதாமகன் கி.ரா.வுடன் ஒரு மாலைப்பொழுது
ஆ.தமிழ்மணி

87.    கி. ரா. வுடனான என் பிணைப்பு
ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்

88.    இரு மொழிப் பயன்பாடு- கி.ரா.வுடன் ஒரு சொல்லாடல்
விஜயலட்சுமி ராஜாராம்

89.    கடல் உப்பும் மலை நாரத்தையும்
சிலம்பு நா.செல்வராசு

90.    கரிசல் மொழியை நயமாக்கியவர் கி.ரா.
நா.சுலோசனா

91.    கி.ராஜ நாராயணன் - கூரலகுப் பறவையொன்றின் கதாவலசை
ஆகாசமூர்த்தி

92.    கி.ராஜநாராயணனின் கிடை குறுநாவலில் உவமைகள்
இர.சாம்ராஜா

93.    காரிக்கஞ் சேலையும் கன்னி மொழியும்
இரா.வீரமணி

94.    கி.ரா - கரிசல் எழுதிக் கொண்ட இலக்கியம்.!
இரா.மோகன்ராஜன்

95.    ஊருக்கு முந்துன வெதப்பு கி.ரா
கி .உக்கிரபாண்டி

96.    கி.ரா.வும் - கதவும்
உதயகுமார்

97.    அவர் ஒரு மக்கள் எழுத்தாளர்
உதயை மு. வீரையன்

98.    கிராவுடன் சில தருணங்கள்
உமா மோகன்

99.    கி.ரா.வின் ‘காய்ச்ச மரம்‘ : தன்னையறிதல்
பி.எழிலரசி

100.  கி.ரா. வின் சங்கீத நினைவுகள்
என்.ஏ.எஸ். சிவகுமார்

101.  கி.ரா. எனும் கதைப் பத்தாயம்!
எஸ்.ராஜகுமாரன்

102.  கரிசல் குயில் கி.ரா. - கரிசல் இலக்கியத்தின் பிதாமகன்.
காசி விஸ்வநாதன்

103.  இப்படியும் ஒரு மனுசம் 
கி.ரா.பிரபி

104.  அனுபவக் களஞ்சியம் கி.ரா.
அம்சா

105.  நித்தமும் நூறு வாழ்ந்து பேறு பெற்ற பேராசான் கி.ரா. பிரியமானவர்
எஸ்.பி. சாந்தி

106.  அப்பா எப்போது வருவீர்கள்?
பாரததேவி

107.  கி.ராவின் பெண்கள்:
நாச்சிய்யார், செவனி, பேச்சி: பேயாகுதலின் பரிணாம வளர்ச்சி
முபீன் சாதிகா

108.  கி. ரா. என்கிற கரிசல்காட்டுக் கதைசொல்லி
சௌந்தர மகாதேவன்

109.  கி.ராஜநாராயணன் என்னும் ஆளுமை
சோ.பத்மநாதன்

110.  கி.ராவின் படைப்புகளில் வாழ்வியல்
கவிமுகில் சுரேஷ்

111.  கிராவின் நாற்காலி
ந. கார்த்திகாதேவி

112.  கரிசல் மண்ருசியும் கிராவின் மொழிருசியும்
கி.பார்த்திபராஜா

113.  உள்ளத்தில் ஊஞ்சலாடும் உறவுகள்
செ.திவான்

114.  கி.ரா வின் கடித வரிகளுக்கிடையே வைரங்கள்
ஜனநேசன்

115.  பேசித் தீரா கி.இரா தாத்தா
கு.அ.தமிழ்மொழி

116.  கி. ரா.வுடன் சில நினைவுகள்
கோவி. ராதாகிருஷ்ணன்

117.  கிராவின் பைதாவின் பட்டைகள்
ச. சுபாஷ் சந்திரபோஸ்

118.  கி.ரா... கதை சொல்லியின் கதா விநோதங்கள்
சாரதி

119.  கி.ரா. நினைவலைகள்
சி. திலகம்

120.  தந்தையின் நண்பர் கி.ரா.
சீராளன் ஜெயந்தன்

121.  அன்று பெய்த மழைக்கு நன்றி சொல்வோமா?
சென்னிமலை தண்டபாணி கவிஞர்

122.  கி.ரா. எனும் ராயகோபுரம்
மு.ராஜேந்திரன்

123.  இன்னும் இருக்கிறவர்கள்...
சுகா

124.  ‘வாசகன்‘ பார்வையில்... கி.ரா.
தஞ்சிகுமார்

125.  கதை வானின் அண்டரண்டப்பட்சி
துரை. அறிவழகன்

126.  மொழிபுதிது; அனுபவம்புதிது
பத்மா நாராயணன், புதுடில்லி

127.  கி.ரா.வின் “புறப்பாடு” எனும்
சிறுகதையில் கரிசல் மண் குறித்து...
பா. வீரகணேஷ்

128.  கி.ரா. மாமாவும் நானும்
பாரதி மோகன்

129.  கதையும் கிழவனும்
மாளவிகா பி.சி.

130.  சில விவாதங்களை முன்வைத்து கி.ரா.வின் ‘கன்னிமை’ :
பெண் பற்றிய புரிதலும் ஆண் மனமும் 
பி.பாலசுப்பிரமணியன்

131.  கி.ரா : புதுச்சேரியில் மணம் வீசிய தெற்கத்தி ஆத்மா!
பி.என்.எஸ்.பாண்டியன்

132.  கி.ரா. ஒரு அபூர்வம்
ஜெ,பொன்னுராஜ்

133.  கி.ரா வின் படைப்புலகம் ‘காய்ச்ச மரம்’ கதையை முன்வைத்து
எஸ். ரவிச்சந்திரன்

134.  கரிசல்மண்ணின் ஆவணக் காப்பகம் : கி.ரா.,
ம. பிரசன்னா

135.  பிரம்மரிஷி
மஞ்சுநாத்

136.  காலத்தின் கதைப் பெட்டகம்...
ம. மணிமாறன்

137.  கரிசல் நிலத்தில் உரமாகிப் போன பெரு மரம்!
மதரா

138.  எங்கள் மண்ணின் மைந்தர் கி.ரா!
கு.வ.மார்க்கண்டேயன்

139.  இலக்கியச் சிந்தனையும் கி.ராவும்
மு இராமனாதன்

140.  Ki. Rajanarayanan’s “Kaancha Maram”:.A Comparative and Stylistic Study
Dr. R. Arunachalam

141.  கரிசல் மண்ணின் கலைஞர் கி.ராஜநாராயணன்!
எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி

142.  கி.ரா.வின் கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் வாழ்வியல்
முனைவர் சு.அர.கீதா

143.  கதைசொல்லி கி.ரா.
கோ. சுப்பையா

144.  கி.ரா.வின் கதைகளில் பெண் மதிப்பீடு
கோ.சந்தனமாரியம்மாள்

145.  தமிழ் புலத்தில் அடியுரமாக விழுந்தக் கிடை
(கி.ரா.வின்- கிடை - குறுங்கதையை முன்வைத்து)
மு.சரோஜாதேவி

146.  நாயக்கர் வரலாறு கூறும் முன்மாதிரியில்லாத சாதனைப் புதினங்கள்
சீதாபதி ரகு

147.  கிரா - பண்புகளின் பன்முகம்
இராச.திருமாவளவன்

148.  ‘காய்ச்ச மரம்’ மற்றும் ‘முதுமக்களுக்கு’ கதைகள் மூலம்
உணர்த்திய வாழ்க்கைப் பாடம்
பெ.சரஸ்வதி

149.  கரிசல் பெருநிலத்தின் வியாசன்
ராஜா சிவக்குமார்

150.  கரிசல் கண்ணாடி
பொ. ராஜாராம்

151.  கரிசல் சம்சாரி - கி.ரா
சு.விநாயகமூர்த்தி

152.  கி.ரா., புனைகதைகளும் அஃறிணைப் பொருட்களும்
கு.லிங்கமூர்த்தி

153.  கி.ராவின் கோபல்ல கிராமத்தில் கரிசல் வட்டாரவழக்கு
மா.ரமேஷ்குமார்

154.  கி.ராஜநாராயணன் கதைகளில் பெண்
பெ.இராஜலட்சுமி 

155.  உளவியல் பார்வையில் கோபல்ல கிராமம்
அ. இராஜலட்சுமி

156.  கரிசல் காட்டு நாயகன் கி.ரா.
வாசு.அறிவழகன்

157.  కీ.రా. తో నా పరిచయం
డా. సగిలి సుధారాణి

158.  ಕನ್ಯತ್ವ
ತಮಿಳಿನಲ್ಲಿ: ಕಿ. ರಾಜನಾರಾಯಣನ್ ಕನ್ನಡದಲ್ಲಿ: ಕೆ. ನಲ್ಲತಂಬಿ

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
28-8-2022.

Saturday, August 27, 2022

Janata Party.

*Rare picture*
 
Indian Express Ramnath Goenka With Jayprakash Narayan , Sharad Pawar and Chandrashekhar during Janta rule,1978.

Morarji Ranchhodji Desai was an Indian independence activist and politician who served as the 4th Prime Minister of India between 1977 to 1979 leading the government formed by the

. Sharad Pawar was against Congress at that time.

#KSR post .
27-8-2022.

*Good old days…*

*Good old days…*
Tranquility, peaceful independent life…
Scholar gypsy life…
North Yamuna river banks- Delhi…   
to South cape comorin  
wandered here and there…
Kamarajar, Indira Gandhi,
Prabhakaran and other leaders and  other  personalities…
1985 TESO- Kalaignar
*Those days gone.*



#KSR post
27-8-2022.

Unification of India -Sardar Patel

*Did u know Mysuru Maharaja had given his private aircraft to Sardar Patel to fly around the country for Unification of India purpose. The aircraft was called as Mysuru Dakota One can see the famous Ganda Bherunda (Royal Emblem) displayed on the rear side of aircraft*
Mysore Dakota' was a war surplus C-47 converted to a passenger DC-3 by HAL. The registration was VT-AXX.
The Maharaja's personal Pilot, Capt. Sundaram was the Pilot who flew Sardar Patel to various parts of India. Mysuru Jayachamaraja Wodeyar. had been the Governor of the erstwhile Madras Presidency
#KSR post 27-8-2022.





