Saturday, March 6, 2021

#ஸ்ரீபிரியா #வானொலி_கலந்துரையாடல்_போதுஎம்_எஸ்_விஸ்வநாதன்_சொன்னது

———————————————————-
ஸ்ரீபிரியா குறித்து இன்று நிறைய பதிவுகள். அதில் முக்கியபதிவாக இதை நினைக்கிறேன்.
ரஜனிகாந்த் சென்னை விமான நிலையத்தில் யாரையோ அடித்து அவருக்கு மன பாதிப்பு என்று செய்திகள் வந்த நாட்கள்.
மன சிகிச்சை பெற்று வருவதாக கூட செய்திகள்.
அந்த நேரத்தில் திரைப்பட துறை சேர்ந்தவர்காள் கூட ரஜினி அவ்வளவுத்தான் என்று பேசிய நேரம்.
மனிதாபிமானமுள்ளவர் அந்த நேரம் நிரூபித்தவர் ஸ்ரீபிரியா.
மருத்துவமனையில் சென்று பார்ப்பது மருத்துவர்களிடம் உடல் நிலை குறித்து பேசுவது.
இதை அன்றைய பத்திரிக்கைகள் மிகவும் பாராட்டின.
இதில் ஸ்ரீபிரியாவுக்கு பெரிய ஆதாயம் ரஜினியால் அப்போது இல்லை.
அவருக்கு முன்பே திரைபடத்துறையில் அறிமுகமாகி நிலைநிறுத்திக் கொண்டவர்.
பைரவி படத்தில் ரஜனியினுடன் கதாநாயகி.
ஆனால் அவர் காணாமல் போய்விடுவார் என்று பேசியவர்களை வாயடைக்க செய்த படம் பில்லா.ரஜினி ஸ்ரீபிரியா நடித்த மிகப் பெரிய வெற்றி படத்தை தயாரித்தவர் பாலாஜி.
ரஜினியுடன் கமலுடன் நடிக்கும் போது அவர்கள் தான் Score செய்வார்கள்.ஆனால் ஸ்ரீபிரியாவின் முகம் ரசிகர்களை கவர்ந்தது.
திரிசூலம் படத்தில் ஒரு சிவாஜிக்கு ஜோடி.அல்லிராணி போல் ஆண்களை வெறுக்கும் வேடம்.
பின்னி எடுத்திருப்பார்.முதல் நாள் வந்த அன்றே மனசில் வந்துவிட்டார் என்று வெட்டகத்துடன் சொல்லும் வசனம் சான்ஸே இல்லை ஸ்ரீபிரியா ஸ்ரீபிரியாதான்.
சட்டம் என் கையில் கமலுடன் ஜோடி.
அதில் சின்ன சின்ன கருப்பு வட்டங்களுடன் உடை.
அன்று குங்குமம் வார இதழ் அட்டையில் அந்த உடையுடன் அவர் படம்.
கடைகளில் குங்குமம் கயிறுகளில் தொங்கியது. அதுவரை அந்த புத்தகத்தை வாங்காதவர்கள் கூட வாங்கினார்கள்.
கவியரசர் அவள் தொடர்கதைக்கு பாடல்.பாலசந்தர் காட்சியை சொல்கிறார்.தன் காதலன் தன் விதவை இளைய சகோதரியை மணக்க விரும்பி திருமணமும் நடக்கிறது.
காதலனை விட்டு கொடுத்த அக்கா இப்படி ஆரம்பிக்கிறாள் ஆடுமடி தொட்டில் ஐந்து திங்கள் போனால் .....
கவியரசர் காட்சி அமைப்பை கேட்பார்.ஆனால் இசை அமைப்பாளர் இயக்குநர் யார் நாயகன் நாயகி என்பதையும் சொல்லியே பாடல் எழுத சொல்வார்கள்.
கவியரசருக்கு தங்கைக்காக அக்கா காதலனை விட்டுக் கொடுப்பது(கல்யாண பரிசு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.தங்கை அக்காவிற்காக காதலனை விட்டு கொடுப்பாள்)
அதுவும் விதவையை மணக்க வருவது அந்த பாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்க்கு முன் ஸ்ரீபிரியா சில படங்களில் நடித்தாலும் அவள் ஒரு தொடர்கதைத்தான் திருப்பு முனை.
பாலசந்தர் ஸ்ரீபிரியாவின் ஸ்டிலை காட்டியுள்ளார்.
கவியரசர் அப்போது ஒன்றை சொன்னாராம்.
சாவித்திரி தேவிகாவிற்கு பிறகு முகத்தில் கவர்ச்சி காட்டுகிறார் என்றாராம்.
அவள் ஒரு தொடர்கதை வந்த பிறகு சென்னை வானொலி கலந்துரையாடல் போது எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்னது.

#நெல்லை_டவுன்_நயினார்குளம் ...

நெல்லை டவுன் நயினார்குளம் ...

https://www.youtube.com/watch?v=doFDkP3ShO8


இப்படித்தான் மாறப்போகுதாம்
டீ கடையில பேசிக்கிட்டாங்க..

#விருட்சம்

ஆழமான நம்பிக்கை வேர்களையும் 

விசுவாச விழுதுகளையும் கொண்ட விருட்சம் என்றும் மழைக்காக ஏங்குவதில்லை.

