Saturday, July 30, 2016

ஈழத்தமிழ்அகதிகளின்கண்ணீர்

இந்த ஈழ அகதிகள் பாவப்பட்ட பிறவிகள். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
ஏழைகள் போல் வாழ்கிறார்கள். இல்லை செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திபத்திய அகதிகளுக்கு நிலம், வீடு, பள்ளிக்கூடங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் எனக் கொடுத்து பராமரிக்கும் இந்தியத் திருநாடு தமிழ் அகதிகளை கூடுகளுக்குள் வைத்திருக்கிறது. எங்கே போனாலும் மாலை 6 மணிக்கு முகாமுக்கு திரும்பி விட வேண்டும். மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தமிழ்நாடு காவல்துறை இவர்களை சுரண்டி வாழ்கிறது. கூச்சம் இல்லாமல் இலஞ்சம் கேட்டு வாங்குகிறார்கள். இவர்களில் 5 விழுக்காட்டினர் ஈழம் திரும்பி விட்டனர். மிகுதிப் பேரும் திரும்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
#ஈழத்தமிழ்அகதிகளின்கண்ணீர்

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...