Friday, August 26, 2022

Congress- Old memories

Youth Congress Leaders, Young Ghulam Nabi Azad With YS Rajasekhar Reddy, N. Chandra Babu Naidu, KE Krishna Murthy during 1970s during youth and  student Congress camp. 
We were Student Congress(NSUI) office bearers.Youth Congress and Student congress 



Along with the above. leaders Priya Ranjan Das Munshi,Ambica Soni, Actress Sultana Raszia, Ramachandra Rath and others. Ramesh Chenthala our counterpart in Kerala NSUI.
Lot of memories during 1970s.. Famous Assam camp where Indira Gandhi, Party President D. K. Barrowa,Sanjay and others atttended the camp..

#KSR post 
26-8-2022.

*ஏ, தாழ்ந்த தமிழகமே!: -அறிஞர் அண்ணா*

*ஏ, தாழ்ந்த தமிழகமே!: -அறிஞர் அண்ணா* 
————————————
தமிழகத்தில்  மறைமலை அடிகள், திரு.வி.க., வள்ளலார், ஆறுமுக நாவலர், சேலம் வரதராஜூலு நாயுடு, பாண்டித்துரை தேவர், சகாஜனந்தர்முத்துத்தாண்டவர் (1560 -1640),அருணாசலக் கவிராயர் (1712-1779) மற்றும்மாரிமுத்துப் பிள்ளை (1717-1787)கோவை தமிழ் அறிஞர் நரசிம்மலு நாயுடு,    குணங்குடி மஸ்தான்,முதலமைச்சர்கள்-பிரீமியர்கள் ஓமந்தூரர், ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஆற்காடு ஏஆர்,ஏஎல் முதலியார் சகோதரர்கள், பாவனந்தர், கதிர் வேல் பிள்ளை,வெள்ளக்காள் சுப்பிமணிய முதலிய்யார், பால் நாடார்,தியாகராஜ செட்டியார், அழகப்ப செட்டியார், பாவணார் இதழலார் திருச்சி இராமணுஜம் என நீண்ட பட்டியல் உண்டு. இந்தஆளுமைகளின் புகழ் தமிழகத்தில் பெரிதாக கொண்ட பட வில்லை? தமிழகம் ஏன் அவர்களை கவனிக்காமல் போனது? காரணம்ஏன், யார்? ஏன்  இந்த நிலை




*“இன்று தமிழ் தென்றல்”-திருவிக 140வது பிறந்த நாள்*.

#ksrpost 
26-8-2022.

Thursday, August 25, 2022

*உழவர் பெருந்தலைவர் சி. நாராயண சாமி நாயுடு

*உழவர் பெருந்தலைவர் சி. நாராயண சாமி நாயுடுஅவர்கள் உருவாக்கிய கூட்டம் தான் பச்சை துண்டு  போராளி கூட்டம். நாங்கள்* *தமிழகம் முழுதும் போர் குணத்தோடு அலைந்து  கட்டி அமைத்த* *விவசாயிகளின்*
*பெரும் படை…*
*சர்வ பரி தியாகம்  என்று களப்பணிகள் நோக்கமாக பதவிகளை புறம் தள்ளிய மானமிகு விவசாயிகள்*.

#ksrpost
25-8-2022.


*நினைத்ததற்கும் விருப்பத்திற்கும் மாறாக நடக்கும் போதும்,*

*நினைத்ததற்கும்  விருப்பத்திற்கும் மாறாக  நடக்கும் போதும்,*

*பயணிக்கும் பாதை தடைகள், கரடாக இருக்கும்போதும்,*

*கடமைகள் பொறுப்புகள்  மனத்தை அழுத்தும் போதும்,*

*கால சூழ் ஏற்ப சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் எந்த நிலையிலும்ஒதுங்கி விடாதீர்கள்.காலம் பதில் சொல்லும்.*

(Ph- During today’s night walk, just now)  
#ksrpost
25-8-2022.


*committees and commissions of Govt;* *Feedback, nothing so far*

*committees and commissions of Govt;*
*Feedback, nothing so far*
————————————
*After Independence, successive Governments at the Center, either headed by the Congress, the Bharatiya Janata Party or others briefly, set up more than 45 committees and commissions in pursuit of administrative reforms. Unfortunately, most of their recommendations, which by and large remained on paper, are not readily available today for any required reference*. 

*There has been weak follow up action by the Union Governments, while an absence of policy watchdogs in the civil society allowed administrations to be causal with the reports of the administrative reform commissions. On the occasion of the 75 years of Independence being commemorated as “AzadiKa Amrit Mahatsav” it may be appropriate to review the futile exercise done in this direction and consolidate fruitful recommendations for a better transparency and accountability in governance*. 

*A noteworthy and concerted effort was made in this direction in the conference of Chief Ministers held on May 24, 1997, leading to a comprehensive discussion to draft a nine- point Action Plan for Effective and Responsive Government at the Central and State levels. The then prime minister IK Gujral, who was in office just for a year, presided over the deliberations. The conference recognised that, as the country completes 50 years of independence, and as the people are assailed by growing doubts about the accountability, effectiveness and moral standards of administration, it was agreed that immediate corrective steps must be taken to restore to faith of the people in the fairness, integrity and responsiveness of the administration to rebuild the credibility of the government.*
#ksrpost
25-8-2022.


*அரசியிலில் நேர்மையின் இலக்கணம்* *சென்னை ராஜதானியின் (Madras Presidency) பிரதமர்( பிரீமியர்)* *ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவு தினம்* *அரசியிலில் தவம் மேற்கொண்ட அரசியிலில் துறவி*.



_____________________
நானும் ஒரு விவசாயி என்று உரிமை கொண்டாடும் முதல்வர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அரசியல் வாழ்விலிருந்து மீண்டும் விவசாயத்தை நோக்கி அவர்கள் திரும்புவார்களா என்றால் சந்தேகம்தான். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்புவகித்தவர் ஓ.பி.ஆர். என்று அழைக்கப்படும் ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி (1895-1970). தேடிவந்த முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள மூன்று மாத கால அவகாசம் எடுத்துக்கொண்டது அரசியல் அதிசயம். முதல்வர் (அன்று பிரதமர்)பதவியிலிருந்து விலக நேர்ந்ததும் சொந்த ஊருக்குச் சென்று முழுநேர விவசாயியானார்.

காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடிய திராவிட இயக்கத்தினரும் ஓமந்தூராரைப் பாராட்டவும் ஆதரிக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. காந்தியர்களின் எளிமைக்கு காமராஜரையும் கக்கனையும் உதாரணம் காட்டுபவர்கள்கூட ஓ.பி.ஆரை ஏனோ மறந்துவிடுகிறார்கள். ஆதிதிராவிடர் நலத் துறையைத் தனித் துறையாக இயங்கச் செய்தவர் அவர். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலராக நியமித்தவர். முதல்வரின் அலுவலகச் சுவரில் காந்தி, நேருவின் படங்கள்; வீட்டுச் சுவரில் வள்ளலாரின் படம் என்று அரசியலுக்கும் ஆன்மிகத்துக்கும் நடுவில் ஓமந்தூராரின் பொதுவாழ்க்கை இருந்தது.

ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். 

சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர்.

 இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது.

 அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார்.

ஜமீன்தார் இனாம்
 முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்

.இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார். சமூக நீதி உத்தரவு பிறப்பித்தார். தமிழ் பயிற்சி மொழி. தமிழ் கலை களஞ்சியம் (Tamil Encyclopaedia) 8  தொகுதிகள், தமிழில் பாட நூல்கள் வெளிவரவும், அணைகள் கட்ட திட்டங்கள் என பல இவரின் பணிகளை பட்டியல் போடலாம். அரசியிலில் தவம் மேற்கொண்ட அரசியிலில் துறவி.

இப்படியான மாமனிதர் படத்தை  கடந்த 1950 களில் வைக்க வேண்டியது ; நீண்ட காலமாக கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் தமிழக சட்ட மன்றத்தில் வைக்கப்பட்டது. இங்கே
உண்மையான அரசியலில் களப்பணி, நேர்மை என கடந்த கால அரசியிலில் இன்று தேவையில்லை. அதை குப்பை தொட்டில் போட வேண்டும் என நினைக்கும் அறிவு கெட்ட ஜென்மங்களை என்ன சொல்ல…?

மாக்கவி பாரதி வரிகள் நினைவில் வருகிறது…..

விதியே, விதியே, தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்

தன்மையும் தனது தருமமும் மாயாது

என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்

வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று

உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்

 சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?

விதியே, தமிழச் சாதியை எவ்வகை

விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.

ஏனெனில்,

“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்

ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,

‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்

கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்

முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று

உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்

சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்

உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்

கண்டுஎனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள

பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்

இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்!

விதியே! விதியே! தமிழச் சாதியை

என்செயக் கருதி யிருக்கின் றாயடா?

– *பாரதியார்*

#ksrpost 
25-8-2022.

Wednesday, August 24, 2022

Andal சூடிக்கொடுத்த சுடர்க்கொடி'

ஆண்டவனையே ஆள நினைத்து, ஆண்டதால் 'ஆண்டாள்' என்றும், 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும், இறைவனைக் குறித்து நாச்சியார் திருமொழி இயற்றியதால் 'கோதிலாக் கோதை நாச்சியார்' என்றெல்லாம் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவள் பக்தி நெறி ஒழுகிய ஆண்டாள்.
#andal by Manisha Raju


*Don’t pour ur words wantonly against Judiciary *

*Don’t pour ur words wantonly against Judiciary *
————————————
The parliamentarian allegiance towards constitution based on the oath of office is highly regarded but not to the extent of making lordships as unlord.Not only the comment made , but also the phrase which is coined by him is not corre. MP, MLA and CJI may come and go. But judiciary will remain to protect the constitution…Unlording a judge in the public platform, that too by a person holding constitutional post,  for the statement made in the judicial process will squarely attract contempt of court. Administration of justice is freed from other political clutches right from the montesquieu days under the jurisprudence of separation powers. We can not expect judiciary tobe emotional since she blindfolded herself. We need to remember that judicial is the last hope of last citizen and we witnessed in several issue.: The letters scribed by person holding constitutional office, is clear that he tries to become extra constitutional authority. Montesquieu, the profounder of theory Seperation of Powers has clearly draws the line between parliament, executive and judiciary and they should not exercise the power of others. All the democratic and republic nations follow the said principle with the checks and balances within their legal frame work. That is welfare State. Greek Democracy, Italy Republic, Britain born Magna Carta are basic.. Everyone shall respect the structure and do whatever they want within the framework

#KSR post 
24-8-2022.


