Wednesday, March 22, 2017

டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள்:

டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள்:
-------------------------------------
 டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தீவு இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. பிரிட்டன்,அமெரிக்காவும் இங்கே ராணுவ தளங்களை அமைக்க வேண்டும் என்று 1969லிருந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கடுமையாக சோவியத் நாட்டின் ஆதரவுடன் எதிர்த்துதான் இராணுவ தளங்கள் அமைக்க முடியவில்லை.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மொரீஷஸுக்குச் சொந்தமான சாகோஸ் தீவுகளில் ஒன்றான டீகோ கார்சியா தீவை, அந்நாடு சுதந்திரம் பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவுக்கு பிரிட்டன் குத்தகைக்குக் கொடுத்தது.
அப்போது, அமெரிக்கா, தனது ராணுவத் தளத்தை அமைப்பதற்காக, டீகோ கார்கியா தீவில் வசித்துக் கொண்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட மொரீஷ்ஸு நாட்டினர் வெளியேற்றப்பட்டனர். அந்தத் தீவுக்குமொரீஷ்ஸு உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவுடனான குத்தகைக்காலம், சமீபத்தில் காலாவதியாகி விட்டது.
எனினும், அமெரிக்காவுடனான குத்தகையை, வரும் 2036-ஆம் ஆண்டு வரை பிரிட்டன் புதுப்பித்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மொரீஷ்ஸு அரசு, இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது.

கொச்சியிலிருந்து 2 விசைப்படகுகளில் கடந்த பிப்ரவரி மாதம் 5ம்தேதி மீன்பிடிக்க சென்ற குமரி மற்றும் கேரளாவை சார்ந்த 32 மீனவர்களை எல்லை தாண்டியதற்காக பிரிட்டன் படையினர் கடந்த மார்ச் 2ம் தேதி கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பகுதியின் ஆட்சியாளர் ஜஸ்டீன் ஆன்டனிக்கு மார்ச் 7 அன்று அனுப்பிய கடிதத்தில், மீனவர்களை கடந்த பிப்ரவரி 28ம் தேதி எமது கடல் எல்லைக்குள் நுழைந்தமைக்காக எங்கள் ரோந்து படகினர் பிடித்தனர். பின்பு இவர்களை மார்ச் 2ம் தேதி எங்களிடம் ஒப்படைத்தனர். இவர்களை தற்போது எங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இங்குள்ள சட்டப்படி, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த காரணத்தால் ஒவ்வொரு விசைப்படகிலுமிருந்த சுமார் 9 டன் மீன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் அனைவரும் மார்ச் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான போது இவர்களுக்கு 5909 பவுண்டு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4 லட்சத்து 73ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகையை மார்ச் 17க்குள் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர். விசைப்படகு உரிமையாளர் ஜூடி ஆல்பர்ட் மனைவி சுஜா இந்த தொகையை வங்கி மூலம் செலுத்தியுள்ளார். இதனால் 32 மீனவர்களும் ஓரிரு நாளில் விடுவிக்கப்பட்டு தங்களது விசைப்படகுகளில் உடனே அங்கிருந்து புறப்படுவார்கள் என தெரிகிறது என்று சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி தெரிவித்தார்.
 #டீகோகார்சியா
#தமிழகமீனவர்கள்
#KSRPOSTING
#KSRADHAKRISHNAN_POSTING
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
22/03/2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...