Monday, February 27, 2023

தமிழகத்து உரிமைகள், நதி நீர் சிக்கல்கள் மற்றும் ஈழத்தமிழர் பிரச்சனைகள்

பிப்ரவரி  24 அன்று  ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து பல விடயங்களைப் பேசினேன் என்பதை ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். 

மேலும்,தில்லியில் சில முக்கியப் புள்ளிகளை அழைப்பின் பேரில் வெகு விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன். தமிழகத்து உரிமைகள், நதி நீர் சிக்கல்கள் மற்றும் ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்தும் ஏதேனும்  ஆலோசனைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம்.

ஈழத்தமிழர் பிரச்னை, தமிழ்நாட்டு நதிநீர்ப் பிரச்னைகள், தமிழக உரிமைகள்  என நான் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறேன். வேறு எந்தப் பதவி குறித்த எண்ணமோ, நோக்கமோ எனக்குக் கிடையாது .அப்படி ஒன்றும் எனக்குப் பதவி தேவையில்லை என்பதுதான் என் கருத்து.

 இன்றைக்கு தமிழக உரிமைகள், ஈழத்தமிழர் பிரச்னைகள் பற்றி என்னை அழைத்துப் பேசக் கூடிய அளவுக்கு முக்கிய பொறுப்பிலிருப்பவர்கள் எல்லாம் என்னை அறிந்து வைத்திருக்கிறார்கள். இதுவே எனக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம்.  நான் சாமானியன்தான். ஆனால் என்னை அழிக்க முடியாது.

#ksrpost
27–2-2023.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்