போலி நில பத்திர பதிவு தடுப்பு சட்டம்.

*போலி நில பத்திர பதிவு தடுப்பு சட்டம்.  திமுக- தமிழ்நாடு  அரசின் இந்தியாவுக்கு முன்னோடி சட்டம்* https://tamil.oneindia.com/news/chennai/cm-mk-stalin-s-action-against-land-mafia-in-tamil-nadu-gets-fruit-472351.html?ref_source=whatsapp&ref_medium=mweb&ref_campaign=SocialShare

Monday, August 22, 2022

ஆகஸ்ட் 22 சென்னைக்கு பிறந்த நாளாம், மெட்ராஸ் டே.

ஆகஸ்ட் 22 சென்னைக்கு பிறந்த நாளாம், மெட்ராஸ் டே. Madras day 

என்ன விஷயம் என கேட்டால் ஆகஸ்ட் 22 1639 அன்று,  கிழக்கிந்திய கம்பெனி,  சென்னப்ப நாயக்கரிடம்   (  விஜயநகரம் ஆட்சி) இருந்து    கடற்கரைக்கு எதிரே இருந்த காலி இடத்தை வாங்கி பத்திர பதிவு செய்தார்கள்.  அங்கே ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள்.   அதனால் அது சென்னையின் பிறந்த நாள்.

 வால்மீகி முனிவர் தவம் செய்த இடம் திருவான்மியூர், லவனும் - குசனும் ராமருடன் போர் புரிந்த இடம் கோயம்பேடு என நம்பிக்கை. திருவள்ளுவர் பிறந்தது மயிலாப்பூர்.  கபாலீஸ்வரர் மற்றும்  பார்த்தசாரதி கோவில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.

கபாலி கோவில் கட்டியது எப்போது?

நானூறு ஆண்டுகள் தான் ஆச்சு என்று தெரிய வரும்....

அப்ப திருஞானசம்பந்தர்  இந்தக் கோவிலில் பதிகம் பாடவில்லையா என்று....?

கடற்கரை பக்கம்தான் கோவில் இருந்தது என்று உண்மையா?....

கடற்கரை ஒட்டிய கோயிலாக இருப்பதால்தான் கபாலி கோவில் விழாக்கள் மட்டும் பௌர்ணமியை அனுசரித்து வருகிறது.

கிருத்தவ புனிதர் தோமர் மயிலைக்கு வந்தது

இந்த விடயங்களை பழைய நிகழ்வுகளையும், காலங்களையும் சென்னையை குறித்து இன்னும் ஆயவு செய்ய வேண்டும்.


Sunday, August 21, 2022

*திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆலய அதிகாரி சுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம் தொடர்பான சி. ஜே.ஆர்.பால் கமிஷன் அறிக்கையை 1982 தலைவர் கலைஞர் வெளியிட்டார் என இன்றைய அதிமுகவினருக்கு தெரியுமா?* *அன்று இவர்கள் எங்கோ*

*திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆலய அதிகாரி சுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம் தொடர்பான சி. ஜே.ஆர்.பால் கமிஷன் அறிக்கையை 1982 தலைவர் கலைஞர் வெளியிட்டார் என இன்றைய அதிமுகவினருக்கு  தெரியுமா?* *அன்று இவர்கள் எங்கோ*
 ————————————
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை அறிக்கை கசிந்திருப்பதன் மூலம் அரசின் ரகசியங்களை காக்கத் தவறிவிட்டது என சொல்லும் அதிமுகவினருக்கு…

திருச்செந்தூர் ஆலய சரிபார்ப்பு அதிகாரி சுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம் தொடர்பான சி. ஜே.ஆர்.பால் கமிஷன் அறிக்கையும் (1982 ) அரசாங்கத்தின் ரகசியம்தான். அதுவும்கூட அரசுக்குத் தெரியாமல்தான் தலைவர் கலைஞர் மூலமாக வெளியானது. எனில், அந்த அரசாங்க ரகசியத்தைக்  காக்கத் தவறிய அதிமுக அரசை எப்படி விமர்சிப்பார்கள்?
தலைவர் கலைஞர் பால் கமிஷன் அறிக்கையை செய்தியாளர்களிடம் முழு அறிக்கை அப்படியே அன்று வெளியிட்டார். ஓய்வு பெற்ற  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். பால்,திருச்செந்தூர் ஆலய சரிபார்ப்பு அதிகாரி சுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம்  குறித்து விசாரணை கமிஷன் பணிகள் முடித்து அறிக்கையை தமிழக அரசிடம் வழங்க விட்டு அமெரிக்கவில் உள்ள மகனே/ மகளே தெரியவில்லை. அவர்களை பார்க்க போய் விட்டார்.
பால் இதன் விசாரணையை சென்னையில் நடத்தினார். இரண்டு மூன்று முறை திருச்செந்தூருக்கும் வந்து விசாரணையை நடத்தினார். நெடுமாறன் சார்பில் நானும், தங்கப்பாண்டியன் வழக்கறிஞர்களாக ஆஜர் ஆணோம். திமுகவுக்கு கன்னியாகுமரி இரணியல் ரவி ஆஜர் ஆனார். சில நாட்கள் நெல்லை ஏ. எல். சுப்ரமணியன் வந்து ஆஜர் ஆவார். இப்படி பல
வழக்கறிஞர்கள். பெயர்கள்  இன்று நினைவுக்கு வரவில்லை.

நீண்ட காலமாக பால் கமிஷன் அறிக்கை அன்றைய அதிமுக அரசு  சட்டமன்றத்தில் வைக்கவில்லை.
இது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என
தலைவர் கலைஞர், நெடுமாறன் என பலர் சட்ட மன்றத்தில் அன்று எழுப்பினர். 

இப்படியாக தாமதம்  ஆக தலைவர் கலைஞர் தானே கண்டு அறிந்து செய்தியாளர்களிடம் முழு  பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டார். அதற்கு அன்றைய அதிமுக அரசு 
கலைஞர் மீதும், தலைவரின் செயலளர் சண்முகநாதன் மீதும் வழக்கு தொடர்ந்தது.

அது மட்டுமல்லசுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம்  குறித்து நீதி கேட்டு மதுரையிலிருந்து விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, எட்டையபுரம், குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரை தலைவர் கலைஞர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நெடிய நடை பயணம் நடந்தது. அன்றைக்கு இது  முக்கிய செய்தியாக இருந்தது

*Justice C. J. R. Paul Commission Report:* *Paul Commission 1982 was constituted to inquire into the cold-blooded murder of a Hindu Religious & Endowment Board right inside the Tiruchendur Temple*. Paul, the retired Judge Madras High Court had reportedly presented his report, However, in 1999, Kalaignar indicated to newspersons that “he managed to get a copy he had obtained the C J R Paul Commission’s report on the mysterious death of Tiruchendur Murugan temple executive officer Subramania Pillai in 1982 during the M G Ramachandran regime”.

Justice C.J.R. Paul Commisson inquiry on Tiruchendur temple issue 

#KSR post 
21-8-2021.

*Paris bookstore* Shakespeare and Company




The owner of the earlier avatar of Shakespeare and Company, Sylvia
Beach, defied curbs on lames
Joyce's Ulysses and published it
in 1922. Once visited….


*தகுதியே தடை என்ற நிலையில்…* *நாமும் சேர்ந்து நடித்திருப்போம். வேறு வழி இல்லை*.

*முட்ட பய ஊரில் படித்தவன் முட்டாள்*.
*முட்டாள்தனமான பிழையான பதிவுகளை முட்டு கொடுக்கும் மொடு முட்டிகள் பெருகி விட்டனர்*.
*இங்கு எது தவறோ அது சரி என பேசும் ஜடங்களாக….*
*தகுதியே தடை என்ற நிலையில்…*
*நாமும் சேர்ந்து நடித்திருப்போம். வேறு வழி இல்லை*.

#ksrpost
21-8-2022.


Parliament Central Hall

*Parliament Central Hall*
*I have reached here Central Hall 1972  with help of my mentor in my early days Tarakeshwari Sinha was the only woman politician from Bihar who was much ahead of her time. Well-read & articulate. She used to deliver Urdu couplets with extraordinary finesse in the parliament. She epitomised beauty and brains and charmed Parliament for 19 years*: *The unsung tales | Deccan Herald* https://www.deccanherald.com/national/north-and-central/central-hall-of-parliament-the-unsung-tales-1137920.html

Download DH App to get Latest and Personalised news 
http://bit.do/dhapp
————————————

https://twitter.com/payalmehta100/status/1554522534598434816?s=10&t=CifT_plHhj-5FMy_8SEXpw

Saturday, August 20, 2022

#*நடிகமணி டி.வி.நாராயணசாமி டிவிஎன் நூற்றாண்டு விழா*. *அண்ணா- தலைவர் கலைஞர்- எம்ஜிஆர்-திமுக*

#*நடிகமணி டி.வி.நாராயணசாமி டிவிஎன் நூற்றாண்டு விழா*. *அண்ணா- தலைவர் கலைஞர்- எம்ஜிஆர்-திமுக*
————————————
எம்ஜிஆருக்கு அண்ணாவை அறிமுகம் செய்தவர் டிவிஎன். அப்போது வட சென்னை யானை கவனி பகுதியில் காவல் நிலையம் அருகே எம்ஜிஆர் வாழ்ந்தார். தலைவர் கலைஞருக்கு நாடக மேடையை காட்டியவர். திருவாரூர் சென்ற டிவிஎன்னை கலைஞர் வரவேற்றவர். அப்போது கலைஞரின் நாடக வசனத்தை படித்து அதை சென்னை திரும்பிய பின் அண்ணாவிடம் சிறப்பாக எடுத்து சொன்னார்.
அண்ணாவுக்கு நம்பிக்கயானவர். அண்ணா ஈவேகே சம்பத் என திமுகவில் சிக்கல் வந்த போது சமாதான பறவையாகவும், காவலர் கூட்டம் நடத்த முக்கிய பங்கு ஆற்றினார். நாவலரை நட்பு ரீதியாக வா போ என  அழைப்பார். டிவிஎன்க்கு அண்ணா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இரு முறை வாய்ப்பை அளித்தார். சட்ட மேலவை உறுப்பினர்.எங்கள் கரிசல் மண் கோவில்பட்டி- எட்டையபுரம் எஸ்.துரைசாமி புரத்தில் பிறந்தார்.

