Friday, September 19, 2014

இந்தியப் பல்கலைக் கழகங்கள் உலக தர வரிசையில் இல்லை

இந்தியப் பல்கலைக் கழகங்கள் உலக தர வரிசையில் இல்லை
-----------------------------------------------------------------------------------------


உலகப் பல்கலைக் கழக தர வரிசையில், 200 பல்கலைக் கழகங்களைக் கணக்கிடும்போது, இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக் கழகம் கூட அந்த தர பட்டியலில் வராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டெல்லிப் பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம், மும்பை பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக் கழகம், பரோடா பல்கலைக் கழகம், ஏன், இரவீந்திரநாத் தாகூர் நிறுவிய சாந்தி நிகேதன் என பல பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கீர்த்திப் பெற்றவை. இந்நிலையில் உலக தர வரிசையில் 200 பல்கலைக் கழகங்களில் இந்தியாவின் ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் வந்திருக்க வேண்டாமா? கி.பி.5ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக் கழகம், 800 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் நிறுவிய இந்த ஆண்டில், இந்தியாவின் ஒரு கலாசாலைகூட உலக தர வரிசையில் இடம் பெறாதது நம் அனைவருக்கும் தலைகுனிவான செய்தியாகும்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...