Tuesday, July 16, 2019

அரசியல், சத்தியத்தின் பாதைஅல்ல; சாத்தியத்தின் பாதை...

அரசியல், சத்தியத்தின் பாதைஅல்ல; சாத்தியத்தின் பாதை...
••••
மறைந்த ஜெயலலிதா எழுதிய ‘ஒருத்திக்கே சொந்தம்’என்ற நாவலை 1980இல் மாலை மதி வெளியிட்டது.
இந்த நாவலை அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. நானும் இந்த நாவல் உயர்நீதிமன்றத்தின் அருகேயுள்ள சட்டக் கல்லூரியின் எதிரில் பிராட்வே துவக்கத்தின் முனையில், நாயர் பேப்பர் கடையில் விற்காமல் அப்படியே இருந்தது பார்த்துள்ளேன். ஒருத்திக்கே சொந்தம் என்ற ஒரு பிரதியை நானும் ரூ 1க்கு வாங்கினேன். சட்டத்தைப் பற்றியும் மனிதரின் போக்கைப் பற்றியும் அதில் எழுதியிருந்தார். அவர் சிரமப்பட்ட நேரத்தில் இம்மாதிரி நாவல்கள் எழுதியது அவருக்கு உதவியாக இருந்தது. துக்ளக்கிலும், குமுதத்திலும் எழுதினார் என காளிமுத்து ஒரு முறை என்னிடம் சொன்னதுண்டு. துக்ளக், குமுதம் மட்டுமல்லாமல் கல்கி, தாய் ஆகிய இதழ்களிலும் ஜெயலலிதா எழுதினார்.
1980-81 காலகட்டத்தில் கல்கியில் 23 வாரங்கள் அவர் எழுதிய நாவலின் பெயர்: உறவின் கைதிகள்.
வயதான நடிகர், இளம் நடிகை - இருவருக்கிடையே இருக்கும் உறவு சிக்கல்களை விவரிக்கும் நாவல் (புரிந்திருக்குமே) ஆனால் இந்த தொடர் புத்தகமாக வந்ததா என்று தெரியவில்லை.

பல்வேறு நல்ல சிந்தனைகள் இருந்தும், தவறான அணுகுமுறைகளினாலும் வழக்கு, சிறைவாசம், நோய், மரணம் என்று அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. 
Her thirst for political power destroyed all the beautiful side of hers....
••••
நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!

- நகுலன்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-07-2019.
Image may contain: 2 people
Image may contain: Siva Kumar, text
Image may contain: text

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...