Tuesday, August 30, 2016

மெட்ராஸ்

மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம்

இந்திய வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துவிட்ட ராபர்ட் கிளைவ் முதல் எலிஹூ யேல் வரை பல பிரபலங்களின் திருமணம் இந்த தேவாலயத்தில்தான் நடைபெற்றது. கல்கத்தா நகரை நிர்மாணித்த ஜாப் சார்னாக்கின் மூன்று மகள்களுக்கு இங்கு தான் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. இப்படி ஆங்கிலேய வருகையின் ஆரம்ப நாட்களின் நினைவுகள் இந்த தேவாலயம் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. கோட்டைக்கு வெளியிலும் மெட்ராசின் 3 நூற்றாண்டு வரலாறு சாலையெங்கும் இறைந்து கிடக்கிறது.

மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கட்டடமும் ஒரு அருங்காட்சியகம்தான். ஐநா சபை சாயலில் கட்டப்பட்டு, இன்று எப்போது சாயும் எனத் தெரியாமல் நித்திய கண்டத்துடன் நின்று கொண்டிருக்கும் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம்தான், மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம் எனக் கருதப்படுகிறது. தனது ஆயுளுக்கே எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு ஆயுள் காப்பீட்டு கட்டடம் உலகிலேயே இது ஒன்றாகத்தான் இருக்கும்.

மவுண்ட் ரோடும், ஜெனரல் பேட்டர்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இந்த கட்டடம், ஸ்மித் (W.E. Smith) என்ற மருந்து வியாபாரியால் கட்டப்பட்டது. மெட்ராஸ் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு அருமையான கட்டடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஸ்மித்தின் கனவை நனவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது. 1897ஆம் ஆண்டு இந்த கட்டடம் தொடங்கி வைக்கப்பட்டபோது அதன் பெயர் கார்டில் கட்டடம் (Kardyl Building). 

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து ஸ்மித், இதனை ஸ்பென்சர் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். பின்னர், 1934இல் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஸ்பென்சர்சிடம் இருந்து இந்த கட்டடத்தை வாங்கியது. லாகூரைச் சேர்ந்த லாலா ஹரிகிஷன்லால் என்பவர்தான் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த கட்டடத்தை வாங்கிய இரண்டே ஆண்டுகளில் பாரத் நிறுவனம் ஹரிகிஷனிடம் இருந்து டால்மியாவின் கைக்கு மாறியது. இதனிடையே 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, நாட்டில் இருந்த பல காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் எல்ஐசி வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்படித்தான் எல்ஐசிக்கு சொந்தமானது இந்த கட்டடம்.

Monday, August 29, 2016

Robert Frost

Robert Frost
On this day in 1962, #RobertFrost departed for the Soviet Union. The goodwill tour was sponsored by the U.S. State Department in an effort to thaw Cold War relations. Frost’s poetry has established his international reputation as American’s unofficial poet laureate. While his best work appeared in earlier decades, he is nevertheless seen as an elder statesman of literature.

(Pictured: Comrades in verse: Frost (l.) with Russian poet Yevgeny Yevtushenko when he visited Moscow in 1962. Frost called the Russian 'quite bohemian.')

John Locke

Philosopher and physician John Locke was born in Wrington, Somerset, England on this day in 1632.

"The end of law is not to abolish or restrain, but to preserve and enlarge freedom. For in all the states of created beings, capable of laws, where there is no law there is no freedom."
--John Locke from "Second Treatise of Government" (1689)

This volume includes the major works of the British Empiricists, philosophers who sought to derive all knowledge from experience.

Vaasanthi

It was published. But could not be released. All the printed copies were pulped.-Vaasanthi Sundram, Author.

Surprise book. Just out. Was this the one that was 'held back'?

திருப்புடைமருதூர் ஓவியங்கள்


                                                             திருப்புடைமருதூர் ஓவியங்கள்,
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில், வீரவநல்லூரிலிருந்து ஏழு கிமீ தொலைவில், தாமிரபரணியுடன் கடனாநதி கலக்குமிடத்தில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் திருப்புடைமருதூர். பெயருக்கேற்ப நெடிதுயர்ந்த மருதமரங்கள் சூழ, நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
            கி பி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே திகழும் இக்கோயில், பிற்காலச்சோழர், விஜயநகர-நாயகர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள் எனப்பலராலும் காலந்தோறும் தொடர்ந்து வளர்ச்சிப்பெற்று விரிவடைந்துள்ளது 
         தற்போதுள்ள கம்பீரமான இராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. இவ்வைந்து நிலைகளின் உட்புறங்கள் அழகிய மரத்தூண்களையும் மரவிதானங்களையும் கொண்டு அவற்றில் அழகு மிக்க சிற்பங்களை பெற்றுள்ளன.
             ஏறக்குறைய திருவிளையாடற் புராணம் முழுமையும் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மாணிக்கவாசகர் மற்றும் திருஞானசம்பந்தர் தொடர்புடைய நிகழ்ச்சிகள் விரிவாகவும் பெரிதாகவும் சித்தரிக்கப் பெற்றுள்ளன. பள்ளிக்கொண்ட பெருமாள், சுப்பிரமணியர், திரிபுரசுந்தரி, சரஸ்வதி, பகவதி, சனீஸ்வரன், எனத் தனித் தெய்வ உருவங்களும் தீட்டப் பெற்றுள்ளன.
             
            இரண்டாம் தளத்தில், விஜயநகரத்திற்கும், திருவிதாங்கூருக்கும் இடையே நடைபெற்ற 'தாமிரபரனிப் போர்' முழுமையாகவும் விரிவாகவும் தீட்டப்பெற்றுள்ளது. அரசர்கள், தளபதிகள்,காலாட்படை, குதிரைப்படை,யானைப்படைவீரர்கள்,பொற்பார்னர்கள் முதலியோரும், அரசவைக்காட்சிகளும், வாள்,வேல்,ஈட்டி,துப்பாக்கி ஆகியவற்றால் படைகள் தாக்கிக்கொள்ளும் கடுமையான போர்களக்காட்சிகளும் அக்கால அரசாங்க நடவடிக்கைகளும் மிக நுட்பமாகத் தீட்டப்பெற்றுள்ளன. இங்கு மிகப்பெரிய பரப்பில் தீட்டப்பட்டுள்ள அராபிய குதிரை வணிகக்கப்பல் காட்சி உலகப் புகழ்பெற்றதாகும்.
இவ்வோவியங்களின் சிறப்புகள்:-
                                     16 ஆம் நூற்றாண்டின் சமய, சமூக, அரசியல் வரலாற்றின், முக்கிய ஆவணங்களாக திகழ்கின்றன.
                                        # முதன்மை வண்ணங்களாலும் கலவை வண்ணங்களாலும் தீட்டப்பெற்றுள்ள உருவங்கள்,உணர்ச்சிபாவத்திற்கேற்ப, செயல்களுக்கேற்ப,பல்வேறு கோணங்களில் அமைந்து உயிரோட்டத்துடன் விளங்குகின்றன.
                                        # கதை கூறும் ஓவியங்களுள் இவ்வோவியங்கள் மிக விரிவும் நுட்பமும் வாய்ந்தவையாகும்.
                                        # உருவங்கள், ஆடைகள், அணிகலன்கள், பிறவகை அலங்காரங்கள், இசைக்கருவிகள், ஆகியன நுட்பமாகத் தீட்டப்பெற்றுள்ளதால் மிகச்சிறந்த பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன.         

இச்சிறப்பு வாய்ந்த ஓவியங்களை ,சில நாட்கள் அல்ல.... சில மாதங்கள் அல்ல... ஒரு ஆண்டோ ,இரண்டு ஆண்டுகளோவும் அல்ல...கடின உழைப்பாலும்... கலை வேட்கையாலும் பத்து ஆண்டுகால ஆய்வு. திருப்புடைமருதூரின் ஓவியங்களை கூறு கூறாக விளக்கி விடுகின்றன, அதை தீட்டிய ஓவியர்களின் அகக்கண்ணின் வழியாகவே வாசகர்களையும்(மாணவர்களையும்) வழி நடத்திச் செல்கிறார்
                நடமாடும் வரலாற்று ஆவணப் பெட்டகமாக திகழும் பேராசிரியர், ஆய்வாளர் பாலுசாமி(பாரதிபுத்திரன்) ஐயா அவர்கள் தமிழர்களுக்காக தனது பெட்டகத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தந்த ஒரு பகுதியே சித்திரக்கூடம் என்னும் பெரும் பகுதி. 
                இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவை 13*9 இஞ்சுகளும் , ஏறத்தாழ 320 பக்கங்களும், ஆர்ட் காகிதத்தாலும், கடின அட்டையிலும் வரும் 2016  நவம்பர் 3 வது வாரத்தில் தடாகம் பதிப்பகம் முழு வண்ண நூலாக வெளியிடுகிறது. (கலை, இலக்கியம், பண்பாடு, சூழலியல் போன்ற தளங்களில் தொடர்ந்து சிறந்த நூல்களை தடாகம் பதிப்பகம் கொடுத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது)
இந்நூலின் சிறப்புகள்:-
           பிறரால் செய்யப்பெற்ற கீறல்கள் மட்டும் சரிசெய்யப்பெற்று, பழமைச் சிறப்பு குன்றாமல், வண்ணங்களின் தன்மை சிறிதும் மாறாமல் தரப்பட்டுள்ளன.
           நுட்பங்கள் புலப்படுமாறு பெரிய அளவில் ஓவியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன 
            ஒவ்வொரு ஓவியத்தின் உள்ளடக்கமும் மாந்தர்களின் செயற்பாடுகளும் விரிவாக விவரிக்கப்பட்டு, நுட்பங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
            தமிழக நாயக்கர் ஆட்சிப்பரப்புகள், திருப்புடைமருதூர், இராஜகோபுரம், ஐந்து தளங்கள் ஆகியவற்றிற்கு வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
           அச்சுததேவராயர், பூதலவீர உதயமார்தாண்டவர்மர் ஆகியோர் மற்றும் ஆரல்வாய்மொழிக் கணவாய், புன்னைக்காயல் துறைமுகம் ஆகியவற்றுக்கான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன 
           ஐந்து தளங்களிலும் இராஜகோபுரக் கதவுகளிலும் இடம்பெற்றுள்ள மரச்சிற்பங்கள் குறித்து விரிவான கட்டுரையும் புகைப்படங்களும் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன
          , தளவாய் அரியநாதர் வரலாறு, திருவிளையாடற் புராணக்கதைகள், வள்ளிக்கத்தை, சுந்தர் வரலாறு போன்றனவும் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.
         தனியொரு கோயில் சுவரோவியங்கள் குறித்து, ஏறக்குறைய அனைத்து ஓவியங்களுடனும் அவை ஒவ்வொன்றுக்குமான விளக்கங்களுடனும் ஆழமான விளக்கங்களுடனும் ஆழமான ஆய்வுக்கட்டுரைகளுடனும் முமையாக தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே 
        

