Saturday, January 30, 2021


———————————————-
இன்றைக்கு (25/12/2020) *நல்லாட்சி நாள் - Good Governance day* என்று வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி அறிவித்துள்ளனர். அவர் ஒரு நல்ல நிர்வாகி, மென்மையானவர், நல்ல ஆளுமையான பிரதமர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இந்தியாவில் நல்லாட்சி இருக்கிறதா என்பதை ஆளும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடும் நிலையில் தான் மக்கள் உள்ளனர்.
சிவில் சட்டங்கள், கிரிமினல் சட்டங்கள் போல *நிர்வாக சட்டங்கள் - Administration Law* என இருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி இன்றைக்கு ஆளும் ஆட்சிகள் நடக்கின்றனவா என்பது கேள்விக்குறியே.
நல்லாட்சி என்பது நல அரசாக (welfare state)அமைய வேண்டும். இன்றைக்கு ஜனநாயகமும் ஆதாயம் தருகின்ற சந்தை ஜனநாயகமாக (Market Democracy) மாறிவிட்டது. மக்களுக்கான ஜனநாயகம் (People's Democracy) இல்லை.
பிறகு நல்லாட்சி நாள் என கொண்டாட நமக்கு என்ன தகுதிகள் இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். எதிலும் பணம், ஆதாயம் என்று பொது வாழ்வும், அரசியலும், அரசும் இருக்கும்போது நல்லாட்சிக்கான வாய்ப்பு எங்கே இருக்கும். மக்களின் வாக்குகளை பணத்திற்க்கு வாங்கி ஆட்சிக்கு வருபவர்கள் வியாபாரிகள் தானே. வெற்றி பெற்றால் சம்பாதிப்பது தானே அவர்களின் ஆக்கறையானபணி. பிறகெப்படி நல்லாட்சி தருவார்கள்.

இந்தியாவில் கிரேக்கத்தில் பிறந்த ஜனநாயகம், இத்தாலியில் பிறந்த குடியரசு என்று இரண்டையும் கொண்டாடுகிறோம். நம் நாடு ஜனநாயக நாடா, குடியரசு நாடா என்று கூட பதிலளிக்க முடியாத நிலை. பிரிட்டன் நாடாளுமன்ற முறையை நாம் பின்பற்றினால் ஜனநாயக மரபியல் தான் நம்மை சாரும். பிறகெப்படி குடியரசு என்று வகைப்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. அமெரிக்காவும், பிரான்சும் குடியரசு நாடுகளாகும். இந்தியா குடியரசு நாடா, ஜனநாயக நாடா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
பன்மையில் ஒருமை என்ற நிலையில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் சமஷ்டி அமைப்பும் (Federal) ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சீராக பௌதிகம் சொல்கிற மாதிரி டைனமிசம் இருக்கும். சென்ட்ரி பியூகல்,சென்ட்ரி பெட்டல் என்ற வீச்சில் எந்த வகையில் அமைப்பியல் ரீதியிலான ஆட்சி இந்தியாவில் நடத்துகிறோம் என்று தெரிந்தால் தான் பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்தியாவில் கூட்டாட்சி சரியாக இயங்கும். இங்கு கூட்டாட்சியும் கேள்விக்குறியாக இருக்கிறது. நல்லாட்சியும் அப்படித்தான் ...........?
#சமஷ்டி அமைப்பு
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
25-12-2020

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...