Wednesday, October 25, 2023

தென் குமரிக் கடற்பரப்பிலும்,,, கதிரவன் உதயத்தில்….. என் வானம் அழகானது தான் !

*அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே ?
அவனை விட்டு விடுங்களேன்,,,,, !
அவனைச் சுமந்த நதிமகள் கண்ணீர்உகுக்கின்றாள் ,,,,,,,,,

அதுவொரு போர்க்களம்,,,  ?*
நவ நாட்கள்  கடந்து விட்டது,,, !
உறவுகளே,,ஒன்றையொன்று வெட்டிச் சாய்த்து குருதிச்சுவை ருசித்துக் கொண்டிருக்கிறது !

அவன் குருதி கொஞ்சம் ருசி அதிகம்,,,,!
இல்லையில்லை,,இவன் குருதி தான் ருசி அதிகம்,,,,



வல்லூறுகளும், கழுகுகளும், தந்திர நரிகளும்,,,,களமெங்கும், ஊடாடிக் கொண்டிருக்கின்றன ! 



அதுவென்னவோ ? இயல்பு தானே ?
களமென்றால் குருதி சிந்தும் தான் !
சிந்துகிற குருதியினை ருசிப்பதற்கென்றே ஒரு கூட்டம்,,, காத்திருக்கத்தான் செய்யும்,,,

குருதி சிந்தி மரித்தவனை விட,,,,
மரித்துக் கொண்டிருக்கிறவனின் செங்குருதி கொப்பளிக்கிற தருணங்களில்,,,
அந்தக் குருதி,,,ஆஹா,,,
என்ன ருசி,,,என்ன ருசி,,
சுவை நரம்புகள் சப்புக் கொட்டிட,,,,,
சுவை பின்னதே உலகம்,,,என்று சும்மாவா ? சொன்னார்கள்,,,,,,

பத்தாவது நாள்,,,,,, !
அவன் எய்த அம்புகள்,,,,சர மழையாய்,,,,,,,,,,,,, !
கை வில் உடைந்து போகிறது ! பார்த்தனே,,,,,
உன் சரமழையினைப் பார்க்கும் போதெல்லாம், கைதட்டத் தோன்றுகிறதடா ?
ஆனால்,,,,
என் கை வில்லினை விட்டுவிட்டு,,,,,,
இக்களத்தினில்,,உன்னைப் போற்றினால்,,,,, ? ஹாஹாஹா,,,,
இப்பூவுலகு சிரிக்குமடா,,,,,,,,,,, !

நான் வளர்த்த பிள்ளை,,,
என் கைகளில் விளையாடிய பிள்ளை,,,நீ !
உன் அம்புகள் அற்புதமானவையடா !
உன் விழிகள் எங்கு நோக்குகின்றனவோ ? அங்கெல்லாம் சரமழை !

துரோணரின் வித்தையது !
என் துரோணரின் வித்தையது !
என் விழிகள் விரிகின்றன கண்மணி,,,, !
ஆனால்,,,,,
என் முன்னே சிகண்டியினை முன்னிறுத்தி எய்த அம்புகள்,,,,,, ?
நான் தோற்றுப் போனேனடா ! பார்த்தனே,,,,,,

உனக்கு ஸ்ரீகிருஷ்ணனென்ன ? 
அந்த சிவன் கூட வந்து தேரோட்டுவான் !
ஆம்,,,
அத்தகைய வல்லமை மிக்கவன் நீ !
நான் அறிவேன்,,,,
ஆனால்,,,,,
இன்று நான் வீழ்ந்து கிடக்கிறேன்,,,, ! 

என் உடல் மண்ணில் படவில்லை,,,,
என் மேனியினை மண் தீண்டும் நாள் இன்னும் வரவில்லையடா ? கண்மணி!

எந்தை சந்தனு இருந்திருந்தால்,,,,?
அழுது புலம்பி இருப்பான்,,, !

நீயென்ன தியாகியா ?
தியாகி போல நடிக்காதே ?
என்கிறாயா ?