         முன்பதிவு செய்ய விரும்புவோர்
பனுவல் புத்தக நிலையம்
  www.panuval.com/chitirakoodam



Chepauk palace in Madras

What once was the Chepauk palace in Madras. 
Of the Nawab of Carnatic. Photograph taken around 1851 by Frederick Fiebig in c.1851. This is a distant view of the portion known as  Humayan Mahal; the other part of the palace was the  Khalsa Mahal. The designer was probably Paul Benfield, an engineer of the British East India Company. The Nawabs remained in residence until the dynasty died out in 1855 and the palace was acquired by the government. Khalsa Mahal was subsequently incorporated into the Public Works building and Engineering College, and Humayan Mahal was integrated into the Revenue Board building, completed in 1871.

Sunday, August 28, 2016

சிறுவாணி

சிறுவாணி :
-------------

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களின் வாழ்வாதாரம் ,#சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து, கேரள மாநில அரசின் நீர் வளத்துறை , தமிழக அரசுக்கு மே 4 ஆம்  தேதி கடிதம் எழுதி உள்ளதாகவும், தமிழக அரசின் பதில் கிடைக்காததால் ஆகஸ்டு 11 மற்றும் 12 தேதிகளில் நடந்த நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் உற்பத்தி திட்ட மதிப்பீட்டு நிபுணர் குழு இத்திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் கட்டுமானத்திற்கு இசைவு அளித்தது.

கேரள அரசு கடிதம் எழுதியும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால்தான், மத்திய அரசு சிறுவாணியின் குறுக்கே அணைகட்ட ஒப்புதல் தந்தது.

2002 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி எனுமிடத்தில் அணை கட்டக் கேரளம் முயற்சித்தபோது, தமிழகத்தின் எதிர்ப்பரல் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. 

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில்,பவானி படுகையில் கேரள அரசுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 6 டி.எம்.சி. நீரில் இத்திட்டத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கேரள மாநிலம் கூறுகிறது.  கேரள அரசு உத்தேசித்திருந்த இத்திட்டத்தின் மொத்த நீர் உபயோகம் 4.5 டி.எம்.சி. என்பதற்குப் பதிலாக 2.87 டி.எம்.சி. எனக் குறைத்து கhவிரி நடுவர் மன்றம் இத்திட்டத்திற்கு நீர் ஒதுக்கீடு செய்துள்ளது .
இந்த நிலையில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம் என்று கேரள அரசு -பாலக்கhடு மாவட்டம், மன்னார்கhடு வட்டம் சித்தூர் எனும் இடத்தில் சிறுவாணியின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டத் திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் 2.29 டி.எம்.சி. நீரை 4900 ஹெக்டேர் பாசனத்திற்கும் 3 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கேரள அரசு முனைந்துள்ளது.

5.2.2007 இல் வழங்கப்பட்ட கhவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆணையை எதிர்த்து கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல் முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன. தொடர்புடைய அனைத்து மாநிலங்களும் காவிரி நடுவர் மன்றத்தின் முன் விளக்கங்கள் கோரும் மனுக்களை 1956 ஆம் ஆண்டு நதிநீர்த் தாவா சட்டப் பிரிவு 5(3)இன் கீழ் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அஇன்னமும் நிலுவையில் உள்ளன.

காவிரிப் படுகை அல்லது அதன் துணை நதிநீர்ப் படுகைகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆணைக்குப் புறம்பானது.
Attappadi Irrigation scheme was originally mooted in 1976 by Kerala. This scheme has been a bone of contention between Kerala and Tamilnadu for about 40 years. Originally, Kerala is not a beneficiary of 1924 Cauvery Agreement. After reorganisation of States only, Kerala has been incorporated as beneficiary under the Cauvery Agreement.

------------------------------------------------
Stanly Rajan
காவேரியினை தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கின்றது, இனி தானாக் வந்து நானே காவேரி என ஒரு மழைக்காலத்தில் அது சொல்லாமல் அடுத்த சந்ததிக்கு அது தெரியபோவதில்லை, அதுவரை ஒரு கரண்டி மணலை கூட விடாமல் அள்ளும் தீவிரத்தில் தமிழகம் இருக்கின்றது இருக்கட்டும்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவடடத்திற்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு, கன்னியாகுமரி மாவட்ட மட்டி வாழை, செந்தொழுவன்,வேர்ப்பலா என அதன் சிறப்புகள் அப்படி. நெல்லை மாவட்ட நுங்கு, பனங்கிழங்கு சுவை அலாதியானது பின்னாளில் அது அல்வா ஊர் என அடையாளம் மாற்றிகொண்டது கால கோலம். 

அற்ப அல்வாவினை விட ஆயிரம் அற்புதமான சுவைகள் நெல்லைக்கு உண்டு, அம் மண்ணில் வளரும் அருகம்புல் சாறுக்கே சுவை அதிகம்.

அம்மண்ணில் விளைந்த அரிசியின் நீராகாரம் முன் கூட அந்த அல்வா நிற்க முடியாது.

தஞ்சாவூர் குறுவை அரிசியும், மதுரை மல்லியும், வைகை அயிரை மீனும் காலத்தில் தன் பெயரினை பதித்துகொண்டவை, சேலத்து மாம்பழம் தனிருசி என்பார்கள்

அப்படி கோவை எனும் கோயமுத்தூரின் தனிபெரும் அடையாளம் சிறுவாணி அற்றின் மிக சுவையான நீர் என்பதும் இடம்பெற்றுகொண்டது. அதன் வரலாறு வித்தியசமானது

உலகின் மிக சுவையான குடிநீர்ல் அதற்கு இரண்டாமிடம், முதலிடத்தை வழக்கம் போல ஐரோப்பியன் வைத்திருப்பதாக சொல்லிகொள்வான், இல்லாவிட்டால் அவமானத்தில் தண்ணீர் குடிக்காமல் செத்துவிடுவான், அவன் அப்படித்தான் பெருமை அப்படி.

ஆனால் சிறுவாணி தண்ணீரின் சுவையே முதல்தரமான சுவை என அடித்து சொல்கிறது உலகம்.

காரணம் அது உதித்து வரும் பகுதியில் இருக்கும் மரங்களின் கனிகளும், குறிப்பாக மலைநெல்லி போல சுவையான கனிகளும் அந்நீரில் விழுந்து ஊறியே அந்நீருக்கு அச்சுவை வருவதாக ஆராய்சி முடிவெனினும், இன்றுவரை முழு தீர்வு கிட்டவில்லை. அது ஒரு வரம், இயற்கை கொடை என்றே முடிவாகிவிட்டது.

சிறுவாணி கோவைக்கு மேற்கே 30 கிமீட்டருக்கு அப்பால் ஓடும் நதி, அந்நீரின் சுவை தெரியுமே தவிர கொண்டுவருவது சிரமம், அதுவும் அது பவானியின் துணையாறு, ஆனாலும் பவானியில் கலந்தபின் அதன் சுவை காணாமல் போய்விடும்.

அன்று கோவையில் ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் பெயர் நரசிம்மலு நாயுடு, அவர்தான் சிறுவாணியில் அணைகட்டி மலையினை குடைந்து கோவைக்கு கொண்டுவரலாம் எனும் திட்டத்தினை முன்மொழிந்தார், முல்லை பெரியாறு அணையின் நுட்பம் அவருக்கு உந்துதல் என்பார்கள். எப்படியோ கோவை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க முதலில் திட்டமிட்டவர் அந்த நாயுடுதான்.