#Pope

 Pope Francis landed at Baghdad's international airport a little after 2 pm local time, kicking off his 33rd Apostolic Journey abroad, and becoming the very first Pope to visit Iraq.


#தியாகச்சுடர்_கடலூர்_அஞ்சலை_அம்மாள்


———————————————————
மூத்த பத்திரிக்கையாளர் நண்பர் திரு வி.ராஜா எழுதிய விடுதலை போரின் தியாகச்சுடர் கடலூர் அஞ்சலை அம்மாள் நூலை தழல் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூல் ஆசிரியர் அன்புக்குரிய ராஜா அவர்கள் நூலை அனுப்பினார். மிக்க நன்றி. பல்வேறு பணிகள் உள்ள சூழலில் சென்னையில் இல்லாத காரணத்தினால் உடனே இந்த நூலைப் படிக்க முடியவில்லை.


அஞ்சலை அம்மாள் வரலாற்றை அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளர் அன்புக்குரிய ராஜா அவர்கள். அஞ்சலை அம்மாளின் புதல்வர் ஜெயவீரன் நூலுக்கு தக்க அணிந்துரையும் வழங்கியுள்ளார். இவர் அஞ்சலை அம்மையாரின் கடைசி புதல்வர். காந்தியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் அறிவித்தபோது கடலூரில் அஞ்சலை அம்மாள் கலந்து கொண்டபோது இவர் அவர் வயிற்றில் கருவாக இருந்தார்.
1890-ல் கடலூர் முத்து நகரில் பிறந்த அஞ்சலை அம்மாள் தியாக வாழ்க்கை அளப்பரியது ஆகும். 5-ஆம் வகுப்பு வரை படித்து காந்தியின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு 1921-ல் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய குடும்ப சொத்துகளான வீடு, நிலங்களை எல்லாம் விற்று நாட்டின் விடுதலைக்காக செலவிட்டார்.
1927 நீல் சிலையை அகற்றம் போராட்டத்தில் தனது ஒன்பது வயது மகளுடன் சிறைக்கு சென்றார். தன் மகளையும் சிறையிலேயே வளர்த்தார். காந்தியுடன் இந்த அம்மையாருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இவருடைய மகள் அம்மாக்கண்ணு பெயரை லீலாவதி என்று மாற்றி காந்தியார் தன்னுடைய வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.
கடலூரில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டம், 1931-ல் நடந்த மகளீர் காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதன்பின் 1932 விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு முறை காந்தியார் அஞ்சலை அம்மாளை சந்திக்க வரும்போது ஆங்கிலேய அரசாங்கம் தடுத்துவிட்டது. ஆனாலும் பர்தா அணிந்து கொண்டு குதிரை வண்டியில் காந்தியார் அவர்களை அஞ்சலை அம்மாள் சந்தித்தார். நாட்டின் விடுதலைக்கு பின் இரண்டு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நேர்மையாக மக்கள் நல அரசியலை நடத்தினார். இவ்வளவு தியாகங்களைச் செய்த அஞ்சலை அம்மாள் 1961 ஆண்டு ஜனவரி 20-ல் காலமானார். இன்றைக்கு உள்ள இளைஞர்களிடம் அஞ்சலை அம்மாள் பற்றி தெரியுமா? தியாகி சோமயாஜுலு தெரியுமா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் வரதராஜிலு நாயுடுவை தெரியுமா? மதுரை அ.வைத்தியநாத ஐயர் தெரியுமா? என்று கேட்டால் பதில் சொல்ல தெரியவில்லை. இதுதான் இன்றைக்கு தியாகத்தை மதிக்கின்ற வரலாறு என்கிறபோது மனம் ரணம் படுகிறது.
நண்பர் ராஜா அவர்கள் தக்கத் தருணத்தில் தெளிவாக விரிவாக 310 பக்கத்திற்கு மேலாக அஞ்சலை அம்மாள் வரலாற்றை அற்புதமாக தொகுத்துள்ளார். நாம் அனைவரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கவேண்டும்.
