Monday, July 29, 2019

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் #YoungTurks - #இளந்துருக்கியர்கள்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் *#YoungTurks - #இளந்துருக்கியர்கள்*
-------------------------
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அவர்கள் 1962 ல் ராஜ்ய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோஷலிசத்தில் கொள்கையில் தீவிரமாக செயல் பட்டவர்.. ஆச்சார்யா நரேந்திர தேவ் அவர்களின் தலைமையை ஏற்று பிரஜா சோஷலிஸ்ட் கட்சி (PSP)யில் இணைந்து பணியாற்றினார். அசோக் மேத்தா போன்ற சோஷலிஸ்டுகளோடு சேர்ந்து பின்னாளில் காங்கிரஸில் இணைந்தார். அந்த காலக்கட்டத்தில் சோஷலிஸ்டுகள் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டனர். ஆச்சார்யா நரேந்திர தேவ் மற்றும் ராம் மனோகர் லோகியா ஆகியோர் இருவேறு துருவங்களாக செயல்பட்ட காலங்களில் சந்திரசேகர் அவர்கள் ஆச்சார்யா நரேந்திர தேவ் பக்கம் செயல்பட்டார். ராம் மனோகர் லோகியாவிற்கும் சந்திரசேகருக்கும் இடையே மிகப்பெரிய வார்த்தைப் போர் அவ்வப்போது நடக்கும்.

அப்போது ஆச்சார்யா, கிருபளானி, மசானி போன்றோரோடு சந்திரசேகர், பிலு மோடி ஆகியோர் கடுமையாக நேரு காலத்தில் காங்கிரசின் மீது விமர்சனத்தை வைத்தனர்.
காங்கிரசில் இந்திராகாந்தியிடம் வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு போன்றவற்றில் இந்திராகாந்திக்கு ஆதரவாக செயல்பட்டவர் சந்திரசேகர். தனது ஆரம்பக்கட்டத்தில் பிரதமர் பண்டித நேருவிடமே இது குறித்து நேரடியாக வலியுறுத்தியவர்.
பின்னர் சந்திரசேகரே இந்திரா அறிவித்த அவசர நிலை அறிவித்தபோது கடுமையாக அதை எதிர்த்தார். பின் ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டார்.
தனது மனதில்பட்டதை நேரடியாக நேருக்கு நேராக பேசுபவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். டெல்லியில் சவுத் அவென்யூ லேன் வீட்டில் பல முறை பழ.நெடுமாறனோடு சந்தித்ததுண்டு. தனது கூற்றுக்கு தகுந்த ஆதாரங்களுடன் அழுத்தந்திருத்தமாக கூறுவார். அவர் பிரதமராக இருந்தபோது அவர் மீது இரண்டு விமர்சனங்கள் வைக்கப்பட்டது உண்டு. ஒன்று அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவின் பயன்படுத்தி otherwise என்ற வார்த்தையை பயன்படுத்தி அன்றைய திமுக ஆட்சியினை கலைத்தார். அதே போல இருப்பு தங்கத்தை வெளிநாட்டில் அடகு வைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வர இவரது ஆட்சிக் காலத்தில்தான் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அவர்கள் எப்போதும் வறுமையை அகற்றுதல், விவசாயிகள் நலன்கள், கிராம முன்னேற்றம், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற வலுவான ஆதரவு குரல்களை முன்னெடுத்தார்கள். எனது நினைவு சரியாக இருக்கும் பட்சத்தில் இளம் துருக்கியர்களில் மோகன் தாரியா மட்டும் தான் உயிரோடு இருப்பதாக எண்ணுகிறேன்.
நாடாளுமன்றத்தில் பூபேஷ் குப்தா கம்யூனிஸ்ட் தலைவர் அவருடைய இளம் வயதில் சீனப் போர் குறித்து தவிடுபொடியாக்கிய சங்கதிகளும் இந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1960 முதல் 1995 வரை நடந்த அரசியியல் பிரச்சனைகளை தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். சமகால அரசியல் வரலாற்றை பற்றியும் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
சந்திரசேகர், மோகன் தாரியா, கிருஷ்ணகாந்த், ஐ.கே.குஜ்ரால், டி.பி.தார், ஓம் மேத்தா, மோகன் குமாரமங்கலம், அம்ரித் நக்தா, நந்தினி சபாபதி, சந்திரஜித் யாதவ், ரகுநாத ரெட்டி, கே.டி.மாளவியா, கே.ஆர்.கணேஷ் போன்ற முன்னாள் பிரஜா சோசலிஷ உறுப்பினர்கள் மற்றும், கம்யூனிச உறுப்பினர்கள் போன்றோர் காங்கிரசில் இணைந்தனர். இவர்கள் அப்போது இளந் துருக்கியர்கள் (Young Turks) என்று அழைக்கப்பட்டனர். Ginger group எனவும் கூப்பிட்டனர்.
இவர்களின் போர் குணம் காங்கிரசின் மூத்த முன்னோடிகளான நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல், அதுல்லியா கோஷ், காமராஜர் போன்றோர்களை பதட்டமடைய செய்தது.
இவர் மொரார்ஜி தேசாயின் காங்கிரஸ் அரசின் நிதிநிலை அறிக்கையை
கடுமையாக சாடினார். பெங்களூர் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரஸ் இரண்டாக பிரிவானது. இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ராஜநாராயணனை கடுமையாக சந்திரசேகரை விமர்சித்தார்.

சோசலிஸ்ட்டாக இருந்து காங்கிரசாராக மாறி பின்னர் இந்திராவை எதிர்த்து, பின் ஜனதா கட்சி தலைவர் ஆனதெல்லாம் அரசியல் பரிணாம சூழலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதியாகும். கட்சிகளும், இயக்கங்களும் இருக்கலாம். அரசியலில் கட்சி மாறினார்கள் என்று நினைக்கிறோம். என்ன காரணம் என்பதை அறிந்து ஒருவர் மீது விமர்சனம் வைப்பது நல்லது. நல்ல திட்டங்களுக்கும், சுயமரியாதைக்கு பங்கம் வரும் போதும் மனசாட்சியோடு எடுக்கின்ற முடிவுகளை யாரும் குற்றம் சொல்ல முடியாது.
At the AICC session, som young radicals in the Congress formed a group that was nicknamed 'Ginger Group'. It provided substantial support to Indira Gandhi against the Old Guards in the party. The group consisted of several Congress members from diverse political gbackgrounds such as ex-PSP members like Chandra Shekhar, Mohan Dharia, Krishna Kant, conventional Congress members like I.K.Gujral, D.P.Dhar, Om Mehta, etc., and card-holding Communists or fellow travellers like Mohan Kumaramangalam, Amirit Nahta, Nadini Sathpathy, Chandrajit Yadav, K.Y. Ranghunatha Reddy, K.D.Malviya and K.R.Ganesh. It is significant tath nearly all these members were associated with the Congress Forum for Socialist Action (CFSA). It was Chandra Shekhar and his ex-PSP associates who managed to revive the Ginger Group from being a non-controversial debating society into a robust and confrontial group that came to be popularity know as the 'Young Turks'.
Young Turks
The phrase 'Young Turks' originated from a set of politicians in Turkey in the pre-World War I phase who fought for a more liberal approach within the Ottoman framework. The name was given to a section of Congressmen who had no formal group of their own, though they had a common approach to important political, economic and social issues. 'Young Turks' did not refer to any specific group, but the term was often used for those who were considered youn and enthusiastic socialists working ardently for the implementation of the radical programme of the party and for sharpening its ideological foundations.
#இளந்துருக்கியர்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-07-2019

Image may contain: 1 person, text

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...