ஆனாலும் அவர் சொல்லி 30 ஆண்டு கழித்துதான் வெள்ளையன் 1930ல் அந்த நீரை கோவைக்கு குடிநீராக கொடுத்தான் அதுவரை 25 மைல் தேடிசென்று குடித்தவர்கள், அதன் பின் வீட்டிலே அமர்ந்து காலாட்டிகொண்டு குடித்தனர், பின்னாளில் சூலூர் ராணுவமுகாமிற்கும் அதுவே குடிநீராயிற்று. வடக்கத்திய ராணுவ வீரர்கள் அந்த தண்ணீருக்காகவே அங்கு விரும்பிவந்த காலங்களும் உண்டு.

அந்ந் சிறுவாணி ஆற்றின் நீர்வீழ்ச்சிதான் கோவை குற்றாலம் என்பது.

1960களில் அணை விரிவாக்கம் செய்யும்பொழுது கூட தமிழகத்தோடு ஒத்துழையினை நல்கியது கேரளம், ஆனால் வஞ்சகமாக முல்லை பெரியாறு கொள்ளவளவினை குறைக்க தமிழகத்தை வற்புறுத்தி வெற்றி கண்டது, அதன் பின் எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.

ஆனால் மக்களாட்சி அல்லவா, ஏதும் செய்து கொண்டிருப்பதாக மக்களிடம் காட்டாவிட்டால் என்ன ஆட்சி?, அதுவும் மாநில நலன் என மொத்த மக்களையும் ஒரே புள்ளியில் ஏமாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மறுபடியும் முல்லை பெரியாரில் தொடங்கி ஆடிபார்த்தார்கள்.

அதில் தமிழகம் பக்கமே பலம் அதிகரிக்க கொஞ்சநாளாக அவர்கள் தூக்கம் தொலைந்தது, பரம்பிகுளம் ஆழியாற்றில் சர்ச்சை துவக்கினார்கள், அதிலும் வெற்றி இல்லை, 

என்ன செய்ய? ஏய் தமிழகமே அன்று சிறுவாணி தண்ணீருக்காக முல்லை பெரியாற்றின் நீர் அளவினை குறைத்த நீ மறுபடியும் வென்றுவிட்டயா, வா அதிலே கை வைக்கின்றேன் என கிளம்பிவிட்டார்கள்.

அடப்பாடி வழியாக சிறுவாணி வரும் இடத்தில் அணைகட்டி விவசாயம் செய்யபோவதாக அறிவித்திருக்கின்றார்கள், கேரளா பற்றி எல்லோருக்கும் தெரியும்? எத்தனை நதிகள் அங்கு வீணாக கடலில் கலக்கின்றன, அவற்றில் எல்லாம் படகு வீடு கட்டி நீந்துவார்கள், அல்லது படகுபோட்டி நடத்துவார்கள். நீரிலே அமைந்த மாநிலம் அது

அவர்கள் சிறுவாணி நீரை எடுத்துத்தான் விவசாயம் செய்கிறோம் என்றால் மொத்த இந்தியாவே வாய்விட்டு சிரிக்கும்.

தமிழக தேர்தலில் தோற்று ஆங்காங்கு முக்காடு போட்டு துண்டுபீடி குடித்துகொண்டிருந்த  கட்சிகள் எல்லாம், வேலை வந்திருச்சி என களம் இறங்கிவிட்டன.

தமிழக அரசு எம்மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகின்றது என்பது இனி தெரியும், பார்க்கலாம். சுலபத்தில் கேரளம் வெற்றிகொள்ளமுடியாது, அது காய்கறி முதல் அரிசி வரை தமிழகத்தை நம்பியே பெரும்பாலும் இருக்கின்றது. வடகொரியா போல அதிரடி காட்டிவிட்டு , தேவையானதை வாங்கிவிட்டு அமைதியாகும் வாய்ப்பும் உண்டு, அரசியல் அப்படித்தான்.

கோவையிலும் சலசலப்பு கூடுகின்றது, காரணம் அவர்கள் அச்சுவையான நீரிலே வளர்ந்தவர்கள், எங்கு பயணம் சென்றாலும் அதனை கையில் கொண்டுசென்றே பழகியவர்கள். சிறுவாணி இல்லாத வாழ்வினை அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.

மலையாளிகளுக்கு நாம் சொல்லவிரும்புவதெல்லாம அதுதான், உங்களுக்கு இல்லா நதிகளா? நீரா? செழுமையா?. அடிக்கொரு ஓடையும் எட்டுக்கொரு ஆறும் பாயும் வளம் உங்களது.

சிறுவாணியின்றி அமையாது கோவை ,  

அதன் வளர்ச்சிக்கு அதுதான் காரணகர்த்தா, நல்ல குடிநீர் கிடைக்கும் மக்கள் அமைதியான வாழ்வு வாழ்வார்கள் என்பதொரு தியரி. அப்படி கோவை மக்களின் அமைதியான மனதிற்கும் அதுவும் ஒரு காரணம்.

ஓ மலையாளிகளே அதனை அவர்களிடமே
விட்டுவிடுங்கள், முன்னோர்கள் குடித்து சுவைத்த நீரை அவர்கள் சந்ததியும் குடித்து மகிழ விட்டுவிடுங்கள், அது அவர்கள் கலாச்சாரம், பெருமைக்குரிய  பாரம்பரியம்.

அவர்கள் உணர்வில் கலந்துவிட்ட நதி அது, அதன் பெயரினை கேட்டாலே அவர்கள் முகத்தில் ஒரு பரவசமும், நன்றி உணர்வும் வரும். அப்படி அவர்கள் உதிரத்தில் கலந்துவிட்ட பெயர் அது.

எகிப்தின் நைல் போல, தாய்லாந்தின் ஐராவதி போல காசியின் கங்கை போல, பாபிலோனின் டைக்ரீஸ் போல அது கோவையின் நிரந்தர அடையாள சின்னம்.

இரக்கமில்லா மலையாளிகளே,  அந்த சுவையான நீரிலே அவர்களை காத்து வரும் தேவதை அது.  

அவள் இருக்கும் வரையே அது சொர்க்கம், அவளை பறித்து அம்மக்களை  நரகத்தில் தள்ளிவிடாதீர்கள்.

இந்த கோவைக்காரர்களின் உரிமையும், அவர்களின் பெருமையுமான அருமைக்குரிய சிறுவாணியினை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள், அது நதி அல்ல, அவர்களை அங்கே வாழ வைக்கும் தாய்.
தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் ஒலி ஒத்த சொற்கள் சில;
Mango - மாங்காய்
Cash - காசு
One - "ஒன்"று
Eight - "எட்"டு
Victory - வெற்றி 
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய் 
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
Name - நாமம் _பெயர் 
Vomit - ஒமட்டு (குமட்டுதல்)
பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம் 
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய் (எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"
Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread, 
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக 
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Grain - குருணை
Button - பொத்தான்

Akbar

Badshah Akbar's bridge on the river  at Jaunpur, some 58 kms from Varanasi. It was the capital of a thriving and cultured sultanate power from the last decade of the fourteenth century until the city was destroyed by the armies of Sikander Shah Lodi in the 1490s. The city was strategically important due to its location at a crossing point on the river Gomti. The massive Akbari Bridge, a remarkable structure with fifteen arches, was built between 1564 and 1568 by Munim Khan, the local governor under Mughal Emperor Akbar.

India permanent N S G member

US State Department today categorically says - It's time to make India permanent NSG member.

China come on, Show balls this time and stop India ...Let us see How can you stop. Pakistan .....??

நடராஜர் கோயில்.

நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் கால்வாய்.!!!
************************************
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்ட தூரத்திற்கு அப்பால் நீரிணை கொண்டு சென்றுள்ளனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரிநீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வாளர்கள் ஜே.ஆர்.சிவராமகிருஷ்ணன், பேராசிரியர் பி.கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன், ராஜராஜன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்தது: இந்த கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து, மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லை.

கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாகவும் என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். சிறந்த நீர் மேலாண்மை: குறிப்பாக பராந்தகசோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம்ஏரிக்கு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளான். பாம்பு போல வாய்க்கால் இருந்தால், தண்ணீ்ர் பனை ஏறும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும். நீரை எளிதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில்நுட்பம் காட்டுகிறது.

நிலவறை கால்வாய் 1250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமடத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர். இவைகள் 24X15X5 செ.மீ நீள, அகலங்களை கொண்டதாகும். 1:3:6 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.

பிற்கால சோழர் காலம்: இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சாரா, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீக மக்கள் பயன்படுத்தி உள்ளனர். அதே தொழில்நுட்பத்தை தமிழர்களும் பயன்படுத்தியுள்ளதனால், சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் நமக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கு இக்கால்வாய் சான்றாக அமைந்துள்ளது.

Saturday, August 27, 2016

Cornwallis-Madras

The pedestal of the statue of  Lord Cornwallis showing the handing over of the sons of Tippu as hostages. This marble statue was erected by contribution from civil and military inhabitants of Madras as a gratitude for securing #Madras from Tippu Sultan. The  statue sculpted by Thomas Banks was opened on 15th May 1800 in the parade square  inside a Cupola  by Lord Clive Governor of Madras amidst the firing of guns from Saluting battery at Chepauk.

CONGRESS -Kuldip Nayar

Kuldip Nayar | New Delhi | August 25, 2016

CAN THE CONGRESS PARTY BE RETRIEVED?

This was the question posed to me. Another one is whether or not the party is relevant. Answering the last question first, I said that a 130-year-old organisation which has loyal members even in the remotest rural areas cannot be irrelevant. The Congress led the independence movement and has ruled the country for more than five decades.