#KSR post 
20-8-2022.


Mind voice….

Mind voice…
I took one fellow 30yrs back  here …
Then he was acted as my slave but I shouted him behave yourself with self respect .. Followed me
After 14 yrs that person ditched me without gratitude .  He is former….& sitting….
That is the society now .  #ksrpost 20-8-2022.


Friday, August 19, 2022

‘#இந்தியா_இலங்கை_ஈழத்தமிழர்’

‘தமிழன் ‘ (விஜேராம மாவத்தை , கொழும்பு 7 . ஆசிரியர் சிவராஜா ) என்ற இலங்கை- கொழும்பிலிருந்து வரும் இன்றைய (19-8-2022)தினசரியில் வந்துள்ள எனது கட்டுரை.
‘#இந்தியா_இலங்கை_ஈழத்தமிழர்’


இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதென்று உலக சமுதாயம் அறிந்ததே. உலகின் சொர்க்க பூமி என்றும் இந்து மகாக் கடலின் முத்து என்றும் வரலாற்றில் அறியப்பட்டது இலங்கைத் தீவு. 103 நதிகள், 16 ஜீவநதிகள் கொண்டது இலங்கை. இலங்கையைச் சுற்றி இயற்கை துறைமுகங்கள், கடலால் சூழப்பட்ட அழகான பூங்காவனத் தீவாகும். உலக மக்களை சுற்றுலாவில் எட்டுத் திக்கும் ஈர்க்கக் கூடிய பூமி. மலையகத்தில் விளையும் அரிய தேயிலை, உலக நாடுகளுக்கு வேண்டி விரும்பி ஏற்றுமதி செய்கின்ற சூழ்நிலையும் இருந்தது.  செழிப்பான, வளமான விவசாய பூமி இரத்தினக் கற்கள், காரீயம், வாசனைப் பொருட்கள், தேயிலை, சுற்றுலா, மீன்பிடி என்ற வளமான பூமி ஆசியாவில் சிங்கப்பூரை விட எளிதாக முன்னேறியிருக்க வேண்டும். சிங்கப்பூர் கடல் மண்ணை பரப்பி பரப்பி பல சிரமங்களை நேர்கொண்டு உலகில் முன்னேறியது. 

ஏன் இவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தும் இலங்கை சிங்கப்பூரை தாண்டி ஆசியாவில் முன்னேறவில்லை என்பது முக்கியமான விடயம். இயற்கையின் அருட்கொடை இலங்கைக்கு சாதகமாக இருந்தும் விடுதலைப் பெற்று 74 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக தத்தளிக்கின்றது. இதன் காரணம் என்ன, அரசில் உள்ள பணம் அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு செலவு செய்யாமல் அயல்நாடுகளில் இருந்து கடன் வாங்கி தமிழர்களை அழிக்கும் ஒரே திட்டமாக 1948 இலங்கை விடுதலை பெற்ற காலத்தில் இருந்து சிங்கள ஆட்சியாளர்கள் இராணுவத்திற்கு வழங்கி தமிழினத்தை அழிக்கும் ஒரே கடமையைச் செய்தார்கள். நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் என்பதில் சிங்களர்களுக்கு அக்கறை இல்லை.

பொருளாதாரச் சிக்கலில் இன்றைக்கு இலங்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதை மறுப்பதற்கு இல்லை. அதிலிருந்து இலங்கை விடுபட வேண்டும் என்பது தான் உலக சமுதாயத்தின் கருத்து. 
இலங்கையில் படிப்படியாக இயற்கை விவசாயம் என்று கொண்டுவராமல் ஒரே நாளில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக விவசாயம் அழிந்து பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அரிசி, காய்கறிகள், புகையிலை, மிளகாய், வெங்காயம் எல்லாம் விவசாய உற்பத்தியில் இல்லாமல் போய்விட்டது. இப்படி தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தமிழர் விரோத மனப்பான்மையில் சிங்கள ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தானே கொள்ளிக்கட்டையை வைத்துக் கொண்டனர்.
பொருளாதாரச் சிக்கல் என்று கடந்த 74 ஆண்டுகளாக தமிழர்கள் போராடியதை மறக்கவும் முடியாது, புறந்தள்ளவும் முடியாது. பொருளாதாரச் சிக்கல் என்று தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இலங்கை மண்ணில் தொடர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழர்களின் போராட்டங்கள் இனி எப்படி கவனிக்க வேண்டும் என்பதையும் உலக சமுதாயமும், இந்திய அரசும் கவனிக்க வேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதையும், 16ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கீசியர், டச்சு மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பு வரை தீவில் தனித்தனி இறைமையுள்ள தமிழ், சிங்கள அரசுகள் இருந்ததையும் ஒப்புக்கொண்டு, மற்றும் 1833 இல் மட்டுமே, ஆங்கிலேயர்களால் நிர்வாக வசதிக்காக முழுத் தீவும் ஒன்றுபட்டது. 

கடந்த 1911, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சொத்து-கல்வி என்ற தகுதியில், மொத்தம் 2934 வாக்காளர்கள் கொண்ட தேர்தலில் சிங்களர்கள் யாரும் வெற்றிபெறவில்லை. அந்தத் தேர்தலில் தமிழரான சர்.பொன்னம்பல ராமநாதன் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்த சிங்கள மருத்துவர் எஸ்.மார்க்கோஸ் பெர்னாண்டஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஒரு காலத்தில் சிங்களர்களுக்கு நிகரான வடக்கு-கிழக்கு மரபு ரீதியான தமிழர்கள், மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சேர்ந்து சிங்களருக்கு சமமாக மக்கள் தொகையை கொண்டிருந்தனர். சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு பின் சரிபாதியாக இருந்த மக்கள் தொகை படிப்படியாக குறைந்தது. இன்றைக்கு இரண்டாம் தரமாக சரிசமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களர் ஆட்சியில் நடத்தப்படுகின்றனர். 

கடந்த 1948 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும், இலங்கைக்கான சுதந்திரம் ஈழத் தமிழர்களுக்கு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனியாதிக்கமாகும் என்பதே தொடர்ந்தது.

1948 ஆம் ஆண்டு "சுதந்திரம்" பெற்ற உடனேயே இலங்கை தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை ஆரம்பித்ததையும், ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக முதலில் அகிம்சை வழியிலும், பின்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் போராடினர். 

விடுதலையின் போது இலங்கையின் ஜனத்தொகையில் 33% தமிழர்கள் இருந்ததை நினைவுகூர்ந்து, விடுதலை கிடைத்த உடனேயே, தமிழர்களுக்கு எதிரான முதல் நடவடிக்கையாக, சிங்கள மொழி, மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமை என்ற ஆணைகள் கொண்டுவரப்பட்டு கிட்டத்தட்ட 1 மில்லியன் தமிழர்களுக்கு குடியுரிமை மறுத்தது. மலையகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் தமிழகத்திலிருந்து அழைத்துச் சென்றவர்களின் வாழ்வு சூன்யமானது.

சிங்கள இனம் தமிழருக்கு எதிராக பௌத்தத்தில் திரிபுவாதமாக தேசிய சிந்தனை என்று புத்தத்திற்கு எதிராக இனவாத மகாவம்சத்தை கல்வியிலும் நடைமுறையிலும் புகுத்தி இனவாதத்தை வலுப்படுத்தியது. 1956, 1958, 1977, 1981, மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். 

அனைத்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கீழ் ஒன்றிணைந்து, 1976 ஆம் ஆண்டு மே 14 அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தமிழர்களின் நாடு (ஈழம்) அமைய வேண்டும் என தீர்மானித்தனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமோகமான ஆணையை வழங்கினர்.

1981 ஆம் ஆண்டு மே 31 அன்று சிங்கள ஆட்சியாளர்கள் யாழ் பொது நூலகத்தை எரித்ததை மறக்க முடியுமா? கடந்த 1983-ல் தமிழர் பகுதியில் நடந்த கலவரம், இனப்படுகொலையைப் பார்த்து உலகமே கண்ணீர் விட்டது

கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது, தமிழ் போராளிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இந்தியா உத்தரவாதம் அளித்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக இணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் உறுதிக் கொடுத்தவாறு சிங்கள் அரசின் நடவடிக்கைகள் இல்லை. மாகாண சபைகள் என உறுதியளிக்கப்பட்டது, அதிகாரமற்ற சபைகளாகவே ஒப்புக்கு ஏற்படுத்தப்பட்டது.

ஐநா பொதுச்செயலாளரின் (2011 மார்ச்) பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை, இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் ஐ.நா. நடவடிக்கை குறித்த ஐ.நா. பொதுச்செயலாளர் உள்ளக மீளாய்வுக் குழுவின் நவம்பர் 2012 அறிக்கையின்படி, 70,000க்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை வலியுறுத்துவது. மன்னார் ஆயர் மறைந்த டாக்டர் ராயப்புவின் அறிக்கையிலும், 2009 இல் இனப் போரின் முடிவில் 1,46,679 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கணக்கில் வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற UNHRC அமர்வில் 30/1 தீர்மானத்திற்கு இலங்கை நம்பகமான விசாரணையை நடத்துவதற்கு தன்னை அர்ப்பணித்து, மேலும் இரண்டு தீர்மானங்கள் மூலம் 2017 மார்ச் மற்றும் 2019 மார்ச்சில் கால நீட்டிப்புகளைப் பெற்றது. ஆனால் தாமதப்படுத்தும் தந்திரோபாயங்களை விளையாடிய பின்னர், 2020 பிப்ரவரியில் அனைத்து UNHRC தீர்மானங்களில் இருந்தும் இலங்கை விலகியது, மேலும் அவர்களது போர்க்குற்றவாளிகளை போர்வீரர்கள் என்று அழைக்கும் எந்த விசாரணையையும் நடத்த மறுத்தது;
இலங்கை அரசும் அதன் தலைவர்களும் தமிழ் மக்களுக்கும், இந்திய அரசுக்கும் மற்றும் அதன் அரசுக்கும் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அர்ப்பணிப்புகளில் தொடர்ச்சியாக உலக சமுதாயத்திற்கு கொடுத்த உறுதிமொழிக்கு  மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் பின்னோக்கிதான் சென்றுள்ளனர்.
  
