Monday, January 8, 2018

இராஜபாளையம் - தினமணி ஆண்டாளைப் பற்றிய சிறப்புச் சொற்பொழிவு



இராஜபாளையம் - தினமணி ஆண்டாளைப் பற்றிய சிறப்புச் சொற்பொழிவுRajapalayamSrivilliputturSatturSivakasi
————————————————
நேற்று(07/01/2018) இராஜபாளையத்தில் தினமணி சார்பில் அதன் ஆசிரியர் நன்பர் திரு. வைத்தியநாதன் முன்னெடுத்து நடத்திய ஆண்டாளைப் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நிகழ்த்தியுள்ளார். இராஜபாளையத்தின் அருகாமையிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வாரின் மகளான ஆண்டாளைப் பற்றி அற்புதமாக பேசியுள்ளார்.

ஆண்டாளைக் குறித்த அவரது பேச்சில் ஆண்டாள் தேவதாசி என்பது போல் சொல்லியிருந்தார். அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் செய்த ஆய்வின் அடிப்படையில் ஆண்டாளைப் பற்றியதான அவரது கூற்றை தவிர்த்திருக்க வேண்டும். ஆண்டாளை வெறும் பக்தி மார்க்கத்தில் மட்டும் பார்க்காமல் தமிழையும் ஆண்டாள் என்பதை மனதில் கொண்டு இந்த தவறானதொரு செய்தியைப் பேசியிருக்க வேண்டிய அவசியமில்லை.

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...