For my generation, Jawaharlal Nehru and Sardar Patel who were the top two leaders of the Congress are icons and I cannot forget the sacrifices the people made under their leadership. Their words counted and people would gather at their call whenever or wherever they made them. Then, the Congress was India and India was the Congress.

The situation began to change after the death of Lal Bahadur Shastri, who succeeded Nehru. I had the privilege of working as press officer with Shastri. He had doubts about Nehru’s succession plans and would often say that "unke dimaag me to un ki putri hai" (he has his daughter in mind). But, Shastri would add that it would not be easy. (this is rather significant, coming from Shastri , and the 'tragic' end he met!!)

This turned out to be true because after the death of Nehru, Morarji Desai was the first one to throw his hat in the ring. Congress president K. Kamaraj did not want Morarji who he considered intractable and not accommodative for a country where it was essential to be conciliatory to take the people of different religions, castes and regions together.
Shastri did succeed Nehru but died early because of a heart attack at Tashkent where he had gone to sign a peace agreement with General Ayub Khan, martial law administrator of Pakistan. My feeling is that had he lived, relations between India and Pakistan would have normalised. I recall that after hearing of the sudden death of Shastri, Ayub came to dacha where the Russians had put  the Indian Prime Minister up.

General Ayub said in my presence that “had he (Shastri) lived Pakistan and India would have become long-lasting friends.” Ayub also became the pallbearer of the coffin that carried Shastri’s body to the aircraft which flew it to Delhi. I think Ayub did echo the feelings of Pakistan because when I visited the country subsequently people recollected Shastri’s friendship.
Zulfikhar Ali Bhutto, then Pakistan’s foreign minister, was the spoiler. He did not want to sign a treaty which would shun violence in settling issues between India and Pakistan. And he flew straight from Tashkent to Islamabad and propagated that Ayub had sold the country to India. What Ayub had conceded was that the differences between India and Pakistan would be settled peacefully.

Shastri had made Ayub write on the peace draft he had brought along “without resorting to arms.” The hand-written words in the text are retained by the National Archives of India. Although many people in Pakistan doubt this, the fact remains that General Ayub did sign the peace treaty because he, as the army chief, knew what devastation wars caused.

With such a long heritage, the Congress Party cannot be written off. In fact, the very history of independent India begins with the movement which helped the country roll back the British Raj. It is true that the Congress has come down from the pedestal it had once occupied but it does not mean that it has become irrelevant.

Can the party be retrieved is a difficult question to answer.  It had two major segments of followers: Dalits and Muslims. Mayawati, the Dalit leader, has cornered the people whom the Hindu religion itself had categorized as sudras (untouchables). In fact, there is no religion in the world which makes discrimination against its own people as part of its traditions.

In fact, if the Hindus were to analyse they would find that the Muslims are converts from Hinduism because it did not treat them as equals, something which Islam did. Today when the RSS raises the banner of ghar wapsi, it should realize that such a thing cannot happen until the Hindus give up untouchability which is rampant in rural India. People of different castes may have begun sitting on the same bed, yet they still have separate wells and separate cremation grounds.

Indian Muslims, after the establishment of Pakistan, sought a party that was secular. The Congress, however, was not as firm in its ideology as it was during the days of Nehru and Patel. Still the Muslims had no choice because the only alternative available to them after the Congress was the Communist Party. But this did not fit into their scheme of things and was too totalitarian and disciplinarian.

For a religion which has a holy book to follow, there was very little leeway. Islam attracted converts because it gave a sense of equality. Hadeesh (the spoken words) did give room for personal interpretations. But the loyal say that there could be no deviation from the book of roughly 1400 years old because these were the words of Allah.

Yet Islam over the years has changed. If it could severe itself from the rigid path, Hinduism should have no problems of in overhauling itself in the face of modern challenges. However, discrimination against Dalits is so deep that I do not expect many strides in this field. This is a challenge before the Hindus.

The experience so far has been far from happy. At the time of elections, some appeals are made and even top Hindu leaders from the Congress eat at the houses of Dalits. But all this wears off once the polls are over and people are back to their old moorings of discrimination.

If the Congress wants to retrieve its lost influence, it would have to cleanse its own house.

Secularism has become just a word and many Congress leaders are as rabid as the BJP fanatics. Secularism is a commitment, an attitude of mind. We have included secularism in the preamble of the Constitution, but we are far from practising it. And, sometimes, I feel that India is trying to follow Pakistan where people wear religion on their sleeves to prove that they are firm Muslims.
The writer is a noted journalist columnist and commentator.

Kasmir

A joyful Josh Malihabadi (third from left), with Jawaharlal  Nehru.
At a mushaira organised by the National Conference at Srinagar in September 1949. Soon after Srinagar was prevented from falling into the hands of Pakistan.
குஜிலி பஜார்

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல எம்டன் வந்து தாக்கியது, பிரிட்டீஷ் படைகள் மீண்டும் தாக்கியதும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிட்டது என்றும் ஒரு பிரச்சாரம் தீவிரமாக செய்யப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் 'வல்லமை சிந்து' என்ற பாடல் ஒன்றும் அந்நாட்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த குஜிலி பஜாரில் விற்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் நடந்த சம்பவத்தை இப்படி விவரிக்கிறது...

''ஆண்டு துலாயிரத் தானபதி நான்கினில் 
ஆனதோர் செப்டம் பர்மாத மதில் 
வேண்டிய தேதி இருபத்தி ரெண்டினில் 
வீழ்ந்த தென்றார் குண்டு சென்னைதனில் 

ஜர்மனி எம்ப்ட குரூசர் கப்பலது 
சென்னை கடர்க் கறை தென்கிழக்கில் 
அருணணி ரங்கி இருட்டு களானதும் 
அங்கே ஒளியுடன் நின்றதுவே. 

நின்று எதிர்நோக்கி பட்டணம் தன்னில் 
நிமிஷ மிருபது நேர மட்டும் 
குண்டுகள் விட்டுமே கோட்டை லயிட்டவுஸ் 
குந்தம் செய்ய குண்டை விட்டனரே ...''

இந்த பாடலின் இறுதியில், எம்டன் குண்டு வீசியதில் துறைமுகத்தில் இருந்த எண்ணெய் டாங்குகள் எரிந்ததைப் பார்த்த ஜெர்மானியர்கள் சென்னையே எரிகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டதாகவும், பிரிட்டீஷாரின் பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திரும்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ராஜவிசுவாசிகளால் எழுதப்பட்ட இந்த பாடல் இதுபோன்ற தருணத்தில் நமது ராஜாவிற்கு (இங்கிலாந்து அரசர்) நாம் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

Friday, August 26, 2016

Corruption in India

A foreigners take on India's endemic corruption:

Corruption in India:

A New Zealander's view on reason for corruption in India:
Indians are Hobbesian (Culture of self interest)

Corruption in India is a cultural aspect. Indians seem to think
nothing peculiar about corruption. It is everywhere.

Indians tolerate corrupt individuals rather than correct them.

No race can be congenitally corrupt.

But can a race be corrupted by its culture?

To know why Indians are corrupt, look at their patterns and practices.

Firstly:
Religion is transactional in India.

Indians give God cash and anticipate an out-of-turn reward.

Such a plea acknowledges that favours are needed for the undeserving.

In the world outside the temple walls, such a transaction is named “bribe”.

A wealthy Indian gives not cash to temples, but gold crowns and such baubles.

His gifts can not feed the poor. His pay-off is for God. He thinks it
will be wasted if it goes to a needy man.

In June 2009, The Hindu published a report of Karnataka minister G.
Janardhan Reddy gifting a crown of gold and diamonds worth Rs 45 crore
to Tirupati.

India’s temples collect so much that they don't know what to do with
it. Billions are gathering dust in temple vaults.

When Europeans came to India they built schools. When Indians go to
Europe & USA, they build temples.

Indians believe that if God accepts money for his favours, then
nothing is wrong in doing the same thing. This is why Indians are so
easily corruptible.

Indian culture accommodates such transaction

First: Morally. There is no real stigma. An utterly corrupt JayaLalita
can make a comeback, just unthinkable in the West.

Secondly:
Indian moral ambiguity towards corruption is visible in its history.
Indian history tells of the capture of cities and kingdoms after
guards were paid off to open the gates, and commanders paid off to
surrender.

This is unique to India.

Indians' corrupt nature has meant limited warfare on the subcontinent.

It is striking how little Indians have actually fought compared to
ancient Greece and modern Europe.

The Turk's battles with Nadir Shah were vicious and fought to the finish.

In India fighting wasn't needed, bribing was enough to see off armies.

Any invader willing to spend cash could brush aside India’s kings, no
matter how many tens of thousands soldiers were in their infantry.

Little resistance was given by the Indians at the “Battle” of Plassey.

Clive paid off Mir Jaffar and all of Bengal folded to an army of 3,000.

There was always a financial exchange to taking Indian forts. Golconda
was captured in 1687 after the secret back door was left open.

Mughals vanquished Marathas and Rajputs with nothing but bribes.

The Raja of Srinagar gave up Dara Shikoh’s son Sulaiman to Aurangzeb
after receiving a bribe.

There are many cases where Indians participated on a large scale in
treason due to bribery.

Question is: Why Indians have a transactional culture while other
'civilized' nations don't?