இனப்போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழர் பிரதேசம் இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் நில அபகரிப்பு, அழிவுகளில் ஈடுபட்டு வருவதாகவும் வலியுறுத்தினார். மற்றும் 300க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் அழிப்பு, அவற்றின் நிலங்கள் மற்றும் சூழல்களை நாசப்படுத்த மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த விகாரைகளை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டு ஜனத்தொகையை மாற்றும் நோக்கத்துடன் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் தொடர்பை உடைக்க வேண்டும்;

இந்திய சீனா போர், இந்திய பாகிஸ்தான் போர், 1971 இல் பாகிஸ்தான்-வங்காளதேசம்/இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் பக்கம் நின்றதால், இலங்கை தனது போர் விமானங்களுக்கு கொழும்பில் எரிபொருள் நிரப்ப அனுமதித்ததன் மூலம், இந்தியாவை முழுமையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்தத் தவறியதால், இலங்கை வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கு எதிரானது என்பதை வலியுறுத்துகிறது. 1987 இன் இலங்கை ஒப்பந்தம், கொழும்பு கிழக்கு துறைமுக முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியா-ஜப்பான்-இலங்கை ஆகிய மூன்று தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து 2021 பிப்ரவரியில் ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டது. ஆனால், ஈழத்தமிழர்கள் செல்வா காலத்தில் சீனப் போரின்போது நிதி திரட்டி, அன்றைய பிரதமர் நேருவுக்கு போர் நிதியாக அனுப்பியதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இலங்கை என்ன நிலைமை?. தமிழர்களை அழித்த  ஜெயவர்தன மருமகனும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டவருமான  ரணில் விக்கிரமசிங்க இலங்கையின்  ஜனாதிபதி  ஆகியுள்ளார் என்பது வேடிக்கையான விடயம் ஆகும். கருப்பு ஜூலை என 1983-ல் இலங்கைக் கலவரம் நடந்தபோது ரணில் விக்கிரமசிங்க தன் மாமனார் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றார். அன்றைக்கு தமிழர்களைத் தாக்குவதை நிறுத்த  அவசரநிலை காலத்தை இலங்கையில் பிரகடனம் செய்யுங்கள் என்று இந்தியா சொல்லும்போது ஜெயவர்த்தனவும் ரணில் விக்கிரமசிங்கவும் உடன்படவில்லை. தேர்தல் காலத்தில் பல உறுதிகள் தமிழர்களுக்குக் கொடுத்து ஆட்சிக்கு வருவார்கள். ஆனால், அந்த உறுதிமொழிகளை நடமுறைப்படுத்துவதில்லை. இது தொடர்ந்து சேனநாயக்கா, கொத்தலாவல, பண்டாரநாயக்காக்கள் என இன்றைக்கு வரை சந்திரிக்கா, ராஜபக்சக்கள், ரணில் விக்கிரமசிங்க என பலரும் தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை குப்பைத் தொட்டியில்தான் போட்டார்கள். 


1. இன்றைய இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் அவசியமாகவும் தலையிட்டு, சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயல வேண்டும். 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் தீவின் வடக்கு-கிழக்கு தமிழர் பாரம்பரிய தாயகத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமான சுதந்திர இறையாண்மை கொண்ட தனி நாடு ஈழத்தை விரும்பினால் அதை பரிசீலிக்க வேண்டும்.

2. கடந்த 1987ஆம் ஆண்டு தமிழ்த் தலைவர்களுக்கு இந்தியாவும், 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3. இலங்கையில் 1950-லிருந்து போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கையால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள், இன அழிப்பு உட்பட அனைத்து குற்றங்களையும் புலன் விசாரணை செய்து விசாரிக்க சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை அயலக பொறிமுறையில் நடத்த இந்திய அரசு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும். உக்ரைன் போரில் இன அழிப்பு என்ற நிலையில், சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை வேண்டும் என்று இந்தியா கடந்த மார்ச் 2022 ஐ.நா மனித உரிமை ஆணைய 49-வது அமர்வில் வலியுறுத்தியுள்ளது. அது போலத்தான் இந்தியா இதை ஆதரிக்க வேண்டும் என்று தொடர்ந்து 2012 லிருந்து குரல் கொடுத்து வருகின்றோம். ஏற்கனவே தமிழக சட்டமன்ற தீர்மானம், டெசோ தீர்மானங்களும் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

4. சர்வதேச கண்காணிப்பு நிதியம், உலக வங்கி, பாரிஸ் கிளப், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில், இலங்கைக்கு உதவி செய்யும்போது தமிழர்களின் நலன் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் இலங்கையின் ஏமாற்று வடிவங்களையும், ஐ.நா மற்றும் UNHRC உட்பட சர்வதேச சமூகத்திற்கான அதன் சிறந்த அர்ப்பணிப்புகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தவொரு உதவியும் பின்வரும் நிபந்தனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

5. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாநிலங்களிலிருந்து இலங்கை இராணுவத்தை திரும்பப் பெறுதல்…. இவ்வளவு பொருளாதாரச் சிக்கல் இருந்தும் சிங்கள அரசு ஏன் தனது இராணுவத்தை தேவையில்லாமல் அதிகமாக செலவு செய்து தமிழர் வாழும் பகுதிகளில் பீதியைக் கிளப்பும் அளவில் பெரிய பெரிய இராணுவ முகாம்களை தொடர்ந்து ஏன் அனுமதிக்க வேண்டும். 

6.முள்ளிவாய்க்காலின்போது காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் இலங்கை அரசு ஒப்படைக்க வேண்டும்.

7.இறுதிப் போர் 2009-ன்போது கைது செய்யப்பட்ட தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.
8. தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்துதல், தமிழர்களின் விவசாய நிலங்களை அரசு உத்தரவால் ஆக்கிரமிப்பு செய்தல், சிங்கள மக்களுக்கு விவசாய நிலங்களை அத்துமீறி அழித்தல், இந்துக் கோவில்களை புத்த விகாரைகளாக மாற்றுதல் நிறுத்த வேண்டும்.

9.அமைதிப்படை இலங்கையில் இருந்தபோதும், முள்ளிவாய்க்கால் போரின்போதும் கணவன்/தந்தையை இழந்த விதவை/வாரிசுகளுக்கு மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

10. இந்தியா தமிழர்களுக்கு அளித்த மறுவாழ்வு நிதியை தமிழர்களுக்கே செலவு செய்யப்பட்டதா என்பதை இந்திய அரசு இலங்கை அரசிடம் விசாரிக்கவும் வேண்டும்.

11. புவி அரசியலில் வெளிநாட்டு பண உதவிக்காக இலங்கை இந்து மகாக் கடலிலும் இலங்கையிலும் சீனா போன்ற இந்தியாவுக்கு எதிரான நாடுகளை இலங்கை ஆதரிப்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

இலங்கையில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றால் ஏறத்தாழ 8 பில்லியன் டொலர் தேவை. அதற்கான சூழலும் இல்லை. எனவே அனைத்துக் கட்சி இணைந்த ஒரு தேசிய அரசை அமைத்து நிலையான ஆட்சி இலங்கையில் நடக்கிறது என்று சர்வதேசத்திற்கும் ஐ.எம்.எஃப் போன்ற சர்வதேச பண அமைப்புகளுக்கும் இலங்கையில் பிரச்சினை இல்லாமல் இருக்கின்றது என்ற பாவலாக காட்ட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றார். 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பாரீசில் உலக பண நிறுவனங்களான சர்வதேச கண்காணிப்பு நிதியம், உலக வங்கி, பாரிஸ் கிளப், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பன்னாட்டு பணப் பரிவர்த்தனை மாநாட்டில் மூன்றாம் உலக நாடுகள் கலந்து கொள்ளும் வரை தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து தருவோம் என்று சொன்னால் தான் பன்னாட்டு நிதி உதவி கிடைக்கும் என்பதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் கரிசணமாக தமிழர்களின் நலனை ஒப்புக்கு பேசுவார்கள். இப்படி நடந்தது தான் சந்திரிகாவின் சமஸ்டி வரைவுத் திட்டம். அதன்பின் பிரேமதாசாவின் உறுதிமொழி, ராஜபக்சேவின் புதிய அரசியல் நிர்ணய சபை, சகல அதிகாரங்கள் கொண்ட மாகாண கவுன்சில் என்ற உறுதிமொழி, இன்றைக்கு மொட்டு சின்னத்தில் ஒரே உறுப்பினராக வெற்றிபெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கேவின் உறுதிமொழியும் தண்ணீரில் எழுதியது தான்.

இன்றைக்கு இலங்கைஹம்பாந்தோட்டையில்  சீனாவின் யுவான் வாங்க்-5 உளவு கப்பல், பாகிஸ்தான் பி என் எஸ் 5 போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் ஒகஸ்ட் 12 வரை நிற்க அனுமதி என்ற நிலையில் இந்தியாவுக்கு விரோதமாகவும், இந்துமகா கடலில் அமைதியை நாசாப்படுத்துகின்ற வகையில் கையால் ஆகாத இலங்கையாக இருக்கின்றது. ஏற்கனவே டிகோகர்சியாவில் அமெரிக்கா, பிரிட்டன் மையம் கொண்டுள்ளன. இந்து மகாக் கடலில் ஜப்பான் எண்ணை ஆய்வுகள் நடத்துகின்றன. பிரான்ஸ் இந்த பிராந்தியத்தில் தலைகாட்டுகிறது. சீனா இலங்கையின் கொழும்பு துறைமுகம் என எட்டுத்திக்கும் சுற்றி தமிழகத்தின் அருகில் உள்ள கச்சத் தீவின் அருகில் வரை வந்துவிட்டது. 