விரிவான பதிவு விடுதலைப் போராட்டக் காலம், சமகால அரசியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி உள்ளார். தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு என்ற நடுநாட்டில் விடுதலைப் போராட்ட செய்திகளும் ஆங்காங்கு விவரித்து உள்ளார். நீல் சிலையை சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் கலந்து கொண்டது என்று பல செய்திகளை படிக்க நமக்கு தருகின்றது. 1861-ல் அமைக்கபட்ட நீல் சிலையை 66 ஆண்டுகள் கழித்து அகற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் இந்தளவு அக்கறை எடுத்துக்கொண்டு செய்துள்ளார் என்று ஒரு நெடிய வரலாற்றை 65 –ஆம் பக்கத்திலிருந்து 79-வது பக்கம் வரை படிக்க மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் மண்ணின் தியாகி சோமயாஜுலு குறித்தும், காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தை நிறுவிய டி.வி.சௌந்தரம் மற்றும் சி.ராமச்சந்திரன் பின்னாட்களில் மத்திய அமைச்சராக இருந்தவர். அவர் பற்றிய செய்திகளும் வருகின்றன.
இப்படிப்பட்ட பல்வேறு மக்கள் நலனும் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் என்று போராட்டமே வாழ்வாக கொண்டுள்ளார். தான் சட்டமன்ற உறுப்பிராக இருந்தபொழுது சிறைக்கு சென்றார்.
உத்தமர் காந்தி மட்டுமல்ல, முண்டாசு கவி பாரதி, மூதறிஞர் ராஜாஜி ஓமந்தூரார், காமராஜர் என அத்தனை பேரும் இவரைப் பார்க்க கடலூருக்கு வந்தது உண்டு. அப்படிப்பட்ட அஞ்சலை அம்மாள் குறித்து பள்ளி பாடப்புத்தகங்களில் இவருடைய வரலாற்றை சேர்க்க வேண்டும்.
உத்தமர் காந்தி படுகொலைக்கு பின் கடலூர் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் காமராஜர் இவரை நிற்க வைக்க விரும்பியபோது இவர் அதில் ஆர்வமில்லை என்று தெரிவித்துவிட்டார். கடலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் நிற்க மறுத்துவிட்டார். தமிழ் மட்டுமல்ல ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளை தெரிந்தவர்.
தன் இறுதி காலத்தில் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் கிராமத்தில் தன்னுடைய விவசாயப் பணிகளை பார்த்துக் கொண்டு அங்குள்ள கிராமங்களுக்கு நீர் வரத்துப் பெற கால்வாய்களை வெட்டி எடுக்க பல பணிகளை ஆற்றினார். அந்த கால்வாய் இன்றைக்கும் அஞ்சலை அம்மாள் கால்வாய் என்று பெயரில் அழைக்கப்படுகிறது. இன்றைக்கு கடலூர் சுண்ணாம்புக்கார தெருவில் சுதந்திர போராட்ட அடையாளமாக இருக்கும் அவர் வீடு உள்ளது. இதில் அஞ்சலை அம்மாளின் கடைசி மகன் மறைந்த ஜெயவீரன் வாழ்ந்தார். இப்படியான ஒரு நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட அஞ்சலை அம்மாள் புகழ் வாழவேண்டும். அவர் வாழ்க்கையே நமக்கு பொது வாழ்க்கைக்கு தருகின்ற பாலபாடமாகும்.
இந்த நூலில் சென்னை, திருச்சி, வேலூர், என சிறைகளை கழித்த அஞ்சலை அம்மாளிடம் சிறை அதிகாரிகள் உங்கள் தண்டனை காலம் முடிந்ததை நினைவூட்டினர், அதை பற்றியெல்லாம் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளாமல் அஞ்சலை அம்மாள் அப்போது எப்படி நடந்து கொண்டார் என்பதை நூல் ஆசிரியர் வி.ராஜா அவர்கள் எழுதி இருக்கிறார் பாருங்கள்.
—————-
அஞ்சலை அம்மாள் இதற்கு முன் சென்னை பெண்கள் சிறையில் ஓராண்டு, திருச்சி மத்திய சிறையில் மூன்று மாதம், பிறகு வேலூர் பெண்கள் சிறையில் ஆறுமாதமும் இருந்திருக்கிறார். அதைவிட பெல்லாரி சிறை மிக மோசமாக இருந்தது. முன்பிருந்த சிறைகளில் பெரும்பாலானவர்கள் தமிழ் தெரிந்தவர்கள். வருத்தங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருந்தது. இங்கு பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு பேசுகிறவர்களாக இருந்தார்கள். அரசியல், நாட்டு நடப்பு பேசக்கூட பொருத்தமான ஆளாக யாரும் அமையவில்லை. அன்றாடத் தேவைகளுக்காகப் பேசியதில் கன்னடமும், தெலுங்கும் பழக்கமாகி வந்தது. சாப்பாடு, அடைத்து வைக்கப்பட்ட இடம் போன்றவற்றால் உடல் அவதிப்பட்டது. ஆனால் மனம் உறுதியாக இருந்தது. கள்ளுக்கடைக்கு எதிராக அமைதியாக நடைபெற்ற மறியலில் போலிஸ் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தியது நினைவுக்கு வந்தது. அன்று முதுகில் ஏற்பட்ட காயம் காய்ந்து வந்தது. வெளியில் போன பிறகு கள்ளுக்க்டை மறியலையோ, அந்நியத்துணி புறக்கணிப்புப் போராட்டங்களையோ கைவிட்டுவிடக் கூடாது என்ற உறுதி உருவானது.
