Friday, July 30, 2021

தூத்துக்குடியில் 42 ஆண்டுகளுக்கு முன்

தூத்துக்குடியில் 42 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் மாலை 1979 ஜீலை மாதம் 29 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை 
தூத்துக்குடி சாமுவேல்புரம்' அருகே லூர்தம்மாள் புரம்...
லெட்சுமி டூரிங் டாக்கீஸ்...

சிவாஜிகணேசன் நடித்த  
பாவமன்னிப்பு திரைப்படம் 
மாட்னி ஷோ மாலை 4.30 மணிக்குஓடிக்கொண்டிருக்கிறது.‌ ஞாயிற்றுக்  கிழமையானதால் தியேட்டரில் பெரும கூட்டம்



இடைவேளைக்கு பின் தியேட்டரில் 
தீடிரென தீபற்றி தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியிருக்கிறது.... .




பகல் காட்சி என்பதால்தார்ப்பாய் அடைத்து கம்பி சுற்றியிருக்கிறார்கள்.
தீபரவி எரியத் ஆண்கள்பெண்கள் ஓடினர்.
115 பேர் இறந்ததாக தகவல். பலர் கருகி, இன்னும் இருகின்றனர்

மறுநாள்  அன்றையமுதல்வர் எம்.ஜி.ஆர் தூத்துக்குடி வந்து தியேட்டரையும் பார்வையிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்...
கவர்னர் பட்வாரி,அன்றைய பிரதமர் சரண்சிங் அவர்கள் வருத்தங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்...

42 ஆண்டுகள் கடந்து விட்டது.
அதன் திரைஅரங்கங்கள் பாதுகாப்பை சீர் படத்த சில கட்டுப்பாடுகளை அன்றைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்
அறிவித்தார்.

#ksrpost
29-7-2021.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்