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதாரச் சிக்கல் இருந்தபோது மற்ற நாடுகளை விட இந்தியா துடிதுடித்து உதவியதை மறக்க முடியாது. இன்றைக்கு இந்தியாவுடன் பாகிஸ்தான், சீனா, மியான்மர் உறவுகள் சீராக இல்லை. நேபாளமும் சீனா பக்கம் சாய்ந்து விட்டது. வங்கதேசமும் பட்டும் படாமல் உள்ளது. இலங்கையை சீனா மிரட்டிக் கொண்டிருக்கிறது. மாலைதீவு நம்மிடம் உதவிகள் வாங்குவதற்காக சீனாவுக்கும் நமக்கும் மதில்மேல் பூனையாக உள்ளது. எனவே தென்கிழக்கு ஆசிய புவியரசில், இந்து மகா சமூத்திர கேந்திரப் பகுதி, இந்தியாவின் பாதுகாப்பு என்பதையெல்லாம் மனதில் கொண்டு இலங்கைப் பிரச்சினையில் இந்திராகாந்தியைப் போல ஈழத்தமிழர் ஆதரவு நிலை எடுத்தால்தான் நமக்கும் நல்லது, அங்குள்ள தமிழர்களுக்கும் நல்லது என்பதை டெல்லி சௌத் ப்ளோக்  உணர வேண்டும். இது அவசியமானது, அவசரமானது.
 



UNPRECEDENTED Calcutta HC judge Justice Abhijit Gangopadhyay who was at the forefront of bringing the SSC scam to light tells journalists in Court to make a video recording

*

*: *Calcutta HC judge Justice Abhijit Gangopadhyay who was at the forefront of bringing the SSC scam to light tells journalists in Court to make a video recording of the proceedings. Lawyers object saying videography is not allowed. Judge says “I am allowing it”.*
https://www.indiatoday.in/law/story/unprecedented-calcutta-hc-judge-encourages-journalists-to-videograph-the-hc-proceedings-1989582-2022-08-18?utm_source=twshare&utm_medium=socialicons&utm_campaign=shareurltracking

#KSR post 
19-8-2022.

Thursday, August 18, 2022

*சில சிந்தனைகள்….*

*சில சிந்தனைகள்….*

என் வாழ்க்கையில் சிலவற்றை வெறுத்து நான் விலகி நடக்க விரும்புகிறேன். 

இந்த முடிவு யாரையும் வருத்தப்பட வைப்பதற்கு அல்ல என் இதயத்திற்கு நான் உதவி செய்கிறேன்.

எனக்கு சொந்தமாக நிறைய எண்ணங்கள் இருந்தன அவற்றினை நான்  இதுவரை கொலை செய்து கொண்டு இருந்திருக்கிறேன்.

நான் புன்னகைகளை நம்புகிறவன் அவை உண்மை இல்லை என்று இப்போது உணர்கிறேன்.



என் அன்பு கண்ணுக்கு தெரியாது. இது பொய் என்று சொல்ல வேண்டாம். அதை உணர வேண்டும்.

விளையாடிய பின்பு தூக்கி எறியப்பட்ட பொம்மை நான் - வாய் திறந்து வலியை என்னால் சொல்ல முடியாது.

இது என் புயல் காலம் நீர் மட்டம் உயரும்  கடலைப் போல் என் கண்கள் கொந்தளிக்கிறது.

காகிதத்திற்க்கும் பேனாவுக்கும்மான உறவுதான் எனது அன்பு - நான் தாள்களை நிரப்பி விட்டேன். 
தற்சமயம் என்னிடம் மை தீர்ந்து விட்டது.

நான் முகத்தை பார்த்து பழகுகிறேன் என்று நினைத்திருந்தேன் ஆனால் நான் முகமூடியை தான்  பார்த்திருக்கிறேன். 

இனி நான் பக்கத்திலிருந்து முதுகை பார்ப்பதற்கு கூட விரும்பவில்லை..

நான் தள்ளி விடப்பட்ட ஒவ்வொரு தடவையும் மீண்டு எழுந்தேன்.

நியாயத்துக்கு கோபப்பட்ட போதுதான் எனக்கு எதிரி இருப்பதை தெரிந்து கொண்டேன்.

முதுகில் குத்து வாங்கிய பின்பு நானே நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்து நின்றேன்.

தலைகுனிந்து பதில் சொல்லாமல் முகத்துக்கு நேராக கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.

கூட இருந்த போலிகளை களைய முடியவில்லை நானே எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்கினேன்.

தனிமைப்படுத்தப்பட்டேன் இன்னும் சுதந்திரமாக இருக்கிறேன்.

உடைக்கப்பட்ட இதயத்தை தற்சமயம் சரி செய்து கொண்டிருக்கிறேன்.

இனி என்னை வீழ்த்தவோ ஏறி மிதிக்கவோ  யாராலும் முடியாது - நான் எல்லா துயரங்களுக்கும் பழக்கப்பட்டு விட்டேன்.

நான் முயற்சிக்காக உழைப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

ஆனால் வெற்றியை அடைய முடியவில்லையே என்று நான் விழுந்து கிடப்பதை உங்களால் பார்க்க முடியாது. ஏன் என்றால் 

என்ன கனவு என்னுடையது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

நான் பலவீனமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதுமே உயரத்தில் இருப்பதாகத்தான் உணர்வேன்.

எனது வலியையோ வலிமையையோ மற்றவர்களுக்கு நான் காட்டி கொள்வதில்லை...

மௌனம் எனக்கு பல இக்கட்டான சூழ்நிலைகளில் கை கொடுத்து உதவி இருக்கிறது.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில துயரங்கள் என் இலக்குகளை அடைய விடாமல் இடை நிறுத்தியது எனினும்...

ஒவ்வொரு நாட்களையும் பிரகாசமான பொழுதுகளாக நான் நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தினேன்.

நீ அதுவாக மாற வேண்டும் என்றோ அல்லது இப்படித்தான் நீ வாழ வேண்டும் என்றோ என்னை யாரும் வழிநடத்த முடியாது.

நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான்தான் தேர்வு செய்கிறேன்.

என் உணர்வுகளின் பிரதிபலிப்புகளை நான் உரிமையோடு அனுபவிக்கிறேன்.

ஆனால் அன்பு என்று வரும்போது இன்னொருவரை நேசிக்க வேண்டும் அவருக்கு உதவ வேண்டும் என…..
அதனால் ஒவ்வொரு முறையும் நம்பி நம்பி ஏமாந்து கொண்டே இருக்கிறேன்.

#தகுதியே தடை

Wednesday, August 17, 2022

*வாஜ்பாய்…* *இந்த படம் 1986 மே 3ம் தேதி டெசோ மாநாட்டுற்க்கு வந்த போது எடுக்கப்பட்டது*.

*வாஜ்பாய்…*
*இந்த படம் 1986 மே 3ம் தேதி டெசோ மாநாட்டுற்க்கு வந்த போது எடுக்கப்பட்டது*.    (மதுரை வாசுகி ஸடுடியோ சீனிவாசன் எடுத்த படம். இவர் நெடுமாறன் ஆதரவாளார்)

*1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course)டெசோ மாநாடு  தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ்,வாஜ்பாய் என
 பல அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர்*. அப்போது அவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என். பஹுகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தியும் உடனிருந்தார்.

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சித்திரை வீதிகளையும் சுற்றிக் காண்பித்தேன். அங்கிருந்து புறப்படும்போது, வாஜ்பேயி "இட்லி, தோசை சாப்பிடலாம்" என்றார். உடன் வந்திருந்த பஹுகுணாவும் இந்தியில் "சாப்பிடலாமே" என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றேன்.
காலை 9.00 மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும், "எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு அமைதியாக கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி" என்றார் வாஜ்பேயி. மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பியபோது வாஜ்பேயிடமும், பஹுகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.
வாஜ்பேயி அவர்கள் தில்லிக்கு சென்ற பின், திருமண நாளான 12-05-1986 அன்று, அதனை நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார்.

#ksrpost
17-8-2022


YuanWang 5

   Chinese vessel  YuanWang

 reached Hambantota port in SriLanka amidst concerns raised by Indian and US Government.   With sophisticated satellite equipment on board 1 week is more than enough for them to have a very clear picture of in and around… இலங்கைக்கு வந்த சீனா உளவு கப்பல் குறித்து நாம் யாரும் நாம் அக்கறை காட்டவில்லை. ஆட்சியாளர்களுக்கும் இது தெரியவில்லை. அண்டை நாடான இலங்கைக்கு சீனாவின் யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல் ஆகஸ்ட் 11-லிருந்து 17 வரை ஹம்பாந்தோட்டா துறைமுகம் மட்டுமல்ல இந்து மகா கடல் கேந்திர பகுதியிலும் இருக்கின்றது. இது கிட்டத்தட்ட இந்தியாவை உளவு பார்க்க மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல.

நம்மைப் பொருத்தவரை தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி விமான நிலையம்,கூடங்குளம் அணு மின் சக்தி நிலையம், நாங்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பாதுகாப்பு தளம், மகேந்திர கிரியில் உள்ள ஹெவி வாட்டர் ப்ராஜெக்ட், கல்பாக்கம் அணு மின் சக்தி நிலையம், ,மதுரை விமான நிலையம்,   ராமேஸ்வரம் உச்சிப்புலி பாதுகாப்பு தளம்,நாகப்பட்டினம் மீன் பிடி துறைமுகம், கடலூர் துறைமுகம், கிருஷ்ண பட்டிணம், ஸ்ரீஹரிகோட்டா, விசாகப்பட்டிணம் என பல கேந்திர பகுதிகள்;
மேற்கு முகமாக கேரளத்தில் தும்பா, கொச்சி துறைமுகம், கன்டலா, மங்களூர், ஏன் பம்பாய் முதல் இமயமலை வரை கூட உளவு பார்க்க முடியும்.