சிறைக்கு வந்தபோது பனிக்காலம் என்பதால் காற்றிலிருந்த குளிர்ச்சி மறைந்து வந்தது. ஏப்ரல், மே மாதங்களில் வெயில் நெருப்பாகச் சுட்டது. இது கந்தக பூமி வெயில் கடுமையாகயிருக்கும் என்று வேலை செய்கிற இடத்தில் சக கைதிகள் சொன்னதை நினைத்துக்கொண்டார். காலையில் எழுந்து எச்சில் உமிழ்ந்தால் ரத்தமும் கலந்து வந்தது. சரியான உணவும், நல்ல தட்ப வெப்பமுமில்லாமல் உடம்பு உருக்குலைய ஆரம்பித்தது, நிரந்தரமாக வயிற்றுவலி, நிற்கவே சிரமப்பட்டார். ஜூன் மாதக் கடைசியில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பமானதால் வெயிலின் தாக்கம் குறைந்தது. ஜூலை முதல் வாரத்தில் சிறை அதிகாரி கூப்பிடுவதாகச் சொல்லி அழைத்துப் போனார்கள்.
“இந்த மாதம் ஐந்தாம் தேதியுடன் உங்களின் தண்டனைக் காலம் முடிவடைகிறது” அதிகாரி நினைவூட்டினார்.
“தெரியும்.”
“ஆனால் கோர்ட்டு விதித்த ஐம்பது ரூபாய் அபராதம் கட்டியதற்கான ரசீது இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை.”
“வந்திருக்காது. நான்தான் அபராதம் கட்டவேண்டாமென்று சொல்லிவிட்டேன்.”
“ஐம்பது ரூபாய் கட்டாவிட்டால் இன்னும் 90 நாள் நீங்க சிறையிலிருக்க வேண்டும்.”
“அதுவும் தெரியும்.”
“அம்மா, கொஞ்சம் யோசிங்க. உங்க மனசு திடமா இருக்கலாம். ரொம்ப எளைச்சி உடம்பு மோசமான இருக்கறது தெரியுது” என்றார் சிறை அதிகாரி. கடந்த முறை வேலூர் சிறையில் சந்தித்த சிறை அதிகாரியைவிட இவர் மனிதாபிமானம் மிக்கவராக இருந்தார்.
“இதுல யோசிக்க என்னாங்க இருக்கு?” என்று அஞ்சலை பதிலளித்தார்.
“நான் வேண்டுமானால் அந்த ஐம்பது ரூபாயைக் கட்ட ஏற்பாடு செய்யட்டுங்களா? காங்கிரஸ் வக்கீல்கள் எனக்குத் தெரியும். சொன்னா கட்டி ரசீது கொண்டு வந்துடுவாங்க.”
“உங்களுக்கு நன்றி. பிரச்சினை பணமில்லை. நான் அபராதம் கட்டிட்டு வெளியில் போனா அது கள்ளுக்கடைக்கு எதிரான போராட்டம் தப்புன்னு ஒப்புக்கொண்டதாகிவிடும். அதனால்தான் கட்ட விரும்பவில்லை.”
“இன்னைக்கு கட்டாவிட்டாலும் எப்ப நீங்க அபராதத்தைக் கட்டுறீங்களோ அன்னைக்கே விடுதலை ஆகிவிடலாம்” என்றார் சிறை அதிகாரி.
“அப்படி ஒரு வாய்ப்பிருக்காது” என்றார் அஞ்சலை.
ஐம்பது ரூபாய் அபராதத்தைக் கட்ட மறுத்ததால் அஞ்சலையின் தண்டனை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து அவர் பட்ட வேதனை ஒரு பக்கமென்றால், மக்கிய மோட்டா அரிசி சாதமும், உப்பு, உறைப்பில்லாத குழம்பும் அவரை பாதியாக இளைக்க வைத்துவிட்டது. வீட்டிலிருந்து மகள்கள் எழுதும் கடிதங்கள் ஆறுதலாக இருந்தது. அம்மாப்பொண்ணுவாக போய் லீலாவதியாக மாறியிருந்த மகள் கடிதம் போட்டிருந்தாள். ஒவ்வொரு கடித்தத்தையும் ஒன்றுக்குப் பத்து முறை படித்தார். கடலூரிலிருந்து பொன்னுசாமி, வரதன், தாண்டவன், கவிராயர் போன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மாதம் ஒரு முறை கடிதம் எழுதி வந்தார்கள். சதைப்பிடிப்பான அவருடைய உடல் எலும்பும் தோலுமாக மாறியிருந்தது. சிறை என்ன செய்துவிடும் என எப்போதும் துணிச்சலாகக் கிளம்பும் அஞ்சலை அம்மாள், தன்னை இங்கே கொன்றுவிடுவார்களோ? என்று கூட நினைத்தார். கைதிகளில் சிலர் பெல்லாரி சிறையிலே செத்து மடிவதும் வாடிக்கையாக இருந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வது என்பார்களே அதன் முழு அர்த்தத்தையும் பெல்லாரி சிறைச்சாலை கற்பித்துக்கொண்டிருந்தது. மொத்தத்தில் ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையை முடித்துவிட்டு பெல்லாரி சிறையிலிருந்து (1932-ம் ஆண்டு அக்டோபர் 5) விடுதலையானார். அஞ்சலை அம்மாவின் மனவுறுதியைக் கண்டு மிரண்டுபோன சிறை அதிகாரி அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
•••••••••••••
அவரின் நூற்றாண்டு விழா முடிந்துள்ளது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05.03.2021