Thirdly:
Indians do not believe in the theory that they all can rise if each of
them behaves morally, because that is not the message of their faith.

Their caste system separates them.

They don't believe that all men are equal.

This resulted in their division and migration to other religions.

Many Hindus started their own faith like Sikh, Jain, Buddha and many
converted to Christianity and Islam.

The result is that Indians don't trust one another.

There are no Indians in India, there are Hindus, Christians, Muslims
and what not.

Indians forget that 1400 years ago they all belonged to one faith.

This division evolved an unhealthy culture. The inequality has
resulted in a corrupt society, in India every one is thus against
everyone else, except God and even he must be bribed.

__BRIAN from Godzone
NEW ZEALAND
Sadly....yes !
(Incidentally, New Zealand is one of the least corrupt nations in the world.)
Beyniaz Edulji

திரு.வி.க.

வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர்கள்
............................................
எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டு எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர் 
சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர் ஆய்வாளர், பத்திரிக்கையாளர்       "தமிழ்த்தென்றல்" திரு.வி.கல்பாணசுந்தரம் 
..... சு.குமார தேவன் .....
*திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க. 1883ம் ஆண்டு இதே நாளில் தற்போது தண்டலம் ( திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.
* அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அத்தனைத் தலைவர்களிடமும் அரசியல் வேறுபாடின்றித் தொடர்பு வைத்திருந்தார்.
* இளம் வயதில் சித்த வைத்திய மருந்து சாப்பிட்ட போது சாப்பிட்ட மருந்து பத்தியம் இல்லாமல் போனதால் பக்கவிளைவு ஏற்பட்டு கை கால்கள் முடமாக அதை சரி செய்தவர்  அயோத்திதாசப் பண்டிதர்.
* காந்தியார் சென்னைக்கு முதன்முதலாய் வந்தபோது
அவரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்த்து அழகுத் தமிழில் விளக்கமளித்து காந்தியாரிடம் நற்பெயர் எடுத்தார்.1921ல் "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் " என்ற நூலினை எழுதினார்.
* சமயம், அரசியல்.இலக்கியம், கவிதைகள்,வரலாறு, தன் வரலாறு என்று அனைத்துத் தளங்களிலும் மூழ்கி ஆய்வு செய்து எழுதிய நூல்கள் மொத்தம் 56. தமிழக வரலாற்றில் அரிய செய்திகள் சிந்தனைகள் விரவிக் கிடக்கும் அந்த நூல்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றோர் பலராவார்.
* சட்டசபையில் தமிழில் பேச வற்புறுத்தி அதைத் தன் வாழ்நாளில் கண்ட தமிழறிஞர் .
* மேடைப் பேச்சில் தனக்கென ஓர் பாணியை மேற்கொண்டு ஆற்றொழுக்கான தமிழ்ப்பொழிவை நிகழ்த்தினார். ஒரு மணி நேரம் பேசினால் அதில் கடைசி பத்து நிமிடம் இதுவரை தான் பேசியது என்ன என்பதை சுருக்கமாய்ப் பேசி முடிப்பார்.
* திரு.வி.கவின் மேடைத் தமிழ், எழுத்து நடையைப் பலர் பின்பற்றினர்.
* தற்போது அண்ணாசாலையில் உள்ள " Spencers" கட்டடத்தில் இருந்த நிறுவனத்தில் கணக்கு வழக்கு எழுதி வாழ்க்கை நடத்திய போது அந்த உரிமையாளரிடம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்து வருவதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பணியை ராஜினாமா செய்தார்.
* 20-04-1918ல் வாடியாவுடன் இணைந்து தொழிலாளர்கள் நலன் காக்க திரு.வி.க. உருவாக்கியதே"சென்னை மாகாணத் தொழிலாளர் சங்கம்" என்பதாகும்.
* 1919 முதல் 1922 வரை எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் வேண்டி நடந்த பின்னி மில் வேலை நிறுத்தப் போராட்டம் தான் முதல் மாபெரும் தொழிலாளர்கள் போராட்டமாக வரலாறு பதிவு செய்கிறது. அதை முன்னின்று நடத்தியவர் திரு.வி.க.
* தொழிற்சங்கப் போராட்டம் தீவிரமாதல் கண்டு அவரை நாடு கடத்த ஆங்கில அரசு முற்பட்ட போது அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களான சர்.பிட்டி தியாகராயர். பனகல் அரசர் ஆகியோர் திரு.வி.கவை நாடு கடத்தினால் பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என்று கூறியதால் நாடு கடத்தும் பேச்சு முடிவுற்றது.
*தேசபக்தன், நவசக்தி ஆகிய பத்திரிக்கைகளை நிறுவி அதன் மூலம் தான் கொண்ட கொள்கைகளைப் பரப்பினார்.
* 1919 ல் முதன் முதல் மேடையேறிப் பேசியது "திராவிடரும் காங்கிரசும் " என்ற தலைப்பில்.
* 1925ல் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் காண ஒரு வகையில் திரு.வி.க.வும் காரணம். பின்னாளில் பெரியார் கூட்டிய மாநாட்டில் பேசிய போது
சுயமரியாதை இயக்கத்தின் தந்தை என் நண்பர்  பெரியார் என்றால் தாய் நான் தான் என்றார்.
* சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் டிசம்பர் 9 வரை திரு.வி.க. தொழிற்சங்கம் அமைத்துக் கம்யூனிசம் பேசுவார் என்று கருதிய காங்கிரஸ் அரசு அவரை வீட்டுக்காவலில் வைத்தது.
* எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரியாருடன் அவருக்கிருந்த நட்பின் தன்மை மாறாமல் இருந்தது. எனக்காகக் கண்ணீர் சிந்த இருக்கும் ஒரே நண்பர் நாயக்கர் தான் என்றார். அதன்படியே அவர் 17-091953ல் மறைந்த போது வெளியூரில் இருந்த பெரியார் ஓடோடி வந்து இரங்கல் கூறி அவருக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் முன்னின்று அறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் மூலம் செய்தார்.
* "எனக்கு மீண்டும் பிறவி வேண்டும் பிறந்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றவேண்டும்" என்று கூறிய திரு.வி.க.வள்ளலாரின் கொள்கை வழிநின்றவர்.
* திரு.வி.க.நடத்திய நவசக்தியில் துணை ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தி அவர் மேல் கொண்ட பற்றால் "கல்கி" என்று அறியப்பட்டார்.
* பல்வகையிலும் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றிய திரு.வி.க வின் நூற்றாண்டை 1983ல் அரசு கொண்டாடி விட்டு மறந்து விட்டது. அவர் நினைவாக அவர் பிறந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசு அசைந்து கொடுக்க மறுப்பது கேவலம்.
* " தேனருவித் திரு.வி.க
செந்தமிழ்ப் பேச்சும் எழுத்தும் இன்பத் தேனருவி  பெண்ணின் பெருமையைத் தொழிலாளி உரிமையைக் கண்ணான தமிழின் கவினார்ந்த உண்மையைப் புண்ணான இந்தி புகுத்தும் சிறுமையை எண்ணிய எண்ணத்தில் எழுந்த தமிழனைத்தும் தேனருவித் திரு.வி.க." என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
வாழ்க தமிழ்த்தென்றல் திரு.வி.க.

Kathaisoli

Malan,
பல ஆண்டுகளுக்கு முன் கி.ராஜநாராயணன் 'கதை சொல்லி' இதழை வெளியிட்டபோது அதன் முதன் இதழை அனுப்பி என் கருத்துக்களைக் கேட்டிருந்தார். அப்போது எழுதிய கடித்தத்தை 30 இதழில் "வீட்டில் பழைய குப்பைகளிலிருந்து சில பழைய கடிதங்கள் கிடைத்தன.தங்கர் பச்சன் கடிதம் ஒரு உண்மையைச் சொல்கிறது. மாலன் கடிதமும் அப்படியே" என்ற குறிப்போடு வெளியிட்டிருக்கிறார். அந்தக் கடிதம் இங்கே

சளைக்காமல் கதை சொல்லியைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கழனியூரான் ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்
____________________
அன்பிற்குரிய திரு.கி.ரா அவர்களுக்கு,

வணக்கம். அன்புடன் நீங்கள் அனுப்பி வைத்த கதைசொல்லி கிடைத்தது. அந்த முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணங்கள் பல. எழுத்துக்குப் பரிசாகக் கிடைத்த பணத்தை மீண்டும் எழுத்துக்கே செலவிட விரும்புகிற உங்கள் யோக்கியம், வறண்ட கரிசக்காட்டு வழியே போகிறபோது, உடைமரத்திலிருந்து விசுக்கென்று பறக்கிற மயிலைக் காணும்போது ஒரு சின்ன சிலிர்ப்பு புறப்படுமே அது போல இருக்கிறது. கவிதை கிடையாது என்று அறிவித்திருக்கிறீர்கள். ரொம்ப நிம்மதி. வாசகர் கடிதங்கள் கிடையாது என்றும் சொல்லிவிட்டீர்கள். பஜனை கோஷ்டிகள், சண்டைக் கோழிகள் இரண்டு தரப்புக்கும் ஏமாற்றமாக இருக்கும். கேள்வி பதில் பகுதியில் அரசை ஒரு மொங்காம் போடாகப் போட்டுத் தள்ளி விட்டீர்கள். (அந்த அரை நிர்வாணப் பக்கிரி எதற்கெல்லாம் கை கொடுக்கிறான் பாருங்க) ஆனால் அதே விஷயத்தை "சிறு பத்திரிகைகளில் எழுதுபவர்களெல்லாம் எழுத்தின் மேல் அதுவும் தங்கள் எழுத்தின் மேல் மிகுந்த மோகம் கொண்டவர்கள் என்ற வரிகளைக் கொண்ட ஒரு கடிதத்தை மறுப்பேதும் சொல்லாமல் வெளியிட்டு (கூடவே ஞானஸ்தர் என்று ஒரு ஷொட்டு வேறு) இருக்கிறீர்கள். என்ன செய்வது மருமகள் உடைத்தால் பொன்குடம்!