 அம்பை அம்பிகா, அம்பாலிகா, என அப்பாவிப் பெண்களைக் கவர்ந்து வந்த கிழவனல்லவா ?  நீ !
வந்தவளில் ஒருத்தி மணந்து கொள் என்று கால் பிடித்து நின்ற போது , உதறித் தள்ளியவன் நீ தானே ? என்கிறாயா ?

அவள் துகிலுறிந்து நின்ற போது , கண் பொத்திக் கொண்டாயா ? கண்ணீர் விட்டு மறைத்துக் கொண்டாயா ? 
அன்று குத்திக் கொன்றிருக்கலாமே ? எதுவும் செய்யாமலிருந்தவர்களில் நீ முதல்வன் அல்லவா ? என்கிறாயா ?

நீ எய்த அம்புகள்,,,
என் உடலெங்கும்,,,,குத்திக் கொண்டிருக்கிறது !
நானென் உடல் சாய்த்து விடத்தான் நினைக்கிறேன் ?

ஆனால்,,,,
எந்தை செய்த செயலினை நானும் செய்தால்,,,,? உத்திராயணம் வரட்டும் பிள்ளாய்,,,,,,,,,,,,,,,, நதிமகள் சொல்கின்றாள் !
அவள் விதியின் பிடியில் தவிக்கின்றாள் !

அந்தக் களத்தில்,,,,,
நீ எய்த அம்புகள் மட்டுமே தரை தொட்டிருக்கிறது,,,! கண்மணீ !
ஆயினும்,,இப்போது என்னைப் பார் !
என் தலை தொங்கிக் கிடக்கிறது,,,,,,,,,,,,,,,, என்கிறேன்,,,,,,

அதோ !
என்னாயிற்று என்றபடி , 
என் சொல் கேட்டு பஞ்சணை கொண்டு வருகிறார்கள் ?
அவர்களுக்குத் தெரியாது,,,,? நான் வேண்டுவது எதுவென்று,,,,?

நீ அறிவாய் !
உன்னை இயக்குகிற ஸ்ரீகிருஷ்ணனவன் அறிவான் !
மீண்டும்,,,,
வில்லெடு,,, !
சரத்தினை வை,,,, பார்த்தா !
நாண் இழு !
ம்ம்,,,,இழு,,இன்னும்,,,கொஞ்சம்,,,இழுத்து,,,விடு,,,

இப்போது எய்து விடு ! பார்த்தா.
முச்சரங்கள்,,
என் தலை தாங்கட்டும்,,,,,,,  !

அதோ,,,!
அவர்கள் ஏன் ? பக்கத்தில் வருகிறார்கள்,,,,,?

உபதேசிக்கவா ?
உபதேசம் செய்யவா ?
எதுவும்,,,உனக்கு வேண்டாம்,,, !

ஆமாமடா !
குந்திக்கும், உன்னைப் பிடிக்கும்,,,!
பாஞ்சாலிக்கும், உன்னைப் பிடிக்கும்,,,,!
ஆனால்,,,,
விதி,,,!
என்னைத்தான் எவருக்குமே ? பிடிக்காமற் போய் விட்டது,,,,  ?

எல்லோரும், நதியின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது,,,,,
நான் மட்டுமே ? விதியின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தேன் ! 
அது தவறு என்பது,,,இப்போது புரிகிறதடா ?

இப்போது புரிந்தென்ன ? லாபம்,,,,!
வேண்டுமானால்,,,,,,,,,,,,,, ஆயிரம் போற்றி சொல்லலாம்,,,கேட்கலாம்,,, !
ஆஹா,,
இவர் பீஷ்மர் அல்லவா ! என்ற புகழ் மொழிகளில் மயங்கியே,,,,
புத்தி கெட்டுப் போனேனோ ? அறியவில்லையடா,,,, !