இது புவியரசிற்கு நல்லதல்ல. இதுபற்றி எவரும் வாய் திறந்து பேசுவதும் கிடையாது. அரசியல் துறைகளில் அன்றைக்குரிய விஷயங்களை மட்டுமே பேசி செல்கிற வெறும் வார்த்தை ஜால அளவில்தான் நாம் இருக்கின்றோம் என்பது வேதனைப்படுத்துகிறது. 

அரசியல் என்பது ஒரு ஆழ்ந்த கவனிப்பும் புரிதலும் வேண்டும். அது மட்டுமல்ல, மனப்பூர்வமாக அரசியலில் பணி செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை இல்லாததால் இதைப் பற்றி பேசுவதற்கு யாருக்கும் மனம் வரவில்லை. என்ன செய்ய? இது தான் இன்றைய நிலை.

இந்தக் கப்பலில் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய பாலிஷ்டிக் ஏவுகணைகளை ஏவுவதற்கு ஏற்ப வசதிகள் எல்லாம் உள்ளன. விண்வெளி மட்டும் சேர்க்கை கோள்கள் உளவு பார்க்கவும் கடல் ஆழத்தை பார்க்கவும் நீர் மூழ்கி கப்பல்கள் எங்கெல்லாம் இருக்கின்றன உள்ளிட்டவற்றை உளவு பார்க்கும் இந்த யுவான் வாங் கப்பல் மூலமாக அறிய முடியும்.

இந்த சீன உளவு கப்பல் 728 அடி நீளமும் 85 அடி அகலமும் உடையது. சீனாவில் லாங் மார்ச் என்ற ராக்கெட்டை ஏவ இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டது. அப்படி ஒரு வீரியமான சக்தி மிக்க கப்பல் இங்கு வர வேண்டிய அவசியம் என்ன என்பதை நாம் இதைப் பற்றி சிந்திப்பதற்கு கூட தயாராக இல்லை என்பதை வேதனைக்குரிய விடயம்.

MurasoliMaran முரசொலி மாறன்

*இன்றைக்கு அன்புக்குரிய அண்ணன் முரசொலி மாறனின் 89வது பிறந்த நாள்*
*Remembering Thiru Murasoli Maran on his birth anniversary*. I got due respect from both  Kalignar and Annan Maran. Maran’s scholarships were vast and dense..
My respects to him. 

 அண்ணன் முரசொலி மாறனிடம்பல விஷயங்களை விவாததுண்டு, அவரிடம் ஆழ்ந்த வாசிப்பு, புரிதல், எந்த விடயமானாலும் தெளிவான கருத்துக்கள் என அவர் சொல்வதைக் கேட்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். தலைவர் கலைஞரும் அண்ணன் மாறனும் என்மீது அளப்பறிய பாசதை எப்பொழுதும் காட்டுவார்கள்.  மாறனுடைய மறைவு எனது அரசியல் பயணத்தில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது. இன்றைக்கு அவருடைய பிறந்தநாள் அவரை கைக்கூப்பி வணங்குகிறேன்.

#

 .

#ksrpost
17-8-2022.

இந்திய அரசும் இலங்கைத்தமிழர் நலனும்!

     இன்றைய 17-8-2022  தினமணியில் இலங்கை, அங்குள்ள தமிழர்கள் குறித்த எனது கட்டுரை bit.ly/3pmsFl5 இனிஇந்தியா – இலங்கைத் தமிழர்….

 

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதென்று உலக சமுதாயம் அறிந்ததேஉலகின் சொர்க்க பூமி என்றும் இந்து மகாக் கடலின் முத்து என்றும் வரலாற்றில் அறியப்பட்டது இலங்கைத் தீவு. 103 நதிகள், 16 ஜீவநதிகள் கொண்டது இலங்கைஇலங்கையைச் சுற்றி இயற்கை துறைமுகங்கள்கடலால் சூழப்பட்ட அழகான பூங்காவனத் தீவாகும்உலக மக்களை சுற்றுலாவில் எட்டுத் திக்கும் ஈர்க்கக் கூடிய பூமிமலையகத்தில் விளையும் அரிய தேயிலைஉலக நாடுகளுக்கு வேண்டி விரும்பி ஏற்றுமதி செய்கின்ற சூழ்நிலையும் இருந்ததுசெழிப்பானவளமான விவசாய பூமி ரத்தினக் கற்கள்காரீயம்வாசனைப் பொருட்கள்தேயிலைசுற்றுலாமீன்பிடி என்ற வளமான பூமி ஆசியாவில் சிங்கப்பூரை விட எளிதாக முன்னேறியிருக்க வேண்டும். சிங்கப்பூர் கடல் மண்ணை பரப்பி பரப்பி பல சிரமங்களை நேர்கொண்டு உலகில் முன்னேறியது

 

ஏன் இவ்வளவு இயற்கை வளங்கள் இருந்தும் இலங்கை சிங்கப்பூரை தாண்டி ஆசியாவில் முன்னேறவில்லை என்பது முக்கியமான விடயம்இயற்கையின் அருட்கொடை இலங்கைக்கு சாதகமாக இருந்தும் விடுதலைப் பெற்று 74 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக தத்தளிக்கின்றதுஇதன் காரணம் என்னஅரசில் உள்ள பணம் அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு செலவு செய்யாமல் அயல்நாடுகளில் இருந்து கடன் வாங்கி தமிழர்களை அழிக்கும் ஒரே திட்டமாக 1948 இலங்கை விடுதலை பெற்ற காலத்தில் இருந்து சிங்கள ஆட்சியாளர்கள் ராணுவத்திற்கு வழங்கி தமிழினத்தை அழிக்கும் ஒரே கடமையைச் செய்தார்கள்நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் என்பதில் சிங்களர்களுக்கு அக்கறை இல்லை.

 

பொருளாதாரச் சிக்கலில் இன்றைக்கு இலங்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதை மறுப்பதற்கு இல்லைஅதிலிருந்து இலங்கை விடுபட வேண்டும் என்பது தான் உலக சமுதாயத்தின் கருத்து

இலங்கையில் படிப்படியாக இயற்கை விவசாயம் என்று கொண்டுவராமல் ஒரே நாளில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிர்பந்தத்தின் காரணமாக விவசாயம் அழிந்து பொருளாதார சிக்கல் ஏற்பட்டதுஅரிசிகாய்கறிகள்புகையிலைமிளகாய்வெங்காயம் எல்லாம் விவசாய உற்பத்தியில் இல்லாமல் போய்விட்டதுஇப்படி தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தமிழர் விரோத மனப்பான்மையில் சிங்கள ஆட்சியாளர்கள் தங்களுக்குத் தானே கொள்ளிக்கட்டையை வைத்துக் கொண்டனர்.

பொருளாதாரச் சிக்கல் என்று கடந்த 74 ஆண்டுகளாக தமிழர்கள் போராடியதை மறக்கவும் முடியாதுபுறந்தள்ளவும் முடியாதுபொருளாதாரச் சிக்கல் என்று தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இலங்கை மண்ணில் தொடர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும்தமிழர்களின் போராட்டங்கள் இனி எப்படி கவனிக்க வேண்டும் என்பதையும் உலக சமுதாயமும்இந்திய அரசும் கவனிக்க வேண்டும்.

 

இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதையும்16ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கீசியர்டச்சு மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பு வரை தீவில் தனித்தனி இறைமையுள்ள தமிழ்சிங்கள அரசுகள் இருந்ததையும் ஒப்புக்கொண்டுமற்றும் 1833 இல் மட்டுமேஆங்கிலேயர்களால் நிர்வாக வசதிக்காக முழுத் தீவும் ஒன்றுபட்டது.

கடந்த 1911, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சொத்து-கல்வி என்ற தகுதியில், மொத்தம் 2934 வாக்காளர்கள் கொண்ட தேர்தலில் சிங்களர்கள் யாரும் வெற்றிபெறவில்லைஅந்தத் தேர்தலில் தமிழரான சர்.பொன்னம்பல ராமநாதன் வெற்றிபெற்றார்அவரை எதிர்த்த சிங்கள மருத்துவர் எஸ்.மார்க்கோஸ் பெர்னாண்டஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தார்ஒரு காலத்தில் சிங்களர்களுக்கு நிகரான வடக்கு-கிழக்கு மரபு ரீதியான தமிழர்கள்மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சேர்ந்து சிங்களருக்கு சமமாக மக்கள் தொகையை கொண்டிருந்தனர்சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு பின் சரிபாதியாக இருந்த மக்கள் தொகை படிப்படியாக குறைந்தது. இன்றைக்கு இரண்டாம் தரமாக சரிசமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களர் ஆட்சியில் நடத்தப்படுகின்றனர். 

 

கடந்த 1948 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைபெற்றபோது ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும்இலங்கைக்கான சுதந்திரம் ஈழத் தமிழர்களுக்கு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனியாதிக்கமாகும் என்பதே தொடர்ந்தது.

 

1948 ஆம் ஆண்டு "சுதந்திரம்" பெற்ற உடனேயே இலங்கை தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை ஆரம்பித்ததையும்ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக முதலில் அகிம்சை வழியிலும்பின்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் போராடினர். 

 

விடுதலையின் போது இலங்கையின் னத்தொகையில் 33% தமிழர்கள் இருந்ததை நினைவுகூர்ந்துவிடுதலை கிடைத்த உடனேயேதமிழர்களுக்கு எதிரான முதல் நடவடிக்கையாகசிங்கள மொழி, மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமை என்ற ஆணைகள் கொண்டுவரப்பட்டு கிட்டத்தட்ட 1 மில்லியன் தமிழர்களுக்கு குடியுரிமை மறுத்தது. மலையகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் தமிழகத்திலிருந்துஅழைத்துச் சென்றவர்களின் வாழ்வு சூன்யமானது.

 

சிங்கள இனம் தமிழருக்கு எதிராக பௌத்தத்தில் திரிபுவாதமாகதேசிய சிந்தனை என்று புத்தத்திற்கு எதிராக இனவாதமகாவம்சத்தை கல்வியிலும் நடைமுறையிலும் புகுத்திஇனவாதத்தை வலுப்படுத்தியது1956195819771981மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். 