#காருக்குறிச்சி_அருணாசலம்_நூற்றாண்டு_விழா

 #நாதஸ்வரம் #வித்வான்

05.03.2021

#Nobody_can_save_you

Nobody can save you but

yourself

and it will be easy enough to fail
so very easily
but don’t, don’t, don’t.
just watch them.
listen to them.
do you want to be like that?
a faceless, mindless, heartless
being?
do you want to experience
death before death?
nobody can save you but
yourself
and you’re worth saving.
it’s a war not easily won
but if anything is worth winning then
this is it.

#தினமலர்_முன்னாள்_ஆசிரியர்_டாக்டர்_ஆர்கிருஷ்ணமூர்த்தி_மறைவு


———————————————————-
இவருடன் அரசியலை கடந்து பல விடயங்களை விவாதித்து உள்ளேன். என்னுடைய நிமிர வைக்கும் நெல்லை நூலுக்கு அவரே வேண்டி விரும்பி 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நல்ல அணிந்துரையை வழங்கினார்.


வரலாறு, தொன்மை பற்றி அதிகமாக சிந்திப்பவர். நாணயவியல் அறிஞர் எதையும் நிதானமாக அமைதியாக அடுத்தவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு உரிய விளக்கத்தை தரக்கூடிய பண்பாளர். மறுமலர்ச்சி திமுக துவங்கிய காலகட்டங்களில் 1993-ல் தொலைபேசியில் அடிக்கடி விசாரிப்பார். நேரிலும் பல விசயங்களை அந்த காலகட்டங்களில் பேசியதுண்டு. அப்போது சில நேரங்களில் மாலை 7 மணி வாக்கில் சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் வரவழைத்து அவருடன் பேசிக்கொண்டு சென்றெல்லாம் உண்டு.
தமிழ்நாடு இன்றைய எல்லைகள் அமைந்த 50 ஆண்டுகள் நிறைவு விழா சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் 2006-ல் நடத்தி நான் வெளியிட்ட நூலில் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைவதற்கு தினமலர் ஏட்டின் நிறுவனர் டி.வி.இராமசுப்பையர் ஆற்றிய பணிகளை பற்றி நான் எழுதியதை படித்துவிட்டு நன்றியும் சொன்னார்.என மீது அன்பு காட்டியவர்.
ஆழ்ந்த இரங்கல்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04.03.2021

#பழநி_அருகே_வெடி_மருந்து_தொழிற்சாலை


———————————————————-

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தாதநாயக்கன்பட்டி கிராமத்தில் 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த எஸ்.யூ.ஏ., பார்ம்ஸ் என்ற தனியார் நிறுவனம் விவசாய பண்ணை என்ற பெயரில் வெடி மருந்து தொழிற்சாலை துவக்க ஆயத்தப்பணிகளை செய்து வருகிறது. பல நூறு டன் நைட்ரேட் வகை வெடி மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யவும், வெடி மருந்து பொருட்களை சேமிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். பெரிய ஐவர்மலைக்கு பின்புறம் தான் இதற்கான வேலைகள் நடக்க உள்ளன.
இதற்கான பத்திரப்பதிவும் நடந்துள்ளது. இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களும், விவசாயம் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்படும். வெடி மருந்து தொழிற்சாலைக்கு தேவைப்படும் தண்ணீரை அருகில் உள்ள குதிரையாறு அணையில் இருந்து பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மாசுபடவும், கோடை காலத்தில் அணை வறண்டு போகும் சூழலும் உருவாகும் நிலை ஏற்படும். பழநி அருகே தான் குதிரையாறு, பாலாறு – பொருந்தல் என அணைகள் உள்ளன. தொழிற்சாலை அமையும் பகுதியின் அருகிலேயே புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.


இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த நிறுவனமோ, அனுமதி அளிக்கும் அரசோ மக்களிடம் தெரியப்படுத்தவும் இல்லை.
சிவகாசியில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள், பல ஆண்டுகளுக்கு முன் துறையூர் வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து என தமிழ்நாட்டில் வெடி விபத்துகள் நடந்துள்ளது. இந்த நிலையில் புதிதாக தொடங்க இருக்கும் வெடி மருந்து தொழிற்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கும் என்று தெரியவில்லை. கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் அதன் பாதிப்புகள் பெரிதளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெங்களூரைத் தலைமை இடமாக கொண்ட இந்த நிறுவனம், அம்மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்காமல் தமிழகம் வந்தது ஏனென்று தெரியவில்லை. தொழிற்சாலை உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது வரவேற்கக்கூடியது தான். ஆனால் அதைவிட பாதுகாப்பு முக்கியம். இதற்காக விவசாய நிலத்தையும், நீராதாரத்தையும் பலிகடாவாக மாற்றிவிடக்கூடாது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04.03.2021

#நல்லவர்களாக_வாழ்வோம்

 *யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்... கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் நன்மையை மட்டுமே விதைப்போம். நல்லவர்களாக வாழ்வோம்.*



#எளிதல்ல

எளிதல்ல

நம் நினைவிலிருந்து

பழையன கழித்தல்...

library/study room of Thomas Jefferson.


3-3-2021.

#My_representation_on_Srilankan_Tamils_Question_to_United_Nations_Human_Rights_Commission_Geneva - (#46thSession) #ஈழத்தமிழர்_பிரச்சினை_குறித்து_ஐநாமனித_உரிமை_ஆணையத்திற்கு



ஒவ்வொரு வருடமும் மனு அனுப்புவது எனது வாடிக்கை. தற்போது நடக்கும் கூட்டத்தொடருக்கு நான் அனுப்பிய மனு கீழ் வருமாறு:
———————————————————-

