Wednesday, February 17, 2016

Ettiyapuram

ந ண்  பகல் உணவு திட்டம்   பழைய நெல்லை மாவட்டம் ,தற்போது தூத்துக்குடி மாவட்டம் #எட்டையாபுரம் .மகாராஜா எட்டப்பன் அவர்கள் 1915 வாக்கில் இப்பகுதியை சுற்றி உள்ள குழந்தைகள் படிப்பதற்கு தன் சொந்த செலவில் துவக்க பள்ளியை ஆரம்பித்து உள்ளார் .அப்போதே நல்ல கல்வியை போதிக்க அரசின் எவ்வித உதவியில்லாமல் திறம்பட நடத்தி வந்தார் .இருப்பினும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கவே , அதற்கான காரணத்தை ஆசிரியர்களிடம் கேட்டுள்ளார் .அடித்தட்டு மக்கள் ஜீவனத்திற்க்கே கஷ்ட்ட படுகிறார்கள்.அக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பு வதை காட்டிலும் வேலைக்கு ஈடுபடுத்துவதில்தான் அக்கறையாக உள்ளனர் .என்றனர் .இதை தனக்கு ஏற்பட்ட  அவமானமாக கருதினார் .பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தன சொந்த செலவில் மதியம் கம்மங்கஞ்சி வழங்கினார் .அதற்க்கு நல்ல பலன் கிடைத்தது .மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானது .இதை பின்பற்றிதான் தமிழகத்தில் காமராஜர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் மதிய உணவு திட்டம் முதன்முதலில் அரசின் உதவியின்றி செயல்படுத்திய எட்டயபுரம் ராஜா துவக்கப்பள்ளியில் 18.07.1956 ம் ஆண்டு அன்றைய பள்ளி கல்வித்துறை இயக்குனர் நெ .து .சுந்தரவடிவேலு அவர்களால் காமராஜரின் மதிய உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...