நான் கிடக்கிறேன் கிரிசை கெட்ட கோட்டிக்காரன். ஆனால் சிற்றிதழ்களைப் பரிசெல்லாம் அறிவித்துத் தட்டிக் கொடுத்து, கொம்பு சீவி, வர்ணம் பூசி, உருமாலை விரித்து கட்டிக் கொண்டிருக்கிற பெரிய மனிதர்கள், கண்ணை மறைக்கிற பாசத்தையும், காதை நிறைக்கிற குலாவலையும் வழித்துப் போட்டுவிட்டு, சிறுபத்திரிகைகள் கடந்த 30வருடத்தில் அறிவு ஜீவிகளிடம் எத்தகைய கலா ஆசாரத்தை உருவாக்கியிருக்கின்றன, அது ஏற்கனவே இங்கு புழங்கி வந்த மொழிக்கும், விழுமியங்களுக்கும். ஏதேனும் பலம் சேர்த்ததா, இல்லை பழைய பாப்பான்களைத் தூக்கி ரேழியில் போட்டுவிட்டு புதுப் பாப்பான்களுக்குப் பூனூல் போட்டு, மனையில் உட்கார்த்தும் சூடோ எலிட்டிசத்தை அரங்கேற்றியதா என்றெல்லாம் திறந்த மனத்துடன் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறு பத்திரிகைகள் சோத்தை ஊறவைத்த நீராகாரமாக இருந்தனவா/ இருக்கின்றவா அல்லது குமிழிகள் பொங்கி வரும் சோடத் தண்ணிராக இருந்தனவா/இருக்கின்றனவா என்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு, உங்களுக்கு கிடைக்கும் விடைகளை எனக்கும் சொல்லுங்கள்.

புட்டபர்த்தி, மந்திராலயம், சிருங்கேரி, காஞ்சிபுரம், சீரங்கம், நாங்குநேரி, தர்மபுரம், குன்றக்குடி, மேல் மருவத்துர், திருவண்ணாமலை போன்று அவ்வப்போது மடங்களும் பெரியவர்களும், புதுப் பெரியவர்களும், பண்டார சன்னதிகளும் தோன்றி பக்தகோடிகளுக்குப் பிரசாதம் கொடுத்து ஆசிர்வதிப்பது சிறு பத்திரிகை உலகிலும் தலையெடுத்துத் தழைத்து வருகிற நேரத்தில் கதைசொல்லியைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். மெய்யாகவே நீங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் உள்ள ஆள் என்பதால் அருள் வேண்டி பக்தகோடிகள் வந்து மொய்ப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். இன்னுமொரு விஷயத்திலும் கூட நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். சிறு பத்திரிகை என்பது ஒரு ஆட்கொல்லி, பலி கேட்கும். சரஸ்வதிக்கு ஒரு விஜயபாஸ்கரன், எழுத்துக்கு ஒரு செல்லப்பா, நடைக்கு ஒரு மணி, கசடதபறவிற்கு ராமகிருஷ்ணன், அஃக்குப் பரந்தாமன் என்று ஏகப்பட்ட பலவான்களை ஜீரணித்த ஆட்கொல்லி, உங்களிடத்தில் அது கருணையோடு இருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இது எண்வழிச் சிற்றிதழ் என்று ஒரு ஜாக்கிரதையாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். விருதாப்பயல்களாக இருந்த நாங்க வாசகன் இதழ்களைத் துவக்கியபோது, காலில் கட்டியிருக்கும் குண்டாகக் கணக்கும் கடிகாரத்தைத் தூக்கி எறிந்து விட்டுத்தான் பயணத்தை ஆரம்பிக்கிறோம். இது எங்கள் செளகர்யம் போல் வெளிவரும் என்று கெத்தாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால் ஒன்றும் பிரேயாசனம் இல்லை.

கதை சொல்லியில் கவிதை கிடையாது, கடிதம் கிடையாது. சரி, ஆனால், இந்திய மொழிகளில் உள்ள நாட்டுப்புறக் கதைகளை மொழி பெயர்த்து வெளியிடலாமே? என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஏ.கே.ராமானுஜம் தொகுத்து பென்குவின் வெளியீடாக ஒரு புத்தகம்* வந்திருக்கிறது. கதைகளைப் போட அனுமதி கிடைக்காத பட்சத்தில் அதன் முன்னுரையைப் போடலாம். எப்படியானாலும் நீங்கள் பார்க்க வேண்டியப் புத்தகம் அது. (உங்கள் தயவில், “மிகவும் எளிது வேலை கிடைப்பது’ என்றொரு (ஓசி) புத்தகம் படித்தேன். அதில் உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதுகிற ஒரு தமிழர் கூட இல்லை. அப்படி ஒருவர் இருவர் இருக்கக் கூடுமானால் அவர் நிச்சயமாக இலங்கைத் தமிழராகத்தான் இருப்பார் (பக்.112) என்று இருந்தது. ஆர்.கே.நாராயணன், ஏ.கே.ராமானுஜன், ஆர்.பார்த்தசாரதி என்ற பெயர்களை உங்கள் நண்பருக்கு அறிமுகப்படுத்தக் கூடாதா?”)

வேறு எதாவது யோசனை தோன்றினால் அப்புறம் எழுதுகிறேன்.

* (Folktales from India) 
அன்புடன்
மாலன்

Wednesday, August 24, 2016

நீதித்துறையில் மாற்றம் தேவை!

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வழக்கறிஞர்கள் நடத்தியப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து இன்றைய (24.8.2016) தினமணி நாளிதழில் "நீதித்துறையில் மாற்றம் தேவை!" என்ற தலைப்பில் தலையங்கப் பக்கத்தில் வந்துள்ள எனது பத்தி....

நீதித்துறையில் மாற்றம் தேவை!

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

வழக்கறிஞர் தொழிலை நோபல் புரொபஷன் என்ற ஆங்கிலத்தில் சொல்வதோடு, வழக்கறிஞர்களை லேனர்ட் ஃபிரெண்ட் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இப்படியான கீர்த்தி வாய்ந்த தொழிலுக்கு இன்றைக்கு சிக்கல். துலாக்கோல் நிலையில் இயங்க வேண்டிய நீதிமன்ற வளாகத்தில் வேலை நிறுத்தங்கள். மக்களுக்கு நீதி வழங்கும் நீதிமன்றங்களே இயங்கவில்லை என்றால், ஜனநாயகத்தில்தான் கோளாறு. நெடிதுயர்ந்த கம்பீரமான நீதிமன்ற கட்டிடங்களில் டவாலிகள் முன் செல்ல, கருப்பு அங்கிகளோடு காலனிய காலத்து பந்தாவோடு பவனிவந்த நீதிபதிகள், நீதிமன்ற அரங்கங்களுக்கு செல்லாமல் கோர்ட்டில் உள்ள தங்கள் அறையிலேயே எந்த பணியும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் யார்? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சில நீதிபதிகள் குழுவின் அறிக்கையால் பிரச்சினைகள் வந்தன. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டாலோ, ஊர்வலம் சென்றாலோ, நீதிபதிகள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டை சுமத்தினாலோ, அவர்களுடைய வழக்காடும் உரிமையை திரும்பப் பெறலாம் என்று சட்டத்தில் சில விதிகளை திருத்தி அரசு இதழில் வெளியிடப்பட்டது. அவ்வாறு வழக்கறிஞர்கள் தவறு செய்தாலும் கூட முறைப்படி நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதை நீதிபதிகள் கையில் எடுத்துக்கொண்டு சிக்கலை உருவாக்குவது நியாயமற்ற செயலாகும். இதற்காக கடந்த 60 நாட்களுக்கு மேலாக வழக்கறிஞர்கள் போராடினர். 168 வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு அந்த உத்தரவு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்றைக்கு நீதித்துறையில் ஊழல்கள் நடக்கின்றன என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. அதையும் கூட வழக்கறிஞர் வெளிப்படுத்தினால் பணியிலிருந்து நீக்கம் செய்கின்ற அவல நிலை. நீதித்துறையில் வெளிப்படையாக தெரியக்கூடிய அளவில், ஆட்சி அதிகாரத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் ஊழல். இயற்கை வளங்களை கபளீகரம் செய்யும் சமூக விரோதிகளின் ஊழல் என்பதெல்லாம் தெரிந்தும் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுகின்றனர்.  இந்திய சட்டங்களுக்கு முழுமையான வியாக்ஞானம் செய்யும் ஏகபோக உரிமையும், தகுதியும் தங்களுக்கே உண்டு என்று நீதிபதிகள் நினைப்பது சட்டத்தின் ஆட்சியில் மமதையான பேடித்தனமாகும். நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதற்கு உரிய நிலைமைகளையும் சட்டத்தின் நிலையையும் எடுத்துக் கூறுவது வழக்கறிஞர்கள்தான். இந்த இருவருடைய கடமை, ரயில் பயணிக்க இரண்டு தண்டவாளங்களைப் போன்றது ஆகும். வழக்கறிஞர்களும், நீதிபதிகளும்தான் நீதித்துறையின் மாண்பை பாதுகாக்கவேண்டிய இரண்டு கண்களாகும். 