From
K.S.RadhaKrishnan,
4/359, Sri Chaitanya Avenue,
Annasalai, Palavakkam,
Chennai – 600041
India.
To
United Nations High Commissioner for
Human Rights (OHCHR),
Palais des Nations,
CH-1211 Geneva 10,
Switzerland.
Sir,
Sub: SriLankan Tamils Qusetion – Reg
____
The UN Human Rights Council (HRC) session, which is under way in Geneva now, has brought the spotlight firmly again on a long-standing demand for setting up an international court to try Sri Lanka for its war crimes in May 2009, in which the island’s Army killed about 1 Lakhs ethnic Tamils. For the past 11 years, the Sri Lankan Government has warded off an international commission of inquiry or face an international court for its war crimes against its innocent Tamil civilians and it is time Colombo is brought to book. Justice demands that it will be most appropriate to do so now because Gotabaya Rajapakse, who is Sri Lanka’s President now, was the Defence Minister when the island’s Army massacred 70,000 Tamil civilians in May 2009, summarily executed the top leaders of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who surrendered to them, and its Air Force bombed hospitals, residential areas and places of refuge. Besides, it was in May 2009 that the Sri Lankan Army froze children with bullets and raped a number of Tamil women. It was also then when Gotabaya’s elder brother, Mahinda Rajapakse, was the island’s President.
The brothers are back in power now with Gotabaya Rajapakse as President and Mahinda Rajapakse as the Prime Minister. So it is time now for the UN HRC to act and compel these two brothers to stand trial for their crimes against humanity.
There is gathering support for the demand that the HRC should pass a resolution that Colombo should be made to pay for its war crimes. Ms. Navi Pillai, former UN High Commissioner for Human Rights, has emphasised that successive UN reports have outlined what she has described as “credible evidence that the Sri Lankan State itself committed international crimes.” In an interview to Laurel E. Fletcher, published in “Just Security” on February 15, 2011, she said, “It is time for the HRC to make a drastic departure from its customary complacency over the failures of the Sri Lankan Government and hold it to account.”
Michelle Bachelet, who is now UN High Commissioner for High Rights, was equally blunt in her observation that Sri Lanka was traversing an “alarming path towards recurrence of grave human rights violations” now.
It is worth quoting at length from the interview that Pillai gave to Fletcher. This is what the former UN High Commissioner for Refugees said: “The last six months of Sri Lanka’s civil war in 2009 were played out live on world television screens. We watched the Sri Lankan army shoot to death the alleged leaders of the terrorist group, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), even as they raised white flags in surrender. We watched extensive aerial bombing of Tamil civilians and destruction of their homes, hospitals and places of refuge. The onslaught continued well after the capture and killing of the alleged terrorists. We heard the last cry for help from doctors who were treating the injured in hospitals that were being shelled…
“Sri Lanka informed the international community that it was exercising its sovereign right to contain terrorism inside its territory; and so no international forum - not the U.N. Security Council, not the U.N. General Assembly, nor the Human Rights Council – addressed the situation until June 2, 2009 when in my capacity as High Commissioner for Human Rights, I placed the matter on the agenda of the Human Rights Council. I reported serious human rights violations to the HRC, including loss of thousands of civilian lives, rape and sexual violence against women and girls, and forced dislocation of Tamils. The HRC and U.N. bodies have a role in the protection of human rights in crisis situations. I recommended that the council establish an independent international inquiry into grave violations of International Human Rights Law (IHRL) and International Humanitarian Law (IHL).”
This is yet to happen although 12 years have passed since Pillai made this recommendation.
In an informed article titled, “A growing rights crisis in Sri Lanka”, Meenakshi Ganguly, South Asia Director at Human rights Watch, said, “The human rights situation in Sri Lanka has worsened since Gotabaya Rajapakse became President in 2019.” The article, with the sub-title, “The UNHRC must take strict action against the gross abuse of human rights by Sri Lanka”, was published in The Hindu newspaper on February 18, 2021. The author noted, “ At its next session starting February 22, the UN Human Rights Council (UNHRC) will face a crucial test in taking action for protecting vulnerable Sri Lankans and upholding international law. India, as a council member, will have a key role.”
In a blistering attack on the Gotabaya brothers, Meenakshi Ganguly said, “[Gotabaya] Rajapaksa was the defence secretary in the Government led by his brother Mahinda from 2005 to 2015, a period marked by particularly egregious human rights abuses. Critics of the Government were murdered, tortured, and forcibly made to disappear. Tens of thousands of civilians were killed in the civil war which ended in 2009 between the government forces and the separatist Liberation tigers of Tamil Eelam (LTTE), with both the sides responsible for numerous war crimes. In the final months of the war, the armed forces indiscriminately shelled civilians and summarily executed suspected LTTE fighters.”
What is terrible is that with the Gotabaya brothers capturing power again in 2019, “the fear has returned”, as the South Asia Director of Human Rights Watch says. She adds: “Tamil communities in the north and east fear increasing abuses. Since last year, singing the national anthem in Tamil has been dropped from Independence Day celebrations. The religious rights of minorities are under attack, including interference with Hindu temples.”
Officials demolished in January 2021 a memorial built on the campus of Jaffna University to mourn the massacre of many thousands of Tamil civilians in the civil war.
The UNHRC comprised Canada, Germany, India, Macedonia, the UAE and other countries. India, which is a member of the HRC, had “a moral responsibility and duty” in taking the lead to bring an amendment to the proposed resolution, which would force Colombo to stand trial in an international court, There should be a referendum in the Tamil areas of the island whether the Tamils wanted a separate Tamil Eeelam or not. “It should be a ‘yes’ or ‘no’ vote”, he said.
To go back to Meenakshi Ganguly, It is worth quoting extensively from her article in The Hindu newspaper on how the Rajapaksa brothers’ government has total disdain for human rights.
She said, “The Rajapaksa Government in 2020, renounced its commitments under the 2015 Human Rights Council resolution and is threatening the victims’ families and activists who supported it. A Presidential commission, set up to investigate supposed “political victimisation” of officials by the previous government has recommended the exoneration of those implicated in cases of abuse. Numerous people, who were involved in war crimes, have been appointed to senior roles.
“The Rajapaksa government has shown outright disdain for accountability. In September last year, Sri Lankan told the Human Rights Council that allegations against senior military officers are “unacceptable” and without “substantive evidence.”
“Last March, Rajapaksa pardoned former army sergeant Sunil Ratnayake, who killed eight Tamil civilians including children. In October, the government amended the constitution to remove constraints on political interference in Sri Lanka’s courts.
“Since 2012, the Human Rights Council has sought to work with Sri Lanka to promote reconciliation and accountability, efforts that India has backed. Sri Lanka is now rejecting that endeavour, instead proposing a new domestic commission that UN experts have dismissed as lacking credibility or independence.
“The UNHRC should recognise the government’s actions for what they are – an effort to impede justice. “
Meenakshi Ganguly, therefore, has demanded that “a new resolution is urgently needed to protect vulnerable minority communities in Sr Lanka, by upholding the principles of accountability for the worst crimes.” She urged that “India should join other member States in supporting a resolution to reduce the growing risk of future atrocities.”
Navi Pillai too has demanded that the US Congress “should act decisively and accept the recommendations” made by the UN High Commissioner for Human Rights for justice and accountability in Sri Lanka, and “unequivocally hold the perpetrators of grave human rights violations against the Tamils accountable.” She emphasised that ““Gota’s war” against terrorism must not be allowed to become a war against the rule of law and international standards of conduct towards defeated peoples.” Pillai demanded that “The Biden-Harris administration should seize the opportunity to reinforce its support for justice and accountability and make known to the world its return to values-based leadership.”