 

அனைத்து பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கீழ் ஒன்றிணைந்து1976 ஆம் ஆண்டு மே 14 அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிதமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தமிழர்களின் நாடு (ஈழம்) மைய வேண்டும் என தீர்மானித்தனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமோகமான ஆணையை வழங்கினர்.

 

1981 ஆம் ஆண்டு மே 31 அன்று சிங்கள ஆட்சியாளர்கள் யாழ் பொது நூலகத்தை எரித்ததை மறக்க முடியுமா? கடந்த 1983-ல் தமிழர் பகுதியில் நடந்த கலவரம், இனப்படுகொலையைப் பார்த்து உலகமே கண்ணீர் விட்டது

 

கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது​​தமிழ் போராளிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இந்தியா உத்தரவாதம் அளித்ததுடன்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக இணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.ஆனால்அது நடக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் உறுதிக் கொடுத்தவாறு சிங்கள் அரசின் நடவடிக்கைகள் இல்லை. மாகாண சபைகள் என உறுதியளிக்கப்பட்டது, அதிகாரமற்ற சபைகளாகவே ஒப்புக்கு ஏற்படுத்தப்பட்டது.

 

ஐநா பொதுச்செயலாளரின் (2011 மார்ச்) பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை, இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டனர்எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் ஐ.நா. நடவடிக்கை குறித்த ஐ.நா.பொதுச்செயலாளர் உள்ளக மீளாய்வுக் குழுவின் நவம்பர் 2012 அறிக்கையின்படி70,000க்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை வலியுறுத்துவதுமன்னார் ஆயர் மறைந்த டாக்டர் ராயப்புவின் அறிக்கையிலும்2009 இல் இனப் போரின் முடிவில் 1,46,679 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கணக்கில் வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற UNHRC அமர்வில் 30/1 தீர்மானத்திற்கு இலங்கை நம்பகமான விசாரணையை நடத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துமேலும் இரண்டு தீர்மானங்கள் மூலம் 2017 மார்ச் மற்றும் 2019 மார்ச்சில் கால நீட்டிப்புகளைப் பெற்றது. ஆனால் தாமதப்படுத்தும் தந்திரோபாயங்களை விளையாடிய பின்னர்2020 பிப்ரவரியில் அனைத்து UNHRC தீர்மானங்களில் இருந்தும் இலங்கை விலகியதுமேலும் அவர்களது போர்க்குற்றவாளிகளை போர்வீரர்கள் என்று அழைக்கும் எந்த விசாரணையையும் நடத்த மறுத்தது;

இலங்கை அரசும் அதன் தலைவர்களும் தமிழ் மக்களுக்கும்இந்திய அரசுக்கும் மற்றும் அதன் அரசுக்கும் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அர்ப்பணிப்புகளில் தொடர்ச்சியாக உலக சமுதாயத்திற்கு கொடுத்த உறுதிமொழிக்கு  மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் பின்னோக்கிதான் சென்றுள்ளனர்.

 

இனப்போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும்தமிழர் பிரதேசம் இலங்கை ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுதமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருவதாகவும்இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் நில அபகரிப்புஅழிவுகளில் ஈடுபட்டு வருவதாகவும் வலியுறுத்தினார். மற்றும் 300க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் அழிப்புஅவற்றின் நிலங்கள் மற்றும் சூழல்களை நாசப்படுத்த மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த விகாரைகளை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டு னத்தொகையை மாற்றும் நோக்கத்துடன் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் தொடர்பை உடைக்க வேண்டும்;

 

இந்திய சீனா போர்இந்திய பாகிஸ்தான் போர்1971 இல் பாகிஸ்தான்-வங்காளதேசம்/இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் பக்கம் நின்றதால்இலங்கை தனது போர் விமானங்களுக்கு கொழும்பில் எரிபொருள் நிரப்ப அனுமதித்ததன் மூலம்இந்தியாவை முழுமையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்தத் தவறியதால்இலங்கை வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கு எதிரானது என்பதை வலியுறுத்துகிறது. 1987 இன் இலங்கை ஒப்பந்தம்கொழும்பு கிழக்கு துறைமுக முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியா-ஜப்பான்-இலங்கை ஆகிய மூன்று தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து 2021 பிப்ரவரியில் ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டது. ஆனால்ஈழத்தமிழர்கள் செல்வா காலத்தில் சீனப் போரின்போது நிதி திரட்டிஅன்றைய பிரதமர் நேருவுக்கு போர் நிதியாக அனுப்பியதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு இலங்கை என்ன நிலைமை?. தமிழர்கள் அளித்தஜெயவர்தனே மருமகனும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரைக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கே அந்த நாட்டின் அதிபர்ஆகியுள்ளார் என்பது வேடிக்கையான விடயம் ஆகும்கருப்புஜூலை என 1983-ல் இலங்கைக் கலவரம் நடந்தபோது ரணில்விக்கிரமசிங்கே தன் மாமனார் ஆட்சிக் காலத்தில்அமைச்சர்வையில் இடம்பெற்றார்அன்றைக்கு தமிழர்களைத்தாக்குவதை நிறுத்த இந்தியா அவசரநிலை காலத்தைஇலங்கையில் பிரகடனம் செய்யுங்கள் என்று சொல்லும்போதுஜெயவர்த்தனேவும் ரணில் விக்கிரமசிங்கேவும் உடன்படவில்லைதேர்தல் காலத்தில் பல உறுதிகள் தமிழர்களுக்குக் கொடுத்துஆட்சிக்கு வருவார்கள்ஆனால்அந்த உறுதிமொழிகளைநடமுறைப்படுத்துவதில்லைஇது தொடர்ந்து சேனநாயகாகொத்தலவாலாபண்டாரநாயக்காக்கள் என இன்றைக்கு வரைசந்திரிக்காராஜபக்சேக்கள்ரணில் விக்கிரமசிங்கே என பலரும்தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை குப்பைத்தொட்டியில்தான் போட்டார்கள்

 

 

1. இன்றைய இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அமைதியான அரசியல் தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்திய அரசு அவசரமாகவும் அவசியமாகவும் தலையிட்டுசுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயல வேண்டும். 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் தீவின் வடக்கு-கிழக்கு தமிழர் பாரம்பரிய தாயகத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமான சுதந்திர இறையாண்மை கொண்ட தனி நாடு ஈழத்தை விரும்பினால் அதை பரிசீலிக்க வேண்டும்.

2கடந்த 1987ஆம் ஆண்டு தமிழ்த் தலைவர்களுக்கு இந்தியாவும்1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3இலங்கையில் 1950-லிருந்து போர்க் குற்றங்கள்மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கையால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள்இன அழிப்பு உட்பட அனைத்து குற்றங்களையும் புலன் விசாரணை செய்து விசாரிக்க சர்வதேச சுதந்திரமானநம்பகமான விசாரணை அயலக பொறிமுறையில் நடத்த இந்திய அரசு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும். உக்ரைன் போரில் இன அழிப்பு என்ற நிலையில், சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணை வேண்டும் என்று இந்தியா கடந்த மார்ச் 2022 ஐ.நா மனித உரிமை ஆணைய 49-வது அமர்வில் வலியுறுத்தியுள்ளது. அது போலத்தான் இந்தியா இதை ஆதரிக்க வேண்டும் என்று தொடர்ந்து 2012 லிருந்து குரல் கொடுத்து வருகின்றோம். ஏற்கனவே தமிழக சட்டமன்ற தீர்மானம், டெசோ தீர்மானங்களும் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

4. சர்வதேச கண்காணிப்பு நிதியம்உலக வங்கிபாரிஸ் கிளப்ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கை பொருளாதார உதவியை நாடும் நிலையில்இலங்கைக்கு உதவி செய்யும்போது தமிழர்களின் நலன் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்சர்வதேச சமூகம் இலங்கையின் ஏமாற்று வடிவங்களையும்ஐ.நா மற்றும் UNHRC உட்பட சர்வதேச சமூகத்திற்கான அதன் சிறந்த அர்ப்பணிப்புகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தவொரு உதவியும் பின்வரும் நிபந்தனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:

5இலங்கையில் வடக்குகிழக்கு மாநிலங்களிலிருந்து இலங்கை இராணுவத்தை திரும்பப் பெறுதல்…. இவ்வளவு பொருளாதாரச் சிக்கல் இருந்தும் சிங்கள அரசு ஏன் தனது ராணுவத்தை தேவையில்லாமல் அதிகமாக செலவு செய்து தமிழர் வாழும் பகுதிகளில் பீதியைக் கிளப்பும் அளவில் பெரிய பெரிய ராணுவ முகாம்களை தொடர்ந்து ஏன் அனுமதிக்க வேண்டும்.

6.முள்ளிவாய்க்காலின்போது காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் இலங்கை அரசு ஒப்படைக்க வேண்டும்.

7.இறுதிப் போர் 2009-ன்போது கைது செய்யப்பட்ட தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.

8. தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்துதல்தமிழர்களின் விவசாய நிலங்களை அரசு உத்தரவால் ஆர்ஜிதம் செய்தல்,சிங்கள மக்களுக்கு விவசாய நிலங்களை அத்துமீறி அழித்தல்இந்துக் கோவில்களை புத்த விகார்களாக மாற்றுதல் நிறுத்த வேண்டும்.

9.அமைதிப்படை இலங்கையில் இருந்தபோதும்முள்ளிவாய்க்கால் போரின்போதும் கணவன்/தந்தையை இழந்த விதவை/வாரிசுகளுக்கு மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

10. இந்தியா தமிழர்களுக்கு அளித்த மறுவாழ்வு நிதியை தமிழர்களுக்கே செலவு செய்யப்பட்டதா என்பதை இந்திய அரசு இலங்கை அரசிடம் விசாரிக்கவும் வேண்டும்.

11. புவி அரசியலில் வெளிநாட்டு பண உதவிக்காக இலங்கை இந்து மகாக் கடலிலும் இலங்கையிலும் சீனா போன்ற இந்தியாவுக்கு எதிரான நாடுகளை இலங்கை ஆதரிப்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

 



நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...