போராடும் வழக்கறிஞர்களை அழைத்து பேசி நீதித்துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிக்காமல் இருப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.

வழக்கறிஞர்களாக இருந்த சி.பி.ராமசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஆசாரியார், ராஜா ஐயர், எஸ். மோகன குமாரமங்கலம், வி.கே. திருவேங்கடஆச்சாரியார், கேசவ அய்யங்கார் (பராசரனுடைய தந்தையார்), வி.எல். எத்திராஜ், பராசரன், வி.பி. ராமன், கே. குட்டி கிருஷ்ண மேனன், எம்.கே. நம்பியார், சி.ஆர். பட்டாபிராமன், கோவிந்தசாமிநாதன், ஜி.ராமசாமி, என்.டி.வானமாமலை, கே.கே. வேணுகோபால், எஸ்.செல்லசாமி, டி.செங்கல்வராயன், பி.ஆர். டோலியே இப்படி கீர்த்திப் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு படைத்தனர் என்று சொல்வதைவிட, நீதித்துறையை தமிழகத்தில் மேம்பட செய்தார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்த நீதிமன்றத்தில் உலாவியவர்களில் மத்திய – மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை பெற்றவர்களும் உண்டு. இப்படியான ஆளுமைகள் உலாவிய சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றது.


சென்னை உயர்நீதிமன்ற பிரமிக்க செய்யும் கட்டிடத்தை குறித்து செஞ்சி ஏகாம்பர முதலியாரால் ஐகோர்ட் அலங்கார சிந்து என்று பாடி,  1904இல் பூவிருந்தமல்லி க. துளசிங்க முதலியாரால் வெளியிடப்பட்ட சிந்துவில் உள்ள வரிகள்:

“அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி
அடுத்தகத்திலும் பெருங்க கொடத்தை போல வெகுகூட்டி
கண்டவர் பிரமிக்க கலசமதிலே மாட்டி
கண்கள் சிதரும்படி தங்கத்திலூட்டி…”

சென்னை உயர்நீதிமன்றம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் வழக்கறிஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக நித்தமும் போராட்டங்களும், கோஷங்களும் நடத்தி வருகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் வாய்மூடி மௌனியாக இருப்பதில் நியாயங்கள் இல்லை. பாதிக்கப்படுபவர்களுக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கே இன்றைக்கு பாதிப்பு. இது மட்டுமல்லாமல் நீதித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுக்கடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் உச்சநீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பாமல் ஆண்டாண்டு காலமாக தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 1016. இதில் கிட்டத்தட்ட 443 இடங்கள் காலியாக உள்ளன.  கீழமை நீதிமன்றங்களில் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளன.  பின் எப்படி வழக்குகள் பைசல் ஆகும். வழக்குகள் தேங்கிதான் கிடக்கும். ஹைதராபாத்தில் தெலுங்கானா நீதிபதிகள் ஒரு நாள் சேர்ந்தே விடுமுறை எடுத்து நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராடினார்கள். 14 நீதிபதிகள் ஹைதராபாத்தில் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் தெலுங்கானாவில் நீதித்துறைப் பணியாளர்களும் இக்கிளர்ச்சியில் இணைந்து போராடினர்.  நீதிபதிகள் போராடுவது ஒன்றும் புதிதல்ல. விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துக்கூட தஞ்சை மாவட்ட நாச்சியார்கோவில் நீதிபதியாக பொறுப்பில் இருந்தவர் தாவுத்ஷா ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடியதெல்லாம் செய்திகள்.

அன்னா ஹசாரே போராட்டம் 2011ல் நடந்தபொழுது அஜய் பாண்டே என்ற சிவில் நீதிபதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் எந்த விளைவுகள் வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் வெளிப்படையாக கூறினார். 

நிர்பயா என்ற டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி 2013ல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமாஸ் கபீர் நானும் இந்தப் பிரச்சினையில் தெருவில் வந்து போராட நினைக்கின்றேன். என்னால் முடியவில்லை. மாணவி நிர்பயாவின் கொலைக்கு நியாயம் கேட்டு போராடுவதை வரவேற்கவேண்டும் என்று வெளிப்படையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறியிருந்தார். இம்மாதிரியான போராட்டங்கள் துருக்கியிலும், ஏன் எகிப்திலும் கூட நடந்தேறியுள்ளது. எகிப்தில் 2750 நீதிபதிகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதன் விளைவாக அவர்கள் நீதிபதிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

தமிழகத்திலும் நீதித்துறையில் போராட்டங்கள் தொடர்கின்றன. தவறான சட்டங்கள் வழக்கறிஞர்களின் உரிமைகளை மறுக்கும்பொழுது போராடிதானே தீரவேண்டும். அதுதான் தமிழகத்தில் நடக்கின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பருச்சா, நீதித்துறையில் 20 சதவீத நீதிபதிகள் ஊழலுக்கு துணை போகின்றனர் என்று 23.12.2001ல் வருத்தத்துடன் தெரிவித்தார். 2005ல் செதல்வாட் சொற்பொழிவிலும் அன்றைய தலைமை நீதிபதி ஆர்.சி. லிகோடி நீதிபதிகள் நடத்தை விதிமுறைகளை மீறாதவர்கள் என்று சொல்ல முடியாது. நீதிபதிகளின் மனைவி, மகன், மகள், மருமகன் போன்றவர்கள் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணி செய்து ஏதோ ஒரு வகையில் நீதியை திக்குமுக்காட வைக்கின்றனர். இம்மாதிரி நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் தற்போது அதாவது 2005ல் 130 இடங்களுக்கு மாற்றவேண்டிய நிலை இன்றைக்கு உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் கர்நாடகம், ராஜஸ்தான், மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பஞ்சாப், ஹரியான உயர்நீதிமன்றங்களில் இம்மாதிரியான நீதிபதிகள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். லகோதி மேலும் லஞ்சம், பாலியல் குற்றச்சாட்டு, அதிகார வரம்பு மீறல் போன்றவற்றில் நீதிபதிகள் பலர் பதவிநீக்கம் செய்யப்படுகின்றனர். கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பலர் கைது செய்யப்படுகின்றனர். நீதிபதிகள் கிளப் ஒன்றில் இலவச உறுப்பினராக சலுகைப் பெற்றதற்காக தலைமை நீதிபதி தட்டிக் கேட்டால் அனைத்து நீதிபதிகளும் கூட்டாக விடுமுறையில் சென்ற சம்பவங்களும் நடந்தேறின. இப்படியெல்லாம் வேதனையான காட்சிகள் நீதித்துறையில் நடந்தேறுகின்றன என்று லகோதி தனது சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு கையூட்டுத் தருவதாக கட்சிக்காரர்களை ஏமாற்று வேலையும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்பொழுது வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக நீதிபதிகளை அணுகக்கூடிய நிலைமை வந்துவிட்டது என்றும் வெளிப்படையாக விவாதங்கள் நடக்கின்றன.  இப்படியான புரையோடிய நிலையில் நீதித்துறை.  120வது சட்டக் கமிஷன் அறிக்கையின்படி 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் அமர்த்தப்பட வேண்டும். ஆனால் இன்றைக்கோ 10 லட்சம் மக்களுக்கு 14 நீதிபதிகள் என்ற அளவே உள்ளது. 3 கோடிக்கு மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 81 லட்சம் வழக்குகள் 5 ஆண்டுகளாக விசாரித்து தீர்ப்பு சொல்லாமலேயே தூங்குகின்றன. 

இவை மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கிளையை தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கவேண்டும் என்ற சட்டக்கமிஷனின் பரிந்துரை நிலுவையில் உள்ளது.  கபாலி, சல்மான்கான் பிரச்சினைகளில் உடனுக்குடன் தீர்வு ஏற்படுகின்றது. ஆனால் ராஜீவ் படுகொலையில் 7 பேர் விடுதலை 25 ஆண்டுகள் ஆகியும் தீர்வு எட்டாமல் சிறைக்கோட்டத்தில் வாடுகின்றனர். தீர்வும் நிவாரணமும் எட்டப்படவேண்டிய பலப் பிரச்சினைகளை நீதித்துறை புறக்கணிக்கின்றது.

நீதித்துறைக்கு தேவையான ஒதுக்கீடு தொகையும் மத்திய மாநில அரசுகள் ஒதுக்குவது இல்லை.  டெல்லியில் சமீபத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உரையாற்றும்போது, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர போதுமான நீதிபதிகளை அரசுகள் நியமிக்காததை கண்ணீரும் கம்பளையுமாக எடுத்துரைத்தார்.

