Thursday, September 25, 2014

நேஷனல் ஹெரால்டு’ திரும்ப வருகிறது!



நேஷனல் ஹெரால்டு’ திரும்ப வருகிறது!
------------------------------------------------------------------------------
‘நேஷனல் ஹெரால்டு’ நாளேடு திரும்பவும் வெளிவர இருக்கின்றது. ஆறு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த ஏடு, பிரபல பத்திரிகையாளர் சுமன் டுபே பொறுப்பேற்க வெளிவருகிறது. 1938இல் பண்டித நேருவால் துவக்கப்பட்ட இந்த ஏடு கடந்த 2008 வரை வெளிவந்தது. ‘நேஷனல் ஹெரால்டு’, லக்னோவிலிருந்து வெளிவந்த போது, 1942லிருந்து 1945 வரை ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது. 1968க்குப் பிறகு டில்லி பதிப்பு துவங்கியவுடன், நடுநிலை போக்கிலிருந்து இப்பத்திரிகை தவறியது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்திரா காந்தி காலத்தில் இந்த ஏடு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கடந்த காலத்தில் குஷ்வந்த் சிங், மணிகொண்ட ஜலபதிராவ் போன்றோர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது இந்த நாளேடு.
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் வங்கி வைப்புத் தொகை தவறாகப் பயன்படுத்தப்பட்டது என சுப்பிரமணிய சுவாமி வழக்கும் தொடர்ந்துள்ளார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...