Thursday, August 29, 2019

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பின் இடையே வெளியேறிய மைத்திரி.



இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பின் இடையே வெளியேறிய மைத்திரி.
இன்று (28-8-2019) புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் கலந்துரையாடினார்.
ஒருமணிநேரம் இந்த சந்திப்பு இடம்பெற்ற போதிலும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி சிறிது நேரத்தில் ஜனாதிபதி சிறிசேன எழுந்து சென்று விட்டார்.
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் கலந்துரையாடலை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துவிட்டுச் சென்று பேச்சுவார்த்தையின் இறுதி நேரத்தில் மீண்டும் கலந்து கொண்டிருந்தார்.
சரியான தீர்வுகள் எட்டப்படவில்லை.
Image may contain: 1 person, standing

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன், கோடிஸ்வரன், சிறிதரன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆனால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவில்லை.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...