நீதிபதி கிருஷ்ணய்யர் இதைப்பற்றி குறிப்பிடும்போது "நாம் இன்றைய நீதிபதிகள் அமைப்பை முற்றிலும் மாற்றவேண்டும். அதன் தீர்ப்புகள் மாற்ற முடியாத புனிதம் கொண்டவை என்ற மூட நம்பிக்கையை அகற்றவேண்டும். நீதித்துறையைச் சார்ந்தவர்கள் பெரிய புனிதப் பிறவிகள் அல்ல. அச்சுறுத்தும் ஆடை, அடைமொழி, புறத்தோற்றம் ஆகியவற்றை புனிதத்தோற்றம் என்று கட்டமைக்கப்படுகின்றது. இவையும் சாதாரண மக்களை அச்சுறுத்தவும் செய்கின்றன. இன்னும் பிரிட்டிஷ் மகாராணி காலத்தின் மதிப்பீடுகளை தூக்கிப் பிடித்துக்கொண்டு உண்மைகளை உறங்க வைப்பது நியாயம் கிடையாது. சட்ட விதிமுறைகளும், சிவில், கிரிமினல் சட்டங்களும், சிறை விதிகளும், காவல்துறை செயல்பாட்டு விதிகள் அனைத்தையும் டென்னிசும், மெக்கலேயும் உருவாக்கியது. இவை நாட்டு விடுதலைக்குப் பின் நம்முடைய தேவைக்கேற்ப நாம் மாற்றிக்கொள்ளவில்லை. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு நீதித்துறை பல புரட்சிகரமான நியாயமான மாறுதல்களுக்கு உட்படுத்தவேண்டும். பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்து நீதிக்கு நாம் மரண சாசனம் எழுதும் துணிவைப் பெறவேண்டும். அதற்கு பதில் உயிர்துடிப்புமிக்க மக்கள் நல புதிய புரட்சி நீதியை நிலைநாட்டுவோம்" என்று கூறியுள்ளார்.

இதுதான் இன்றைய நீதித்துறை.  யாரும் புனிதர்கள் அல்ல.  எல்லோரும் கண்காணிப்புக்கு உட்பட்டவர்கள்தான். எல்லாவற்றிலும் மாற்றங்கள் உண்டு. அந்த மாற்றம் நீதித்துறையிலும் வரவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தில் தொடர் போராட்டத்தில் உள்ள வழக்கறிஞர்களை அழைத்து பேசி தீர்வுகளை காணவில்லை என்றால் மக்களுக்கான நீதிகள் மறுக்கப்படும். இதை உணர்ந்து அதிகாரத்தில் உள்ளவர்கள் கடமையாற்றவேண்டும் என்பதுதான் அனைவரின் அவாவாகும். 

நீதியை பரிபாலிக்கும் நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்களே நீதிக்காக போராடுகின்றனர்.

நீதித்துறைக்கே நீதியை வழங்குக!



Tuesday, August 23, 2016

Bhoodan

Vedire  Ramachandra Reddy, of Pochampally village (hands folded), gave a 100 acres of his land to Acharya Vinoba Bhave as bhoodan on April 18th, 1951. A few days later he would donate more land, taking the total to 800 acres. Ramchandra Reddy thus became the first Indian to donate land to the Bhoodan movement. Land thus acquired would be distributed among the landless.
Bhoodan was a Gandhian idea being implemented by Bhave. That people who had surplus land should voluntarily gift away a small portion to those who had none.

தமிழக நீர் நிலைகள்

தமிழகத்தில் குளங்கள், நீர்நிலைகள் என 50 ஆண்டுகளுக்கு முன்னால் 40,000க்கும் மேலான எண்ணிக்கையில் இருந்தன. செங்கல்பட்டு மாவட்டத்தை ஏரி மாவட்டம் என்று அழைப்பது உண்டு. அங்குள்ள குளங்கள் சமூக விரோதிகளால் கபளீகரம் செய்து, தங்களுடைய சுயலாபத்துக்காக வீட்டுமனைகளை அமைத்து விற்றுவிட்டனர். இருக்கின்ற குளங்கள் இன்றைக்கு 40,000க்கு சரிபாதியாகிவிட்டது. இருக்கின்ற குளங்களிலும் கருவேல மரங்கள். மழைபெய்தாலும் நீர்நிலை உருவாக்கிக்கொண்டு சேமிக்க முடியவில்லை. ஆறுகளில் கொடியவர்கள் மணல் அள்ளிவிட்டனர். இதை கேள்வி கேட்கவும் முடியவில்லை. இவ்வாறான இயற்கை நீர்நிலைகளை தூர் வாறி  ஆயக்காட்டு மக்கள் ஒன்றுகூடி கூட்டுறவாக நீர்நிலையை பாதுகாக்கவேண்டிய கடமையில் உள்ளனர். சில இடங்களில் சொந்த முயற்சிகளில் பணிகள் நடக்கின்றன. இவையெல்லாம் சுயநலமில்லாமல் செய்கின்ற நல்ல உள்ளங்களும் இன்றைக்கு வாழ்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசோ நீர்நிலைகளை பாதுகாக்கக் கூடிய நடவடிக்கைகளை இதுவரை சரியாக எடுக்கவும் இல்லை. அதை ஒழுங்குப்படுத்தவும் இல்லை. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு முன்பு தமிழக அரசின் தலைமை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளருக்கு நான் அனுப்பிய கடிதத்தின் நகல் இதோ. 

ஏற்கெனவே 30 ஆண்டுகாலம் போராடி உச்சநீதிமன்ற நெடியப் படிகளை ஏறி இந்திய நதிகளை கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி நெய்யாறு வரை இணைக்கவேண்டும் என்றும், கேரளாவில் பாயும் அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் சாத்தூர் அருகே உள்ள வைப்பாற்றில் இணைக்கவேண்டும் என்று எனது பொதுநல வழக்கில் தீர்ப்பை பெற்றவன். அதன்பிறகு மத்திய அரசு பணிகளை ஓரளவு துவக்கினாலும் மனதளவில் திருப்தி இல்லை. போராட வேண்டிய நிலையில் இருப்பதால் உயர்நீதிமன்றத்தில் தமிழக நீர்நிலைகளை பாதுகாக்கக் கோரி உரிய மனுவை தாக்கல் செய்ய உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே இது குறித்து விவசாய சங்கங்கள் என்னிடம் கோரிக்கையாக வைத்தன. மதுரையில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்திலும் இது குறித்து உறுதி தந்தேன். அதற்கான முயற்சிதான் இது.


====



To                                                                                                                   Date: 23.08.2016

1.      The Chief Secretary,
Government of Tamil Nadu,
Fort St. George,
Chennai 600 009.

2.      The Secretary,
Revenue Department,
Government of Tamil Nadu,
Fort St. George,
Chennai – 600 009.

3.      The Secretary,
Public Works Department,
Government of Tamil Nadu,
Fort St. George,
Chennai – 600 009.


Sirs,
            I am sending this representation apropos Tanks under the control of the PWD and Local Bodies.
            I refer you to Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari) Act 1948 and Tamil Nadu Act 49 of 1974 amending the same. It is declared that patta granted by the Government in respect of Private Tanks stands cancelled and have become public tanks.
            The revenue records will clearly reveal the number of tanks, their extent and their utility in respect of agriculture and drinking water.
            It is learnt that there were about 40,000 Tanks in Tamil Nadu and more than 20,000 Tanks have disappeared. Out of 5000 Tanks in and around Chennai, Kancheepuram and Thiruvallur Districts only 2600 survive.
            The rich and powerful have built hospitals and educational institutions in public tanks. It is imperative that the old survey records should be verified and the tanks that have disappeared have to be identified and recovered from the encroachers.
            The existing tanks are also truncated and if the Government is serious they can identify the exact extent of the tanks with the help of revenue records and retrieve the entire tank for the use and welfare of the general public.
            The tanks are meant to store water for the welfare of the public. Irrigation and drinking water facilities will improve only if steps are taken to preserve the tanks which are meant for the public.
            The rain water harvesting will have no meaning if our tanks are destroyed. In the villages we do not have swimming pools. The tanks are natural pools for the entire population. The villagers are entitled to use the tank for all purposes including fishing.
            The tank bunds should be strengthened and sluices should be properly maintained. The village people should be allowed to remove the sediments to use the same as natural manure for the paddy fields, groves and orchards. The tanks cannot be used for the purpose of controlling the right of the local population and to enrich the businessmen who exploit natural resources with business motive.
            Karuvelam Trees (Prosopis juliflora) are poisonous and scientists have been demanding removal of the same for the health of the water body and environment. The Government should take immediate steps to remove Karuvelam Trees which are occupying majority of our tanks. After removing such trees the Government should organise parks and natural environments to preserve the ecology.
            The Government have failed to preserve the natural water bodies. This results in natural fury.
            There is severe water shortage even in towns like towns in Kanyakumari District, an area which receives plenty of rain during Southwest and Northeast Monsoons because of destruction of the tanks. Big tanks have been converted as bus stands by the Government.  The same condition is prevailing every district all over Tamil Nadu.
            There are several documentaries published by researchers, newspapers and the electronic media about the cause for inundation of Chennai City, loss of life and colossal loss of property. However the Government appears to be indifferent.
            In public interest I request you to constitute an expert committee with officials from Revenue, PWD and Environmental Departments to identify the water bodies which have been lost and also the status of the existing water bodies for taking immediate steps for restoration of the water bodies and their preservation.

Yours Truly,

(K.S. RADHAKRISHNAN)
 




23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few here. Comment your favourite quotes too.

23rd April Happy #Shakespeare_Day! Let's pay a tribute to the true genius by remembering and sharing his quotes. I'm sharing a few h...