It is time that the UNHRC passed a resolution that Culprits should face an international independent inquiry under due process of law for their war crimes against innocent Tamil civilians in Sri Lanka and this render justice.
Dated at Chennai on 3rd March 2021.
K.S.RadhaKrishnan
Advocate, High Court of Judicature at Madras,
Spokes Person, DMK.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03.03.2021

Wednesday, March 3, 2021

Every Exit is an Entry somewhere else.

“Suffering has been stronger than all other teaching, and has taught me to understand what your heart used to be. I have been bent and broken, but - I hope - into a better shape.”

எதிர்பார்ப்பு என்பது இல்லாவிடில் துரோகம் என்பது கிடையாது.
Every Exit is an Entry somewhere else.



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03.03.2021

#மாட்டு_தீவன_படப்புகள்....

 #மாட்டு_தீவன_படப்புகள்....



2-3-2021

#இது_மக்களுக்கான_ஜனநாயகம்தானா?

 #இது_மக்களுக்கான_ஜனநாயகம்தானா?

———————————————————
நாட்டில் 50% பேர் வறுமையில்தான் வாடுகிறோம். அடிப்படை உரிமைகளுக்காகத் தவிக்கிறோம். இந்த நாட்டின் நிர்வாகத்தில் நம்மால் ஏன் பங்கேற்க முடியவில்லை? உண்மையிலேயே இது மக்களுக்கான ஜனநாயகம்தானா? இங்கு வாக்குகள்
விற்பனை வேறு....பொது வாழ்வில் தகுதியே தடை என்ன சொல்ல...



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
2.03.2021

#Democracy

 #Democracy

——————
The most famous definition of democracy to date, in the words of Pericles in 431 BC: ‘Our constitution is called a democracy because power is in the hands not of the few but of the many.’
This definition has been employed either directly or indirectly by activists and poets throughout history, including Britain’s Labour Party leader Jeremy Corbyn, who quoted ‘The Mask of Anarchy’, a poem Bysshe Shelley, to a crowd of supporters in London on 7 June 2017:
Rise like lions after slumber
In unvanquishable number
Shake your chains to earth like dew
Which in sleep have fallen on you –
Ye are many, they are few.
It was a call to political arms that fell rather flat, but Pericles’ words have inspired the many at least in theory, particularly in popular uprisings in the twentieth century as democracy made its great comeback. For the first few decades after democracy originally emerged in the sixth century BC, however, the concept of putting power in the hands of the people was not properly defined. ‘Democracy’ is still an elastic term today, so it is fitting that the word first appeared in disjointed form in one of the world’s earliest theatrical works.
K. S. Radhakrishnan,
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02.03.2021
(Pic Athens, birthplace of Democracy )


#சொல்லின்_செல்வர்_ரா_பி_சேதுப்பிள்ளை

———————————————————
திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தில், 1896 மார்ச், 2-ல் பிறந்தவர் ரா.பி.சேதுப்பிள்ளை. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியபடியே, சட்டம் பயின்றார். நெல்லை நகரசபை உறுப்பினராகவும், நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்ணாமலை மற்றும் சென்னை பல்கலையில், தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். தமிழ்ப் பேரகராதியைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார்.


கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் விளக்கவுரை, கந்த புராண விரிவுரை என, பல்வேறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். கட்டுரை, வாழ்க்கை வரலாறு என, 20-க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்தார்.
இவரது சொற்பொழிவுகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவரது, தமிழின்பம் நூலுக்கு, சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1961 ஏப்ரல் 25-ல் தன் 65-வது வயதில் காலமானார்.
ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த தினம் இன்று

******
சிறப்புப் பதிவு – Madras Review
ரா.பி.சேதுப்பிள்ளை தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது. மேலும் தமிழறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்.
பிறவிப்பெருமான்பிள்ளை – சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
ஐந்து வயதில் சேதுப்பிள்ளை உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசலத் தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.


தனது தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்து கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்து கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுபிள்ளைக்கு தமிழ் ஆர்வத்தை வளர்த்தவர்கள்.
அவர் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார்.
1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுகாலம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார்.
வையாபுரிப் பிள்ளையின் தமிழகராதி
வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். அதன்பின் சேதுபிள்ளை தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார்.
இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
எழுதிய நூல்கள்
இரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு கட்டுரை நூல்களையும், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்திருக்கிறார். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் தமிழக வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளின் தொகுப்புகளாகும். இன்னும் சில நூல்கள் அவர் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புகளாக அமைந்தவை.
சிலப்பதிகார நூல்நயம்
தமிழின்பம்
தமிழ்நாட்டு நவமணிகள்
தமிழ் வீரம்
தமிழ் விருந்து
வேலும் வில்லும்
வேலின் வெற்றி
வழிவழி வள்ளுவர்
ஆற்றங்கரையினிலே
தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
செஞ்சொற் கவிக்கோவை
பாரதியாரின் கவித்திரட்டு
இரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் நூல் ‘திருவள்ளுவர் நூல் நயம்’. தலை சிறந்த இவரின் ஆய்வு நூல் ‘ஊரும் பேரும்’ ஆகும்.
ஊர்ப் பெயர்களில் உள்ள வடமொழிக் கலப்புகள்
இவரது ‘ஊரும் பேரும்’ நூலில் மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது என்று ஊர்களின் பெயர்களுக்கு காரணங்களை சொன்னதோடு தமிழக ஊர்பெயரில் இருக்கும் வடமொழி கலப்பையும் சுட்டிக்காட்டினார்.
மலையைக் குறிக்கும் வட சொற்களும் சிறுபான்மையாக ஊர்ப் பெயர்களிலே காணப்படும் கிரி என்னும் சொல் சிவகிரி, புவனகிரி முதலிய ஊர்ப் பெயர்களிலே அமைந்துள்ளது. அசலம் என்ற வடசொல் விருத்தாசலம், வேதாசலம், வேங்கடாசலம், தணிகாசலம் முதலிய பெயர்களில் வழங்கும். இன்னும் சைலம், அத்திரி என்னும் வடசொற்களையும் இரண்டொரு ஊர்ப் பெயர்களிலே காணலாம்.
நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊரொன்று சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது. வானமாமலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு என எழுதியிருப்பார்.
தனி மரங்களின் பெயர்களான ஊர்ப் பெயர்கள்
மேலும் தமிழ்நாட்டிலுள்ள சில ஊர்ப் பெயர்கள் தனி மரங்களின் பெயராகக் காணப்படுகின்றன. கரவீரம் என்பது பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக் கோயிலில் பொன்னலரியே தல விருட்சமாகப் போற்றப்படுகின்றது. தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற திருப்பைஞ்ஞலி என்ற ஊரும் மரத்தின் அடியாகப் பிறந்ததேயாகும். பைஞ்ஞலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் சிறந்து விளங்கிய ஊரைப் பைஞ்ஞீலி என்று பழந்தமிழர் அழைத்தனர்.
இன்றும் வாகையும் புன்னையும் வடஆற்காட்டில் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. சிவகங்கை வட்டத்தில் காஞ்சிரமும் கருங்காலியும் இரண்டு ஊர்களின் பெயர்களாக அமைந்துள்ளன. தமிழகத்தில் ஆனும் அரசும், அத்தியும், ஆத்தியும், புளியும், புன்னையும், பனையும் தென்னையும், மாவும், வேம்பும் மற்றும் பல மரங்களும் செழித்து வளர்தலால் அவற்றின் பெயர்கள் எல்லாம் ஊர்ப் பெயர்களாக ஆங்காங்கு வழங்கக் காணலாம் என்பதை குறிப்பிட்ட ஆய்வில் குறிஞ்சி நில ஊர்ப் பெயர் குறித்து பேசும்போது எழுதியிருப்பார்.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்.
சென்னை தங்கசாலை தமிழ் மன்றத்தில் 5 ஆண்டுகள் இவர் திருக்குறள் வகுப்பு நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
பேராசிரியர் அன்பழகன் சேதுபிள்ளை குறித்து
”தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர் இரா.பி.சேதுபிள்ளை. அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடனம் புரிய, எதுகையும் மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக, எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்” என்று பேராசிரியர் அன்பழகன் குறிப்பிடுவார்.
சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு சாகித்ய அகாதமி பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார்
இத்தனை சிறப்புமிக்க ரா.பி.சேதுபிள்ளை 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் நாள் தனது தமிழ்ப் பணியை முடித்துக்கொண்டார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02.03.2021

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...