Wednesday, July 27, 2016

காலிங்கராயன்வாய்க்கால்

காலிங்கராயன் வாய்க்கால்;
 

(மேலே பாலம் அமைத்து ஓடிக்கொண்டிருப்பது காலிங்கராயன் வாய்க்கால்;கீழே இயற்கையாக ஓடும் ஓடை)

ஈரோடையில், காலிங்கராயன் என்ற ஆட்சியாளரால் 730 ஆண்டுகளுக்கு முன்பாக பவானி ஆற்றிலிருந்து நொய்யல் ஆறு வரை ஒரு கால்வாயினை வெட்டினார்.இதனால் இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளும் வேளாண்மையால் செழித்தது.இக்கால்வாயினை வெட்டும்போது,இக்கால்வாயானது ஓடையினை குறுக்காக கடக்கவேண்டிய நிலையேற்பட்டது.அதற்காக  இக்கால்வாய் செல்ல ஓடையின் குறுக்காக பாலம் அமைத்து கொண்டு செல்லப்பட்டது.

தற்போது மேல பேருந்து பாலமும்,கீழே ரயில் பாதையும்  இருப்பது போன்று  #காலிங்கராயன்வாய்க்கால் மேலாகவும்,இயற்கையில் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை அதன் வழியிலும் எந்த இடையூறும் இன்றி ஓடிக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...