Sunday, December 25, 2016

வாஜ்பாய்

வாஜ்பாய்,4/5/1986 அன்று
மதுரையில் டெசோ மாநாட்டு
சமயத்தில் மீனாட்சி அம்மன் கோவில், கோபி அய்யங்கார் விடுதி,காலேஜ் ஹவுஸ்

என உடன் இருந்த நினைவுகள்நினைவுக்கு வருகிறது....
 நல்ல மனிதர். அவருக்கு பிறந்த நாள்.

போக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்த்தி இந்தியா வல்லரசு என நிருபித்தவர்...

கார்கில் போரில் பாகிஸ்தான் படைகளை ஓட ஓட விரட்டி வெற்றியை குவித்தவர்...

சிறந்த பேச்சாளர். ஐக்கிய நாடுகள் உரையாற்றியுள்ளார். அதில் திருக்குறள் ஒன்றையும் கூறியுள்ளார். 

என் மக்கள்(தமிழ் மக்கள்) இலங்கையில் தாக்கப்பட்டால் இலங்கைக்கு எந்த வித உதவியோ,ஆயுதங்களோ கொடுக்க  முடியாது என்று சொன்னவர்....

வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசாங்கம் நடத்த வேண்டும் என்று முதலில் செயல்படுத்தியவர். 

நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்கள் 
தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகளில் நாம் பயணிக்கும்போது அடல்ஜியை நினைவு கூற வேண்டும்.
தங்க நாற்கரச் சாலைகள், பிரமத மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டங்கள்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது இந்திராவை விமர்சித்தவர்.

எமர்ஜென்சியை எதிர்த்தவர்.
#வாஜ்பாய்

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்25/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...