நான் கொஞ்சம் இளைப்பாறட்டுமா ?
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,
நான் கொஞ்சம் இளைப்பாறட்டுமா ?
உன்னை இயக்குகிற, அந்த ஸ்ரீ கிருஷ்ணனிடம் சொல்,,,, 
உன் விஸ்வரூபதரிசனம் பார்க்க ஆசைபடவில்லையடா ! என்று,,,,

சொன்னாலும், கேட்க மாட்டான் ! அவன்,,,,
ஆஹா,,,
அந்த கிழவனுக்கே,,,
அல்ல அல்ல,,அந்த பீஷ்மனுக்கே விஸ்வரூபதரிசனம் காட்டி விட்டேன் பார்த்தாயா ? பார்த்தா ! என்று தனக்குத்தானே ? தோள் தட்டிக் கொள்ளவாவது,,, அவன் விஸ்வரூப தரிசனம் காட்டத்தான் செய்வான் !
ஆனால்,,
அதுவல்ல,,,
நான் எதிர்ப்பார்ப்பது ?
எதிர்பார்த்தது,,,,?
எல்லோரும், இன்புற்று இருக்க நினைத்த விரதன் ! நான் ,,
அதுவும், தேவ விரதன் நான்,,,,,
பீஷ்மன் எனச்சொல்லிச் சொல்லி,,,நான் வீழ்ந்து விட்டேன்,,,,!

இனி அழுது புலம்பி ஆவதொன்றுமில்லை தான்,,, !
ஆயினும்,,,
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,,
உடலெங்கும்,,
,உன் அம்புகள் குத்தியதால் கொப்பளிக்கும் குருதியோட்டம்,,,, தகிக்கிறது !
உன் அம்பின் மெல்லிய விடநுனிகள் மெல்ல மெல்ல என்னைக் கொன்று கொண்டிருக்கின்றன தான்,,,,,
ஆனாலும்,,,,
எனக்கான நாள் வரும் வரைக்கும்,,,,
இந்த முதுகிழவன் கொஞ்சம் இளைப்பாறுகின்றேனே,,,,,,,,,,,,,, !
கொஞ்சம் இளைப்பாறுகிறேனே ! பார்த்தா !
நீ உன் பணி தொடர் !
இனி வெற்றி உன் பக்கலில் தான்,,,,,

வீழ்ந்த முதுகிழவன்,,,,
இனி ,,
எழுவதற்கான வாய்ப்பில்லை,,,,, !

அதோ !
நதிமகள் அழுகின்றாள் !
அவள் கண்ணீர் அந்த கங்கை நதியிலேயே மரணித்து விடும்,,,
விதிமகளின் கண்ணீரல்லவா ? அது,,,, !

கொஞ்சம்,,அழுது விடேன் என்கிறாள் ! அவள்,,,!
அவளுக்குத் தெரியாது,,,,?
என் கண்ணீர் தான் அவள் பேர் தாங்கி நதியானதென்று,,,,,
பாவம் நதிமகள் ! விதிமகளின் கைப்பாவையாய்,,,,,,,,,,,,,,

இப்போது,,,
கொஞ்சம் தள்ளித்தான் நில்லுங்களேன்,,,, !
காற்று வரட்டும்,,, ! எவரோ சொல்கிறார்கள்,,,,

கதவைத் திறந்தால் தான் காற்று வருமாவென்ன ?
கொஞ்சம் தள்ளி நின்றால் கூட காற்று வரும் தான் !
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டும்,,,
வெகுதூரம் பயணித்து விட்டான் !
வெகுநேரம் பயணித்து விட்டான் !
அவனுக்கான காலம் வரும் வரைக்கும் , 
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே,,,,,,,,,,,,,, !

அவனுக்கான காலமா ? 
அவனுக்கான காலனா ?

ஹாஹாஹா,,,,,,,,,,,,
ஏதோவொன்று,,,,
 வரும் வரைக்கும்,,,
அவன் கொஞ்சம் இளைப்பாறட்டுமே !

அவனுக்காக,,,,
அவன் மட்டுமே ? அழுது தீர்ப்பான் ! அழுது தீர்த்துக் கொள்வான் !
மண்ணில் எவரும் அவனுக்காய் அழ வேண்டாம்,,, ! 
அப்படித்தானே ? பிள்ளாய்,,,,,,,,,,,,,

ஹாஹாஹா

•••••••

தென்  குமரிக் கடற்பரப்பிலும்,,, 
கதிரவன் உதயத்தில்…..
என் வானம் அழகானது தான் !

Velu Pillai சொல்லி கேட்டது.




No comments:

Post a Comment