Saturday, December 10, 2016

காட்சி பிழைகள்

காட்சி பிழைகள்:
------------------
அடிமையாய்  இருந்தவர்களுக்கு  அடிமையாய் இருக்க ஒரு புகலிடம் தேவையாகவே  இருக்கிறது....  எல்லாமே முடிவாகி  விட்டன....  காட்சிகள்அரங்கேறும்..அவ்வளவே.....!!!  

வருவார்கள் .. இருப்பார்கள்.. அதையும் தாண்டி... மக்களால் ....?

மக்கள் இதையும் வேடிக்கை
பார்த்து கொண்டு இருப்பார்கள்
காட்சி பிழைகள் நடகின்றன.
.............
அவருக்கு அடுத்ததாக சரியான ஆளுமையை வளர்த்தெடுக்காமலேயே விட்டுவிட்டார்.... இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ....
..........
எல்லா அரசியல் கட்சிகளிலும் அந்தக் கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்து உழைத்த தலைவர்கள்,தொண்டர்கள் என பலர் இருப்பார்கள். கட்சியின் அனைத்து விஷயங்களையும் தெளிவாக அறிந்து அதன்படி செயல்பட்டும் வருவார்கள். திடீரென்று ஒரு ஆள் அந்தக் கட்சியில் நுழைவார். சில அதிரடிகளைச் செய்வார். புதியன விரும்பும் அனைவரும் அவர் பின்னே செல்வார்கள். அதிர்ச்சியாக இருந்தாலும் சில மூத்த தலைவர்கள் அமைதியாக இருப்பார்கள். சிலர் கோபப்பட்டாலும் காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி விடுவார்கள். சிலர் ஆவேசத்துடன் கட்சியை விட்டே வெளியேறுவார்கள். ஆனாலும் ஒரு சிலர் அமைதியாக புதியவருக்கு ஆமாம் போட்டுக் கொண்டு நேரம் வரும் வரை காத்திருப்பார்கள்.

இதுதான் இன்றைய போலி
பிம்ப அரசியல்.
அப்படித்தான் நடக்கிறது.
..........
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்.

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...