Saturday, January 30, 2021


———————————————————-
மூதறிஞர் இராஜாஜி மறைந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. இராஜாஜி இல்லை என்றால் சென்னை மாநகர் நமக்கு கிடைத்திருக்காது, இராஜாஜியின் அனுக்கமான தோழராகவே மாபொசி விளங்கினார். அவர் மீது எதிர்வினைகள் பல இன்றைக்கு வரை வைக்கின்றனர், தன் இறுதி காலத்தில் அரசு மருத்துவமனை சிகிச்சை எடுத்துக்கொள்வேன் என்று தனக்கு உதவ வந்தவரிடம் சொல்லிவிட்டார். காமராஜர் இராஜாஜியின் புதல்வர் சி.ஆர். நரசிம்மனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியதுக்கு என் குடும்பத்தாரை எப்படி நியாயம் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பிராக அனுப்புவதை நான் கண்டிக்கிறேன் என்று காமராஜரிடம் நேரிடையாக கூறினார். மதுவிலக்கே கூடாதென்று 1937-ல் தன்னால் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட நடைமுறையைத் தொடர்ந்து நடைமுறையில் இருக்கவேண்டுமென்று இராஜாஜி எடுத்துக்கொண்டதை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆச்சாரமான தன்னுடைய குடும்பத்தில் மரணம் நிகழ்ந்த போது ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உதவியை நாடியதால் இவரது குடும்பத்தை இவர் சார்ந்த சமுதாயம் இவரை ஒதுக்கிவைக்கப்பட்டதெல்லாம் கடந்த கால செய்திகள்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக, தீண்டத்தகாதவர்களுக்காக ஏதேதோ செய்து இருக்கிறோம் என்று தம்பட்டமடித்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், 55 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இராஜாஜி சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோது சில தெருக்களுக்குள் நுழையக்கூடாதென தடை விதிக்கப்படிருந்த தோட்டிகளை கட்டாயப்படுத்திப் போகச் செய்திருக்கிறார்.

இராஜாஜியின் ஆளுமை, இலக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் காட்டிய அக்கறை என பல விசயங்களில் புரிதல் வேண்டும். வெற்று கோசங்களுக்கும் வெத்து பேச்சுகளுக்கும் என்றும் துணை போகாமாட்டார் இராஜாஜி.
இராஜாஜி,அவர் நிறுவிய சுதந்திராக் கட்சிப் பற்றி பின்னாட்களில் விரிவாக பதிவு செய்கிறேன்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
25.12.2020

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...